Sunday, July 19, 2015

1200 அரசுப் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு


 திண்டுக்கல், ஜூலை 19_ தமிழகம் முழுவதும் 1,200 அரசுப் பள்ளிகளை மூடு வது என தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மோசஸ் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:
இடைநிலை ஆசிரியர் கள் பணியிட மாறுதல் களுக்கான கலந்தாய்வை தமிழக அரசு ஓராண்டு என்பதற்குப் பதிலாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று அறிவித்துள்ளது. இதனை கைவிட்டு ஒவ் வொரு ஆண்டும் கலந் தாய்வுக் கூட்டங்களை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஜேக்டோ மற்றும் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கேட்டுக் கொள் கிறோம். இது ஒளிவுமறை வற்ற கலந்தாய்வாக அமைய வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வி முறை துவக்கப்பள்ளி களை அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. அதற் கான ஆசிரியர்களை நிய மிக்கவில்லை. அரசு தமிழ் வழிக்கல்வியை ஊக்கப் படுத்தவேண்டும். குறைந்த மாணவர்கள் எண் ணிக்கை உள்ள பள்ளி களை மூட அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது. கூடுதலான மாணவர் வருகையை உறுதிப்படுத்திட அரசு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலம் முழுவதும் 1200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவெடுத் துள்ளது. அரசு பள்ளிகள் இயங்காமல் இருக்க தனி யார் பள்ளிகளுக்கும், சுய நிதி பள்ளிகளுக்கும் அரசு ஊக்கமளித்து வருகிறது. 

அரசு பள்ளிகளை இழுத்து மூட இது ஒரு திட்ட மிட்ட சதியாக நாங்கள் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் அரசு உதவ வில்லை. ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 5_க்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகளுக்கு அனுமதி வழங்குகிறது அரசு. அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரி யருக்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்திற்கு மாறாக ஒரு ஆசிரியருக்கு 40 மாணவர்கள் என்ற விகிதத்தை அமலாக்கு கிறது. இதனால் கல்வியின் தரம் குறைகிறது.

தேர்தல் வாக்குறுதியை அதிமுக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. அதி முக தனது தேர்தல் அறிக் கையில் நாங்கள் ஆட் சிக்கு வந்தால் கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங் களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவோம், தீர்வு காணுவோம் என்று கூறியிருந்தது.

மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்வோம் என்று கூறியது. ஆனால் அதிமுக வின் ஆட்சி நிறைவடை கிற தறுவாயில் உள்ளது. இதுவரை ஆசிரியர்களை அழைத்துப் பேசவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஆசிரியர் கள் கூட்டமைப்பான ஜேக்டோவின் சார்பில் சென்னையில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 2-அன்று அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தத்தில் எங் களது சங்கம் முழுமையாக பங்கேற்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 10, 2015

ஆர்.எஸ்.எஸ்.இன் சமஸ்கிருத அரசியல்



- குடந்தை கருணா

பாரதீய சிக்சன் மண்டல் எனும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உள் பிரிவு, சமஸ்கிருதம் கட்டாயம் கற்க வேண்டும் அல்லதுபிற செம் மொழிகளான அராபிக், பர்சியன், லத்தீன், கிரேக்கம் ஆகிய ஒரு மொழியைக் கற்கவேண்டும். இதற் கான மொழிக் கொள்கை உரு வாக்கப்பட வேண்டும் என அர சுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளது. ஆர்.எஸ்.எஸ். மொழியில் வேண்டுகோள் என்பது கட்டளை என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டில் வழக்கில் இல்லாத ஒரு மொழி சமஸ்கிருதம். எந்த மாநிலத்திலும் பேசப்படாத ஒரு மொழியை, இந்த நாட்டில் உள்ள 125 கோடி மக்களும் கற்கவேண்டும். அப்போது தான் நமது கலாச்சாரம் பாதுகாக் கப்படும் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதில் சமஸ்கிருதத்தோடு சேர்த்து பேசப்படும் பிற செம் மொழிகளான அராபிக், லத்தீன், கிரேக்க, பர்சியன் மொழியை கற்க வேண்டும் என்கிறார்கள். இதையும் இந்த நாட்டில் எத்தனை பேர் பேசுகிறார்கள்;

 எந்தெந்த மாநிலத் தில் பேசுகிறார்கள் என்று தெரிய வில்லை. இது நாளும் ஹிந்திதான் தேசிய மொழி என்று கூறி வந்த பார்ப்பனக் கூட்டம், இப்போது, ஹிந்தி மொழி படிக்கவேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது. ஹிந்தி கற் காததால் நாங்கள் பாதிக்கப்பட் டோம் என இங்கே கூறும் அரை வேக்காடுகள், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்த கருத்துக்கு என்ன விளக்கம் வைத்துள்ளார்கள் எனத் தெரிய வில்லை. இதெல்லாம் கிடக்கட்டும். தமிழ் மொழியை செம்மொழி என அறிவித்து பல ஆண்டுகள் ஆயிற்று. ஏழு கோடிக்கும் மேல் இந்தியாவில் தமிழ்மொழியை பேசுகிறார்கள். சமஸ்கிருதம் அல்லது பிற செம்மொழிகள் என்று பட்டியல் இட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, தமிழ் மொழியை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே? அதுவும் செம் மொழிதானே? ஹிந்தித் திணிப்பை எதிர்த்து பெரியார் போராடியபோது, ஹிந்தியை வெறும் ஒரு மொழித் திணிப்பாக மட்டும் பார்க்க வில்லை; மாறாக, ஆரிய மொழி யான சமஸ்கிருதத்தை நுழைப் பதற்கு விடப்படும் முன்னோட்டம் என்பதாகத்தான், ஹிந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்தார்.

இப்போதும் கூட, ஆர்.எஸ்.எஸ். ஆரிய மொழியான சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், அதற்கு மாற்றாக, அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள எந்த இந்திய மொழியையும் கூறாமல், அராபிக், பர்சியன், லத்தீன் போன்ற பிற அன்னிய  நாட்டு மொழி களைத் தான் துணைக்குச் சேர்க் கிறது. லண்டனில் 1746- இல் பிறந்து, சட்டம் பயின்று, கல் கத்தாவின் அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதியாக 1784- இல் பதவி ஏற்ற சர் வில்லியம் ஜோன்ஸ், சட்டம் மட்டுமல்லாது, லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, அராபிக், பர்சியன் போன்ற பல மொழிகளைக் கற்றவர். இந் தியாவில் சமஸ்கிருத மொழியைக் கற்று ஆராய்ச்சி செய்தவர். அவர் 1794 இ-ல் மறைவதற்கு முன், சீன மொழி உள்பட 28 மொழிகளைக் கற்றவர். கல்கத்தாவில், 1784- இல் ஏசி யாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் எனும் அமைப்பை தோற்றுவித்தவர்: மனுஸ்மிருதி, காளிதாசனின் படைப்புகளை மேலை நாடுகள் தெரிந்து கொள்ள மொழி பெயர்த்தவர். இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய பல ஆராய்ச்சி கட்டுரை கள், அவர் மறைவுக்குப் பின் 1807- இல் அய்ரோப்பாவில் பதிமூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அய்ரோப்பிய செம்மொழிகளான லத்தீன், கிரேக்கம், பர்சியன் ஆகிய மொழிகள் எதன் அடிப்படையில் உருவானதோ, அந்த ஆதாரத்தைக் கொண்டு உருவான மொழிதான் சமஸ்கிருதம் என்ற கருத்தை, 1786- இல் தனது மொழி பற்றிய ஆராய்ச்சி குறித்து பேசுகையில், சர் வில்லியம் ஜோன்ஸ் சொல்கிறார். இப்போது புரிகிறதா? செம் மொழிகள் பட்டியலில் உள்ள சமஸ்கிருதத்தைப் படி; இல்லை யேல் பிற செம்மொழிகளான லத்தீன், கிரேக்கம், பர்சியன் போன்ற மொழிகளைப் படி என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்., நம் திராவிட மொழியான செம்மொழி தமிழைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை எனப் புரிகிறதா?

