Monday, October 31, 2011

இதே நாளில் - 46 ஆண்டுகளுக்கு முன்


இதே நாளில் - 46 ஆண்டுகளுக்கு முன்


தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துக் களைத் தோற்றுவிக்க விடுதலை யைத் தொடங்கினார்கள். விடுதலை யின் புரட்சிக் கருத்துக்களை வர வேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடி மட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கிறார் களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கிறார்கள். மேல் மட்டத்திற்கும் அடித் தளத்திற்கும்  இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார் களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடத்தக்கூடிய விடுதலை யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ் வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.
தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.
- இவ்வாறு கூறியவர் தந்தை பெரியார் அவர்களால் மகா சந்நிதானம் என்று போற்றப் பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள் (விடுதலை  2-11-1965)
இதே நாளில் இன்றைக்கு 46 ஆண்டு களுக்கு முன் (31-10-1965) புதுப் பொலி வோடு மிகக் கம்பீரமாக காலத்தின் குரலாய் எழுந்து நிற்கும் விடுதலைப் பணிமனை, தவத்திரு அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்தகைய இனஉணர்வு செப்பேடான நற்செய்தியும் அருளப்பட்டது.
தந்தை பெரியார் தலைமை வகிக்க கொழுத்த இராகு காலத்தில் தவத்திரு அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலை பணிமனை திறப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றியவர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆவார்.
2012ஆம் ஆண்டில் விடுதலைக்கு அகவை 77 ஆண்டுகள் என்றால் விடுதலை ஆசிரியர் என்ற நிலையில் நமது தமிழர் தலைவரின் அகவை 50 ஆண்டுகளாகும்.
நீதிக்கட்சியின் வாரம் இரு முறை ஏடாக 1-6-1935 முதல் (வருட சந்தா ரூ 3-10-0 மூன்று ரூபாய் பத்தணா) 14, மவுண்ட் ரோடு மதராஸ் என்ற முகவரியிலிருந்து விடுதலை வெளியானது. அப்பொழுது அதன் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன்.
1937 முதல் பண்டித எஸ்.முத்துசுவாமி பிள்ளை அவர்களை ஆசிரிய ராகக் கொண்ட நாளேடாக வெளிவந்தது.
19 மாதங்கள் நீதிக்கட்சியின் வார இருமுறை ஏடாக வெளிவந்த விடுதலை தந்தை பெரியார் அவர்கள் கரங்களில் 1937 ஜூலை ஒன்று முதல் ஈரோட்டிலிருந்து நாளேடாக வெளி வந்தது.
அதன்பின் 20-9-1943 முதல் விடுதலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை (2, பால கிருஷ்ணபிள்ளைத் தெரு)யிலிருந்து வெளி யாயிற்று. அங்கிருந்து இதே நாளில்தான் 1965இல் சென்னைப் பெரியார் திடல் புது மனையில் தன் புகழ் மணக்கும் அத்தியா யத்தைத் தொடர்ந்தது விடுதலை.
தமிழன் இல்லம் என்பதற்கு அடையாள அறிவிப்புப் பலகையான விடுதலை யினைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் அடிகளார்.
இந்தக்கால கட்டத்தில் மீண்டும் இதனை நினைவு படுத்தி அயராப் பணியில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் பயணித்துக் கொண்டுள்ளார் என்பது ஒரு  கின்னஸ் சாதனைதான்.
இந்த வரலாற்றுக் குறிப்பை - ஆக்க ரீதியாக சிந்தனைக்குட்படுத்தி, வெறும் தமிழர்களாக மக்கள் இல்லாமல் உண்மை யான தமிழர்களாக்கிட, உருவாக்கிட நாம் மேற்கொள்ளும் அரிய முயற்சிதான் இது.
விடுதலை இலாப நோக்கில் மேற் கொள்ளப்படும் முயற்சியல்ல. தமிழர் சமுதாயத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்லும், முற்போக்குத் திசை நோக்கி விரைவுபடுத்தும் ஏற்பாடு இது.
1935இல் விடுதலை வருவது குறித்து  அன்று தந்தை பெரியார் என்ன எழுதினார்?
இன்றைக்கும் மறுநினைவுக்கு அழைத்து புது ரத்த ஓட்டத்துடன் செயல்படுவதற்கான உந்துசக்தியின்  வீச்சுகள் அவை.
2, 3 வருடங்களாகவே பரிசுத்த ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர் களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும்.
அதன் பயன்களை சமீபத்தில் ஏற்பட்ட பல தேர்தல்கள் மூலம் அனுபவித்தும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டது மான விஷயம் யாவரும் அறியாததல்ல.
அப்படிப்பட்ட நிலையில் விடுதலை என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாய் இருப்பதைப் பார்த்த எந்தப் பார்ப்பனரல்லா தாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்கள் (குடிஅரசு, 9-6-1935) என்று தந்தை பெரியார் எழுதியதை இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்வது நல்லது!   நல்லது!! அன்றைக்கு நேர்ந்த தேர்தல் என்றாலும் இன்றைக்கும் பொருந்துவது தானே!
சமுதாய மாற்றமா?
அரசியல் மாற்றமா?
பண்பாட்டு மீட்சியா?
பகுத்தறிவு மறுமலர்ச்சியா?
பெண்ணுரிமையா?
சமூக நீதியா?
இந்தக் கால கட்டத்தில் தேவை,  விடுதலை! விடுதலை!!. விடுதலைப் புதுமனை திறக்கப்பட்ட இந்நாளில் உணர்ச்சி பெறுவோம்!
உழைத்திட முன்வருவோம்!   வெற்றி பெறுவோம்!   வாழ்க பெரியார்!
- மின்சாரம்

