Thursday, February 25, 2016

கிறித்தவர்களைச் சீண்டும் இந்துத்துவாவாதிகள்


மும்பை, பிப்.24_ ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த இந்துவாகச் சித்திரித்து, மராத்தி மொழியில் எழுதப் பட்ட புத்தகம், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

 இந்துத்துவ சிந்தனையாளரான வி.டி.சாவர்க்கரின் சகோதரர் கணேஷ் சாவர்க்கர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதுகுறித்து வீர சாவர்க்கர் நினைவு அறக்கட் டளையின் தலைவர் ரஞ்சித் சாவர்க்கர், மும்பையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வி.டி.சாவர்க்கரின் சகோதரர்கள் எழுதிய படைப்பு களைப் பாதுகாத்து, பிரசுரம் செய்யும் பணியை எங்கள் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

ஏசு கிறிஸ்துவை தமிழகத்தைச் சேர்ந்த ‘விஸ்வகர்மா-பிராமண’ இனத்தைச் சேர்ந்தவராகச் சித்திரிக்கும் ‘கிறிஸ்தவ பரிச்சய்’ என்ற மராத்தி புத்தகத்தை சாவர்க் கரின் மூத்த சகோதரர் கணேஷ் சாவர்க்கர், கடந்த 1946ஆம் ஆண்டு வெளியிட்டார்.  அந்தப் புத்தகம், வி.டி.சாவர்க்கரின் நினைவு நாளான வரும் 26ஆம் தேதி மீண்டும் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் புத்தகத்தில், சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிறிஸ்துவை மக்கள் காப்பாற்றி, இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைச் செடிகளைக் கொண்டு அவருக்கு சிகிச்சையளித்துக் காப்பாற்றியதாக வும், பின்னர் காஷ்மீரில் ஏசு மறைந்ததாகவும் கூறப் படுகிறது. தற்போது அரபு நாடுகளாகவும், பாலஸ் தீனமாகவும் இருக்கும் நிலப்பரப்புகள் அந்தக் காலத்தில் இந்துக்களின் பகுதிகளாக இருந்தன. மேலும், யோகா பயில்வதற்காக ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.

ஏசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் கேசவ் கிருஷ்ணா என்றும், தமிழ் அவரது தாய் மொழி என்றும், அவர் கருப்பாக இருந்ததாகவும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் ரஞ்சித் சாவர்க்கர்.

இதுதொடர்பாக, மும்பையைச் சேர்ந்த மூத்த கிறிஸ் தவப் போதகர் வார்னர் டிசவுசா கூறுகையில், “இத்தகைய புத்தகங்களால், கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தளர்ச்சி அடையாது’’ என்றார்.

புண்ணிய முழுக்குப் போட்ட மகாமகக் குளத்தின் கேவலத்தைக் கேளீர்!

மலக்கழிவு28சதவிகிதம்;
மூத்திரக்கழிவு40சதவிகிதம்!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு


கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத் தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.
கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் குளத்து நீர் மிக அதிக அளவு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையினரின்
உடல்நலம் பாதிப்பு!
குளத்தைப் பாதுகாக்கும் 25,000 காவல்துறையினரின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையில், பல காவல்துறையினருக்கு தொண்டை கரகரப்பு, மற்றும் தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் தொற்றியுள்ளன என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்து நீரில் பல மணிநேரம் நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தியுள்ளனர். இது குறித்து பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர், குளத்து நீரில் பலமணிநேரம் நின்ற காரணத்தால் கால் அரிப்பு மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுவிட்டன என்று கூறினார்.
விநாடிக்குக் குறைந்தபட்சம் 75 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்திருந்தாலும் குளத் தில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிமானதும், தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது, மேலும் குறைந்த அளவு ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரின் ஓட்டம் அறவே நின்றுவிட்டதால் குளத்தின் தூய்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் ஆடைகளில் உள்ள நிறமூட்டி வேதிப்பொருள்கள் தண்ணீரில் கலந்த காரணத்தால் நீர் அதிகமாக மாசு அடைந்துள்ளது, எனவும் தெரியவந்துள்ளது.
இ.கோலி
இ.கோலி  என்பது எசரிக்கியா கோலி என்பதன் சுருக்கமாகும் இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிக மாகும்பொழுது குடல்புண் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. முக்கியமாக ஓ157:எச்7 போன்ற பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை நச்சாக்கி மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கின்றன. இத னுடைய வாழ்க்கைச் சுழற்சி மலத்தின் மூலம் வெளியேறி நீர்நிலைகளில் கலந்து பிறகு தாவரம் மற்றும் மீன் உணவு வழியாக மீண்டும் மனித குடலைச் சென்றடையும். சமைத்த உணவு உண்ணும் பழக்கம் உள்ள மனித இனங்களில் மிக அதிக அளவு இவ்வகை பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதி, மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் இவ்வகைப் பாக்டீரியாக்கள் குடலில் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன.




