Monday, August 31, 2009

அத்வானி முகமூடி கிழிந்தது- அரசியல் வாழ்வும் முடிகிறது



- சிறப்புப் பார்வை

ஒரு தலைவருக்கு இருக்க வேண்-டிய முக்கியப் பண்பு, தான் எடுத்த முடிவின் காரணமாக ஏற்படும் விளை-வுகளுக்கு துணிந்து பொறுப்பேற்பதே என்று கூறுவார்கள். அந்த நேர்மையும், துணிவும் நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னான அரசியலில் நமது தலைவர்கள் பெரும்பான்மையினரிடம் காண முடியாத ஒன்றாகிவிட்டது.

வெள்ளைய காலனி ஆட்சியை எதிர்த்து சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் நடந்த இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கிடையிலான கொள்கை மாறுபாடுகள் எத்தகையதாயினும் அவர்கள் அனைவரிடமும் நேர்மை இருந்தது. அவர்களின் முடிவுகளும் பார்வைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைந்துவிட்ட பின்னரும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்பட்டதாகவே இருந்தது_ இருக்கிறது. ஆனால் அவர்களின் கொள்கையிலும் பார்வையிலும், போராட்டத்திலும் இல்லாதது சுய நலமும், அயோக்கியத்-தனமும்தான். இந்த குண வலிமை இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு அதன் தலைவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, சில பத்தாண்டுகளில் தலைமையின் தனித்-தன்மையே சுய நலமும், தன்னைத் தாண்டி மற்ற அனைவரையும் ஏமாற்றும் அயோக்கியத்தனமுமே என்றாகிவிட்டது. அதன் வெளிப்-பாடுகளே எமர்ஜென்சியில் இருந்து பாபர் மசூதி இடிப்பு, காந்தஹாருக்கு விமானக் கடத்தல், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், தமிழருக்கு எதிராக இலங்கை அரசிற்கு உதவுதல் என்று தொடர்ந்து கொண்டு-தானிருக்கிறது.

இந்திய அரசியலை கவ்வியுள்ள அந்த குறைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட-தல்ல பாரதிய ஜனதா கட்சி. அதுவே இன்றைக்கு அந்தக் கட்சிக்குள் ஏற்-பட்டுள்ள உள் யுத்தத்திற்குக் காரண-மாகவுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான தங்களின் வேட்பாளர் இவரே என்று அறிவிக்கப்பட்ட லால் கிஷன் அத்வானி, அக்கட்சித் தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி கண்ட 3 மாதத்திலேயே அரசியல் வாழ்வின் அஸ்தமன காலத்திற்கு தள்ளப்பட்-டுள்ளது சற்றும் எதிர்பாராததுதான்.

புதுடில்லியில் முகாமிட்டுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலை-வர் மோகன் பகவத், பாரதிய ஜனதாக் கட்சிக்குள் உருவான அத்வானி எதிர்ப்பு எனும் புயலை அடக்க ஒரு சமரசத் திட்டத்தை வகுத்துவிட்டார் என்றும், அதன்படி அத்வானி வகித்துவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுஷ்மா சுவராஜிடம் அளிக்கப்படவுள்ளது என்றும் வரும் செய்திகள், 60 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட அத்வானியின் அரசியல் வாழ்-வின் முடிவையே பறைசாற்று-கின்றன.

அத்வானியின் அரசியல் வாழ்வின் இந்த திடீர் முடிவை நிர்ணயித்தது, தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு உண்மையை அவர் மறைத்தது மட்டு-மின்றி, அதன் விளைவில் பங்கேற்கும் துணிவின்றி, தனது சகா ஒருவர் மீது அதனை சுமத்தியதால் வந்த வினை என்பது செய்திகளை தொடர்ந்து படித்துவருபவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டெல்லி நோக்கிப் பறந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் அய்.சி.814 விமானத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தினர். 176 பயணிகளுடன் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை பாகிஸ்தானிற்கு கடத்துமாறு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகள் கட்டளையிட்டனர், பாகிஸ்தான் அந்த விமானத்தை லாகூர் விமான நிலை-யத்தில் தரையிறங்க அனுமதிக்காததால், அது பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை முடக்கி நிறுத்திவிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அறிந்த கடத்தல்காரர்கள் விமானத்தை உடனே கிளப்புமாறு உத்தரவிட, அந்த விமானி படாத பாடு-பட்டு லாகூரில் விமானத்தை இறக்கினார். அங்கு எரிவாயு நிரப்பிக் கொண்டு அது துபாய்க்கு பறந்து, அங்கு 27 பயணிகளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு, ஆஃப்கானிஸ்-தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 149 பயணிகளையும், விமானி-கள், விமான பணியாளர்களை மீட்க-வும் கடத்தல்காரர்களுடன் இந்தியாவின் ஆஃப்கானிஸ்தான் தூதரக அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். பயணி-களையும், விமான ஊழியர்களையும் விடுவிக்க வேண்டுமெனில் தங்களுக்கு 200 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 35 இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.

அத்வானி பொய்யர்

ஒரு வார காலம் பேரம் நடந்தது. இறுதியில் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. அவர்கள்: 1. மௌலானா மசூத் அசார் (பின்னாளில் ஜெய்ஸ் இ மொஹம்மது இயக்கத்தை தோற்றுவித்தவர், இந்த இயக்கம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் தொடர்பு-டையது), 2. அஹம்மது உமர் சயீது சேக் (பின்னாளில் அமெரிக்க பத்திரி-கையாளர் டானியல் பியர்லை கடத்தி படுகொலை செய்த பயங்கரவாதி), 3. முஸ்டாக் அஹம்மது ஜர்கார் (பாகிஸ்-தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்-மீரில் இன்றுவரை தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்-படுபவர்). இவர்களுடன் காந்தஹார் புறப்பட்டுச் சென்ற அன்றைய அய-லுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகளை ஒப்படைத்துவிட்டு, விமானத்துடன் பயணிகளையும் மீட்டுத் திரும்பினார். கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைத்த தலிபான்-களுக்கும் தனியாக பணம் கொடுத்த-தாகவும் கூறப்பட்டது. ஆனால் உறுதி-படுத்தப்படவில்லை.

இப்படி தீவிரவாதிகளை விடுவித்து, கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகள் மீட்கப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்வானி பேசினார். அப்போது உள்துறை அமைச்சராகவும், பிரதமர் வாஜ்பேயிக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த அமைச்சர் என்ற வகையிலும் அத்வானிக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்பதால், அவர் பொய்யுரைக்கிறார் என்று குற்றம் சாற்றப்பட்டது.

தீவிரவாதிகளை விடுவித்துதான் பயணிகள் மீட்கப்பட்டனர் என்பது அத்வானிக்குத் தெரியும் என்று ஜஸ்வந்த் சிங் கூறினார். இது தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்-குள்ளேயே சர்ச்சையானது. இன்று மொஹம்மது அலி ஜின்னா - இந்தியா, பிரிவினை, விடுதலை என்ற தலைப்பில் ஜஸ்வந்த் சிங் எழுதி வெளியிட்ட புத்தகம், தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி, விளக்கம் கோராமலேயே ஜஸ்வந்த் சிங் வெளி-யேற்றப்பட்டதும், காந்தஹார் கடத்தல் மீண்டும் வெடித்தது. தனக்குத் தெரியாது என்று அத்வானி கூறியது அப்பட்ட-மான பொய் என்றும், தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்பது என்று வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்-சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்-பட்டபோது அதில் அத்வானியும் கலந்து கொண்டார் என்றும் குட்டை உடைத்த ஜஸ்வந்த் சிங், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அத்வானி பொய்யுரைக்-கிறார் என்று பகிரங்க-மாகவே குற்றம் சாற்றினார்.