இந்திக்கு ஏன் முன்னுரிமை?


பத்திரிகை, தொலைக்காட்சிகள், பதாகைகள் என விளம் பரங்களுக்கு செலவிடும் மொத்தத் தொகையில் குறைந்த பட்சம் 50 சதவீதம் ஹிந்தி விளம்பரங்களுக்கு செலவிடப்பட வேண்டும் என அரசின் அனைத்துத் துறைகளையும் மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை எழுதியுள்ள கடிதத்தில் விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையில் 50 சதவீதத்தை ஹிந்தி விளம்பரங்களுக்குச் செலவிட வேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை ஆங்கிலம், பிராந்திய மொழி விளம்பரங்களுக்குச் செலவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி, இதர இந்திய மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆங்கில மொழி விளம்பரங்களுக்கு மத்திய அமைச்சகங்களும், துறைகளும் முக்கியத்துவம் அளிப்பதாக அலுவல் மொழிகளுக்கான நாடாளு மன்றக் குழுவின் கருத்தை மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது என்று மத்திய உள்துறை வலியுறுத்தியுள்ளது.

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பிஜேபி அரசு, அதிகாரத்திற்கு வந்த நாள் தொட்டே இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் முன்னிலைப்படுத்துவதில் அதீத அக்கறை காட்டி வந்து கொண்டு தானிருக்கிறது.

கடுமையான எதிர்ப்புப் புயல்கள் சுழன்றடிக்கும்போது எதை எதையோ சமாதானங்களைச் சொல்லி, ஆமை தன் தலையை ஓட்டுக்குள் பதுக்கிக் கொள்வது போல நடந்து கொண்டு வருகிறது.!

தொடக்கத்தில் மத்திய அரசு அலுவலகக் கடிதங்கள் இனி இந்தியில் தான் இருக்க வேண்டும். சமூக இணைய தளங்களில் இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது. கண்டனங்கள் வெடித்துக்கிளம்பியுவுடன் இந்தி மொழி பேசும் மாநிலங் களுக்குத்தான் பொருந்தும், மற்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது என்று சொன்னார்கள்.

தமிழ் நாட்டிலிருந்து மட்டுமல்ல; காஷ்மீர் முதல் அமைச்சராகவிருந்த உமர் அப்துல்லாவும், இந்தி பகுதியைச் சேர்ந்த முன்னாள் முதல் அமைச்சர் மாயாவதியும்கூட எதிர்ப்புக் குரலை ஓங்கிக் கொடுத்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையில் (விடுதலை 21.6.2014) ஒரு கேள்வியை எழுப்பினார்.

இந்தி பேசாத பகுதிகளில் தொடர்புக்கு இந்தி பயன்படுத் தப்படாது எனும்  உள்துறை அறிக்கையின் சாரம் உண்மையானால் இந்தியை அதிக அளவு பயன்படுத்துபவர்ளுக்குக் கூடுதல் சம்பளம் உயர்வு அளிக்கப்படும் என்பது எந்த வகையைச் சேர்ந்தது? என்று கேட்டாரே அதற்குப் பதிலே இல்லை. இவ்வளவு நிலைப்பாடுகள் இருந்தாலும், வட இந்தியர்கள் எப்பொழுதுமே இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை வாடிக்கையாகவே கொண்டவர்கள் - வாஜ்பேயி உட்பட; ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தும் நாடாளுமன்றத்தில் இந்தியில் தான் பேசுவார். அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது வாஜ்பேயிடம் கேட்டபோது, நாடாளுமன்றத்தில் நான் இந்தியில்தான் பேசுவேன் - உங்களுக்கு வேண்டுமானால் நான் பேசியதன் சுருக்கத்தை ஆங்கிலத்தில் கூறுகிறேன் என்றாராம்.

22 தேசிய மொழிகளை இந்திய அரசமைப்பு  சட்டம் அங்கீகரித்தாலும் இந்திக்கு மட்டும் ஏன் தனிச் சிம்மாசனம் என்பதுதான் இந்தி பேசாத பெரும்பாலான மக்களின் நியாயமான கேள்வியாகும்.

இவ்வளவுக்கும் இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 25 கோடியே. பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதெல்லாம் சுத்தப் புரட்டே!

அரசு விளம்பரங்களைச் செய்யும்போது 50 சதவீதம் இந்திக்குத்தான் முன்னுரிமை என்று மத்திய அரசு சுற்றறிக்கை விடுவது சட்ட விரோதமானது, நியாய விரோதமானது, ஏன் நம் பிக்கைத் துரோகமுமாகும். எல்லா மொழிக்காரர்களும் செலுத்தும் வரிப் பணம் இந்தியின் வயிற்றில் மட்டும் அறுத்துக் கட்டப்பட வேண்டுமா?

ஒரு நாட்டின் நிதி வலிமைக்கும், அந்நாட்டு மொழியின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு நாடு பொருளாதாரரீதியாக முன்னேறும்போது, அந்நாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதன் அவசியம் மிக மிக முக்கியமாகிறது. இந்தியாவிலும் அது நடக்கும். இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும்போது, இந்தி மொழியின் முக்கியத் துவத்தை உணர்ந்து உலகம் முழுவதும் பலரும் அதை கற்க ஆர்வம் கொள்வார்கள்.

மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்புதான், எந்த நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு அடிப்படை ஆகும். அதில், மொழியும், கலாசாரமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நான் வெளிநாட்டுக்குச் செல்லும்போதெல்லாம், அந்த நாட்டு மொழியில் சில வார்த்தைகள் பேசினால், அங்குள்ள மக்கள் உடனடி நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

மொழி என்பது தண்ணீர் போன்றது. எதில் அதை ஊற்றுகிறோமோ, அந்த நிறத்தையே அது பெறுகிறது. அது காற்று போன்றது. எந்த தோட்டம் வழியாக வருகிறதோ, அந்த மணத்தையும் சுமந்து வருகிறது.

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமோவுடன் இந்தி பாடல்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். அவர் ஒவ்வொரு இந்தி பாடலையும் தெரிந்து வைத்திருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இங்கு இந்திய படங்களும், இசையும் பிரபலமாக உள்ளன என்று  பேசியுள்ளார் ருசியாவில் பிரதமர் மோடி. ருசியாவில்கூட ருசிய மொழியை முன்னிறுத்திய காரணத்தால் தான் பிரிவினை எண்ணம் தலை தூக்கியது என்கிற பாடத்தை முதலாவதாக இந்தியப் பிரதமர் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்தியாவிலேயே இந்தி மொழி மட்டும்தான் இருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் பிரதமர் பேசி இருப்பது சற்றும் பொருத்தமற்றதே!

இந்தியாவில் செழுமை வாய்ந்த மொழிகள் ஏராளம்!  இன்னும் சொல்லப் போனால் இந்தத் திசையில் அடி மட்டமான வளமில்லாத மொழி இந்தியே!

பெங்காலி மொழி எட்டரைக் கோடி, தெலுங்கு ஏழரைக் கோடி, மராத்தி ஏழு கோடி, தமிழ் 7 கோடி, உருது 5 கோடி, குஜராத்தி 4.6 கோடி, கன்னடம் 4 கோடி, மலையாளம் மூன்றரைக் கோடி, ஒரியா 3.3 கோடி, சந்தாலி 64 லட்சம், காஷ்மீரி 55 லட்சம் மக்கள் பேசுகிறார்கள்.