மனித மலக்கழிவு - மூத்திரக் கலப்பு

நீரில் இ-கோலி என்னும் பாக்டீரியாக்கள் அதிக அளவு உள்ளன. (இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் உள்ள சளி போன்ற திரவத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.மலம் கழிக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் வெளியேறி நீரில் கலந்துவிடுகின்றன). இவ்வகைப் பாக்டீரியாக்கள் 28 விழுக்காடு குளத்து நீரில் கலந்துள்ளது. மேலும் மனித சிறுநீரில் உள்ள யூரியாவின் அளவும் குளத்து நீரில் 40 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

மாவட்ட நீரியல் துறை நிர்வாக அலுவலர் ஒருவர் கூறும்போது,
நாங்கள் குளத்து நீரை ஓட்டத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். ஆனால், வெளியேறும் நீரின் அளவு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அதிகமாக இருந்தது. முக்கியமாக குளத்தின் கரைப்பகுதி மற்றும் 2 அடி ஆழமுள்ள பகுதி நீர் அப்படி தங்கிவிட்டது. இதனால் மாசுக்கள் அதிகமாகிவிட்டன. மேலும் மக்கள் தொடர்ந்து வந்து முழுக்குப் போடுவதால் மாசு மிகவும் அதிகமாகிவிட்டது என்று கூறினார்.




.

 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, February 24, 2016

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள சமஸ்கிருதமே சரியான அளவுகோல்!


சமஸ்கிருதம் என்று சொன்னால் அது செத்தொழிந்த மொழி என்பது ஊருக்கே, உலகத்துக்கே தெரிந்த வெளிச்சமான உண்மை.

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 14 ஆயிரமே என்று சொல்லப்பட்டாலும்கூட, அது நடைமுறை சாத்தியமில்லாமல் தானிருக்கிறது. 2013 இல் வெளிவந்த புள்ளி விவரம் இது; 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகும் எண்ணிக்கை உயரவில்லை; அதே தேக்க நிலைதான். (சங் பரிவார் வகையறாக்களுக்கு நமது அனுதாபங்கள்!)

அம்மொழி ஏதோ இருக்கிறது என்றால், புரோகிதத்திலும் அர்ச்சனையிலும்தான் - அதுகூடப் பொருள் புரிந்து சொல்லப் படுகிறதா என்பது சுவையான கேள்வி.

1960 ஆம் ஆண்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து இந்துக் கோவில்களின் நிலவரங்களை நிரல்படுத்தியுள்ளது.

அர்ச்சகர்களைப்பற்றிக் கூறும்போது, ‘‘அனேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? சமஸ்கிருத மொழியை அறிந்த வர்கள் என்பதைவிட பாரம்பரியமாக அர்த்தம் தெரியாது. நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனப் புரோகிதரை வைத்து நடத்தப்பட்ட விவாக சுபமுகூர்த்தத்திற்குச் சென்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கல்யாண வீட்டில் கருமாதி மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துச் சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியும் உண்டு.

பார்ப்பனர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வீட்டிலாவது சமஸ்கிருத மொழியில் உரையாடல் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் உண்மையான பதில்.

இந்த நிலை இருந்தாலும்கூட பார்ப்பனர்கள் சனாதன சங்கராச்சாரியாரிலிருந்து, அரசியல் ஆச்சாரியார் என்று சொல்லப்படும் ராஜகோபாலாச்சாரியாராக இருந்தாலும் சரி (ராஜாஜி) சமஸ்கிருதத்தின்மீது வைத்துள்ள பற்று என்பதைவிட வெறித்தனம் என்பது அளவிட்டுச் சொல்லப்பட முடியாத ஒன்றே.

இதுகுறித்து அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்.’’ (‘திராவிட நாடு’, 2.11.1947) என்று அண்ணா சொல்லும் உரைக்கல்லில் வைத்து உரைத்துப் பார்த்தால், பார்ப்பனர் தம் உள்ளத்தின் தன்மை உண்மையாகவே விளங்கும்.

‘‘சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது - அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் ‘‘சர்வ வியாபசத்வம்’’ என்பார்கள்.

உலகில் முதன்முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்சம் நூற்றாண்டுகளுக்கு முன்புதான் ‘‘பாணிணி’’ என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான், அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய (றிலீவீறீஷீறீஷீரீஹ்) சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது’’ - இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

‘முற்றுந் துறந்த லோகக் குரு’ என்று அக்கிரகாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (‘ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).

சங்கராச்சாரியார் எல்லாவற்றையும் கடந்தவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம்; எதைத் தாண்டினாரோ இல்லையோ, அவாளின் சமஸ்கிருதப் பற்றை மட்டும் தாண்ட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பூஜை வேளையில் எந்த  காரணத்தை முன்னிட்டும் தமிழில் பேச மாட்டார். அப்படிப் பேச நேரிட்டாலும் குளித்து முழுகி விட்டுத்தான் மறுபடியும் பூஜையை ஆரம்பிப்பார்; காரணம், அவாள் பார்வையில் தமிழ் நீஷ பாஷையாம்.