தீபாவளி கொண்டாடும் தீக்கதிர்


தீவாவளிக்குச் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (மார்க்சிஸ்டு) அதிகார பூர்வகட்சி ஏடான தீக்கதிர்!
மாசு வந்து எய்துமோ? என்று கம்பன் இராமா யணம் பாட ஆரம்பித்தது போல எதை எதையோ சமாதானமாகச் சொல்லுவதற்குக் கடுமையான முயற்சி செய்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆதிக்கவாதிகள், நகராசுரனை அழித்தார்கள் என்று ஒப்புக் கொண்டு எழுதிவிட்டு, அந்த மை உலருவதற்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் மக்களுக்குத் தேவைப்படுகின்றன என்று வக்காலத்து வாங்கி எழுதுகிறது. கடுமையான குழப்பத்திற் கிடையேயும், குற்ற உணர்வோடும் எழுதப்பட்டு இருப்பது வரிக்கு வரி தெரிகிறது.
காடு பிடிக்க நரகர்களை அழிக்கிற வேலை இன்று வேறு சக்திகளால், வேறு நோக்கங்களுடன், வேறு வடிவங்களில் நடத்தப்படுகிறது என்று தெளிவாக எழுதும் தீக்கதிர் - நரகர்களை அழிக்கும் வேறு சக்தி களோடு சேர்ந்து கொண்டு விழாக் கொண்டாடலாம் என்கிறதா?
மக்களின் கொண்டாட்டத் தேவை களை அங்கீகரித்து அவர்களோடு பங் கேற்று, இயற்கையின் உண்மைகளையும், சமுதாய நிலைமைகளின் அடிப்படை களையும் புரிய வைக்கும் பெருமுயற்சி தேவைப்படுகிறது. மகத்தான வரலாற்று இயக்கமாகப் பரிணமிக்க வேண்டிய அந்த முயற்சியில்; சிறு பங்களிப்பே தீக்கதிர் தீபாவளி சிறப்பு மலர் என்று கொண்டாட் டம் ஒரு பண்பாட்டுத் தேவை என்று தலையங் கமாகத் தீட்டப்பட்டுள்ளது.
இந்த வரிகளில் ஏதாவது தெளிவும், பொருளும் இருக்கிறதா? புரிகிறதா?
கொண்டாட்டங்கள் முக்கியம்; காரணங்கள் முக்கியமில்லை என்பதுதான் தீக்கதிரின் கருத்தாக இருக்கிறதோ!
மூடத்தனத்தின் அடிப்படையில் நடைபெறுவது கொண்டாட்டமாக இருந்தாலும் அதில் அய்க்கிய மாகிவிட வேண்டியதுதான் என்கிறது தீக்கதிர்.
இந்த அளவு கோல் இது போன்ற பண்டிகைகளில் தானா? வர்க்கப் பார்வை, வருணப் பார்வை இவை எல்லாம் கூட, பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று வந்துவிட்டால் தேவைப்படாது என்பதுதான் டயலிட்டிக் மெட்டீரியலிசமா?கூட்டத்தில் கோவிந்தா போடுவதுதான் முற்போக்குச் சிந்தனையா?
தீபாவளிக் கொண்டாட்டம் என்பதற்குச் சொல்லப் படும் காரணங்கள் மகாமகத்திற்கும், நிர்வாணச் சாமியார்களுக்கும், கும்பமேளாவிற்கும் பொருந் தாதா? நவராத்திரிக்குப் பொருந்தாதா?
காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாளை, கோட்சே கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு விழா கொண்டா டலாமா?
இதில் கூடுதலாகப் பொருளாதார காரணங்கள் வேறு!
விழாக்கள் ஒரு வகையில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு எட்டப்பட்டன என்பதை மதிப் பிடும் ஆண்டுக் கணக்கெடுப்பாகவும் உதவு கின்றன. புத்தாடைகள், புதிய வாகனங்கள், புதிய பொருள்கள் என வாங்க வைத்து, வர்த்தகச் சுழற்சிக்கு வழி வகுத்து பொருளா தார தேக்கத்தை  ஓரளவேனும் உடைக்கப் பயன்படுகின்றன என்று பொருளாதார முலாம் வேறு பூசுவதை நினைத்தால் ஒரு பக்கம் வேதனையும், இன்னொரு பக்கம் விலா நோகச் சிரிப்பும்தான் முட்டிக்கொண்டு  வருகின்றன.
மூடப் பண்டிகைக்காக நம் தொழிலாளர் தோழர்கள் கடன் வாங்கி செலவு செய்வதைத் தடுப்பதற்குக் கருத் துக்களைச் சொல்ல வேண்டியவர்கள் தீபாவளிக்காகச் செய்யப்படும் செலவுகள் பொருளாதார தேக்கத்தை உடைக்கப்பயன்படுகின்றன என்று சொல்லுவது மூலதனத்தில் எத்தனையாவது பகுதி என்று தெரியவில்லை.
தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் போனஸ், புஷ்வாணமாகப் பொசுங்கிப் போய்விடவேண்டும் என்று நினைக்கலாமா?
கம்யூனிஸ்டாக இருப்பவன் (அவன் மார்க்ஸிய வாதியாக இருக்கும் பட்சத்தில்) மூடப் பழக்க வழக்கங்கள் - மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் வளர்ச்சி அடையாத மக்கள் மனதில், அறிவுப்பூர்வ மான விமர்சனம் செய்து மதத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கப்பாடுபடவேண்டும். இல்லை யெனில் மார்க்ஸியவாதி என்ற பெயரில் மார்க்ஸி யத்தைக் கொச்சைப்படுத்துபவனாகத்தான் ஒரு கம்யூனிஸ்டு இருக்க முடியும் என்கிறார் மாவீரர் லெனின். (புரட்சிகரப் பொருள் முதல்வாதத்தின் முக்கியத் துவம் எனும் கட்டுரை)
மார்க்ஸிய தோழர்களே!  உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள் !
- மின்சாரம்