அதுமட்டுமின்றி, கடத்தப்பட்ட விமானம், லாகூருக்குக் கடத்தப்படுவ-தற்கு முன்னர் அரை மணி நேரம் இந்திய மண்ணில் இருந்தபோது உள்துறை அமைச்சரான அத்வானி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது-தானே என்றும் ஜஸ்வந்த் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் அத்வானியால் பதில் சொல்ல முடியாத நிலையில், அவரது அரசியலால் பாதிக்கப்பட்ட மற்ற தலைவர்களும் அவருக்கு எதிராக திரும்பினர். யஷ்-வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா, முன்னாள் அமைச்-சர் அருண் ஷோரி ஆகியோரும் ஊடகங்களில் பேட்டியளித்து பிரச்-சனையை தீவிரப்படுத்தினர்.

பிரதமர் ஆசையால் அத்வானி செய்த தவறுகள்

தனது அரசியல் வாழ்விற்கு முடிவு கட்டும் அளவிற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்த அத்வானி மீது ஜஸ்வந்த் சிங் வைத்த மிகப் பெரிய குற்றச்சாற்று: பிரதமராக வேண்டும் என்ற ஆசை-யால் பீடிக்கப்பட்ட இந்த மனிதர் பல தவறுகளைச் செய்தார். வாக்கிற்காக பணம் கொடுக்கப்பட்டது என்று கூறி நாடாளுமன்றத்தில் பணம் கொட்டப்-பட்ட நாடகத்தின் மய்யம் அத்வானி-தான் என்று ஜஸ்வந்த் சிங் வீசிய குற்றச்-சாற்றுக்கு இதுவரை அத்வானி பதிலளிக்கவில்லை!

இந்த உண்மையை இன்றைக்கு நாட்டுக்குத் தெரிவிக்கும் ஜஸ்வந்த் சிங் இதுநாள்வரை அதனை அதே பதவி பெறுவதற்குத்தானே (கட்சி நலனைக் காக்க என்று கூறுகிறார்) நாட்டு மக்க-ளிடம் கூறாமல் மறைத்தார்? இப்படி உண்மையை மறைத்து வேறொன்றைச் செய்வது பாரதிய ஜனதா கட்சிக்குப் புதியதல்லவே! மண்டலை எதிர்த்து கமண்டல யாத்திரை! இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்-சிக்கு நிகராக வளர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணமும் அத்வானிதான் என்பதை ஜஸ்வந்த் சிங் உட்பட அவர் மீது இன்று குற்றம் சாற்றும் தலைவர்-கள் ஒருவரும் மறுக்க முடியாது.

நமது நாட்டிலுள்ள இதர பிற்படுத்-தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வி.பி.சிங் பிறப்பித்தபோது - அவரை தலைவராகக் கொண்ட ஜனதா தளத்-தின் உதவியுடன் 88 தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க பலத்துடன் இருந்த பாரதிய ஜனதா கட்சி - மண்டல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் ஆட்சிக்கு அளித்து-வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்தது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஓதுக்கீடு அளிப்பதை சாதி ரீதியாக இந்திய சமூகத்தை பிளக்கிறார் வி.பி.சிங் என்று குற்றம் சாற்றியதோடு நிற்காமல், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டு-வோம் என்று கூறி, மதப் பிரச்சனையை திடீரென கையிலெடுத்தவர் அத்வானி.
நாட்டை கலவர பூமியாக்கினார்

அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்ட இரத யாத்திரை என்று தொடங்கி நாட்டை கலவர பூமியாக்கினார். ஆட்சியைப் பிடிக்கும் அரசியலுக்குப் பயன்படுத்தி, அதன் மூலம் மத ரீதியாக இந்திய சமூகத்தில் பிளவை உண்டாக்கிவிட்டவர் அத்வானிதான். மண்டல் அறிக்கைக்கு எதிராக கமண்ட-லம் ஏந்திய அத்வானி, வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் கோயில் கட்டும் முழக்கத்தை - ஆட்-சிக்கு ஆதரவு தரும் கட்சிகளின் நிபந்தனைக்கு உட்பட்டு -தள்ளிவைக்க ஒப்புக்கொண்டார்! ஆக, அத்வானி மட்டுமல்ல, அன்றைக்கு சமூக நீதியை அழிக்க மதவாதத்தை கையிலெடுத்து-தான் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து உ.பி.யிலும், பிறகு மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது.

எனவே, அத்வானியை மட்டும் பதவிக்காக எதையும் செய்பவர் என்று பாரதிய ஜனதா கட்சியில் எவரும் குறை சொல்லத் தகுதியற்றவர்களே. அக்கட்சியின் நோக்கும், அதனை இன்றுவரை பின்னிருந்து இயக்கும் ராஷ்ட்ரிய சுயம் சேவக், கட்சிக்கும் பதவியும், அதிகாரமும் கட்டாயத் தேவையாகும். இல்லையென்றால் அப்போது ஜனசங்கமும் இப்போது பாரதிய ஜனதா கட்சியும் இருக்குமா?

இவர்களின் நேர்மையற்ற அரசியல் நடவடிக்கைகளால் இந்த நாட்டின் சமூக ஒற்றுமை பாழ்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் சீர்குலைந்தது. விடுதலைப் போராட்டத்தினால் வலிமையடைந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியானது. இந்திய மக்கள் மத்தியிலும், நாடாளுமன்ற அவைகளிலும் இவர்கள் பேசிய எந்தப் பேச்சிலும் நேர்மை-யில்லை. டெல்லியில் ஒருநிகழ்ச்சி-யில் பேசிய அத்வானி இலங்கையில் போரை நிறுத்துமாறு மிகவும் வலியுறுத்திப் பேசினார்.

போர் நிற்கவில்லை. அதன்பிறகு அப்பிரச்சனை தொடர்பாக தனது கட்சியின் தமிழகத் தலைவர்களையும் கூட அழைத்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால் மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் எந்த அறிக்கையும் வரவில்லை.

பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடையந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொல்லத் திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது அத்வானிக்குத் தெரிவிக்கப்-பட்டது. அதனைத் தடுத்து நிறுத்த காட்டமான அறிக்கை வெளியிடுவார் என்று கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அல்லவா, தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அறிக்கை வெளிவரவில்லை.

இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே படுகொலை செய்யப்பட்ட பின்னர், அங்கு எதுவுமே நடக்காதது-போல் அத்வானியும் அமைதி காத்தார். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே வாக்கிற்காகவும் பதவிக்காகவும்தான். எதுவும் மக்களுக்காக அல்ல. அதனால்-தான் மசூதியை இடித்து இரத்த ஆற்றை ஏற்படுத்துகின்றனர். கலவரத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வழிவகுக்கின்றனர். இப்-படிப்பட்ட அரசியல் வழிகொண்ட ஒரு தலைவரின் அரசியல் வாழ்வு முடிவிற்கு வருகிறதென்றால் அதற்காக இந்திய மக்கள் கவலைப்பட ஏதுமில்லை. இன்-றைக்கு ஆட்சியிலும் வெளியிலும் உள்ள மற்றத் தலைவர்கள் இவரினும் வேறுபட்டவர்களா என்று மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பது நாட்டை பாதுகாத்துக் கொள்ள நிச்சயம் உதவும்.

Sunday, August 16, 2009

தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி


பெரியாரின் கருத்துகளைப் படித்த பிறகுதான் வாழ்வில் எதிர்நீச்சல் போட கற்றுக் கொண்டேன்
தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி

பெரியாரின் கருத்தை படித்த பிறகுதான் வாழ்க்கை போகிற போக்கில் வாழாமல், எதிர்த்து நின்று வாழ்ந்திட எண்ணினேன். எதிர்க்கேள்வி கேட்பது, எதிர் சிந்தனை உருவாவது என இதுபோன்ற விசயங்களில் பெரிய ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கியது. வீட்டிலேயே இருந்துவிட்டு, திருமணம், குழந்தைகள் என்று போய்விடுவதுதான் வாழ்க்கை என்பதைத்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள எனக்கு உடன்பாடில்லை.

பெண்ணுரிமைக்காக எவ்வளவோ பெண்கள் போராடியிருக்கிறார்கள் உலகெங்கும். ஆனால் ஓர் ஆணாகப் பிறந்து, தந்தை பெரியார் அவர்கள் போராடிய அளவுக்கு, சிந்தித்த அள-வுக்கு உலகில் எந்தச் சிந்தனை-யாளரும் எழுதியதோ, பேசியதோ, போராடியதோ, அதில் வெற்றி பெற்றோ இருப்பதாக நமக்குத் தெரிய-வில்லை. உலகில் எந்த மூலையில் பெண்களுக்கு எதிரான ஆதிக்கம் நிலைத்தாலும் பெரியாரின் பெண்ணு ரிமைச் சிந்தனைதான் அடிமை விலங்கொடிக்கக் கிடைத்த மிகப்பெரும் அறிவாயுதம். இதி-லிருந்து விடுபட்ட, விடுதலையான பெண்கள் இன்று சமூக விரோத மான கட்டுப்பாடுகளை உடைத்-தெறிந்து சகல துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். இசுலாமிய மதத்தில் பிறந்திருந்தும், ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தும், தடைகள் பல தாண்டி, தளராத முயற்சியுடன் தொடர்ந்து பல்வேறு புத்தகங் களையும், பெரியாரின் அறிவுக் கருத்-துகளையும் படித்து, தன்னை சிறந்த கவிஞராக, மக்கள் பிரதிநிதியாக, எழுத்தாளராக இன்று மாநிலம் தழுவிய தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவர் எனும் முக்கிய பொறுப்பில் அமர்த்தக்கூடிய அளவுக்கு தயார் படுத்திக் கொண்டவரும், கவிஞர் சல்மா என்று நம் அனைவராலும் அறியப்பட்டவருமான சல்மா அவர்களுடன் விடுதலை விருந்தினர் பக்கத்திற்காக நேரடி சந்திப்பிலிருந்து.....

உங்களுக்கு கவிஞர், எழுத்தாளர், மக்கள் பிரதிநிதி, சமூகநலவாரிய தலைவர் என பல முகங்கள் இருக்-கின்றன. அடிப்படையில் தாங்கள் எப்படி இந்நிலையை அடைந்தீர்கள் என நாம் கேட்டபோது அதற்கு கவி-ஞர் சல்மா அளித்த பதிலிலிருந்து.....

திருச்சி மாவட்டம்-- துவரங் குறிச்சிதான் நான் பிறந்தது படித்தது எல்லாமே. பொதுவாக கிராமங்களில் கல்வியின் நிலை எப்படி இருக்கு மென்று நமக்குத் தெரியும். அவ்வள-வாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அதிலும் இசுலாமியக் குடும்பங்களில் பெரிய அளவுக்கு கல்வியில் ஆர்வம் காட்டியதில்லை. எனக்கும் அதே போல 9-- ஆம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கிடைத்தது. திருமணம் வரைக்கும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல். எனக்குக் கிடைத்த நேரத்தில் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம். முக்கியமாக பக்கத்-தில் இருந்த ஒரு நூலகத்தில் அதிகம் படித்தேன். எவ்வளவோ புத்தகங் களை நான் படித்திருந்தாலும் கூட, பெரியாருடைய கருத்துகள் என்னை இளம்வயதில் மிகவும் பாதித்தது என்றே சொல்ல வேண்டும். இது வரை சரி என்று நம்பிக் கொண்டி-ருந்த ஒரு விசயத்தை பெரியார் தவறு சொல்வார். புனிதத் தன்மையாக நம் பிக்கொண்டிருந்த ஒரு விசயத்தை மறுப்பார். திருமணம், தாலி போன் றவை பெண்ணடிமைத் தனம் என் பது அன்றாட வாழ்வில் இருப்பது நமக்கு தெரியவில்லை. அனைத்-தையுமே மறுபரிசீலனைக்கு உட்-படுத்துவார். இதுவா, இப்படியா என கட்டுகளை உடைப்பதற்கு அய்யா தூண்டினார்.

பெரியாரின் கருத்தை படித்த பிறகுதான் வாழ்க்கை போகிற போக்கில் வாழாமல், எதிர்த்து நின்று வாழ்ந்திட எண்ணினேன். எதிர்க் கேள்வி கேட்பது, எதிர் சிந்தனை உருவாவது என இதுபோன்ற விசயங்-களில் பெரிய ஒரு தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கியது. வீட்டிலேயே இருந்துவிட்டு, திரு மணம், குழந்தைகள் என்று போய் விடுவதுதான் வாழ்க்கை என்பதைத் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்-டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள எனக்கு உடன் பாடில்லை. எனக்கு என்று சில தனித் தன்மைகள் இருக்க வேண்-டுமென நினைத்தேன். வாசிப்பதில் இருந்த ஆர்வத்தினால் எனக்கு இந்த சமூகத்தின் மீதிருந்த பார்வைகள், விமர்சனங்களை எழுதத் தொடங்-கினேன். கவிதைகளாக அது வந்தது. என்னுடைய கவிதைகள் எல்லாமே பெண்ணடிமைத் தனத்திற்கு எதி-ரான கருத்துகள் தான். எனக்கு அப்-போது வயது 16தான்.திருச்சியிலிருந்து வெளி-வந்த சில இதழ்களில் வெளியாகின. அதில் கிடைத்த வரவேற்பின் மூலம் மேலும் எழுதத் தொடங்கினேன். என்னுடைய எழுத்துக்களும்--- தற்-செயலாக நிகழ்ந்த அரசியல் பிர-வேசமும்தான் என்னை உயர்த்-தியது. திருமணத்திற்கு பின்பும் எழுதினேன். முற்போக்கு கருத்துகளை எழுதிய-தால் குடும்பத் திலும் சரி, சமூகத்திலும் சரி பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு நான் நிறைய போராட வேண்டியி-ருந்தது. எதிர்கொள்ள நிறைய மன-வலிமை தேவைப்பட்டது. என் வீட்டிலேயே நான் எழுதக்கூடாது என்று தடை போடப்பட்டது. தலை-வர் கலைஞர் அவர்கள் நான் சட்ட-மன்ற தேர்தலில் தோற்று வந்-தாலும், சந்தித்த போது மனம்-தளராதே என்று ஆறுதல் கொடுத்-தார். தளர மாட்டாய்-- என்றும் சொன்-னார்-- என்று பெருமைப்படுகிறார் சல்மா.
மேலும் பெண்ணடிமைத்தனம் அதிகமாக இசுலாமிய மதத்தில் காணப்படுவதாக எழும் குற்றச்சாற்று பற்றி நாம் வினவியபோது, கவிஞர் சல்மா அளித்த பதில் வருமாறு.

