Monday, March 16, 2020

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி போன்ற மாநில சட்டமன்றத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அந்த வகையில் டில்லி சட்டமன்றத்தில் நேற்று தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இதற்காக டில்லி சட்டமன்றத்தின் சிறப்பு ஒரு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசிய முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது அவர் எனக்கு, எனது மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்களுக்கும் பிறந்தநாள் சான்றிதழ் இல்லை. எங்களை மத்திய அரசு தடுப்புக்காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமா? மத்திய அமைச்சர்கள் தங்களது பிறப்பு சான்றிதழை காட்ட முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார்.
பின்னர் சபையில் உள்ள 70 உறுப்பினர்களிடம் உங்களிடம் பிறப்பு சான்றிதழ் உள்ளதா? என கெஜ்ரிவால் கேட்டார். அதற்கு 9 பேர் மட்டுமே பிறப்பு சான்றிதழ் இருப்பதாக கூறினர். 61 பேர் பிறப்பு சான்றிதழ் இல்லை என தெரிவித்தனர். அவர்களை மத்திய அரசு தடுப்பு காவல் நிலையத்துக்கு அனுப்புமா? என்றார்.

முகநூல் பயன்பாட்டைக் குறைத்தால் உடல் நலம் கூடும்: ஆய்வில் தகவல்


முகநூல் பயன்பாட்டைக் குறைப்பவர் களுக்கு, உடல் நலனை மேம் படுத்துவதற்கான பழக்க வழக் கங்கள் அதிகரிக்கும் என்று ஜெர்மனியில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட் டின் பாஷும் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்தவர்கள் உள் ளிட்ட ஆய்வாளர்கள் மேற் கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:
முகநூலைப் பயன்படுத்தி வரும் 286 பேரைக் கொண்டு, அந்த சமூக வலைதளப் பயன் பாட்டுக்கும், உடல் நலனுக் கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
அந்த ஆய்வுக்கு உள்படுத் தப்பட்டவர்கள் இரண்டு பிரி வுகளாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களில் 146 பேர் வழக்க மான அளவில் முகநூலைப் பயன்படுத்தினர்; 140 பேர் இரண்டு வாரங்களுக்கு தின மும் 20 நிமிடங்கள் மட்டுமே முகநூலைப் பயன்படுத்தினர்.
அந்த ஆய்வு தொடங்குவ தற்கு முன்னரும் பிறகு ஒரு வாரம் கழித்தும் அதனைத் தொடர்ந்து சோதனையின் முடிவிலும் சோதனையில் உள்படுத்தப்பட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களது முகநூல் பயன்பாடு, உடல் நலனைப் பேணுவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக் கைகள் உள்ளிட்ட விவரங் கள் சேகரிப்பட்டன.
இதன் மூலம், முகநூலை குறைவாகப் பயன்படுத்துபவர் கள், புகைப்பிடித்தலைக் குறைத் தல், உடல் நலனை அதிகரிக் கும் நடவடிக்கைகளில் ஈடு படுல் போன்றவற்றை அதிக ரித்தனர். ஆனால், முகநூலை வழக்கம் போல் பயன்படுத்து பவர்கள், சுறுசுறுப்பாக இயங்குவதை முடிந்த அளவு தவிர்த்து வந்தனர். முக நூலைப் பயன்படுத்தும் பிறரு டன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளும் அவர்கள், அதன் காரணமாக பொறாமை, மன உளைச்சல் ஆகியவற்றையும் அனுபவித்தனர். ஆனால், முகநூல் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டவர்க ளுக்கு இதுபோன்ற உளவியல் ரீதியிலான பிரச்னைகள் குறைந்து மன நலனும் அதிக ரித்தது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆச்சு தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு?