இந்த மொழிகள் பேசுவோர் எல்லாம் இந்தியத் துணைக் கண்டத்துக்குள் தானே இருக்கிறார்கள். இந்தியாவிற்குள் கட்டுண்டு கிடக்கின்ற காரணத்தால் இந்த மொழியைப்பேசுவோர். இரண்டாந்தர குடிகளாக இருக்க வேண்டுமா? என்ற கேள்விகள் இந்தியா முழுவதும் வெடிக்கச் செய்யும் ஒரு நிலையை மத்திய பி.ஜே.பி. ஆட்சி தோற்றுவித்தால் - இந்த மொழிக்காரர்கள் தங்களின் தனித் தன்மையையும், பண்பாட்டையும் எப்படிக் காத்துக் கொள்வது என்ற திசையில் சிந்திக்க ஆரம்பிக்க மாட்டார்களா?

மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்பது ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கரின் கருத்து; சமஸ்கிருதத்தைத் திணிக்குமுன் - அதன் குட்டி மொழியான இந்தியை முன்னோட்டம் விட்டுப் பார்க்கிறார்கள் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சொல்லுவது சரியே! இந்தி பேசாத மக்களிடத்தில் எச்சரிக்கையும் - விழிப்புணர்வும் தேவை! தேவை!!   

கும்பமேளாவையொட்டி நாசிக் நகரில் 8 லட்சம் ஆணுறைகள் விநியோகமாம்!



நாசிக், ஜூலை 10_ மகா ராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் ஜூலை 14 அன்று கும்பமேளா என்ற அம் மணச் சாமியார்களின் கூட்டுக் களியாட்டம் நடைபெறும் இந்த நிகழ்வை ஒட்டி நாசிக் முழுவதும் 8 லட்சம் ஆணுறைகள்  விநியோ கிக்கப்பட்டுள்ளன.  

  ஜூலை 14 இல்

மும்பை நகரைச் சேர்ந்த பிரபல ஆணுறை விநியோகிக்கும் ஜே.கே.அன்ஷீல் மற்றும் ஜோய் லைஃப் லோடக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் என்ற இரண்டு நிறுவனங்களும் கடந்த மாதம் நாடு முழுவதும் விநியோகிக்கும் ஆணுறை யில் அளவை 60 விழுக் காடு குறைத்துள்ளது.  இது குறித்து அந்த நிறு வனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள் ளது  அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது,  மக ராஷ்டிரா நகரமான நாசிக்கில் ஜூலை 14 மகாகும்பமேளா நடை பெற உள்ளது இந்த கும்பமேளாவிற்காக எங்களது உற்பத்தில் 47 விழுக்காடு நாசிக் நக ரத்திற்கு அனுப்பியுள் ளோம். ஆகவே முன்னேற் பாடான இதர மாநிலங் கள் அதிகமாக இருப்பு வைத்துக்கொள்ளவேண்டு கிறோம் என்று அனுப்பி இருந்தது. அதே நேரத்தில் நாசிக் நகருக்கு அருகில் உள்ள பெருநகரங்களான மாலேகாவ் சிரிடி சங் கம்னேர் கோபர்காவ் உமர்காவ் போன்ற நக ரங்களில் பலமடங்கு ஆணுறைகள் வாங்கி இருப்பு வைத்தனர். எல் லாவற்றையும்விட மக ராஷ்டிர அரசு பாலியல் தொற்றுநோய் தடுப்புத் துறை வழக்கத்திற்கு மாறாக 8 லட்சம் ஆணு றைகளை நாசிக் மாவட் டம் முழுவதும் இலவச மாக வழங்க அனுப்பி யுள்ளது.   

பாலியல்நோய் தடுப்புத்துறை

வடமாநிலங்களில் சில ஆண்டிற்கு ஒருமுறை நாசிக், அலகாபாத், அரித் துவார் போன்ற நகரங் களில் நடக்கும் கும்ப மேளா விழாவில் லட்சக் கணக்கான நிர்வாண சாமியார்கள் ஒன்றுகூடு வார்கள். இவர்கள் கங் கையிலும், திரிவேணி சங் கமம் என்று அழைக்கப் படும் அலாகாபாத் நகரத் திலும் கோதாவரி நதி துவக்க இடமான நாசிக் கிலும் கூடி கும்மாளமிடு வார்கள். லட்சக்கணக் கான அம்மணச்சாமியார் கள் ஒன்று சேரும் போது பல விதங்களில் பிரச் சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மகராஷ் டிரா பாலியல்நோய் தடுப்புத்துறை கூறியுள் ளது. சாமியார்களுக்கு கவலையாம்  

கும்பமேளா நடக்கும் நிலையில், அதிகளவில் காண்டம்கள் வர வழைக்கப்படுவது விழா அமைப்பாளர்களை அதிர வைத்துள்ளது. சாமியார்கள் அதிக அளவு கூடும் நிலையில், இப்படி காண்டம்கள் விநி யோகம் செய்யப்பட்டுள் ளது தவறான முன்மாதி ரியை ஏற்படுத்தி விடும் என்று சாதுக்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன ராம்.

4 லட்சம் பாலியல் தொழிலாளர்கள்

2013 ஆம் ஆண்டு அலகாபாத் நகரில் நடந்த கும்பமேளாவிற்குப் பிறகு வட உத்தரப்பிரதேசத்தில் மாத்திரம்  4 லட்சத்திற்கு அதிகமாக பாலியல் நோய் தொடர்பான நோயாள கள் அரசு மற்றும் பொது மருத்துவ மனையில் சேர்க் கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

அரசும் இப்பிரச்சினையில் அக்கறையோடு இருப்பதில்லை

மத்திய அமைச்சர் மேனகா குற்றச்சாட்டு!

கூட்டத்தை விட்டு கோபமாக வெளியேறினார்

புதுடில்லி, ஜூலை 10_ அசோசெம், எப்அய்சி சிஅய், சிஅய்அய் உள் ளிட்ட வணிகத்துறை களின் பல்வேறு பிரிவு களாக உள்ளவர்களி டையே நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பாஜக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறைக்கான அமைச்சரான மேனகா காந்தி பங்கேற்றபோது, கொஞ்சம்கூட அக் கறையே இல்லாத கூட்ட மாக இருக்கிறது, கால விரயம்தான் என்று கோப மாகக்கூறிவிட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறி விட்டார்.

நாட்டை கட்டமைப் பதில் போதிய அக்கறை யுடன் அவர்களில் எவ ருமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள் ளார். மேனகா காந்தி கூட் டத்தில் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்தால் கூடியிருந்த பார்வையா ளர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. கால விரயமானது
வணிக அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பது என்பது மிகுந்த கால விரயமானது என்று மேனகா கூறியுள்ளார்.

நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ப தற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்படு கிறது. ஆனால், செயலாற் றுவதைக் காட்டிலும், அவர்களிடையே பேச்சு தான் பெரிதாக இருக் கிறது.

மேலும் அவர் கூறும் போது, நாடுமுழுவதும் பெண் களுக்கான 300 கழிப் பிடங்கள் மட்டுமே சிஎஸ்ஆர் மூலமாக கட் டப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது,

நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி, தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருக்கின் றன. நிறுவனங்களில் பாலி யல் புகார்களை பெற்று விசாரணை செய்து நட வடிக்கை எடுத்திட குழு அமைக்கப்பட்டு குறைந்த பட்சம் நிர்வாகத் தில் இயக்குநர்களாக ஒரு பெண்ணைக்கூட நிய மிக்காமல் உள்ளனர். அவர்கள் ஏராளமாக பேசுகிறார்கள். ஆனால் சிறிய அளவில் மட்டுமே அவர்களின் செயல்பாடு கள் உள்ளன. அரசு என்றாலும் வேண்டு கோளாகத்தான் கடமைக் காக செயல்பட்டுவரும் நிலை உள்ளது என்றார்.