இதே நாளில் - 46 ஆண்டுகளுக்கு முன்


தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துக் களைத் தோற்றுவிக்க விடுதலை யைத் தொடங்கினார்கள். விடுதலை யின் புரட்சிக் கருத்துக்களை வர வேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடி மட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கிறார் களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கிறார்கள். மேல் மட்டத்திற்கும் அடித் தளத்திற்கும்  இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார் களா என்றால், இப்போதுதான் அவர்கள் கைக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடத்தக்கூடிய விடுதலை யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ் வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

- இவ்வாறு கூறியவர் தந்தை பெரியார் அவர்களால் மகா சந்நிதானம் என்று போற்றப் பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்கள் (விடுதலை  2-11-1965)
 
இதே நாளில் இன்றைக்கு 46 ஆண்டு களுக்கு முன் (31-10-1965) புதுப் பொலி வோடு மிகக் கம்பீரமாக காலத்தின் குரலாய் எழுந்து நிற்கும் விடுதலைப் பணிமனை, தவத்திரு அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இத்தகைய இனஉணர்வு செப்பேடான நற்செய்தியும் அருளப்பட்டது.

தந்தை பெரியார் தலைமை வகிக்க கொழுத்த இராகு காலத்தில் தவத்திரு அடிகளார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலை பணிமனை திறப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றியவர் விடுதலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆவார்.

2012ஆம் ஆண்டில் விடுதலைக்கு அகவை 77 ஆண்டுகள் என்றால் விடுதலை ஆசிரியர் என்ற நிலையில் நமது தமிழர் தலைவரின் அகவை 50 ஆண்டுகளாகும்.

நீதிக்கட்சியின் வாரம் இரு முறை ஏடாக 1-6-1935 முதல் (வருட சந்தா ரூ 3-10-0 மூன்று ரூபாய் பத்தணா) 14, மவுண்ட் ரோடு மதராஸ் என்ற முகவரியிலிருந்து விடுதலை வெளியானது. அப்பொழுது அதன் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன்.

1937 முதல் பண்டித எஸ்.முத்துசுவாமி பிள்ளை அவர்களை ஆசிரிய ராகக் கொண்ட நாளேடாக வெளிவந்தது.

19 மாதங்கள் நீதிக்கட்சியின் வார இருமுறை ஏடாக வெளிவந்த விடுதலை தந்தை பெரியார் அவர்கள் கரங்களில் 1937 ஜூலை ஒன்று முதல் ஈரோட்டிலிருந்து நாளேடாக வெளி வந்தது.

அதன்பின் 20-9-1943 முதல் விடுதலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை (2, பால கிருஷ்ணபிள்ளைத் தெரு)யிலிருந்து வெளி யாயிற்று. அங்கிருந்து இதே நாளில்தான் 1965இல் சென்னைப் பெரியார் திடல் புது மனையில் தன் புகழ் மணக்கும் அத்தியா யத்தைத் தொடர்ந்தது விடுதலை.

தமிழன் இல்லம் என்பதற்கு அடையாள அறிவிப்புப் பலகையான விடுதலை யினைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார் அடிகளார்.

இந்தக்கால கட்டத்தில் மீண்டும் இதனை நினைவு படுத்தி அயராப் பணியில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழர் தலைவர் அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுகள் பயணித்துக் கொண்டுள்ளார் என்பது ஒரு  கின்னஸ் சாதனைதான்.

இந்த வரலாற்றுக் குறிப்பை - ஆக்க ரீதியாக சிந்தனைக்குட்படுத்தி, வெறும் தமிழர்களாக மக்கள் இல்லாமல் உண்மை யான தமிழர்களாக்கிட, உருவாக்கிட நாம் மேற்கொள்ளும் அரிய முயற்சிதான் இது.

விடுதலை இலாப நோக்கில் மேற் கொள்ளப்படும் முயற்சியல்ல. தமிழர் சமுதாயத்தை மேல்நோக்கி அழைத்துச் செல்லும், முற்போக்குத் திசை நோக்கி விரைவுபடுத்தும் ஏற்பாடு இது.

1935இல் விடுதலை வருவது குறித்து  அன்று தந்தை பெரியார் என்ன எழுதினார்?
 
இன்றைக்கும் மறுநினைவுக்கு அழைத்து புது ரத்த ஓட்டத்துடன் செயல்படுவதற்கான உந்துசக்தியின்  வீச்சுகள் அவை.

2, 3 வருடங்களாகவே பரிசுத்த ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ்ப் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்தும், அதை எந்தத் தலைவர் களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும்.

அதன் பயன்களை சமீபத்தில் ஏற்பட்ட பல தேர்தல்கள் மூலம் அனுபவித்தும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ்ப் பத்திரிகை! தமிழ்ப் பத்திரிகை!! தமிழ்ப் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டது மான விஷயம் யாவரும் அறியாததல்ல.

அப்படிப்பட்ட நிலையில் விடுதலை என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாய் இருப்பதைப் பார்த்த எந்தப் பார்ப்பனரல்லா தாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்கள் (குடிஅரசு, 9-6-1935) என்று தந்தை பெரியார் எழுதியதை இந்த நேரத்தில் நினைவூட்டிக் கொள்வது நல்லது!   நல்லது!! அன்றைக்கு நேர்ந்த தேர்தல் என்றாலும் இன்றைக்கும் பொருந்துவது தானே!