இவர் ஆன்மிக ஆச்சாரியார் - அரசியல் ஆச்சாரியார் ராஜாஜி என்ன சொல்கிறார்?

‘பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி என்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால், மகாபெரிய விபத்தாகும்’’ என்று கூறுகிறார்.

அவரை விட்டுத் தள்ளுங்கள், கோமாளி என்று பொதுவாகச் சித்தரிக்கப்படும் திருவாளர் சோ.ராமசாமி கோவிலில் அர்ச்சனை மொழி தமிழ் என்றால், எப்படியெல்லாம் எகத்தாளமாக எழுதுகிறார்.

‘‘நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால், அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது; ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால், பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல - ஒலிக்கு’’ என்று தலையங்கம் தீட்டுகிறார் (‘துக்ளக்’, 18.11.1998) எல்லாம் வல்ல கடவுள் என்று பசப்புவார்கள். ஆனால், அவரைக்கூட அவாளின் சமஸ்கிருதக் குடுவைக்குள் அடைக்கிறார்களே - புரிகிறதா - அதுதான் அவாளின் இனப்பற்றும் - மொழிப்பற்றும்.

சமஸ்கிருதத்திலிருந்து எதற்குத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமாம்? அதுபற்றி அவர் ஒன்றும் கூறவில்லையே! கோவிலில் வழிபாடு செய்ய தமிழில் பாடல்கள் இல்லையா?

திருவாசகம், தேவாரம் என்று ஒரு பட்டியல் இருப்பதாக சைவ மெய்யன்பர்கள் சொல்லுகிறார்களே, அவையெல்லாம் குப்பைக் கூளங்களா?
பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமஸ்கிருதம்தான் சரியான அளவுகோல்! மத்தியில் உள்ளது பார்ப்பன ஜனதா ஆட்சி என்பதால், சமஸ்கிருதத் திணிப்பு திட்டமிட்டு நடக்கிறது - எச்சரிக்கை!

நான் யார்? - - தந்தை பெரியார்


 தந்தை பெரியார்

அன்புள்ள திராவிட மந்திரிமார்களே நான் யார்?

உங்கள் சொந்த எதிரியா?

உங்கள் இன எதிரியா?

உங்கள் கொள்கை எதிரியா?

உங்கள் உத்தியோகம், பதவி பற்றிப் பொறாமைப்படுகிறவனா?

அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா?

இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா?

உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா?

எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா?

டாக்டர் சி. ராஜகோபாலாச்-சாரியாருக்கு நாளைக்கு கருப்புக் கொடி பிடிக்கச் செய்ய வேண்டியவனாக நான் ஆனாலும் அவரிடத்தில் சொந்தத்தில் சிறிதாவது வெறுப்போ துவேஷமோ அல்லது அன்புக்குறைவோ, மதிப்புக் குறைவோ எனக்கு உண்டு என்று அவராவது, வேறுயாராவது சொல்ல முடியுமா? தவிர - 1911ஆவது வருஷம் வரை நான் மைனர், ஒரு முரடன், 1911இல் என் தகப்பனார் செத்தது முதல், அதாவது 1911 முதல் 1920ஆம் ஆண்டு வரையில் நான்

1. தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்ட்

2. ஆனரரி மாஜிஸ்டிரேட்

3. கோ-ஆப்ரேடிவ் அர்பன் பாங்கி செக்ரட்டரி

4. தாலுகா போர்டு மெம்பர்

5. ஜில்லா போர்டு மெம்பர்

6. 1914இல் ஈரோட்டில் நடந்த கோவை ஜில்லா காங்கிரஸ் கான்பிரன்சுக்கு செக்ரட்டரி

7. ஆனரரி வார் ரிக்ரூட்டிங் ஆபீசர்

8. மகாஜன ஸ்கூல் செக்ரட்டரி

9. ஈரோடு ரீடிங் ரூம் செக்ரட்டரி

10. ஈரோடு முனிசிபல் வாட்டர் ஸ்கீம் செக்ரட்டரி

11. வார்கமிட்டி செக்ரட்டரி

12. வார்பண்ட் கலெக்ஷன் கமிட்டி பிரசிடெண்ட்

13. ஓல்ட் பாய்ஸ் அசோசியேஷன் பிரசிடெண்ட்

14. எஸ்.அய்.சேம்பர் ஆப் காமர்ஸ் சப் கமிட்டி மெம்பர்

15. வருஷம், 900 ரூ இன்கம் டாக்ஸ் (1920இல்) அந்தக் காலத்தில் கொடுத்து வந்த வியாபாரி.

16. கடைசியாக முனிசிபல் சேர்மன் ஆகவும் இருந்தவன்.

17. ஈரோடு வாட்டர் வர்க்ஸ் வேலை முடிந்து திறப்பு விழா ஆற்றியதற்கு சர்க்காரில் எனக்கு சர்.பி. ராஜகோபாலாச்சாரியர் சிபாரிசு செய்த ராவ்பகதூர் பட்டத்தை மறுத்துவிட்டு, காங்கிரஸ் சேவைக்கு ஆக என்று இவ்வளவு பதவிகளையும் ராஜினாமா கொடுத்து, சிலவற்றை ஏற்க மறுத்து, சன்யாசி வேஷம் கொண்டு ஆச்சாரியார், வரதராஜூலு நாயுடு விருப்பப்படி காங்கிரசில் சேர்ந்தவன்.