பொதுவாக உள்ள குற்றச்சாட்டாக இருப்பது என்ன வென்றால், நிறு வனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் உறவினர் களை, குடும்பத்து உறுப் பினர்களையே இயக்கு நர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.

உங்களில் (நிறுவனத் தாரில்) எத்தனைபேர் உறவுமுறைக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்கும் பெண்களை நிர்வாகங் களில் நியமனம் செய்து வருகிறீர்கள்? அக்கறையு டன் கூடிய நிர்வாகிகளை நீங்கள் (நிறுவனத்தார்) நியமனம் செய்வதில்லை. அதேபோலவே நாங் களும்(அரசும்) கடமைக் காக வேண்டுகோளை முன்வைத்துவருகிறோம். அனைவரும் கூடுகிறோம், ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட பேச்சைப் பேசிவரு கிறோம் என்று கூறினார்.

பதில் அளிக்க வேண்டும்

மேலும் அவர் குறிப் பிடும்போது, உண்மையிலேயே அக் கறையுடன் பேசுபவர் களாக பேசுவதாக இருந்தால்தான், இங்கு கூடி விவாதிப்பதிலும், எதையாகிலும் செய்வதி லும் ஓர் பொருள் இருக்க முடியும் என்றார்.

உறவுப்பெண்களைத் தவிர்த்து நிர்வாகப் பொறுப்புகளில் பெண்  கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்போகி றேன் என்றார் மேனகா.

தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை

அதிர்ச்சித் தகவல்! அதிர்ச்சித் தகவல்!!

தாழ்த்தப்பட்டோருக்கான நிதியை தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கண்டனம்


சென்னை, ஜூலை 10_ தமிழக நிதிநிலை அறிக் கையில் அறிவித்த ஒடுக் கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதியை, தமிழக அரசு முழுமை யாகப் பயன்படுத்த வில்லை என தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய ஆணையம் தமிழக அர சுக்குக் கண்டனம் தெரி வித்துள்ளது.

தமிழக பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக் கான 18 சதவீத நிதியில் 2 சதவீதத்தை கூட அவர் களுக்காகப் பயன்படுத்த வில்லை என தாழ்த்தப் பட்டோருக்கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல்.புனியா தெரிவித் தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக் கான தேசிய ஆணையத் தலைவர் பி.எல்.புனியா தலைமையில், உறுப்பினர் கள் கமலம்மா, ராஜூ பார்மர் உள்ளிட்டோர் தமிழகம் வந்துள்ளனர். நேற்று  முன் தினம் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் சங்கங்களிடம் அவர்கள் கருத்து கேட்டனர்.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசி கன், தமிழக டிஜிபி அசோக்குமார் மற்றும் துறைகளின் செயலாளர் களுடன் நேற்று ஆலோ சனை நடத்தினர்.

தொடர்ந்து ஆணைய தலைவர் புனியா கூறிய தாவது:

தமிழகத்தில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு வழங் கப்படும் கல்வி தேசிய அளவைவிட 7 சதவீதம் அதிகமாக உள்ளது. கல்வி கற்ற தாழ்த்தப்பட்ட பெண்கள் எண்ணிக்கை யும் அதிகம். தாழ்த்தப் பட்ட மாணவர்களுக் கான 1,314 விடுதிகளில் 482 விடுதிகள் மாணவிகளுக் கானவை. இவற்றில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து புகார் வந்ததால், ஆய்வு செய்ய அரசுக்குப் பரிந்துரைத் துள்ளோம்.

தமிழகத்திலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக் கான 18 சதவீத இட ஒதுக் கீட்டை, 20 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளோம். இவர்களில், 33 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக் குக் கீழே உள்ளனர்.

தமிழக நிதிநிலை அறிக் கையில், தாழ்த்தப்பட்ட வர்களுக்காக ஒதுக்கப் படும் 18 சதவீத நிதியில், 2 சதவீதம் மட்டுமே அவர்களுக்காக செலவி டப்படுகிறது. மீதமுள்ள நிதி பொதுத் திட்டங் களுக்கு செலவிடப்படு கிறது. இதை ஆணையம் அனுமதிக்காது.

தேசிய அளவில் தாழ்த் தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகள வில் நடக்கும் 5 மாநிலங் களில் தமிழகமும் ஒன்று. வன்கொடுமை தொடர் பான புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதியாமல், நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே பதிவு செய்யப்படுகிறது.

வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி ஆதாரம் இல்லாவிட்டால் வழக்கை முடிக்கலாம். ஆனால், தமிழகத்தில் 70 சதவீதம் வழக்குகள் ஆதாரம் இல்லை என முடிக்கப் பட்டுள்ளன. மேலும், 10 சதவீதம் வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பான விஷயங் களை கண்காணிக்க மாநில அளவில் முதல் வர் தலைமையிலும், மாவட்ட அளவில் ஆட்சி யர் தலைமையிலும் கண் காணிப்புக் குழுக்கள் உள் ளன. ஆண்டுக்கு இருமுறை கூட வேண்டிய இந்த குழு, மாநில அளவில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஜூன் 25-_க்குப் பின் கூடவில்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் என போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்துள்ள 2000 பேரை யும் பணியில் இருந்து உடனடியாக நீக்கி, குற்ற நடவடிக்கை எடுக்க பரிந் துரைத்துள்ளோம்.

வேறு ஜாதி பெண் களை காதலிக்கும் தாழ்த் தப்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை விரைவில் கைது செய் வோம் என டிஜிபி விளக் கம் அளித்துள்ளார். கவுர வக் கொலைகள் விவகா ரத்தில் நீதி மறுக்கப்பட் டால் மட்டுமே ஆணை யம் தலையிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 9, 2015

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை புதிய திருப்பம்

மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் வியாபம் ஊழல் விசாரணை

புதிய திருப்பம் - சி.பி.அய். விசாரணைக்கு

உச்சநீதிமன்றம் உத்தரவு


டில்லி ஜூலை 9  கோடிக்கணக்கான ரூ ஊழல் மற்றும் 50 சந்தேக மரணங்கள் தொடர்பான வியாபம் ஊழல் தொடர் பான வழக்கை சிபிஅய் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடு மையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள வியாபம் ஊழல் தொடர்பான  வழக்கை சி.பி.அய். விசா ரணை செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், ஆம் ஆத்மி கட்சி யின் முக்கிய தலைவர் களில் ஒருவரான தலைவர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும். மத்திய பிர தேச உயர்நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விசா ரணை நடத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து ஊழலில் நேரடித் தொடர்பு உள்ளதாக கருதப்படும் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஆளுநர் இருவரையும் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  காங்கிரஸ் முன்னணி தலைவர் திக்விஜய் சிங் இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது ஊழலில் தொடர்புடைய மாநில முதல்வர் பதவியில் இருந்துகொண்டே விசா ரனையை எதிர்கொள்வ தென்பது விசாரனையின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும் ஆகவே நேர்மையான விசார ணைக்கு வழிவிட்டு சிவ் ராஜ்சிங் சவுகான் தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறினார்.

காவலர் மரணம்

இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என இன்று வரை 50 பேர் சந்தேகத் திற்கிடமான  முறையில் மரணம் அடைந்து வருகின் றனர். இந்த நிலையில், வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த போலீஸ் கான்ஸ் டபிள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மர்ம மான முறையில் இறந்தது தெரிய வந்துள்ளது.

போலீஸ் அகாடமியில் இருந்து மூன்று போலீசார் தப்பிக்க உதவி புரிந்ததாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த சஞ்செய் குமார் யாதவ் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக சிறப்பு விசாரணைக்குழு நீதிமன் றத்தில் நேற்று தெரிவித் துள்ளது. 