சமுதாய மாற்றமா?

அரசியல் மாற்றமா?

பண்பாட்டு மீட்சியா?

பகுத்தறிவு மறுமலர்ச்சியா?

பெண்ணுரிமையா?

சமூக நீதியா?

இந்தக் கால கட்டத்தில் தேவை,  விடுதலை! விடுதலை!!. விடுதலைப் புதுமனை திறக்கப்பட்ட இந்நாளில் உணர்ச்சி பெறுவோம்!

உழைத்திட முன்வருவோம்!   வெற்றி பெறுவோம்!   வாழ்க பெரியார்!
- மின்சாரம்

கண்ணாடி சாதாரணமாக இருக்கும் நிலை எது ?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:

கண்ணாடி சாதாரணமாக இருக்கும் நிலை எது ?
கண்ணாடியின் சாதாரண நிலையில் உள்ள திடப் பொருளாகும்.
கண்ணாடி குளிர்விக்கப்பட்ட, ஆனால்  படிகமாகாத ஒரு திரவம் என்பதையும், அது அற்புதமான முறையில் மிகமிக நிதானமாக வழியும் என்பதையும்  நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உண்மையல்ல. கண்ணாடி என்பது ஒரு திடப்பொருள்தான்.
பழைய தேவாலயங்களின் ஜன்னல் களில் இருக்கும் கண்ணாடி சட்டத்தின் அடிப்பகுதி மற்ற பகுதிகளை விட கனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, கண்ணாடி ஒரு திரவம் என்ற கொள்கையை சிலர் ஆதரிப்பர். இதன் காரணம் காலப்போக்கில் கண்ணாடி கீழே வழிந்துவிடுவது அல்ல.  அனைத்துப் பக்கங்களிலும் ஒரே சம அளவில் உள்ள கண்ணாடிப் பலகைகளை செய்ய மத்திய கால கண்ணாடி தயாரிப்பாளர்களால் முடியாமல் போயிருந்திருக்கலாம்.
உலோகங்களின் மூலக்கூறுகளைப் போல், கண்ணாடியின் மூலக்கூறுகள்  ஒழுங்கான வடிவில் இருப்பவை அல்ல என்பதை கவனித்த ஜெர்மன் இயற்பியலாளர் கஸ்தவ் தம்மான்(1861-1938) கண்ணாடியை ஆராய்ந்து அதன் திடமாகும் தன்மையை வெளிப்படுத்தியதை அடுத்து கண்ணாடி ஒரு திடப்பொருளா திரவப் பொருளா என்ற குழப்பம் ஏற்பட்டது. அவர் கண்ணாடியை உறைந்த மிகச்சிறந்த திரவப் பொருளுக்கு ஒப்பிட்டுக் கூறினார். கண்ணாடி திரவத்தைப் போல் இருக்கிறது என்று கூறுவதால் அது திரவப் பொருள் ஆகிவிடாது.
இந்நாட்களில், திடப்பொருள்கள் படிகப் பொருள்கள் அல்லது குறிப்பிட்ட வடிவமற்ற பொருள்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளன. கண்ணாடி குறிப்பிட்ட வடிவமற்ற ஒரு திடப்பொருளாகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

Sunday, October 30, 2011

ராமாயணத்தின் வளமையும், டில்லி பல்கலைக் கழகத்தின் வறுமையும்




வரலாற்றாசிரியர் ஏ.கே.இராமானுஜத்தின்  இராமாயணா, முன்னூரு இராமாயணங்கள்: அய்ந்து எடுத்துக்காட்டுகளும், மூன்று சிந்தனைகளும் என்னும் புகழ் பெற்ற கட்டுரையை வரலாற்றுப் பட்டப் படிப்பு டில்லி  பாட திட்டத்திலிருந்து நீக்குவது என்று பல்கலைக் கழகக் கல்வி கவுன்சில் இம்மாத துவக்கத்தில் மேற்கொண்ட முடிவிற்கு எதிராக பல வரலாற்று ஆசிரியர்களும், கல்வியாளர்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டுரையைக் கற்பிப்பதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற இந்துத்துவ மாணவர் பிரிவு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை அலுவலகம் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தியது. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்தக் கட்டுரையைப் பாட திட்டத்தில் இருந்து நீக்குவது என்ற முடிவு, அரசியல் நிர்ப்பந்தத்திற்காக கல்வியியல் சுதந்திரத்தை சரண் செய்வதேயாகும் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்திய வரலாற்றுக் களத்தில் மற்ற எவரையும் விட மேலான, அதிகாரபூர்வமான ஆய்வாளர் என்னும்  முதன்மை நிலை யில் உள்ள வரலாற்றாசிரியர் ரொமீலா தாபர் இந்த முடிவு பற்றியும், அறிவு மற்றும் பாண்டித்தியம் மீது அது ஏற்படுத்தியுள்ள மோசமான பாதிப்புகளைப் பற்றியும், இந்து கலாச்சார பாரம்பரியம் மற்றும் மதபாரம்பரியம் பற்றிய மற்ற அனைத்துக் கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் ஒதுக்கி விட்டு  ஒரே ஒரு கருத்தை, கண்ணோட்டத்தை  எடுத்துக் காட்டவேண்டும் என்ற சுயநலவாதி களின் முயற்சிகளைப் பற்றியும்,  பத்திரிகையாளர் பிரிசில்லா ஜெபராஜிடம் பேசினார். 28-10-2011 அன்றைய தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளிவந்த அவரது பேட்டி இங்கு தமிழில் தரப்படுகிறது.

டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை மற்றும் கல்வியியல் கவுன்சில் தொடர்பு டையது என்பதால்  இந்தப் பிரச்சினை முற்றிலு மாக வெறும் வரலாறு மற்றும் கல்வியியலுடன்  மட்டும் தொடர்பு உடையதல்ல; அதற்கு மேல்  அரசியல் பின்னணியும் அதற்கு உண்டு என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்.
2008 இல் அகில பாரதிய வித்யா பரிஷத்தினரால் டில்லி பல்கலைக் கழக வரலாற்றுத் துறை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது, தாக்குதல் நடக்கும்போது தொலைக்காட்சி காமராக்கள் அவற்றை சரியாகப் பதிவு செய்வதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது, அவர்களது வன்முறைச் செயல்கள் சரியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பியதைக் காட்டுகிறது. இதன் காரணமாகவே இப் பிரச்சினைக்குப் பின் அரசியல் பின்னணி உள்ளது என்று நான் கருதினேன்.
இக்கட்டுரை இந்து சமூகத்தினரின் உணர்வு களை புண்படுத்துவதாக இருப்பதால் அதனைத் திரும்பப் பெறவேண்டும் என்று அவர்கள் கோரினர். இது கல்வி தொடர்பான ஒரு கோரிக்கையே அல்ல. இந்த வன்முறைத் தாக்குதல் ஏற்பாடு செய்யப்பட்ட விதத்தில் இருந்தே, வரலாற்றுத் துறைக்கும், இக்கட்டுரைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு அரசியல் செயல்பாடுதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட நியமிக்கப் பட்ட நான்கு நபர் குழுவின் மூன்று உறுப்பினர்கள் இந்தக் கட்டுரையை நீக்கக்கூடாது என்று ஒருமித்த கருத்துடன் கூறினர்.
பல்கலைக் கழகம் துவக்கத்தில் இதனை ஒரு கல்விப் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டு, இந்தக் கட்டுரையை நீக்க வேண்டுமா என்பதனை ஆய்வு செய்ய  நான்கு உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை நியமித்தது.மூன்று உறுப்பினர்கள் இந்தக் கட்டுரையை நீக்கக்கூடாது என்று ஒருமித்த கருத்துடன் கூறினர். இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாக இக்கட்டுரை இருக்கிறது என்று நான்காவது உறுப்பினர் கூறவில்லை; ஆனால், பட்டப் படிப்பு மாணவர்கள் அக்கட்டுரையில் காணப்படும் வேறுபாடுகளையும், சிறு மாறுபாடுகளையும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்பதால், பட்டப் படிப்புக்கு அது பொருத்தமானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.  எனவே, இந்தக் கட்டுரையை நீக்க வேண் டிய அவசியம் இருப்பதாக  நிபுணர் குழு கருதவில்லை. இந்த நிபுணர் குழுவின் கருத்துக்கு மாறாக, இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது என்ற காரணத்தால், இது கல்வியியல் குழுவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பிரச்சினை பற்றிய விவாதம் நடத்தப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் அளிக்கப் படவில்லை என்றே எனக்குக் கிடைத்த தகவல்கள் தெரி விக்கின்றன. அதனால் கல்வியியல் குழு உறுப்பினர்கள் அக்கூட்டத்திற்குச் செல்லும்போது இது பற்றி சிந்திக்கத் தயாராகச் செல்லவில்லை. திடீரென்று  ஏதோ ஒரு வழியில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. துறை அலுவலகங்களையும், கல்வியாளர் களையும்  தனிப்பட்ட குழுவினர் தாக்குவதன் காரண மாக, பல்கலைக் கழகத்தின் பாடங்களும், பாடதிட்டமும் மாற்றப்பட இயலுமா என்ற கேள்வியை பல்கலைக் கழகத்தின் செயல்பாடுகள் எழுப்பி உள்ளன. வால்மீகி மற்றும் கம்பராமாயணம் உள்ளிட்ட  பல ராமாயணக் கதைகளைப் பற்றி தனது கட்டுரை யில் ராமானுஜன் விவாதித்திருக்கிறார். இந்து மத வெறியர்கள் ஏற்றுக் கொள்ள இயலாத பல விஷ யங்கள் வால்மீகி மற்றும் கம்பராமாயணங்களில் உள்ளன. எந்த ராமாயணத்தைத்தான் அவர்கள் ஆதரிக்கின்றனர்?
வால்மீகி ராமாயணத்தை அவர்களில் எவரும் முழுவதுமாக  படித்திருக்கவே இல்லை என்றே நான் கருதுகிறேன். அவர்களில் பாதிபேர் கம்பராமாய ணத்தைப் பற்றி கேள்விப்பட்டும் இருக்க மாட்டார்கள்.
அவர்கள் எதை ஆதரிக்கிறார்கள்?  வால்மீகி ராமாயணம் என்ன கூறுகிறது என்பதைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பதெல்லாம் செவி வழியாகக் கேள்விப் பட்டதை அடிப்படையாகக் கொண்டதுதான். எழுந்து நின்று ஒன்றை நீக்க வேண்டும் என்று முழக்கமிடுவதற்கு முன்பு,  அதனைப் படித்துப் பார்த்து, ஆய்வு செய்து, நன்கு புரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளத் தயாராக இல்லாதவர்களாக அவர்கள் இருக்கின்றனர் என்பதுதான் நம்மைக் கோபப்படுத்துகிறது.