18. இவைகளை ராஜினாமா கொடுத்தபிறகு கூட சர்க்கார் இன்கம் டாக்ஸ் -_ அப்பீல் கமிட்டி மெம்பராக எண்ணை வித்து, கயிறு வியாபாரிகள் அப்பீலுக்கு தனி அப்பீல் அதிகாரியாக நியமித்தார்கள். இதற்கு தினம் 100 ரூபா. படி _- 1லு முதல் வகுப்புப்படி.

19. காங்கிரசுக்கு வந்த உடனே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியானவன்.

20. அடுத்த ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவன் ஆனவன்.

21. தமிழ்நாடு காதி, வஸ்திராலய பவுண்டர் (துவக்கியவன்) ஆகவும், 5 வருசத்துக்குத் தலைவனாகவும் தெரிந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் சுமார் 40 கதர் கடையும், 30 ஆயிரம் முதல் 1,00,000 ரூ. வரை மாதம் கதர் உற்பத்தியும் செய்யும்படி ஏற்பாடு செய்தவன்.

22. 1924இல் நான் பார்ப்பனியம் _-பார்ப்பன ஆட்சி பிடிக்காமல் காங்கிரசிலிருந்து வெளியேறி 1926 முதல் 1936 வரை ஜஸ்டிஸ் மந்திரிகள் நண்பனாக இருந்தவன். அக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் பாடுபட்டவன்.

23. இவ்வளவு சம்பந்தத்திலும், பாட்டிலும் யாரிடமிருந்தாவது ஒரு சின்னக்காசு வரும்படியோ, பட்டமோ எனக்காவது, எனக்கு வேண்டியவர்களுக்காவது, என் குடும்பத்துக்-காவது ஒரு சிபாரிசோ, பதவி லாபமோ ஏதாவது பெற்றவனா? ஆசைப்பட்டவனா?

24. நான் காங்கிரசிலிருந்து வெளியேறிய பின்பும்கூட காங்கிரஸ் நிர்மாணத் திட்டத்தில் கதரைத் தவிர மற்றவைகளுக்கு ஆக உழைத்தவனே தவிர எதையாவது எதிர்த்தவனா?

25. இந்தி விஷயத்திலும்கூட இந்தி பள்ளிக்கூடம் தென் இந்தியாவில் 1922இல் முதன்முதல் துவக்கத்திற்கு இலவச இடம், 15 மாணவர்களுக்கு இலவச சாப்பாடு கொடுத்து வந்ததோடு, அதன் பண்டுக்கும் உதவி செய்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்து உதவி செய்தவன்.

26. அன்றியும் காங்கிரஸ் திட்டத்தில் பார்ப்பன ஆதிக்கம் தவிர மற்றபடி நான் எதற்கு விரோதி?

27. இன்றுதானாகட்டும், எனது அரசியல் கொள்கை என்பதுகூட திராவிடநாடு வடநாட்டான் ஆதிக்கத்தில் இருந்து அரசியலிலும், பொருளாதாரத்திலும் பிரிந்து பர்மா, சிலோன் போல ஒரு தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி காங்கிரஸ் அரசியல் கொள்கையில் திட்டத்தில் நான் எதற்கு விரோதி?

28. இந்தத் திட்டத்திலும் என்னிடம் ஏதாவது இரகசியமுறை இருக்கிறதா?

29. திராவிட நாடு தனியாய் பிரிந்தால் மந்திரிமார்களே! பெரிய அரசியல்வாதிகளே!! திராவிட நாட்டுக்கு என்ன கெடுதி ஏற்படக் கூடும்? என்று இதுவரை நீங்களாவது சொன்னீர்களா?

இவை நிற்க, இனி எனது சமுதாயத் திட்டம் தானாகட்டும், வருணாசிரம தர்மமுறை ஒழிய வேண்டுமென்பதும், பார்ப்பன சமுதாயத்துக்கு எந்தத் துறையிலும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேற்பட்ட பங்கும், எண்ணிக்கைக்கு மேற்பட்ட உரிமையும், சராசரி வாழ்க்கை முறைக்கு மேற்பட்ட தன்மையும் இருக்கும்படியான எவ்வித நடப்பும் வசதியும், சலுகையும் இருக்கக் கூடாது என்பது தானே?
சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப் பட்டு இருக்கும் திராவிட மக்களுக்குத் தனிச் சலுகை கொடுத்து கூடியவரையில் சம சமுதாயமாக்கப்பட வேண்டுமென்பதும் தானே?