பெண்ணடிமைத்தனம் எல்லா மதத்திலும் இருக்கிறது. பார்ப்பனப் பெண்களில் கூட விதவைகள் இருக்கிறார்கள். ஆனால் இசுலாமிய மதத்தில் விதவைகள் திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை என நல்ல விசயங்கள் உள்ளன. நபிகள் நாயகத்தின் மனைவிகூட ஏற்கெனவே விதவையாகவும், வாணிகத்திலும் இருந்திருக்கிறார்.அவரைத்தான் நபிகள் நாயகம் திருமணம் செய்தார். இதற்காக நான் நியாயப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. மேற்கத்திய இசுலாமிய நாடுகளில் இருக்கும் பெண்களுக்கான சதந்திரம் கூட நமது நாட்டில் இல்லை. இது மதத் தினை வழி நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டிய விசயம். நம் நாட்டில் பெண்-களை வேலைக்கு அனுப்பக் கூட யோசிக்கிறார்கள். எதிர்காலத்-தில் இது போன்ற நிலைகளில் மறு பரிசிலனை செய்தால் சமூகத்தில் இசுலாமிய மதத்தின் மீது மரியாதை கூடுதலாகும். எல்லா மதங்களும், சமூகக் கட்டுப்பாடுகளும் பெண்ணை ஒரு பொருளாகவே பார்க்கின்றன. இதிலிருந்து சமூகம் விடுபட பெரி-யாரியல் மட்டுமே உதவும் என்கிறார் கவிஞர் சல்மா. அவரிடத்தில் , மென்-மேலும் பல சாதனைகள் தொடர்ந்-திட வாழ்த்துகளைக் கூறி விடை-பெற்றோம்.

நேர்காணல்: நம்பியூர் சென்னியப்பன்

தமிழ்த் தாய்க்குக் கோயிலா?


தமிழ்த் தாய்க்குக் கோயிலா?
மின்சாரம்

தந்தை பெரியார் மட்டுமல்ல; புத்தர் முதல் காந்தியார் வரை கோயிலைப்-பற்றி நிரம்பவே கூறியிருக்கிறார்கள்.

இங்கு என்ன கோயிலுக்கா பஞ்சம்? தடுக்கி விழுந்தால் தம்பிரான்களும், தண்டபாணி கோயில்களும்தானே!

ஒரு கொள்கையை அழிக்க வேண்-டும் என்றால் அதைக் கோயிலாக்கி-விடலாம். அதில் கடவுளாகவும் குந்த வைத்து விடலாம்.

புத்தறிவைப் புகட்டியவன் அல்லவா புத்தன். தந்தை பெரியார் சொன்ன முறை-யில் புத்தியைப் பயன்படுத்தியதால் அல்லவா அவன் புத்தனானான்.

சிந்தனை என்பது செத்துப் போய் கடந்த ஒரு கால கட்டத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன் மன்னவன் குலத்-திலே தோன்றிய அந்தக் கோமகன் கொளுத்திய சிந்தனைத் தீயிலே பார்ப்பனியத்தின் வேதப் பருப்பும் சாஸ்திர சரக்கும், யாகப் புரட்டும் வெந்து சாம்பலாயின. வருணக் கொடுமையால் வாட்டி வதைத்த ஆரியத்தை கருணைவழியும் அறிவுத் திறவுகோலால் அஸ்தமிக்க செய்த - _ அரச குலத்தில் உதித்த ஆசான் புத்தன்.

அந்தப் புத்தனை மகாவிஷ்ணுவின் அவதாரமாக்கி அதற்குப் பிறகு கட-வுளாகவே ஆக்கிக் கோயில் கட்டியதன் பலன்- _ அதோ முப்பது கல் தொலை-வில் தெரிகிறதே இலங்கைத் தீவு அங்கே கடவுளாகச் செதுக்கப்-பட்ட புத்-தரின் உருவச் சிலைகள் எல்-லாம் மனித ரத்தத்தால் குளிப்பாட்-டப்படுகின்றன. கோயிலானால் கர்ப்பக் கிரகத்-துக்குள் கடவுளாகக் குந்தினால் நித்தம் நித்தம் அபிஷேகம் கேட்குமே! புத்தன் போதித்த போதனைகள் என்ன, யாருக்குத் தெரியும்? சித்தார்த்-தன் வெளியிட்ட சிந்தனைக் கருவூலங்-கள் என்ன? எந்த கடையில் கிடைக்கும்?

புத்தன் ஒரு மனிதன் என்று சொன்னாலே புருவத்தை உயர்த்-துகிறார்கள் _ சிந்தனையாளன் என்று சொன்னால் சீற்றம் கொள்-கிறார்கள் சீச்.. சீ.. கேவலம் புத்தன் ஒரு மனிதனா? இல்லை இல்லை _ இல்லவேயில்லை! அவன் கடவுள்; ஆம் கடவுளே தான் என்று ஆகாயத்-துக்கும் பூமிக்கும் குதிக்கும் ஒரு கூட்டம் உலகிலே தோன்றிவிட்டது.

கோயிலைக் கள்ளர்குகை என்று சொன்ன புத்தனுக்குக் கோயில்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள் மந்திரகோஷங்கள்!

அருள்கூர்ந்து தமிழை தமிழாகப் பாருங்கள். தமிழனின் தாய்மொழி-யாக அணுகுங்கள் _ மூத்த இனத்தின் மொழி என்று மொழியுங்கள்.

மாறாக கோயில் எழுப்பாதீர்கள்; கடவுளாக்கி விடாதீர்கள்; தலபுரா-ணங்களை எழுதிக் குவித்து விடா-தீர்கள்.

ஏற்கெனவே தலபுராணங்கள் என்னும் கோயில் புராணங்கள் மண்-டிட கருவேல்முள் அடர்ந்த காட்-டுக்குள்ளே கிடக்கிறாள் தமிழன்னை.

பதினெண்-புராணங்களின் படை-நோயாக அவளை உருமாற்றிக் காட்டியிருக்-கிறார்கள். இதிகாச காச நோயின் பாதிப்-பாலும் ஈளை கட்டியிருக்கிறது.