ராமகாதை என்று நாம் அழைக்கும் ராமனின் கதை ஒரு பெரும் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்தது என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.  வால்மீகி ராமாயணம் முதன் முதலாக எழுதப்பட்ட காலத்திற்கும் கம்பராமாயணம் எழுதப்பட்ட காலத்துக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு காலத்திலும் வழங்கிய கதைகளும் உள்ளன. அதனால் ராமாயணத்தில் வேறு பாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. ராமன் கதையை புதிதாக எழுத யாரேனும் ஒருவர் முன்வரும்போது, ஒரு குறிப்பிட்ட ராமாயண நூலினை பின்பற்றி அவர் எழுத முனைந்தாலும், அசல் ராமாயணக் கதையில் சேர்க்கப் பட்டவைகளைப் போன்ற சேர்க்கைகள் அவர் கதையிலும் இருக்கும். ஒரு இதிகாசத்தின் கட்டமைப்பில் இது தவிர்க்க முடியாதது.
ஓர் இதிகாசம் மக்களின் மனதைக் கவர்ந்தால், அதனுடன் பிற்சேர்க்கையாக பல துண்டு, துணுக்குச் செய்திகள் சேர்க்கப்படுவதும், சில நீக்கப்படுவதும் இயல்பே. உருண்டு செல்லும் ஒரு கல்லைப் போல் அதன் பயணத்தில் சிலவற்றை அது சேர்த்துக் கொள்ளும்; சிலவற்றை அது விட்டுவிட்டுச் செல்லும்.
ஓர் இதிகாசத்தின் கட்டமைப்புத் தன்மை மாற்றங்களுக்கு இடம் அளிப்பது என்பதால்,  நிச்சயமான கதை என்று பெரும்பாலான மக்களின் மனதில் எந்த ஒரு குறிப்பிட்ட கதையையும் நிலை நாட்டும் ஆபத்து உள்ளதா? இத்தகைய ஆபத்து உள்ளதென, தூர்தர்ஷன்  ராமாயணத் தொடரை ஒளிபரப்பிய போது நீங்கள் கூறியிருந்தீர்களே?
உண்மைதான். ராமாயணக் கதைகளில் மாறுபட்ட கதைகளும் உள்ளன என்பதை நீங்கள் வலியுறுத்திக் கூறவேண்டும். இல்லாவிட்டால் ஒரே ஒரு இராமாயணக் கதைதான் உள்ளது என்றும், அக்கதைதான் உண்மை யான கதை என்றும்  மக்கள் கருதிக் கொள்ள நேரலாம்.  இராமாயணத்தை வால்மீகி எழுதியபோது, வேறு இரண்டு ராமாயணக் கதைகளும் இருந்தன. ஒன்று முற்றிலும் மாறுபட்ட கதை. மற்றொன்று அடிப்படையில் மாறுபட்ட கதை.
ராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்றும், அவர்கள் கணவன் மனைவியாக இணைந்து ஆட்சி செய்தனர் என்றும் கூறும் புத்த ஜடாகா, தசரத ஜடாகா என்று அழைக்கப்படும் கதைகளும் இருந்தன. கட்டுக் கதைகளின் தோற்றம் பற்றிய புத்தமத பாரம்பரியத்தில் இவ்வாறு கூறுவது சரியானதுதான் என்பதுடன், ராமன் சீதை பற்றி உண்மையிலேயே மிக உயர்வாகக் கூறப்பட்டு உள்ளது. ஆனால் கல்வியறிவற்றவர்கள் இதனை முழுவதுமாகத் தவறாகக் கருதிக் கொண்டு, தவறான விளக்கம் அளித்துக் கொண்டு, ராமனும் சீதையும் இணையராக ஆட்சி செய்கின்றனர் என்று இந்தக் கதை கூறுகிறது என்று கூறும் நம்மையெல்லாம் பார்த்துக் கூச்சலிடுகின்றனர்.
ராமானுஜம் பேசும் ஜைனமத ராமகாதை மிகுந்த ஆர்வத்தை அளிப்பதாகும்.  அதை எழுதிய விமலசூரி தொடக்கத்திலேயே, இதுவரை நீங்கள் கேள்விப்பட்ட ராம காதை, முட்டாள்களால் எழுதப்பட்ட,  முற்றிலும் தவறான தும் சரியில்லாததும் ஆகும். என்று கூறுகிறார் வரலாற் றுப் புகழ் பெற்ற அரசன் சிறீநிகாவின் அரசவையில் அந்தத் தவறை அவர் கண்டுபிடித்து, ராட்சதர்களை கொடூர குணம் படைத்தவர்கள் என்று கூறுவது முட்டாள் தனம். அவர்களும் இயல்பான சாதாரண மனிதர்கள் தான் என்று கூறுகிறார். வேறு சொற்களில் கூறுவதா னால், வால்மீகியின் கற்பனைக் கதையை மாற்றி நியாயப் படுத்த விமல்சூரி முயல்கிறார் என்றுதான் கூறவேண்டும். அத னால், இந்த இரண்டு விதமான ராமாயணக் கதை களையும் ஒன்றாக வைத்து பார்ப்பது கவர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
அப்படியானால், இந்து கலாச்சாரத்தின் பிரதிபலிப் பாக வால்மீகி இராமாயணம் ஆனது எவ்வாறு?
சமஸ்கிருத இலக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரியத்திலிருந்து வந்தது இது என்று ஓரளவுக்குக் கருதலாம். நீண்டதொரு காலம் முழுவதிலும் நிலவி வந்த முக்கியமான கலாச்சார பாரம்பரியம் அது என்பதும் அதன் காரணம்.  ஆனால், இவற்றை நிச்சயமான பாடங்கள் என்று ஆங்கிலேய ஆட்சியின் போது கற்றறிந்த வர்களால் நிறுவப்பட்டதும் இதன் காரணங்களில் ஒன்று.