சமயத் துறையில் புராணக் கடவுள்கள் பிரசாரமும், விக்கிரக ஆராதனையும் அனுமதிக்கக் கூடாது என்பதோடு, கோவில், மடம், வர்ணமுறை, தர்மம் என்பவைகள் பேரால் பணம் இருப்பு இருப்பதோ, சேர்ப்பதோ, செலவு செய்வதோ கூடாது என்பதும்,

தர்மம் என்பதெல்லாம் மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வும், வாழ்க்கைத் தேவையில் பெருமித உயர்வு தாழ்வும், இல்லாமல், நித்திய ஜீவனத்தைப் பொறுத்தவரையிலாவது அடிமை உணர்ச்சி தேவையில்லாத ஆண்மை வாழ்வு வாழ வகை செய்ய வேண்டுமென்பதும்தானே ஒழிய மற்றபடி எந்தத் துறையில் என்ன கெடுதி ஏற்பட நான் ஆசைப்படுகிறேன்?

கல்வியில் தானாகட்டும், 100க்கு 90 திராவிட மக்கள் கைநாட்டுத் தற்குறிகளாய் இருக்க, இதைச் சரிபடுத்தாமல் (அய்ஸ்கூல், உயர்தரப் பள்ளி காலேஜ், கல்லூரிகள், பல்கலைக்-கழகங்கள், என்னும் பேரால்) பாட்டாளி மக்களின் உழைப்பை வரியாக வாங்கி கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்யக் கூடாது என்பதைத் தவிர கல்விக்கு நான் எந்த விதத்தில், என்ன கெடுதி செய்கிறேன்?

நமக்கு அரசியலுக்கோ, சமய சமுதாய இயலுக்கோ, வேறு கலை இயலுக்கோ ஆள்கள் வேண்டுமானால் வேண்டிய அளவுக்கு கிராண்டு, ஸ்காலர்ஷிப், ஸ்டைபண்டு கொடுத்து எங்காவது சென்று படித்து வரும்படிச் செய்து வேலை வாங்கலாம் என்றும், ஏராளமான பிரபுக்கள் இருக்கிற நாட்டில் பிரபுக்களுக்கு மாத்திரம் கிடைக்கும்படி கலைகளுக்கு, உயர்ந்த கல்விக்கு ஏழைகள் பணம் ஏன் செலவு செய்யவேண்டும்? என்பவை போன்ற கருத்தன்னியில் மற்றபடி நான் எந்த விதத்தில் நாட்டுக்கு, சமுதாயத்திற்குக் கேடு விளைவிப்பவனாக இருக்கிறேன்? அன்றியும், என்னிடத்தில் எங்காவது எப்போதாவது பலாத்காரத்தைத் தூண்டும் சொல்லையோ, செய்கையையோ, ஜாடையையோ கண்டீர்களா?

அல்லது என் பேச்சால், எழுத்தால், செய்கையால் எங்காவது, என்றாவது பலாத்காரம், கலகம், குழப்பம் ஏற்பட்டதா? சர்க்காரைக் கவிழ்க்கும் ஜாடையைக் கண்டீர்களா? குழப்பம், கலவரம் உண்டாகும் ஜாடையையோ, அனுபவத்தையோ கண்டீர்களா?

ஆதலால் இந்திப் போராட்டத்தை ஒடுக்குவது என்கிற சாக்கை வைத்துக் கொண்டு என் முயற்சியை, என் தொண்டை நீங்கள் அழித்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டீர்களானால் அதை உங்கள் இஷ்டத்துக்கே விட்டுவிடுகிறேன்.

எனது தொண்டுக்கும், முயற்சிக்கும் இந்தி ஒழிப்பது என்பது மாத்திரமே காரணமல்ல, என்பதை உணர்ந்து அடக்குமுறை துவக்குங்கள். என் முயற்சி, தொண்டு எல்லாமுமே நியாயமானது, அவை வெற்றி பெற வேண்டும் என்பதேயாகும். அதற்கு நீங்கள் எந்தவிதத் தடங்கலும், குந்தகமும் செய்யக் கூடாது என்பதற்கேயாகும்.

உங்கள் எண்ணத்தை, நடத்தையை நீங்கள் பதவிக்கு வந்த இந்த சுமார் ஓர் ஆண்டாக நான் கவனித்து வருகிறேன். என் விஷயத்தில் இதுவரை பார்ப்பன ஆதிக்க மந்திரிகளால் செய்யப்படாத காரியங்களை நீங்கள் செய்தீர்கள். அவர்கள் அனுமதித்து வந்த காரியங்களை நீங்கள் தடுத்தீர்கள். அவர் காட்டிய சலுகையைக்கூட நீங்கள் காட்ட மறுக்கிறீர்கள்.

இதற்குக் காரணம் என்ன? உங்கள் பதவிப்பித்து அல்லது பயங்காளித்தனம் தானே? இல்லாவிட்டால் நான் என்ன அயோக்கியனா? சமுதாயத்துக்கு, அரசியலுக்கு ஆபத்தானவனா? என்னமோ செய்யுங்கள்!