இதன்மூலம் இந்த வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் என மர்மமான முறையில் இறந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. தலைமை வழக்குரைஞர் உடல்நிலை மோசமாகியது  இந்த வழக்கை விசா ரித்து வரும் அரசுத் தரப்பு  வழக்கறிஞர் ஆதர்ஷ் முன்னி திரிவேதியின் உடல் நிலை தற்போது மிகவும் மோசமாகியுள் ளது. 

நேற்று மாலை, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர் சிறிது நேரத்திலேயே அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கும் போது மருத்துவமனைக் குக் கொண்டு வரும் போதே மிகவும் மோச மான நிலையில் அவரது உடல்நிலை இருந்தது. தற்போது அவரை உயிர் காப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்கள். இன்று உச்சநீதிமன்றத் தில் வியாபம் தொடர் பான வழக்கில் இவரது வாதமும் நடைபெறும் என்ற நிலையில் தற் போது வழக்கறிஞரும் உயி ருக்கு ஆபத்தான முறை யில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கில் பலர் மர்மமான முறையில் பலியாகி வரும் நிலையில் உணவில் விஷம் கலந்து கொலை செய்வதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமென அவரது குடும்பத்தார் சந்தேகிக் கின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பும் சங்பரிவார்களும்


ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட பிஜேபி தலைமையிலான மத்திய அரசு தயங்கும் நிலையில், கருநாடக மாநில காங்கிரஸ் அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை அரசின் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அதே நேரத்தில் அம்மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு சிலர் இதனை எதிர்க்க ஆரம்பித்துள்ளனராம். இதனால் ஜாதி உணர்வும், தீண்டாமை உணர்வும் மிகுமாம்!

இந்த பிரச்சினையில் ஓருண்மையை உணர வேண்டும். உண்மையிலேயே ஜாதி ஒழிய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஜாதி ஒழிக்கப்படல் கூடாது என்று நெஞ்சத்தின் ஆழத்தில் உணர்ச்சியைக் கூர்மையாக தேக்கி வைத்துக் கொண்டு இருப்பவர்கள் ஜாதிக் கணக்கெடுப்பு கூடாது - கூடவே கூடாது என்று கூக்குரல் போடுகிறார்கள்.

ஜாதி ஒழிப்புக் கொள்கை உடையவர்கள் ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கின்றனர் - ஜாதி மறுப்புத் திருமணங்களையும் செய்து கொண்டும் வருகிறார்கள்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிபற்றிய புள்ளி விவரத்தை வெளியிடக் கூடாது; அதனால் ஜாதி உணர்ச்சிப் பீறிட்டுக் கிளம்பும் என்று சொல்லுபவர்கள் யார்? உண்மையிலேயே அன்றாடம் நொடி தோறும் ஜாதி உணர்வில் திளைத்துக் கிடப்பவர்கள்   - ஜாதிய சிந்தனையோடே எல்லாவற்றையும் அணுகக் கூடியவர்கள். திருமணங்களை ஜாதிகளுக்குள் - அதுவும் உட்ஜாதிக் குள்ளேயே திருமணத்தை நடத்தி முடிக்க ஆண்டுக் கணக்கில் அலைந்து கொண்டிருப்பவர்கள்! பார்ப்பனர் களைப் பொறுத்தவரை ஜாதி சின்னமான பூணூலை அணிந்து கொண்டு திரிபவர்கள். ஒவ்வொரு ஆண்டும் பூணூலைப் புதுப்பிப்பதற்கென்றே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) ஏற்பாடு செய்து, அதற்கான சடங்குகளைச் செய்து கொண்டு இருப்பவர்கள். பார்ப்பான் வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைக்குக் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பூணூல் கல்யாணம் என்று பத்திரிகை அடித்துக்கூட விழாவாகக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்; இந்த பூணூல் அணிவிக்கப்பட்ட பிறகுதான் அவன் பிராமணனாக துவி ஜாதியாளனாக (இரு பிறப்பாளனாக!) ஆகிறான் என்று சாத்திரம் எழுதி வைத்துக் கொள்ளு பவர்கள்.

கோயில் கருவறைக்குள் பூணூல் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக வேண்டும் என்பதிலே குறியாக இருப்பவர்கள், இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிக் கொண்டு இருப்பவர்கள்.

சங்கர மடத்திலே இந்து மதத்தைச் சேர்ந்த எந்த ஒரு ஜாதியாரும் சங்கராச்சாரியார் ஆகலாம் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஜாதியின் விளைவான தீண்டாமையை ஷேமகரமானது என்று சொன்னவர்தான், பார்ப்பனர்களின் லோகக் குரு என்று துதிக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுடுகாடு - இடுகாடுகளில்கூட ஜாதிபேதம் இருக்க வேண்டும்; காரணம் ஒவ்வொரு ஜாதிக்கும் வெவ்வேறு சம்பிரதாயங்கள் உண்டு. நியாயம் கற்பிப்பவர்தான் இன்றைய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி.

இந்தச் சூழ்நிலை தெளிவாக  சூரிய வெளிச்சம் போல் நடைமுறையில் பளிச் பளிச் சென்று கண்ணுக்கு எதிரே நடமாடிக் கொண்டிருக்க - இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்பதுபோல இந்தக் கூட்டம் ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல முண்டா தட்டுவது என்பது அசல் மோசடி நாடகமே!

ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்பவர்கள் யார்? சமூகநீதி - இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்று சொல்லுபவர்கள், அதற்காகப் போராடுபவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது என்பவர்கள் யார்? சமூகநீதி, இடஒதுக்கீடு கூடவே கூடாது என்று கூறுபவர்கள்.

இப்பொழுது விவரம் தெரிந்திருக்க வேண்டுமே இதற்குள்ளிருக்கும் சூட்சுமம் என்ன என்று. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியில் வந்தால் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருந் தாலும், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் எந்த அளவு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அநீதி இழைக்கப் பட்டுள்ளனர் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வரும்; மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையில் உள்ள உயர் ஜாதிப் பார்ப்பனர்கள் எந்த அளவு தங்கள் எண் ணிக்கைக்கும் பல மடங்கு விகிதாசாரத்தில் கொழுத்துக் கிடக்கிறார்கள்; ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக் கிறார்கள் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும்.

தங்கள் ஆதிக்கம் பறி போய் விடுமே என்ற பதற்றத்தில் தான் ஜாதிவாரி கணக்கெடுப்புக் கூடாது கூடவே கூடாது என்று கூக்குரல் போடுகிறார்கள்.

இந்த உண்மையின் வெளிச்சத்தில் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரும் தங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டின் விகிதாசாரம் போதுமானதல்ல - எங்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அது அதிகரிக்கப்பட வேண்டும் என்று போராட முன் வருவார்கள் என்ற  அச்சத்திலேயே தான் எதிர்க் கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அறிவித்த நிலையில், அதுவரை வெளியிலிருந்து அவ்வாட்சிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த பிஜேபி ஆதரவை விலக்கிக் கொண்டதால் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் இந்த பிஜேபி சங்பரிவார் வட்டாரம் என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்ளுதல் மிகவும் பொருத்தமானது.

ஜாதி ஒழிப்பாளர்கள் போல கூச்சல் போடுபவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் - மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரம் தேவை என்பவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!  