இதிலிருந்து மீட்பதற்கே எவ்வளவு விலையைக் கொடுக்க நேர்ந்திருக்-கிறது. எத்தனை மாநாடுகளை நடத்த வேண்டியிருந்தது? எத்தனை எத்தனைத் தீர்மானங்கள் _ எத்தனை எத்தனை பேரணிகள்.

ஆரிய மேக நோயிலிருந்து தமிழைத் தடுத்தாட் கொள்ள தந்தை பெரியாரும் அவர்தம் சேனையும் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா?

மறுபடியும் தமிழுக்குப் பன்றிக் காய்ச்சலா? தஞ்சை மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த அன்பர்கள் தமிழ்த் தாய்க்குக் கோயில் எழுப்-புகிறார்களாம் என்ன கொடுமை இது!

வேறு பல இடங்களில் தமிழ்த் தாய்க்குக் கோயில் உண்டு -_ நாங்கள் எடுக்கும் தமிழ்த்தாய் கோயிலுக்கே கலசங்கள் வைக்கப் போகிறோம் என்று கலகலப்பாகப் பேசுகிறார்கள்.

நல்ல தமிழர்கள்தான் அவர்கள்; கடவுளாக்கிக் கோயில் எழுப்-பினால்தான் தமிழுக்குப் பெருமை என்ற தவறான கண்ணோட்டத்தால் தடுமாறியிருக்கிறார்கள்.

கோயில் கொள்ளை நோயின் குடியிருப்பு என்ற தத்துவத்தைப் புரிந்து கொண்டிருந்தால் தலை வைத்துப் படுத்திருக்க மாட்டார்கள் அந்தப் பக்கத்தில்.

தமிழுக்குச் செய்ய வேண்டிய தொண்டு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

தமிழன் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருதமய-மாகிக் கிடக்கின்றன. தமிழன் ஊர்ப் பெயர்கள் எல்லாம் ஆரியமயமாக்-கப்பட்டு விட்டன.

தமிழர் கட்டிய கோயிலுக்குள் தமிழுக்குத் தனித்தன்மையான உரிமையில்லை; தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்கும் அங்கு உரிமை வந்து சேரவில்லை.

இன்னும் தமிழன் வீடுகளில் விவாஹசுப முகூர்த்தங்கள் நடக்-கின்றன; அங்குத் தமிழுக்கு மருந்-துக்கும் இடமில்லை.

இன்னும் கிரஹப்பிரவேசங்கள்-தான்! அங்கோ சமஸ்கிருத இரைச்-சல்தான்.

சஷ்டியப்த பூர்த்திகளும் தமிழர்-கள் இல்லத்தில்; சங்கத் தமிழுக்கு அங்கு இடம் உண்டா?

தீபாவளிகளும், கார்த்திகைகளும், விஜய தசமிகளும், சதுர்த்திகளும் சதுராட்டம் தமிழன் இல்லங்களில். இவற்றிற்கு விடை கொடுக்க வேங்கைகளாக எழ வேண்டிய நேரம்; வெண்தாடி வேந்தரின் விழுமிய கொள்கைகளை நெஞ்சில் தாங்கி நெடும் பயணத்தைத் தொடங்க வேண்டிய கால கட்டம்.

கட்டாய தமிழ்ப் படிப்பு என்று கூறி கனத்த குரலெழுப்பிடக் களம் காண வேண்டிய தருணம்.

பணிகள் நம்முன் பலப்பல! அதைவிட்டுவிட்டு வேண்டாத வேலை ஏன்?

தமிழ்த் தாய்க்குக் கோயில் கட்-டினால் அங்கும் அர்ச்சகன் _ பார்ப்-பான் வரக்கூடும். அர்ச்சனை மொழி-கூட அவாள் மொழியாகவே கோலோச்சும்.

கோயில் என்றால் காதை மூடு காத தூரத்தில் ஓடு! என்ற புரட்சிக் கவிஞனின் குரல் கேட்கவில்லையா!

தமிழுக்குத் தேவை உரிமை முரசம்; கலசமல்ல!

Friday, August 14, 2009

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?
கூடுதலான பயிற்சி அளித்து அய்.அய்.டி. நிருவாகம் அவர்களை உயர்த்தவேண்டும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று
தமிழர் தலைவர் அறிக்கை
போதிய மதிப்பெண் கள் பெறவில்லை என்று கூறி டில்லி அய்.அய்.டி., யில் படித்த 5 மாணவர் கள் வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்தும், அதன் மீது தொடரப்பட்ட வழக் கில் உச்சநீதிமன்ற நீதிபதி கள் மூவர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய சமூக நீதிக்கு ஆதரவான தீர்ப் பினை வரவேற்றும் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற மத்திய கல்வி நிறுவனங்-களை, பல்லாயிரக்கணக்-கான கோடி மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி, மத்திய அரசு நடத்தி வரு-கிறது. தகுதி, திறமைக்குப் பெயர் போனவர்களை மட்டும்தான் தேர்வு செய்-வது என்று கூறி, ஒடுக்-கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட சமு-தாயத்தவர்களை அக்-கல்வி நிறுவனங்கள் உள்ளே நுழையவே அனுமதிப்-பதில்லை.

மக்கள் வரிப் பணத்தால் நடக்கும் நிறுவனங்கள்

மக்கள் தரும் வரிப்-பணத்தால் நடைபெறும் இத்தகைய நிறுவனங்கள் பார்ப்பன உயர்ஜாதிக்-காரர்களின் _ ஏகபோகக் கூடாரங்களாகி விட்டன. இந்நிலையே தொடர்ந்து இருந்து வருகின்றது. அதனை மாற்றிட இடை-யறாது அரசியல் களங்-களிலிருந்து நீதிமன்றத் தளங்கள்வரை தொடர் போராட்டங்கள் நம்மைப் போன்றவர்களால் நாளும் நடைபெற்றே வருகின்றன!

1951_லேயே திருத்தப்-பட்ட முதல் அரசியல் சட்டத் திருத்தத்தின்மூலம், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிலையங்-கள் எவையானாலும் அவற்றில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவேண் டும் என்பது தெளிவாக்-கப்பட்டது.

ஆனால், இந்த அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தராமலேயே கடந்த 50 ஆண்டுகளுக்கு-மேலாக ஏமாற்றியே வந்தனர்; கேட்டால் தகுதி, திறமை பேசி வந்தனர்!

மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் சுமார் 25 விழுக்-காட்டினர் (எஸ்.சி., எஸ்.டி.,).

சுதந்திரத்துக்குப் பின்னும் அநீதி தொடர்வதா?

பிற்படுத்தப்பட்டவர்கள் 60 விழுக்காடு. இரண்டும் சேர்த்தால் 85 விழுக்காட்-டினர் ஆவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் _ முன்பு மனு, மாந்தாதா காலத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்ட நிலை சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்கிறது.

இதற்குப் பிறகு நமது இயக்கம் போன்றவை-களின் இடையறாத போராட்-டங்களுக்குப் பின்னரே, சற்று கதவு திறக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மலை-வாழ் மக்களுக்கான 22.5 சத-விகித ஒதுக்கீடு முழு-மையாக ஒருபோதும் அங்கே தரப்படவே இல்லை.