ஆங்கிலேயரின் காலனி ஆதிக்க காலத்திற்குப் பின், அந்தக் கருத்தைப் பற்றிக் கல்வியாளர்கள் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்த நிலையில்,  அகண்ட சமூகத் தின் கண்ணோட்டங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அது போன்ற முயற்சி இருந்துள்ளதா?
இல்லை. அது போன்ற முயற்சி எதுவும் இருக்க வில்லை. இதற்கு நான் தொலைக்காட்சி ஊடகத்தையே குற்றம் சாட்டுவேன்.  நமது கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய கதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நிச்சயமான பாடம் இருக்கிறது என்ற கண்ணோட்டத்தை அவை மக்களின் மனதில் விதைத்துவிட்டன. இக்கதைகளில் மாறுபட்ட, வேறுபட்ட கதைகளும் உள்ளன என்ற உண்மையைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவை கவலைப்படவே இல்லை.
ஆனால், இது கல்வியாளர்களிடமிருந்துதான் தொடங்கியது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்து விட்டு, வாக்கெடுப்பின்போது ராமானுஜனின் கட்டுரைக்கு ஆதரவாக 10 பேரும், எதிராக 90 பேரும் வாக்களித்த உறுப்பினர்களைக் கொண்ட கல்வியியல் குழு நாட்டின் ஒரு முன்னணி பல்கலைக் கழகத்தில் உள்ளது என்பதுதான் இந்த மொத்தக் கதையின் கவலை அளிக்கும் அம்சமாகும். அக்கட்டுரைக்கு எதிராக வாக்களித்த 90 உறுப் பினர்களில்,  எத்தனை பேர் எதிராக வாக்களிக்கு முன் அதனைப் படித்துப் பார்த்தார்கள்? கல்வியியல் குழுவில் இருக்கும் பலரும் இந்தக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பது பற்றி அறியாதவர்களே ஆவர்; அவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொண்டிருந்தது எல்லாம் செவிவழிச் செய்திகள்தாம்.
யாரோ ஒருவர் எழுந்து அதனைக் கண்டிக்கிறார். பின்னர் ஒரு குழு திரும்பிப் பார்த்துவிட்டு, நல்லது. அப்படியானால் நாம் அதனைக் கண்டிக்கத்தான் வேண்டும் என்று கூறுகிறது. எனவே நம் நாட்டில்  படிக்கும் பழக்கத்தை நாம் இழந்துவிட்டோம்  என்று தான் கூறவேண்டும். பாடபுத்தகங்களைப் படித்துப் பார்க்க நாம் முயல்வதில்லை. அவற்றை நாம் தொலைக்காட்சியில், கார்ட்டூன்  நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம்.
டில்லி பல்கலைக் கழகத் துணை வேந்தரின் அரசியல் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ராமானுஜனின் கட்டுரையை நீக்க வேண்டும் என்று வாக்களித்த 90 உறுப்பினர்களின் அரசியல் என்ன என்பதும் எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும், இதில் உண்மையான ஓர் அரசியல் காரணம் இருக்கிறது. (அ) எனது கட்சிக்கு இதில் ஆட்சேபம் இல்லை. அல்லது (ஆ) இது ஒரு அரசியல் பிரச்னை என்பதால் உண்மையில் அது பற்றி எனக்கு எந்தக் கவலையு மில்லை. கல்வியியல் குழு முடிவெடுக்கட்டும். (அத னால் அக்கூட்டத்திற்கு வராதவர்களும் இருந்தனர் என்று எனக்குத் தெரிய வந்தது.)  அல்லது
(இ) இதில் ஓர் ஆக்க பூர்வமாக பங்கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் நாளை நீங்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் போது உங்கள் உதவிக்கு எவரும் வரமாட்டார்கள் என்று கூறும் அரசியல் காரணம் அதில் இருக்கிறது.
தற்போதுள்ள அறிவைப் பற்றி ஒவ்வொரு கல்வியாளரும் கேள்வி எழுப்பவேண்டும். அறிவு வளர்ச்சி பெறுவதற்கான ஒரே வழி அதுதான் என்று கல்வியியல் குழுவிற்கு நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகவும் இருக்கக்கூடும்.
இந்தக் கட்டுரை இளங்கலை பட்டப்படிப்புக்குப் பொருத்தமானது அல்ல என்று கூறிய நிபுணர் குழு உறுப்பினர், ஆசிரியரால் இக்கட்டுரையின் பின்னணி பற்றி போதுமான அளவில் விளக்க முடியாது என்று கருதியிருக்கக் கூடும். அக் கட்டுரை எந்த நிலையில் போதிப்பது பொருத்த மானதாக இருக்கும் என்ற கோட்டை நம்மால் வரையமுடியுமா?
சரியாகச் சொன்னீர்கள். எனது கருத்தும் அதுதான். ஆசிரியரால் விளக்கிக் கூறமுடியாது என்று நீங்கள் கூறிக்கொண்டே சென்றால், அந்த ஆசிரியரை நீங்கள் ஏன் நியமித்தீர்கள்? ஒரு பாடத் தின் வேறுபாடுகள், மாறுபாடுகள் என்பது போன்ற எளிய பாடங்களை விளக்க முடியாத ஒருவரை நீங்கள் ஏன் ஆசிரியராகப் பயிற்றுவித்தீர்கள்?
- ஆதாரம்: தி ஹிந்து 28.10.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்)

