Friday, February 14, 2014

முட்டாள்தனம் உனக்கு மட்டும்தான் சொந்தமா?

இஸ்ரேலில் கன்னி மேரி சிலை ஒன்று பேசிய தாக வந்த தகவல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் லெபனான் எல் லையை ஒட்டியுள்ள டர்ஷிஹா என்ற சிறிய நகரத்தில் ஒசாமா கவுரி என்ற குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது வீட்டின் வரவேற்பறையில் உள்ள கன்னி மேரி சிலை சமீப காலங்களாக பளபளப் புடன் இருப்பதை, மனைவி அமிரா பார்த்துள்ளாராம்.

இதனை சுத்தம் செய்த சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் அந்த சிலையில் எண்ணெய்த் தன்மை தென்பட்டுள்ளதாம். அத்துடன் கன்னி மேரி சிலை தன்னிடம் பேசியதாகவும், தன்னை பயப்பட வேண்டா மென்று கூறிய தாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தத் தகவல் வெளியே கசிந்து விடவே, நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பார்வையிடுகின்றனர்.

மேலும் சிலையின் கன்னத்தில் ஒரு கண்ணீர் துளி திரண்டு வெளிப்பட்டதாகவும், கடந்த வாரம் மட்டும் 2,000க்கும் மேற்பட்டோர் வந்து இந்த சிலையை பார்த்து சென்றுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்பதுதான் இந்தச் செய்தி. இது போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவது எல்லா மதத்திலும் உண்டு; 

ஒரு சில நாள்களில் வந்த இடம் தெரியாமல் போய் விடும். சென்னையில்கூட சிலுவைக் குழந்தை என்று ஒரு புரூடா கிளம்பி சில நாள்களில் கப்சிப்! 

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று புரளி கிளப்பி விடப்படவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். காரர்களும் சந்திராசாமியும் சேர்ந்துதானே அந்தப் பித்தலாட் டத்தை அரங்கேற்றினர். பிள்ளையார் கொழுக்கட்டை தின்பதாக நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று சென்னை அண்ணா சாலையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் டாம் டாம் அடித்தாரே!

இதுபோன்ற வெளி நாட்டுத் தகவல்களை தந்தை பெரியாரிடம் யாராவது சொன்னால் முட்டாள்தனம் என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமா? என்று கேட் பார். அதுதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

மதம் என்றாலே அற்புதங்களைக் கிளப்பி விட்டு, அதை நம்பும் பாமர மக்களின் முட்டாள் தனத்தில்தானே உயிர் வாழுகிறது!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...