மத்தியில் இருந்த மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியால் மீண்டும் கூடு-தலாகச் சட்டத் திருத்தங்-கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெற்று, இட ஒதுக்கீட்டுக்கு அந்த மத்திய கல்வி நிறு-வனங்களில் கதவு திறந்-தாலும், பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு 27 சதவிகிதத்தி-னையும் ஒரே அடியாக நிறைவேற்றாமல், ஆண்-டுக்கு 9 சதவிகிதம் என்ற முறையில் மூன்று ஆண்டு-களில் நிரப்புவது என்-கின்ற விசித்திர நிலையை ஏற்படுத்தி, அதற்குப் பிற-கும்கூட சமூகநீதிக்குப் பதி-லாக சமூக அநீதியே நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும் பார்ப்பனிய சக்திகள்

எஸ்.சி., எஸ்.டி., மாண-வர்களைச் சேர்த்து அவர்-களை தகுதி, திறமையற்ற-வர்கள் என்று முத்திரை குத்திடவும் திட்டமிட்ட ஏற்பாடுகள்; தேர்வுகளில் அவர்கள் மற்ற மாணவர்-களைப் போல வெற்றி பெற்று வர முடியவில்லை; ஆகவே, அவர்கள் தொடர்ந்து அய்.அய்.டி.,-யில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக வர முடி-யாத நிலையை அங்கே உள்ள பார்ப்பனிய உயர்-ஜாதி சக்திகள் செய்தன.

அவர்கள் குறைவான கிரேடு மார்க்குகள் வாங்-கினார்கள் என்று கூறி, அங்கிருந்து மேலும் படிக்க இயலாது வெளி-யேறும்படி ஒரு சதி-யையே நடத்தினர். சமூகநீதித் திட்டத்தை அமல்படுத்தி-யதைக் கண்டு வெறுப்பு-டன் நடந்து வருகின்றன _ இந்த ஆதிக்க சக்திகள்!

5 மாணவர்கள் தேர்-வில் குறைந்த கிரேடு பெற்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து _ உச்சநீதிமன்-றத்-தில் வழக்குத் தொடர்ந்-தனர்.

அருமையான தீர்ப்பு

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஜஸ்டிஸ் பி. சதாசிவம், ஜஸ்டிஸ் பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா-ரித்து, அருமையான சமூக-நீதிப் பயணத்தில் மற்-றொரு முக்கிய மைல்கல் என்ற தீர்ப்பினை வழங்கி-யுள்ளது _ மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

பெஞ்ச் சார்பில் இத்-தீர்ப்பினை எழுதிய ஜஸ்-டீஸ் பி. சதாசிவம் அவர்-களின் சமூகநீதிப் பார்வை _ கோடானுகோடி தாழ்த்-தப்பட்ட, மலைவாழ் சமூ-கத்தவர் நன்றி கூறவேண்-டிய அருமையான தீர்ப்பு ஆகும்!

1. இதன்படி கிரேடு குறைவாக வாங்கினார்கள் என்று காரணம் காட்டி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்-களை அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்-கள் வெளியேற்றக் கூடாது; மாறாக, அவர்-களை உயர்த்தும் வகை-யில் தனியான பயிற்சி-களை அளித்து கைதூக்கி-விட வேண்டும்; கூடுத-லான சிறப்புப் பயிற்சி அளித்து பொது நிலை மாணவர்களோடு அவர்-கள் போட்டியிடக் கூடிய தன்னம்பிக்கையை ஆற்-றலை அளித்து கைதூக்கி-விடவேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கிரிமீலேயர் (Creamy Layer) என்ற தடையும் இல்லை. பொருந்தாது என்பதால் அவர்களை மேம்பாடு அடையச் செய்யவேண்டும்.

3. இவர்களைப்பொறுத்தவரை குறைந்தபட்ச கட் ஆஃப் மார்க் (தகுதி மதிப்பெண்) பெற்றுத்தான் அவர்கள் அய்.அய்.டி.,யில் சேர்க்கப்-பட்டவர்கள். எனவே, அவர்களை குறைந்த கிரேடு வாங்கினார்கள் என்ற ஒரு செயற்கை வடிகட்டல் சூழ்ச்சி-களின் மூலம் வெளியேற்றக் கூடாது. 2006_07, 2007_08 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் சேர்ந்த அந்த 5 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள்பற்றி டெல்லி அய்.அய்.டி. நிருவாகம் நான்கு வார காலத்திற்குள் முடிவு செய்ய-வேண்டும் என்று ஓங்கி தலையில் குட்டியதைப்போல ஒரு பெருமை மிக்க தீர்ப்பினைத். (A Landmark Judgement) தந்துள்ளார்கள்!
இதற்கு முன்பு வந்த தீர்ப்பு
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோது, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்டத்-தின்முன் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் உள்ள Equality யை சாக்காகக் கொண்டு சம வாய்ப்பு (Article 14) விதிக்கு ஒடுக்கப்-பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு அளிப்பது முரண் என்றெல்லாம் வாதாடியபோது, அன்றைய உச்சநீதி-மன்றத்தின் 3 நீதிபதிகள் ஜஸ்டிஸ் கஜேந்-திர கட்கர் (இவர் பார்ப்பனர்), ஜஸ்டிஸ் சுப்பாராவ், ஜஸ்டிஸ் ஹெக்டே ஆகிய மூவரும் இதுபற்றி மிக அரு-மையானதொரு தீர்ப்பை அளித்தனர். அரசுகள் பின்பற்றவேண்டிய நெறி-முறைகளான (Directive Principles of State Policy) கிக்ஷீவீநீறீமீ 46 என்பது சமூக அநீதிகளை அகற்றி சமூகநீதி தழைக்-கவும், பலவீனமான பிரிவு மக்களை முன்னேற்றவே புகுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலங்காலமாய் அழுத்தி வைக்கப்-பட்ட சமுதாய மக்களுக்கும், முன்னே-றியவர்களுக்கும் சம வாய்ப்புத் தருகி-றோம் என்று போட்டி போட வைத்தால், அது சம போட்டியாக இருக்காது என்ப-தைத் தெளிவுபடுத்தினர்.
மண்டல் அறிக்கை
கூறுவது என்ன?
மண்டல் பரிந்துரை அறிக்கையில் அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“There can be equality only among equals. There cannot be equality among unequals’’ என்று.
சம பலமில்லாதவர்களிடையே எப்படி சம போட்டி உருவாகும் என்று கேட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கஜேந்திர கட்கர், ஜஸ்டீஸ் சுப்பாராவ், ஜஸ்டீஸ் ஹெக்டே ஆகிய மூவரது தீர்ப்பில் மிக அருமையான உதாரணத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர். “....To make my point clear take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class horse, the other ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race; in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse; indeed that is denied to it. So a handicap may be given either in the nature of extra weight or a start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one.”
(ஜஸ்டிஸ் கே. சுப்பாராவ் தீர்ப்பு எழுதினார்).
இதன் தமிழாக்கம் வருமாறு:
எனது கருத்தைத் தெளிவுபடுத்த, ஒரு குதிரைப் பந்தயத்தினை எடுத்துக்-காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு பந்தயத்தில் ஓடுவதற்கு இரண்டு குதிரைகள் விடப்படுகின்றன. அவற்றில் ஒன்று உயர் தரம் வாய்ந்த பந்தயக் குதிரை; மற்றது சாதாரணமான குதிரை. ஒரே இடத்தில் இருந்து இரண்டு குதிரை-களும் புறப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவை இரண்டுக்-கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று கருத்தளவில் தோன்றினாலும், நடைமுறையில் பந்தயக் குதிரையுடன் போட்டியிட சாதாரணக் குதிரைக்கு சம வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். சாதாரணக் குதிரைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதனால், பந்தயக் குதிரைக்கு கூடுதல் எடை அளிப்பதன் மூலமோ அல்லது சாதாரண குதிரை புறப்படும் இடத்-திலிருந்து ஒரு நீண்ட தொலைவில் இருந்து பந்தயக் குதிரையைப் புறப்பட வைப்பதன் மூலமோ, இந்த இரு குதிரைகளுக்கிடையே சம வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், போட்டி என்ற பெயரில் நடந்தேறும் ஒரு கேலிக்கூத்து என்ற நிலை மாறி உண்மையில் அது உண்மையான ஒரு போட்டி என்ற நிலையைப் பெற்றுவிடும்.
இதன்படி ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும் ஒன்றாக குதிரை ரேசில் ஓட முடியுமா?
நோஞ்சான் பிள்ளைகளுக்குத்தான் போஷாக்குத் தேவை
அதைத்தான் சிறப்பாகச் சுட்டிக்காட்டி சமூகநீதி வழங்கி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நோஞ்சான்கள், சவலைப்-பிள்ளைகள்மீது கூடுதலான அக்கறை செலுத்தி, போஷாக்குக் கொடுத்து, பலசாலிகளாக்கிடுவதுதானே தாய், தந்தையரின் கடமை? அதுபோலத்தான் அய்.அய்.டி.,யின் இயக்குநரும், மற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்து முன்னேற்ற முயலவேண்டும் என்பது அவசியம், அவசரம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.


தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?
கூடுதலான பயிற்சி அளித்து அய்.அய்.டி. நிருவாகம் அவர்களை உயர்த்தவேண்டும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று
தமிழர் தலைவர் அறிக்கை
போதிய மதிப்பெண் கள் பெறவில்லை என்று கூறி டில்லி அய்.அய்.டி., யில் படித்த 5 மாணவர் கள் வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்தும், அதன் மீது தொடரப்பட்ட வழக் கில் உச்சநீதிமன்ற நீதிபதி கள் மூவர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய சமூக நீதிக்கு ஆதரவான தீர்ப் பினை வரவேற்றும் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற மத்திய கல்வி நிறுவனங்-களை, பல்லாயிரக்கணக்-கான கோடி மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி, மத்திய அரசு நடத்தி வரு-கிறது. தகுதி, திறமைக்குப் பெயர் போனவர்களை மட்டும்தான் தேர்வு செய்-வது என்று கூறி, ஒடுக்-கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட சமு-தாயத்தவர்களை அக்-கல்வி நிறுவனங்கள் உள்ளே நுழையவே அனுமதிப்-பதில்லை.

மக்கள் வரிப் பணத்தால் நடக்கும் நிறுவனங்கள்

மக்கள் தரும் வரிப்-பணத்தால் நடைபெறும் இத்தகைய நிறுவனங்கள் பார்ப்பன உயர்ஜாதிக்-காரர்களின் _ ஏகபோகக் கூடாரங்களாகி விட்டன. இந்நிலையே தொடர்ந்து இருந்து வருகின்றது. அதனை மாற்றிட இடை-யறாது அரசியல் களங்-களிலிருந்து நீதிமன்றத் தளங்கள்வரை தொடர் போராட்டங்கள் நம்மைப் போன்றவர்களால் நாளும் நடைபெற்றே வருகின்றன!

1951_லேயே திருத்தப்-பட்ட முதல் அரசியல் சட்டத் திருத்தத்தின்மூலம், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிலையங்-கள் எவையானாலும் அவற்றில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவேண் டும் என்பது தெளிவாக்-கப்பட்டது.

ஆனால், இந்த அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தராமலேயே கடந்த 50 ஆண்டுகளுக்கு-மேலாக ஏமாற்றியே வந்தனர்; கேட்டால் தகுதி, திறமை பேசி வந்தனர்!

மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் சுமார் 25 விழுக்-காட்டினர் (எஸ்.சி., எஸ்.டி.,).

சுதந்திரத்துக்குப் பின்னும் அநீதி தொடர்வதா?

பிற்படுத்தப்பட்டவர்கள் 60 விழுக்காடு. இரண்டும் சேர்த்தால் 85 விழுக்காட்-டினர் ஆவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் _ முன்பு மனு, மாந்தாதா காலத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்ட நிலை சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்கிறது.

இதற்குப் பிறகு நமது இயக்கம் போன்றவை-களின் இடையறாத போராட்-டங்களுக்குப் பின்னரே, சற்று கதவு திறக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மலை-வாழ் மக்களுக்கான 22.5 சத-விகித ஒதுக்கீடு முழு-மையாக ஒருபோதும் அங்கே தரப்படவே இல்லை.

மத்தியில் இருந்த மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியால் மீண்டும் கூடு-தலாகச் சட்டத் திருத்தங்-கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெற்று, இட ஒதுக்கீட்டுக்கு அந்த மத்திய கல்வி நிறு-வனங்களில் கதவு திறந்-தாலும், பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு 27 சதவிகிதத்தி-னையும் ஒரே அடியாக நிறைவேற்றாமல், ஆண்-டுக்கு 9 சதவிகிதம் என்ற முறையில் மூன்று ஆண்டு-களில் நிரப்புவது என்-கின்ற விசித்திர நிலையை ஏற்படுத்தி, அதற்குப் பிற-கும்கூட சமூகநீதிக்குப் பதி-லாக சமூக அநீதியே நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும் பார்ப்பனிய சக்திகள்

எஸ்.சி., எஸ்.டி., மாண-வர்களைச் சேர்த்து அவர்-களை தகுதி, திறமையற்ற-வர்கள் என்று முத்திரை குத்திடவும் திட்டமிட்ட ஏற்பாடுகள்; தேர்வுகளில் அவர்கள் மற்ற மாணவர்-களைப் போல வெற்றி பெற்று வர முடியவில்லை; ஆகவே, அவர்கள் தொடர்ந்து அய்.அய்.டி.,-யில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக வர முடி-யாத நிலையை அங்கே உள்ள பார்ப்பனிய உயர்-ஜாதி சக்திகள் செய்தன.

அவர்கள் குறைவான கிரேடு மார்க்குகள் வாங்-கினார்கள் என்று கூறி, அங்கிருந்து மேலும் படிக்க இயலாது வெளி-யேறும்படி ஒரு சதி-யையே நடத்தினர். சமூகநீதித் திட்டத்தை அமல்படுத்தி-யதைக் கண்டு வெறுப்பு-டன் நடந்து வருகின்றன _ இந்த ஆதிக்க சக்திகள்!