Wednesday, July 8, 2015

பெண் கேலி செய்தவனை காவல் நிலையத்திற்குள் தர்மஅடி கொடுக்கும் மாணவி

பிலிபிட், ஜூலை 8_- உத்தர பிரதேசம் மாநி லத்தில் பெண் கேலி செய்தவனை பாதிக்கப் பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் பெண் கேலி செய்து உள்ளார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் தெரி விக்கப்பட்டது. இளை ஞரை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் பாதிக் கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.
இளைஞருக்கு பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குகிறார். அந்த இளைஞன் சாரி, சாரி என்று கெஞ்சு கிறான். சாரியா.. என்று கோபப்படும் அந்த பெண் செருப்பை கழற்றி இளை ஞன் கன்னத்தில் பளார் விடுகிறார். அடி தாங் காமல் இளைஞன் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட் கிறான்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி யுள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, July 7, 2015

என் உயிருக்கும் ஆபத்து வருமோ! மத்திய அமைச்சர் பயப்படுகிறார்

பிஜேபி ஆட்சியில் வியாபம்
என் உயிருக்கும் ஆபத்து வருமோ! மத்திய அமைச்சர் பயப்படுகிறார்
போபால், ஜூலை 7- தினம் தினம் மரணம் என்ற ஒரு கோரமான ஊழல் களமான வியாபம் கொலைகள் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறும் போது எனக்கு நாளை என்ன நேரும் என்று தெரியவில்லை, நடப்பதைப் பார்த்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.  வியாபம் ஊழல் தொடர்பானவர்கள் தொடர்ந்து அய்யத்திற் கிடமான முறையில் மரண மடைந்து வருகிறார்கள். சனிக்கிழமை முதல் தொடர்மரணம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆரோசா மாவட்டத்தில் உள்ள காவலர் தங்குமிடத்தில் தலைமைக் காவலர் ரமாகாந்த் பாண்டே அய்யத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.  இன்று காலையில் அவ ரது நண்பர்கள் அவரை எழுப்ப முயலும்போது அவர் இறந்து கிடந்ததாக தகவல் தெரி வித்தனர். ஆனால் காவல் துறை தரப்பில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மரண மடைந்த தலைமைக் காவலர் ரமா காந்த் பாண்டே, வியாபம் ஊழல் தொடர்பாக விசா ரணை செய்துவரும் சிறப்பு புலனாய்வுத்துறையில் சில தகவல்களைத் தெரிவித் ததாகவும் அதனடிப்படை யில் முக்கியப் புள்ளிகள் சிலரின் பெயர்களும் குற்ற வாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ப தும் குறிப்பிடத்தக்கது.  இந்த தொடர் மர ணங்கள் குறித்து நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியதாவது, வியாபம் தொடர்பானவர் களின் தொடர் மரணம் மிகுந்த அச்ச உணர்வை உருவாக்குகிறது.
எனக்கு மிகவும் பயமாக உள்ளது நாளை எனக்கு என்ன நேரும் என்று  பயந்து வாழ்கிறேன், ஆனால் என்னுடைய பெயரும் இதில் சேர்க்கும் முயற்சி நடந்துவருகிறது. என்னுடைய பெயரும், மரணமடைந்தவர்களின் பெயர் பட்டியலில் சேர்க் கப்படுமா? என்ற உணர்வு உள்ளூர இருந்துவரு கிறது என்றார்.  இந்தியாவையே உலுக்கிவரும் பாஜகவின் வியாபம் முறைகேடு குறித்து சி.பி.அய். விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரிய மனுக்களை உச்சநீதிமன் றம் ஏற்றுள்ளது.
வியாபம் ஊழலில் முதல்வர் முதல் ஆளுநர் வரையிலான பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளது இந்த நிலையில் மாநில அரசின் கீழ்வரும் காவல் துறை முறையாக விசாரணை நடத்தாது என்று கூறி சி.பி.அய் விசாரணை வேண்டுமென்று என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலை வர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தனர்.  இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்கள் விசார ணைக்கு எடுத்துக் கொள் ளப்படுகின்றன. மேலும், அனைத்து மனுக்களும் வரும் 9-ந் தேதி விசாரிக்கப் படும் என்று உத்தரவிட் டுள்ளது. இதனால் 9-ந் தேதி சிபிஅய் விசா ரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வியாபம் முறைகேட்டில் உள்ள சந்தேக முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம்.
கொலை மிரட்டல் வியாபம் ஊழலை வெளிபடுத்திய நாள் முதல், தொடர்ந்து பல் வேறு மிரட்டல்களை சந்தித்து வருவதாக ஊழல் விவகாரம் வெளி உலகுக்கு தெரிவதற்கு காரணமாக இருந்த ஆஷிஷ் சதுர்வேதி தெரி வித்தார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சமூக பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?

சமூக பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன்?
ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து களத்தில் இறங்கும் திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் எச்சரிக்கை!


சமூக பொருளாதாரப் புள்ளி விவரங்களை வெளியிட்ட பிஜேபியின் மத்திய அரசு, பெரும்பாலான மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன் என்ற வினாவை எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், வெளியிடா விட்டால் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் களம் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சியின்போது (1931) எடுக்கப்பட்டது. அதற்குப்பின் இத்தகைய கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது (UPA) மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நாடு தழுவிய அளவில் சமூக நீதிச் சிந்தனையாளர்கள் வலியுறுத்தினார்கள்.
தொடர்ந்து வலியுறுத்தி வருவது திராவிடர் கழகம்
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். மாநாடுகளில் தீர்மானங்களையும் நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம்; குறிப்பாக சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணி மாநாட்டிலும் தீர்மானமாகவே நிறைவேற்றினோம். (14.4.2010)
தொடக்கத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தட்டிக் கழித்த மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தும் வகையில் இடையில் குறுக்குச் சால் ஒட்டியது. பயோ மெட்ரிக் முறையில் இத்தகைய கணக்கெடுப்பை எடுப்பது என்ற அறிவிப்பு வெளிவந்தது. அதனைக் கடுமையாகக் கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன். (விடுதலை 13.8.2010)
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போன்று  ஜாதி வாரிக் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் (Bio-Metric) என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது ; பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு என்று குறிப்பிட்டு இருந்தோம்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அறிக் கையை விடுதலையில் வெளியிட்டோம் (27.8.2010).
நீதிமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரம் சேர்க்கப்படுவது அவசர அவசியமாகும். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி மக்கள் தொகைக்கான சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்பதால், இது மிக முக்கியம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் வலியுறுத்தியதோடு, உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு சமூக நீதி சம்பந்தமான வழக்குகள் நடைபெறும் போதெல்லாம் நீதிபதிகள் வழக்கமாக எழுப்பும் கேள்விகளாகவும் இவை உள்ளன.
எனவே மத்தியக் கணக்கெடுப்பு (சென்சஸ்) 2011இல் நடப்பதில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்க, கட்சித் தலைமைகள், மத்திய அமைச்சரவை அதன் குழு எல்லாம் முடிவு செய்த பிறகும் தாமதம் செய்வது மிகப் பெரிய சமூக அநீதியாகும். ஆட்சியில் உள்ள உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் ஆளுமை காரணமான சூழ்ச்சியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம் (விடுதலை 27.8.2010).
பல தடைக் கற்களைத் தாண்டி கடைசி கடைசியாக கடந்த 3.7.2015 அன்று மத்திய நிதி அமைச்சர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
இதில் என்ன கொடுமையென்றால் சமூக  - பொருளாதாரப் புள்ளி விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளதே தவிர - நாடே முக்கியமாக எதிர்பார்த்த - நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஜாதிவாரியான விவரத்தை மட்டும் வெளியிட வில்லை.
கேட்டால், நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் திரு. பிரனாப் சென் கூறுவது வேடிக்கையானதும் - பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற செயலுமாகும்.
பூனைக்கு ஓர் ஓட்டை குட்டிக்கு இன்னொரு ஓட்டையா?
தாய்ப் பூனைக்கு ஓர் ஓட்டை குட்டிக்கு வேறு ஒரு ஓட்டையா என்று சொல்லுவதுண்டு. அது இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானதாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மற்ற புள்ளி விவரத்தோடு வெளியிடாமல், நாடாளுமன்றத்தில் அதுவும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று சொல்லுவதற்கு விசேடமான காரணம் என்னவோ! அதனை விளக்கி இருக்க வேண்டாமா?
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் அவர்கள்   15 சதவீத உயர் ஜாதி பார்ப்பனர்களுக் காக 85 சதவீத மக்களின் விருப்பத்தை, உரிமை யைத் தடுப்பதா என்ற வினாவை எழுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் எதிர்ப்பு!
தொடக்க முதலே பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளன. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கூடவே கூடாது. இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு என்ற தலைப்பிட்டு ஏடுகளில் செய்திகள் வெளிவந்த துண்டு.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நடத்தினால் ஜாதி, இனம், மொழி, மதம் போன்றவற்றால் இந்தியாவில் பிரிவினை எண்ணம் தலை தூக்கும் என்று கூறியுள்ளனர். (தினமணி 26.5.2010, தினமலர் 20.6.2010).
பார்ப்பனர்களின் இரட்டை வேடங்கள்!
இன்றைக்கும் என்றைக்கும் ஜாதியைக் காப்பாற்றுவதில் கண்ணும், கருத்துமாக இருக்கக் கூடிய பார்ப்பனர்கள் ஆண்டுக்கொருமுறை ஜாதியின் சின்னமான பூணூலைப் புதுப்பிப்பதற் காகவே ஆவணி அவிட்டம் என்ற மதச் சடங்கு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை இல்லை, துவி ஜாதியாரான  நாங்கள் மட்டுமே அதற்கான தகுதி படைத்த வர்கள் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று ஆகமங்களைத் துணைக்கழைத்து, ஜாதியைக் காப்பாற்றிக் கொள்ளும் இந்தச் சக்திகள், திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்றரை கிலோ தங்கத்தில் பூணூல் சாத்தும் சங்கராச்சாரி கூட்டங்கள் (ஜெயேந்திர சரஸ்வதி தான் அவ்வாறு செய்தவர்) ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்றால் விண்ணுக் கும், மண்ணுக்குமாகக் குதிப்பது ஏன்? இதில் மறைந்திருக்கும் சூழ்ச்சி என்ன?
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியில் வந்தால் மக்கள் தொகையில் பெரும் பகுதியாக இருந்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு களில் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் மக்கள் தொகையில் மூன்று சதவீதம்கூட இல்லாத பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற குட்டு உடைபட்டுப் போகுமே எதிர்ப்புக் குரல் பீறிட்டு எழுமே என்பதாலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் போலப் பாசாங்கு செய்கிறார்கள்.
களம் காண்போம்!
பார்ப்பனர்களின் இந்த இரட்டை வேடத்தை நம் மக்கள் புரிந்து கொள்ளட்டும்! ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே வெளியிடா விட்டால் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்துக் கழகம் களத்தில் இறங்கத் தயங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

