Wednesday, February 12, 2014

11 ரூபாய் முதல்வர்!

11 ரூபாய் முதல்வர்!
மோடி மோசடியை வெளுத்துவாங்கும் புதிய இணையதளம்
http://www.rs11.in/

குஜராத்தில் மோடி அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அரசின் இணையத்தில் உணவுப்பொருட்களுக்கான மானியம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்கிற அறிவிப்பு வெளிவந்தது. அதன் படி,  நாள் ஒன்றுக்கு ரூபாய் 10.80க்குள் வருமானம் இருப்பவர்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கான அளவு என்று கருதப்பட்டு மானியத்தில் உணவுப்பொருள் பெற தகுதி உள்ளவர்கள் என்கிற குஜராத் மாநில அரசின் அறிவிப்பு வெளிவந்தது.
    இந்த அறிவிப்பின்மூலம் குஜராத் மாநிலத்தில் உள்ள ஏழை மக்களின் ஏழ்மையைக் கேலி செய்வதாக காங்கிரசு செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான் கண்டித்ததும் விவாதங்கள் நடந்ததும் நாம் அறிந்தது.
    இது தொடர்பாக தற்போது புதிதாக  தொடங்கப்பட்டுள்ள www.rs11.in என்கிற இணையதளத்தில் நரேந்திர மோடியின் படத்துடன் கேள்வி பதில் பாணியில் கருத்துப்படம் வெளியாகி உள்ளது. நீங்கள் எந்த அளவில் பணக்காரன் என்பதை கேட்டு, மோடி அரசின் அளவுகோலின் படி, ”சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்க முடிந்தால் அவன் மிகப்பெரிய செலவாளி” என்றும், ”மாதம் ஒருமுறைக்குமேல் சிப்ஸ் தின்றால் அம்பானியுடன் தொடர்பில்லாதவர் என்று சொல்லிவிட முடியுமா?” என்று கேட்பதுடன், ”சிப்ஸ் தின்னும்போது குளிர்பானம் அருந்தினாலும், ஒரே நாளில் இரு வேளை உணவு உண்டாலும் குஜராத்திலேயே அவன்தான் பணக்காரன்” என்றும் கூறுவதாக உள்ளது.
    மேலும், அவ்விணையத்தில் குஜராத் மாநிலத்தில் உண்மையான வாழ்வாதார நிலை என்பது ரூ.11க்கு ஒரு பாக்கெட் நொறுக்குத்தீனி, ஒரு குவளை தேனீர், பெண்கள் தலையில் போடும் ரப்பர் பேண்ட் மட்டுமே வாங்க முடியும் என்றும், ரொட்டி குருமா, குளிருக்கு சால்வை, மருந்து மாத்திரைகள் என்று மற்ற அத்தியாவசியப்பொருட்கள் எதுவும் வாங்க முடியாது என்றும் விளக்கப்படத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
    குஜராத்தில் கடும் உழைப்பிற்குப் பிறகு என்னதான் பெற முடியும் என்றால் 250கிராம் சர்க்கரை, இரண்டு முட்டைகள், இரண்டு ரொட்டிகள், 3கி.மீ.தூரத்திற்கு பேருந்தில் பயணம் என்கிற அளவில்தான் முடியும். ஒரு கிலோ சர்க்கரை, ஆறு முட்டைகள், ஒரு முழு சாப்பாடு ஆகியவற்றை வாங்க முடியாது. கலுப்பூர் முதல் கன்கானியா ஏரி வரை 4 கி.மீ. கூட பயணம் செய்ய முடியாது என்பதுடன் அப்படி வாங்க முடியாத ஏழைகளை குஜராத்திலிருந்து விரட்டிவிடு என்கிற பாணியில், உண்மை குஜராத்தின் நிலையைச் சொல்லி நிறைவடைகிறது இணையத்தின் தகவல்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...