தமிழ்நாட்டில் மேலும் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களாம்

கூறுகிறார் மத்திய அமைச்சர்
 
தமிழகஅரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் டெல்டா மாவட்டங்களை வேளாண் மண் டலமாக மாற்றி சட்டம் இயற்றியுள் ளது. ஆனால், தமிழகத்தில் மேலும்  3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல் படுத்தப்பட இருப்பதாக நாடாளுமன் றத்தில் மத்திய அமைச் சர் கூறி உள்ளார். இது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலைக் கூட் டத்தொடரின் 2-ஆவது அமர்வு நடை பெற்று வருகிறது. கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நிறை வேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட் டங்கள் குறித்து  கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசின் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு ஒரு திட் டமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத் திற்கு 2 திட்டங்களும் வழங்கப்பட் டுள்ளது.
அதன்படி,  தமிழ்நாடு, புதுவை யில் 2337 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் திட்டங்களை நிறை வேற்றிக் கொள் ளலாம். இதில் இந்தியன் ஆயில் கார்ப் பரேஷன் நிறு வனம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் 477 சதுர கிலோ மீட்டரிலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது 2 திட்டங்கள் மூலமாக கட லூர், நாகப்பட்டினம், காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய வற்றிலும்  நிறைவேற்றிக் கொள்ள லாம்.
இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 1259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திட்டங்களை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தார் மேலும் இதுதொடர்பாக தமிழக அரசிற்கு கடிதம் எழுதப்பட்டுள் ளது, தமிழக அரசு விரைவில் முடிவெ டுக்கும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங் களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அதற்கான சட்டமும் தாக்கல் செய்யப்பட்டது, அதன் படி இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத் தேன் உள்ளிட்ட இயற்கை எரி வாயு களுக்கான ஆய்வு, பிரித் தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங் கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக் காலை, அலுமினிய உருக் காலை களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப் பகுதிகளில் தொடங்க அனுமதி கிடை யாது. சட்டத்தின் இரண்டாவது பட்டி யலில் இடம் பெற்றிருக்கும் இந்தத் தடை செய்யப் பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.
இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக் கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறைத் தண்டனையும், 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு தமி ழகத்தில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவ தாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘யெஸ்’ வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18-ஆம் தேதி நீக்கப்படும்

மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
 யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
'யெஸ்' வங்கியின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள ரிசர்வ் வங்கி, அதை மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் யெஸ் வங்கி மீட்பு திட்டத்தில், பாரத ஸ்டேட் வங்கி ஒரு பங்கு மதிப்பு 10 வீதம் ரூ.725 கோடி பங்குகளை ரூ.7,250 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிதி திரட்டலுக்கு யெஸ் வங்கி 1,200 முதல் 1,300 கோடி பங்குகளை வெளியிட்டுள்ளது.
இதில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட 7 முதலீட்டாளர்கள், யெஸ் வங்கியில் மொத்தம் ரூ.11,750 கோடி முதலீடு செய்ய உள்ளனர். அய்சி அய்சிஅய் மற்றும் எச்டிஎப்சி ஆகி யவை தலா ரூ.1,000 கோடி முதலீடு செய்து 6 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.
ஆக்சிஸ் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, மிகப்பெரிய பங்கு முதலீட்டா ளர்களான ராதாகிருஷ்ணன் தமானி, ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மற்றும் அஜித் பிரேம்ஜி ஆகியோர் தலா ரூ.500 கோடி முதலீடு செய்து 3 சதவீத பங்குகளை வாங்க உள்ளனர்.  இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘யெஸ் வங்கியில் ஸ்டேட் பாங்க் மற் றும் சில முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கி வகுத்த திட்டத்தின் அடிப் படையில் முதலீடு செய்ய முன்வந் துள்ளனர்.
யெஸ் வங்கியின் வாடிக்கையா ளர்கள் வைப்புத் தொகை மற்றும் அவர்களது பணத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் வங்கி மீண்டும் சிறப்பாக செயல்படவும் ரிசர்வ் வங்கி துரித மாக நடவடிக்கை எடுத்தது. இதன் யெஸ் வங்கி சீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது’’ என்றார்.
இந்நிலையில் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
எஸ்பிஅய் வங்கி சார்பில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவும் 7 நாளில்  பதவி யேற்கும். தற்போதைய நிர்வாகி பிரஷாந்த் குமார் சிஇஓ -ஆக செயல் படுவார் எனவும் மத்திய நிதிய மைச்சகம் அறிவித்துள்ளது.

சமூகநீதி மீது மற்றொரு பேரிடி!

மாணவர்கள் ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கும் நுழைவுத் தேர்வு தேவையாம்!
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பயில நிதி உதவி பெற்று வந்த ‘ஸ்காலர்ஷிப்' திட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாற்றிட இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் குறைந்துகொண்டே வருவதற்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெரும் எதிர்ப்பினைக் காட்டிவரும் வேளையில், மேலும் நிதி உதவி கிடைக்கக்கூடிய வாய்ப் பினைக் குறைக்கின்ற வகையிலே, உயர்ஜாதி யினரும் ‘ஸ்காலர்ஷிப்' பெறுகின்ற வகையில் திட்டம் மாற்றப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்படும் இந்த திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டை இதுநாள் வரை மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்து வந்தன. மத்திய அரசு அளித்துவந்த நிதி அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, மாநில அரசின் நிதிப் பளு அதிகமாகிக் கொண்டுடே வருகிறது. நிதிப் பளு என்று காரணங்கூறி, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் எண் ணிக்கையையும், பெறும் நிதி அளவையும் குறைத்துக்கொண்டு வரும் சூழல்களும் நிலவி வருகின்றன.
நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்ட மத்திய அரசு, ‘‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல், குழிபறித்த கதையாக'', நிதி உதவித் திட்டத்தை ‘‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவித் திட்டம்'' (PM - YASASVI) என்பதாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உயர்ஜாதி மாணவர்களும் ‘ஸ்காலர்ஷிப்' பெற்றிட முடியும் என்பதாக அறிவிப்புகள் வந்துள்ளன.
 