இரட்டைமலை சீனிவாசன்

ஆரியர்கள் நமது தேசத்தில் குடியேறி வந்து ஜாதி கோட்பாடுகளை உண் டாக்கியபோது, இப்போது பறையர், பஞ்சமர், ஆதி திராவிடர்களென்னும் திராவிடர்கள் இசையாமல், பல துன்பங்களுக்குட்பட்டு கொண்டு, தனியே சேரி என்னும் தங்கள் கிராமங் களையுண்டாக்கி கோயில், குளம் குரு கிராம தலைவர் (நாட்டாண்மைக்காரர்) பஞ்சாயத்தார், வண்ணான், அம்பட்டன், சுடுகாடு, இடுகாடு, விதவா விவாகம், விவாக சம்பந்த விலக்கு முதலியவையுடன் கிராமங் களில் தனி சமுதாயமாய் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
***
1895ஆம் வருஷத்தில் அச்சம்பவம் நேரிட்டது. அதவாது லண்டன் நகரில் சிவில் சர்வீஸ் பரீஷை நடந்து கொண்டிருந்தது. அந்த பரீஷையில் தேருகிறவர்கள் ஆங்கிலேயரே, அவர்கள் தான் கலைக்டர்களாகவும், இன்னும் தேச பரிபாலனத்தில் உத்தரவாதமான உயர்ந்த பதவிகளினின்று தேச பரிபாலனஞ் செய்து கொண்டு வந்தார்கள். அந்த பரீஷை இந்தியாவிலும் நடைபெற வேண்டுமென பிரிட்டிஷ் பார்லிமெண்டில் காங்கிரஸ்காரர்கள் ஒர் மசோதா சமர்ப்பித்தார்கள். அந்த பரீஷையானது இந்தி யாவிலும் நடந்தால் ஜாதி இந்துக்கள், உயர்தர உத்தி யோகங்களை வகித்து ஏழை ஜாதியாரானவர்களை தீண் டாதார் என்று இம்சிப்பார் களென பறையர் மகா ஜன சபையார் (இதன் செயலாளர் இரட்டைமலை சீனிவாசன்) சென்னை வெசிலியன் மிஷன் காலேஜ் ஆலில் 1893ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஒரு பெருங் கூட்டம் கூடி அந்த மசோதாவை எதிர் மறுத்து 112 அடி நீளமுள்ள ஒரு மனுவில் 3412 கையொப் பங்கள் சேகரித்து ஜெனரல் சர்ஜார்ஜ் செஸ்னி (நிமீஸீவீக்ஷீ நிமீஷீ. சிலீமீஸீமீஹ்) என்னும் பார்லிமென்ட் மெம்பரைக் கொண்டு சமர்ப்பித்தார்கள். அதனைக் கண்ட காங்கிரஸ் காரர் தங்கள் மனுவை பின்னித்துக் கொண்டார்கள். அதன்பின் கீழ்தர உத்தியா கங்களிலிருந்து மேல் தர உத்தியோகத்தை வகிக்க யோக்கியதையுள்ளவர்களை நியமிக்கலாமென இந்திய செக்ரேட்டிரியார் உத்தர வளித்தார்.
***
கிராமங்களில் இவ்வின குடியானவர்கள் நிலை மையை திட்டமாய் குறித்த தோடு சென்னை நகரத் திலுங்கூட மைலாப்பூரில் அய்க்கோர்ட் ஜட்ஜாக விருந்த ஓர் இந்தியர் வசிக்கும் வீட்டுக்குச் சமீப மாயுள்ள பிராமணர் தெரு வில் பறையர் உள்ளே வரக் கூடாது என்ற விளம்பரப் பலகையொன்று இருப்பதாகவும், இந்துக்கள் ஸ்தாபித்து இருக்கும் பச்சையப்பன் கலா சாலையில் இவ்வினத்துப் பிள்ளைகளைச் சேர்ப்ப தில்லை என்றும் மனுவில் கண்டிருந்தது. அந்த  பலகையெடுபட்டு போகவும் கலாசாலையில் பிள்ளை களைச் சில காலத்திற்கு பிறகு சேர்க்கவும் இம் மனுவே காரணம் (ஆதாரம்: இரட்டை மலை சீனிவாசன் ஜீவிய சரித்திர சுருக்கம் பக்.25-271)
- மயிலாடன்
குறிப்பு: இன்று இரட்டை மலை சீனிவாசன் அவர் களின் பிறந்தநாள் (7.7.1860).

Monday, July 6, 2015

நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ! - தமிழர்களே உஷார்! உஷார்!

தமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சி!

நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ!
தமிழர்களே உஷார்! உஷார்!
-க.பூபாலன்
சமீபகாலமாக  வாட்ஸ்அப்/முக நூலில் "நடராஜர் சிலையை" சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும்" என்ற ஒரு வீடியோ  செய்யப்படுகிறது.  அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு.
அந்த வீடியோவில் நான் ஒரு  Physics Student  என்று சொல்லி. அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா?  என்று ஆரம்பித்து.....
கி.பி. 7, 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின்    தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர். சி.வி. இராமன் (1930), அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் (1983). அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று  சொல்கிறார். ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை.
அடுத்து 1950-களுக்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும், கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில். தமிழ் கலையையும், கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
திராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல், உயிரியல், வேதியியல் (Botany- Zoology-Chemistry) எல்லாம் அழிந்து வருகிறது. அது மட்டுமல்ல  அடிப்படை அறிவியல் -(Basic-science)- இல்லாமல் போய் விட்டது.
அடிப்படை அறிவியலை  வளர்ப்பதற்கு கோயில்களையும், தமிழ் சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு   புது விளக்கத்தைக் கொடுக்கிறார்!
தமிழர்களின் கலாச்சாரத்தையும், கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழி-அரசியலும் சாதி-அரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும், சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க  தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
அது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்/பேஸ்புக்கில்    பகிர்ந்து வருகிறான்! சரி அவருடைய நோக்கம் என்ன?
1. நடராஜர் சிலையை பற்றி கூற வேண்டுமா? இல்லை.
2.சிற்பக் கலையை வளர்க்க வேண்டுமா? இல்லை.
3. தமிழர் வரலாறை எடுத்து கூற வேண்டுமா? இல்லை.
4. நோபல் பரிசை பற்றி கூறி அறி வியலை வளர்க்க வேண்டுமா? இல்லை.
5. --அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வளர்க்க வேண்டுமா? இல்லை.
6. சாதிகள் ஒழிந்து எல்லோரும் சமத் துவமாக வாழ வேண்டுமா? இல்லை.
7.தமிழ் மொழியை வளர்க்க வேண் டுமா? இல்லை.
இப்படி எதுவுமே இல்லையென்றால்
1. அவருடைய நோக்கம் தான் என்ன?
திராவிட கட்சிகளை ஒழிக்க வேண் டும். திராவிட சிந்தனையை ஒழிக்க வேண் டும்.
2.    ஏன் ஒழிக்க வேண்டும்?
தமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும்! சாதி உணர்வை அழிப் பதும்! திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.
3. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.  இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) இருவரும் தமி ழர்களா?
இல்லவே இல்லை!. தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தமிழ்பேச தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று ஆகிவிடமுடியுமா?
அப்படியென்றால் ஆங்கிலம்பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆங்கிலே யர்கள் ஆகிவிடமுடியுமா?
மொழி என்பது ஒரு கருவி. அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது. சர்.சி.வி. இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930, அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது! படிக்கவும் முடியாது! ஆரிய-பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம்!
அந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார்! அப்போது தோன்றியது-தான் திராவிடர் இயக்கம்!
இப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு.
நோபல்பரிசு வாங்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!
4.    கோயில்களை, பரத நாட் டியத்தை, தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன?
அப்போதுதான் மத சிந்தனையை வளர்க்க முடியும்; காரணம்
கோயில்கள்; கடவுள் என்ற நம்பிக் கையை வளர்க்க புராணக் கதையின் அடிப்படையில் உருவானது!
பரதநாட்டியம், தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை! அறிவியல்; அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது! இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும்.
காரணம்  கோயில், பரதநாட்டியம், தமிழ்சங்கீதம் மூன்றும் இந்து மதத்தின் அடிப் படையில் போற்றப்படுபவை!.
5. கோயில்களையும் கடவுள் சிலை களையும் உருவாக்கியது தமிழர்களா?
கடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும், கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள்! ஆனால், கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள்!
அதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இருந்தது. அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது. அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது.
அதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே! அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும். அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது.
அதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது. ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு! கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும். அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும்!
அதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்! திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும், கடவு ளையும், சிலை யையும், மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே.
அதனால் தான் திருக்குறள் "உலகப் பொது மறை" நூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.
மேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.  அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே! ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை! என்று தான் கூறுகிறார்.  திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார்! பாடினார்!. சமஸ்கிருதத்தில் பாட வில்லையே! தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது!
6. ஏன் மொழி அரசியல் என்று கூறுகிறார்?
தமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது. மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது, தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.
ஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால். முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது. காரணம் தமிழ் புத்தாண்டை "எண் களின்". அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு.
அதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள். இதை விட கேவலம் வேறு உண்டா?
அதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார். அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு  தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.
அந்த கணக்குபடி இப்போது நடப்பது. திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும். இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும்? அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா?
சிந்தியுங்கள்! இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. நம் இனத்தின் வரலாறு என்பது வேறு.
7.    மொழி அரசியல், சாதி அரசியல் என்று குற்றம்சாட்டுபவர் ஏன் மத அரசியலை பேசவில்லை?
மத அரசியலை பேசினால் ஸி.ஷி.ஷி. ஙி.யி.றி. போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும். அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள். காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள், மதம், சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது.
ஏனென்றால் "திராவிடர்" என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல். அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள்.  அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972-இல்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் "பிறப் பினால் அனைவரும் சமம்" என்கிறார். அதனால் புரிந்து கொள்ளுங்கள். திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும், திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும். மொழி உணர்வை ஒழிக்க வேண்டும். என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும், தமிழர் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.
அதனால் தமிழர்களே! இளை ஞர்களே விழிப்போடு இருங்கள்! வர லாற்றை கொஞ்சம் தெரிந்து கொள் ளுங்கள்.
திராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை. அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம்!  அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது.
தமிழர்களின் நாகரிகத்தை  வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார்.  "அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங் கருணை!" என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக  வாழவேண்டும். என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.
சமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை- 1-_யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார்.
இப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி.
அந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது,
அதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள்! இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது. உங் களுக்கு தெரியுமா?
திருக்குறள் உலகறிய பரவியது திராவிடர் இயக்கத்தினால்.
வள்ளுவருக்கு உருவம், சிலை, கோட்டம் வந்தது திராவிடர் இயக்கத் தினால்.
வள்ளுவருக்கு பூணூல் போட்டு அய்யராக்கும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்
வள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!
மறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால்!
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது திராவிடர் இயக்கத்தினால்!
சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாறியது திராவிடர் இயக்கத்தினால்!
பெண்கள் உரிமைபெற முடிந்தது திராவிடர் இயக்கத்தினால்!
தமிழ்முறை சுயமரியாதை திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!
கோயிலுக்குள் செல்ல முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
நாம் எல்லோரும் படிக்க முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
இப்படி சொல்லிகொண்டே போகலாம்............
இதையெல்லாம் யார் செய்தார்கள்? என்று யோசிக்காமல். ஏன் செய் தார்கள்? என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு. காரணம் கடவுள், மதம், அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும்.
எதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும், அழிக்கவும் உதவும், ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும், தமிழர்களின் உரிமையை காக்கவும், மீட்கவும் உதவும். அதனால் சிந்தியுங்கள்!
நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும், செயல்பட வேண் டும்! அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும்,  நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும், இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!
திராவிடர் நாகரிகத்தை தமிழர் வரலாற்றை
அழித்தும் திரித்தும் ஆரியத்தை புகுத்தியவர் ஆரியர்! ஆய்ந்து ஆதாரமாக்கி நூலாக தந்தவர் ஆங்கிலேயர்!
அழிந்து ஒழிந்துவிடாமல் போராடி வென்றவர் பெரியார்!
அவரால் பிறந்து வளர்ந்தது திராவிடர் இயக்கம்! தமிழர் நாகரிகத்தை வளர்ப்பது ஒன்றே நோக்கம்!
தமிழர் உரிமையை காக்கும், மீட்கும் இயக்கம்!
இதை நாம் புரிந்தால் நீங்கும் ஆரிய மயக்கம்! போற்றினால் ஓங்கும் சுயமரியாதையெனும் ஒழுக்கம்!
இது வரலாற்று உண்மை! இதை தெரிந்து- புரிந்து நடப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...