- குடிஅரசு, 21.08.1948



Friday, February 12, 2016

பெண்ணுரிமை - வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு

பெண்ணுரிமை - வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்று பவரான ரிச்சா மிஸ்ரா என்பவர் காவல்துறையில் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட இருந்த நிலையில்  அவருக்கு வயது அதிகமாகிவிட்டது என்கிற காரணத்தைக்கூறி, அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வில் அவரின் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவ்வழக்கில், மூத்த அலுவலர் நியமனங்களில் பெண் களுக்கு 10 ஆண்டுகள்வரை வயது தளர்வு செய்து நிய மிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாகவே அரசுத்திட்டங்களை நேரடியாக பெறுபவர்களாக பெண்கள் இருப்பதில்லை. ஆனால், மாற்றங்களுக்கு  முக்கியமான காரணியாக இருப்பவர்கள் பெண்களே ஆவர். பொருளாதாரம் மற்றும் அதிகாரங்களில் பெண்களுடைய பங்களிப்பு இருந் தால்தான் உண்மையான வளர்ச்சியை அடையமுடியும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
8.2.2016 அன்று வெளியான 38பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிடும்போது, “சமூக மாற்றங்களின் முக்கிய காரணிகளாக இருப்பதுடன், பெண்கள் மட்டுமன்றி ஆண்களின் வாழ்விலும் மாற்றங்களை பெண்கள் ஏற்படுத்துகிறார்கள். அரசே பெண்களைக் காப்பாற்றுங்கள், பெண்களைப் படிக்கவையுங்கள் என்கிற (பெண்களுக்கு கல்வி) திட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில், பெண்களுக்கு அதிகாரங்கள் அளிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். பன்னாட்டளவில் பெண்கள் அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் தடைகளையும், பாகுபாடுகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அரசமைப்புச் சட்டம் கூறும் ஆண், பெண் சமத்துவ நிலை என்பதில் உண்மைநிலை வேறாகவே உள்ளது. அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற சமத்துவத்தை எட்டுவதற்கு நீண்டகாலம் ஆகிவருகிறது என்பதுதான் உண்மைநிலை’’ என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரங்கள் அளிக்கப்படுவதில் பெண்கள் நடத்தப்படுகின்ற விதம் என்பதில் மெதுவாகவே முன் னேற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. பொருளாதார சுதந்திரம் மற்றும் தற்சார்பு, பொதுமரியாதை ஆகிய வற்றின்மூலமாகவே எந்த ஒரு சூழ்நிலையையும் பெண்கள் எதிர்கொள்ளவும், வளர்ச்சிக்கான செயல் பாடுகளில் ஈடுபடவும் முடியும்.
நோபல் பரிசு பெற்றவரான பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், கூற்றை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு அதிகாரமளிப்பது என்பது இனிய உறவுக்கு வழிவகுப்பதாகும். ஒருவர் இல்லாமல் மற்றவர் இல்லை.
பெண்களுக்கான அதிகாரம் மூலமாகவே திறமையாக தடைகளைக்கடந்து வளர்ச்சியை எட்ட முடியும். குறிப்பாக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்புகள், உரிமைகள், அரசியல் பங்களிப்புகள் அனைத்திலும் பெண்களால் சாதிக்க முடியும்.
ஆண், பெண் சமத்துவமின்மை காரணமாக வாய்ப் பின்மை, வறுமை உள்ளதாகவும், பெண்களுக்கான அதி காரமளித்தல் எனும் கொள்கை செயலாக்கம் பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக இருக்கும் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் சமத்துவத்தை எட்டுவதற்கு பெண்களுக்கான அதிகாரம் அளிக்கின்ற கொள்கையை செயல்படுத்துவது மிகவும் அவசியமாகும். குழப்பத்துக்கு இடமில்லாமல் பெண்களுக்கான அதிகாரம் என்பது மேலும் ஊக்கத் துடன் வளர்ச்சியை முழுமையாக்கும்’’ என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே வரவேற்கத்தகுந்த தீர்ப் பாகும். மனித சமூகத்திலே கிட்டத்தட்ட சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை, பிள்ளைப் பெறும் இயந்திரமாகவும், வீட்டு வேலை பார்க்கும் சம்பளமே இல்லாத வேலைக்காரியாகவும் நடத்தினால், பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்ல, அது சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, கல்வி, வேலைகளில் வாய்ப்புக் கதவு திறக்கப்பட்ட நிலையில், மளமளவென்று முன்னேறி வருகிறார்கள்.
இன்னும் அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். ஆண்களுக்கு 50 விழுக் காடு, பெண்களுக்கு 50 விழுக்காடு என்ற சம வாய்ப்பு அளிக்கப்பட்டால்தான் உண்மையிலேயே ஜன நாயகத்தையும், சமூகநீதியையும் நாம் மதிக்கிறோம், பின்பற்றுகிறோம் என்று பொருள்.
வயதைக் காரணம் காட்டி வாய்ப்பு மறுக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆண் ஆதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராகத் துரும்புக் கிடைத்தாலும் தூணாக்கிக் காட்டுவார்கள் - அதனை எல்லாம் புரிந்துகொண்ட நிலையிலேதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரியானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
பெண்கள் வளர்ச்சிக்கும், உரிமைக்கும் எந்த மதம் தடையாக இருந்தாலும் அதையும் தகர்த்தெறிய வேண்டும்.
தந்தை பெரியார் அவர்கள் முக்கால் நூற்றாண்டுக்கு முன் தெரிவித்த கருத்துகளை காலந்தாழ்ந்தாவது நீதிமன்றங்கள் நிலை நாட்டுவது வரவேற்கத்தக்கதாகும்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு

பி.ஜே.பி.யுடன் கூட்டணி இல்லை
மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிவிப்பு
சென்னை, பிப். 11_ பி.ஜே. பி.யுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தி.மு.க. பொருளா ளர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக அறிவித்து விட் டார்.
பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
உண்மை
இல்லை
தமிழக சட்டசபை தேர் தலை தி.மு.க._ பா.ஜ.க. சேர்ந்து சந்திக்கப் போவ தாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்தத் தகவலில் எந்த அடிப்படை உண்மை யும் இல்லை.
தி.மு.க._ பா.ஜ.க. இடையே எந்த ரகசிய பேச்சுவார்த் தையும் நடக்கவில்லை. ஆனால், தி.மு.க.வை தீண் டத் தகாத கட்சி என்று கூறி வந்த பாரதீய ஜனதா இப்போது எங்களைத் தேடி வருவதாக தகவல் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மு.க.ஸ்டாலின் மறுப் பைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமி ழிசை சவுந்தரராஜனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு டாக்டர் தமிழிசை அளித்த விளக்கம் வருமாறு:
கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்பாக இதுவரை வெளியான எல்லா தகவல்களும் யூகங் கள்தான். பா.ஜ.க. சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறி விப்பும் வெளியிடப்பட வில்லை.
நாங்கள் பேச்சு நடத் தியது போல வெளியான தகவலில் உண்மை இல்லை. எனவே தி.மு.க.வுடன் கூட் டணிபற்றி பதில் அளிப்பது சரியாகாது என்றார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் விட ஆலோசனையாம்

இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் விட ஆலோசனையாம்
புதுடில்லி, பிப்.11_ இந்திய வரலாற்றுச் சின்னங்களின் பராமரிப்பை தனியாரிடம் அளிக்க ஆலோசனை செய்து வருவதாக மத்திய கலாச் சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித் துள்ளார். இந்திய தொல் பொருள் ஆய்வகத்தில் உள்ள அலுவலர் பற்றாக் குறையை சமாளிக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள் ளது.
மத்திய அரசின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப் பாக செயல்பட்டு வருவது இந்திய தொல்பொருள் ஆய்வகம்(ஏ.எஸ்.அய்). இது, ஆக்ராவின் தாஜ்மகால், டில்லியின் செங் கோட்டை உட்பட நாட் டிலுள்ள அனைத்து வர லாற்றுச் சின்னங்களை புதுப்பிப்பதுடன், பாது காத்தும், பராமரித்தும் வருகிறது.
இங்கு பணியில் இருக்கும் பாதுகாப்புப் படைகளும் ஏ.எஸ்.அய். யால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஏ.எஸ்.அய்.யிடம் உள்ள அலுவ லர் பற்றாக்குறை அதிக மாக உள்ளது. இதை அதி கரிக்க அரசிற்கு ஆர்வம் இல்லை என்பதால் நாட் டின் சில வரலாற்றுச் சின் னங்களை பராமரிப்பு மற் றும் பாதுகாப்பிற்காக தனி யாரிடம் ஒப்படைக்க மத் திய கலாச்சாரத்துறை அவ் வப்போது யோசிப்பது வழக்கமாக உள்ளது.
ஏனெனில், முறையான பராமரிப்பு இன்றி இந்திய வரலாற்றுச் சின்னங்களில் பல அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. இதற்கு ஏ.எஸ்.அய்.யிடம் இருக்கும் நிதிப்பற் றாக்குறையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
இவற்றை தனியாரிடம் ஒப்படைக்க ஒவ்வொரு முறையும் வர லாற்றாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந் தும் கடும் எதிர்ப்புகள் கிளம்புவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த முறை மத்திய கலாச்சாரத் துறையின் சார்பில் வர லாற்றுச் சின்னங்களை தனி யாரிடம் ஒப்படைக்க தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து மகேஷ் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், இதற்கான யோசனை, சில துறையினர் மற்றும் சுற்றுலா தலப் பகுதிகளில் இருந்து வந் துள்ளது. டில்லியின் செங் கோட்டை, குதுப்மினார் ஆகியவற்றின் உட்புற பரா மரிப்பை தனியார் அளிக்க யோசித்து வருகிறோம்.
இவை சுத்தப்படுத்துதல், கழிவறைகளை சுத்தமாக்கு தல், பாதுகாப்பு, நூலகம், பசுமைப் பராமரிப்பு, சிற் றுண்டி போன்றவை ஆகும். இதன் மீதான கருத்துகளை பிரபல தனியார் நிறுவனங் களிடம் இருந்து பெற விரும்புகிறோம். எனத் தெரிவித்தார்.
இந்தத் தகவலை அமைச்சர், நேற்றுமுன் தினம் டில்லியில் சுற்றுலா தகவலகம் துவக்கி வைத்த போது தெரிவித்தார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