5 மாணவர்கள் தேர்-வில் குறைந்த கிரேடு பெற்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து _ உச்சநீதிமன்-றத்-தில் வழக்குத் தொடர்ந்-தனர்.

அருமையான தீர்ப்பு

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஜஸ்டிஸ் பி. சதாசிவம், ஜஸ்டிஸ் பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா-ரித்து, அருமையான சமூக-நீதிப் பயணத்தில் மற்-றொரு முக்கிய மைல்கல் என்ற தீர்ப்பினை வழங்கி-யுள்ளது _ மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

பெஞ்ச் சார்பில் இத்-தீர்ப்பினை எழுதிய ஜஸ்-டீஸ் பி. சதாசிவம் அவர்-களின் சமூகநீதிப் பார்வை _ கோடானுகோடி தாழ்த்-தப்பட்ட, மலைவாழ் சமூ-கத்தவர் நன்றி கூறவேண்-டிய அருமையான தீர்ப்பு ஆகும்!

1. இதன்படி கிரேடு குறைவாக வாங்கினார்கள் என்று காரணம் காட்டி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்-களை அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்-கள் வெளியேற்றக் கூடாது; மாறாக, அவர்-களை உயர்த்தும் வகை-யில் தனியான பயிற்சி-களை அளித்து கைதூக்கி-விட வேண்டும்; கூடுத-லான சிறப்புப் பயிற்சி அளித்து பொது நிலை மாணவர்களோடு அவர்-கள் போட்டியிடக் கூடிய தன்னம்பிக்கையை ஆற்-றலை அளித்து கைதூக்கி-விடவேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கிரிமீலேயர் (Creamy Layer) என்ற தடையும் இல்லை. பொருந்தாது என்பதால் அவர்களை மேம்பாடு அடையச் செய்யவேண்டும்.

3. இவர்களைப்பொறுத்தவரை குறைந்தபட்ச கட் ஆஃப் மார்க் (தகுதி மதிப்பெண்) பெற்றுத்தான் அவர்கள் அய்.அய்.டி.,யில் சேர்க்கப்-பட்டவர்கள். எனவே, அவர்களை குறைந்த கிரேடு வாங்கினார்கள் என்ற ஒரு செயற்கை வடிகட்டல் சூழ்ச்சி-களின் மூலம் வெளியேற்றக் கூடாது. 2006_07, 2007_08 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் சேர்ந்த அந்த 5 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள்பற்றி டெல்லி அய்.அய்.டி. நிருவாகம் நான்கு வார காலத்திற்குள் முடிவு செய்ய-வேண்டும் என்று ஓங்கி தலையில் குட்டியதைப்போல ஒரு பெருமை மிக்க தீர்ப்பினைத். (A Landmark Judgement) தந்துள்ளார்கள்!
இதற்கு முன்பு வந்த தீர்ப்பு
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோது, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்டத்-தின்முன் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் உள்ள Equality யை சாக்காகக் கொண்டு சம வாய்ப்பு (Article 14) விதிக்கு ஒடுக்கப்-பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு அளிப்பது முரண் என்றெல்லாம் வாதாடியபோது, அன்றைய உச்சநீதி-மன்றத்தின் 3 நீதிபதிகள் ஜஸ்டிஸ் கஜேந்-திர கட்கர் (இவர் பார்ப்பனர்), ஜஸ்டிஸ் சுப்பாராவ், ஜஸ்டிஸ் ஹெக்டே ஆகிய மூவரும் இதுபற்றி மிக அரு-மையானதொரு தீர்ப்பை அளித்தனர். அரசுகள் பின்பற்றவேண்டிய நெறி-முறைகளான (Directive Principles of State Policy) கிக்ஷீவீநீறீமீ 46 என்பது சமூக அநீதிகளை அகற்றி சமூகநீதி தழைக்-கவும், பலவீனமான பிரிவு மக்களை முன்னேற்றவே புகுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலங்காலமாய் அழுத்தி வைக்கப்-பட்ட சமுதாய மக்களுக்கும், முன்னே-றியவர்களுக்கும் சம வாய்ப்புத் தருகி-றோம் என்று போட்டி போட வைத்தால், அது சம போட்டியாக இருக்காது என்ப-தைத் தெளிவுபடுத்தினர்.
மண்டல் அறிக்கை
கூறுவது என்ன?
மண்டல் பரிந்துரை அறிக்கையில் அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“There can be equality only among equals. There cannot be equality among unequals’’ என்று.
சம பலமில்லாதவர்களிடையே எப்படி சம போட்டி உருவாகும் என்று கேட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கஜேந்திர கட்கர், ஜஸ்டீஸ் சுப்பாராவ், ஜஸ்டீஸ் ஹெக்டே ஆகிய மூவரது தீர்ப்பில் மிக அருமையான உதாரணத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர். “....To make my point clear take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class horse, the other ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race; in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse; indeed that is denied to it. So a handicap may be given either in the nature of extra weight or a start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one.”
(ஜஸ்டிஸ் கே. சுப்பாராவ் தீர்ப்பு எழுதினார்).
இதன் தமிழாக்கம் வருமாறு:
எனது கருத்தைத் தெளிவுபடுத்த, ஒரு குதிரைப் பந்தயத்தினை எடுத்துக்-காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு பந்தயத்தில் ஓடுவதற்கு இரண்டு குதிரைகள் விடப்படுகின்றன. அவற்றில் ஒன்று உயர் தரம் வாய்ந்த பந்தயக் குதிரை; மற்றது சாதாரணமான குதிரை. ஒரே இடத்தில் இருந்து இரண்டு குதிரை-களும் புறப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவை இரண்டுக்-கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று கருத்தளவில் தோன்றினாலும், நடைமுறையில் பந்தயக் குதிரையுடன் போட்டியிட சாதாரணக் குதிரைக்கு சம வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். சாதாரணக் குதிரைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதனால், பந்தயக் குதிரைக்கு கூடுதல் எடை அளிப்பதன் மூலமோ அல்லது சாதாரண குதிரை புறப்படும் இடத்-திலிருந்து ஒரு நீண்ட தொலைவில் இருந்து பந்தயக் குதிரையைப் புறப்பட வைப்பதன் மூலமோ, இந்த இரு குதிரைகளுக்கிடையே சம வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், போட்டி என்ற பெயரில் நடந்தேறும் ஒரு கேலிக்கூத்து என்ற நிலை மாறி உண்மையில் அது உண்மையான ஒரு போட்டி என்ற நிலையைப் பெற்றுவிடும்.
இதன்படி ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும் ஒன்றாக குதிரை ரேசில் ஓட முடியுமா?
நோஞ்சான் பிள்ளைகளுக்குத்தான் போஷாக்குத் தேவை
அதைத்தான் சிறப்பாகச் சுட்டிக்காட்டி சமூகநீதி வழங்கி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நோஞ்சான்கள், சவலைப்-பிள்ளைகள்மீது கூடுதலான அக்கறை செலுத்தி, போஷாக்குக் கொடுத்து, பலசாலிகளாக்கிடுவதுதானே தாய், தந்தையரின் கடமை? அதுபோலத்தான் அய்.அய்.டி.,யின் இயக்குநரும், மற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்து முன்னேற்ற முயலவேண்டும் என்பது அவசியம், அவசரம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...