ஸ்காலர்ஷிப் பெறுவதற்குத்

தகுதி தேர்வாம்!
நிதி உதவி என்பதே ஒடுக்கப்பட்ட மாண வர்களுக்கு - ஆண்டாண்டு காலம் கல்வி மறுக்கப்பட்டு வந்தவர்களுக்கு என்பதுதான் திட்டத்தின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்தில்  பயன்பெறும் மாணவர்களின் குடும்ப வருமானத்தைப் பொறுத்த அளவில் வரம்பு விதிக்கப்பட்டு (ஆண்டு வருமானம் முறையே ரூ.1.5 லட்சம் அல்லது ரூ.2.5 லட்சம் வரம்பு)  ‘ஸ்கலர்ஷிப்' வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அடியோடு நீக்கப்பட்டு, ‘ஸ்காலர்ஷிப்' பெறுவதற்கு தகுதித் தேர்வு என்ற பெயரில் ‘நுழைவுத் தேர்வு' நடத்தப்படுமாம். உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதிடலாமாம். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கே ‘ஸ்காலர்ஷிப்' கிடைத்திடும் வகையில் கல்வி நிதி உதவித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இதுகாறும் வழங்கப்பட்ட நிதி உதவியானது - பராமரிப்புச் செலவு, திருப்பி அளிக்கப்படாத கட்டாய கல்விக் கட்டணம்,  அஞ்சல் வழிக் கல்வி பெறுவதற்கான புத்தகச் செலவு என பல வகையிலும் பயன் அளித்தது. இதன்மூலம் தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம்பெற்று பயிலும் ஒடுக்கப்பட்ட மாணவர் அதிகபட்சமாக ஓர் ஆண்டுக்கு ரூ.87,000/- என்ற அளவில் கல்வி நிதி உதவி பெற முடிந்தது.
இனிவர இருக்கின்ற உயர்ஜாதி மாணவர் களுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும் திட்டத்தில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.30,000/- மட்டுமே வழங்கிடும் வகையில், நிதி உதவி வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய திட்டத்தின்கீழ் மத்திய அரசு, மாநில அரசு ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய நிதி ஒதுக்கீடு அளவுபற்றிய குறிப்பு எதுவும் வெளிவரவில்லை. கடந்த கால நிதி ஒதுக் கீட்டால் மாநிலங்களின் நிதிப்பளு அதிகரித்து பாதிக்கப்படக் கூடிய சூழல்கள்தான் உரு வாகின. சில மாநில அரசுகள் சமூகநீதி அடிப் படையில் நிதிப் பளு கூடினாலும், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலன் பெறுகிறார்கள். அவர்களின் உயர்வு கருதி செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களும் இனி முடக்கப்படும்; முடிவு பெறும்.
உயர்கல்வி பெறுவதற்கு, உயர்ஜாதி மாண வர்களும் நிதி உதவி பெறுவதற்கு உருவாக் கப்பட்டுள்ள பா.ஜ. அரசின் புதிய கல்வி நிதித்திட்டம் மாநில அரசின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையில்தான் அமையும் என்பது உறுதியாகத் தெரிகிறது என சமூகநீதியில் அக்கறை உள்ளவர்கள், அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.
புதிய கல்விக் கொள்கை, உயர்ஜாதியி னருக்கும் கல்வியில், வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என இதுவரை அரசமைப்புச் சட்டம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான சமூகநீதி உரிமைகளை படிப்படியாகப் பறித்துக்கொண்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, சமூகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள ‘பிரதம மந்திரி இளைஞர் கல்வி நிதி உதவி' திட்டம், ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பினை உருவாக்கிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Saturday, March 14, 2020

8 மாநிலங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர்களை அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்து உள்ளார். இது தொடர் பான செய்திக் குறிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எஸ். துல்சி, புலே தேவி நேதம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஷசாதா அன்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் திக் விஜய் சிங், பூல் சிங் பரியா ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. மகாராட்டிராவில் ராஜிவ் சடவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் கென்னடி கொர்னிலியஸ் கேஹியம் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநி லத்தில் கே.சி. வேணுகோபால், நீரஜ் டாங்கி ஆகிய இருவரும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டு உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ஷக்திசின்ங் கோஹில், பாரத்சின்ங் சோலங்கி ஆகியோர் வேட் பாளர்களாக களம் இறங்க உள்ளனர். அரியானாவில் தீபந்தர் சிங் ஹூடா போட்டியிடுவார் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவாலாக்கும் மோடி அரசு


கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத் துள்ள தங்கத்தை விற்பனை செய் துள்ளது.
நரேந்திர _ மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கெனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை. இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.
ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும். தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற் கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கெனவே நாட் டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொரு ளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
2019ஆ-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை விற் பனை செய்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.
ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவ னங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளா தாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது. இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...