திருச்சி-சிறுகனூர் ‘பெரியார் உலகம் திடலில்’ இருபெரும் மாநாடுகள்! தமிழர் தலைவர் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்

திருச்சி-சிறுகனூர் ‘பெரியார் உலகம் திடலில்’ இருபெரும் மாநாடுகள்!
தமிழர் தலைவர் மாநாடு நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டார்
கே.என்.நேரு உள்ளிட்ட தி.க., தி.மு.க. பிரமுகர்கள் உடனிருந்தனர் - மாநாட்டு நிதியும் குவிந்தது
திருச்சி, பிப்.11_ பெரியார் உலகம் சிறுகனூரில் (திருச்சி) மார்ச் 19, 20 ஆகிய நாள் களில் நடைபெறவிருக்கும் மாநாட்டுத் திடலைப் பார்வையிட்டார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள். திருச்சி தி.மு.க. மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான கே.என். நேரு, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தி.க., தி.மு.க. தோழர்கள் உடனி ருந்தனர். மாநாட்டுக்கு நிதி யையும் தோழர்கள் அளித்த னர். செய்தியாளர் கள் சந்திப்பும் அங்கு நடந் தது.
திருச்சி சிறுகனூரில் மார்ச் 19, 20 ஆகிய தேதி களில் ஜாதி தீண்டாமை மற்றும் சமூகநீதி மாநாடு நடைபெறவுள்ள திடலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் நேரில் பார்வையிட்டு தேவையான அறிவுரைகளையும் வழங்கி னார். மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
பின்னர் அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப் பில் அவர் கூறுகையில், சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் இரண்டு நாள் மாநாடு, மாபெரும் அள வில் நடைபெற இருக்கின் றன. முதல் நாள் திராவிடர் கழக மாநில மாநாடாக  ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடாகவும், இரண்டா வது நாள் சமூக நீதி மாநாடும் நடைபெற இருக் கிறது. இம்மாநாட்டில் முக் கிய தலைவர்கள் அழைக் கப்பட்டிருக்கிறார்கள்.
மூத்த தலைவர் தி.மு.க. தலைவர் கலைஞர், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, லாலுபிரசாத் உள்ளிட்டோரும், தென்னிந்திய சமூகநீதி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
சமூகநீதி வரலாற்றை எல்லா மக்களுக்குக்கும் விளக்கக் கூடிய வரலாற்றுக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.
தே.மு.தி.க.வின் எதிர்காலம்
மேலும் செய்தியாளர்கள் கேட்டதற்கு தி.மு.கவுடன், தே.மு.தி.க. கூட்டணி சேருமா? என்று கேட்டதற்கு  தி.மு.கவுடன், தே.மு.தி.க கூட்டணி அமைத்தால் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று கூறினார். மேலும் செய்தியாளர்கள்  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்டால் ஆத்திகருக்கு லாபமா? நாத்திகருக்கு லாபமா? என்று கேட்டதற்கு இரண்டு பேருக்குமே லாபம். ஆனால் நாத்திகர்கள் யாரும் அர்ச்சகராக போவதில்லை.
ஆத்திகரும், பிற ஜாதியினரும் தான் நேரடியாகப் பயன்பெறுவார்கள்  என்றார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.
மேனாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தோழர்கள்
முன்னதாக மாநாட்டுத் திடலை முன்னாள் அமைச்சரும் தி.மு.க மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு, மாநகர தி.மு.க. செயலாளர் மு.அன்பழகன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திருச்சி மாவட்ட தி.க தலைவர் மு.சேகர், பொறியாளர் சுந்தரராசுலு, பேராசிரியர்கள் நல்.இராமச்சந்திரன், ப.சுப்பிரமணியம், லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,
திருச்சி மாவட்ட செயலாளர் ச.கணேசன், லால்குடி மாவட்ட துணை தலைவர்கள், ப.ஆல்பர்ட், அட்டலிங்கம் ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி, சிறுகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி(தி.முக), வேங்கூர் தனசேகரன்,
மாவட்ட பிரதிநிதி பன்னீர் செல்வம், சிறுகனூர் கிளை செயலாளர் கணேசன் உள்ளிட்ட தி.மு.க நிருவாகிகளும், தி.க மாவட்ட அமைப்பாளர் இளவரி, மோகன்தாஸ், சத்தியமூர்த்தி, தேவா, முருகன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், பெரம்பலூர் முகுந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக தோழர்கள் உடனிருந்தனர்.
உள்ளிட்டோரும், தென்னிந்திய சமூகநீதி தலைவர்களும் கலந்துகொள்கிறார்கள். சமூகநீதி வரலாற்றை எல்லா மக்களுக்குக்கும் விளக்கக் கூடிய வரலாற்றுக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவான அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...