வெறும் கண்ணால் எத்தனை விண்வெளி மண்டலங்களைப் பார்க்க முடியும் ?


சீன யுன்-யாங் என்னும் நம்பிக்கை ஒளி!


அண்மையில் சீனா சென்றிருந்த போது, நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகச் செயல்பாடுகளை வியந்த டாக்டர் ஹோ ஜியாங் என்ற நண்பர், துணை வேந்தர் அவர்களை யும், எங்களையும் அவரது நோக்கியா மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஆய்வு செய்யும் அவரது  (கூட்டுப் பங்காளிகளும் உண்டு) ஆராய்ச்சி நிறுவனமான Usability and Designing Laboratory  என்ற பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு நடைபெறும் ஆய்வினை - பரிசோதனைகள் பற்றிய - அவை எப்படி 21 ஆம் நூற் றாண்டின் புத்தாக்கங்கள் என்பது பற்றி விளக்கினார். காலை ஓட்டலுக்கு வந்து அவரது காரில் அழைத்துச் சென்று, இரவு வரை பல்வேறு இடங்கள் சீன பன்னாட்டு வானொலி நிலையம் உட்பட உடன் இருந்து, இரவு ஓட்டலில் விட்டுச் செல்லும் வரை - கொட்டும் மழையிலும் எங்களோடு இருந்தார்.
31 வயதான அவர், ஜெர்மன் பல்கலைக் கழகத்தில், டாக்டரேட் (Ph.D.) வாங்கி வந்து சொந்த நிறுவனம் தொடங்கி நடத்து கிறார். சீனர்கள் எப்போதுமே தனியாக தொழில் நடத்தவே விரும்புவர். அரசு வேலை தேடி அலைவது கடைசி கட்ட முன்னுரிமை தான்!
அவர் எங்களுக்கு அவரது அலுவல கத்தில் வரவேற்கும் முறையில் இரண்டு அருமையான நூல்களை நினைவுப் பரிசுகளாக அளித்தார். எங்களுக்குப் புத்தகம் மிகவும் பிடிக்கும் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார் போலும். இரண்டு அருமையான நூல்கள் (ஆங்கிலத்தில்தான்.)
1.  1.  Discover China - 100 interesting topics to feel China  சீனாவைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டிய 100 சுவை யான கட்டுரைகள் என்ற தலைப்புள்ள ஒரு புத்தகம்.
2. மற்றொன்று, சீனாவின் மிகப் பெரிய முற்போக்கு எழுத்தாளர், கவிஞர், கல்வி வல்லுநர், சிறந்த மொழியாக்க வல்லுநர், வாழ்வியல் பற்றி சுவையாக எழுதும் முதுபெரும் சிந்தனையாளர் லின் யுடாங் (Lin Yutang) எழுதிய Wisdom of China சீனத்தின் அறிவுச் செறிவு - ஓர் தொகுப்பு என்ற நூலையும் தந்தார்.
பசித்தவனுக்கு சுவையான உணவைப் பரிமாறியது போல இருந்தது எங்களுக்கு. நான் அங்கேயே பிரித்துப் படிக்கத் துவங்கினேன்.
அன்றிரவே ஓட்டலிலும் காலை விமானப் பயணத்திலும் 100 கட்டுரைகளில் பெரிதும் படித்துத் தகவல்களை அறிந்து கொண்டேன்.
தத்துவங்களில் சீனப் பெருஞ் சுவர் போல, சீனா ஒரு பழஞ் செல்வங்களை, கருத்தாக்கங்களைத் தன்னகத்தே வரலாறாக ஆக்கிக் கொண்ட ஒரு பெரும் நாடு - மக்கள் தொகையில் 170 கோடி உள்ள நாடு (இப்போது ஒரு குழந்தை மட்டுமே வாழ்விணையர்கள் வரி இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.‘One child Policy’  என்பது அமுலில் உள்ளது - சில குடும்பங்கள் சில நிபந்தனைகளுக்கு உட் பட்டு 2 ஆவது குழந் தையைப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வசதி யும் செய்யப்பட்டுள்ளது.)
அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளிலோ - மக்கள் சீனக் குடிஅரசு செய்துள்ள மகத்தான புரட்சியை ஒரே சொல்லில் வர்ணிக்க வேண்டுமா னால் பிரம்மாண்டம் என்றே சொல்லலாம்! எல்லாம் Mega Project  தான்! (14 வரிசை ஒரு சாலையில் என்றால் வியப்பாக உள்ளதல்லவா?) தத்துவத்தில், உறவு முறைகளில் கூட சீனர்கள் இந்த பூவுலகில் நிலவும் வாழ்க்கை, இயற்கையை ஒட்டியே அமைந் துள்ளது என்பதை விளக்கும் வகையில், யுன்-யாங் “Yun - Yang  என்று இணைந்த இரு சொற்களில் அடக்கிவிட் டனர்!
இந்த யுன்-யாங் தத்துவம் மிகவும் பிரபலமானதாகும்! இச்சொற்களின் மூலப் பொருள் என்னவென்றால் மலையின் சாய்வு நிறைந்த பகுதி யுன். அதில் வெளிச்சம் அதிகம் இராது. - நிழல் - இருட்டு இருக்கும் - யாங் என்றால் சூரிய வெளிச்சம் படும் பகுதி - சீனர்களின் வியாக்கியானத்தில் - அல்லது கருத்தில் - யுன் என்பது மலையின் வடக்கு, நீரின் தெற்குப் பகுதி - யான் என்பது  அதற்கு நேர் எதிராக மலையின் தெற்குப் பகுதி, நீரின் வடக்குப் பகுதி - பல புராதன சீன நகரங்களின் பெயரே கூட இந்த அடிப்படையில்தான் அமைந்துள்ளது. லோயுவான் சிட்டி என்பது ஆறு  யுவாய் ஆறு மற்றொரு பகுதி.
இயற்கையை ஒட்டி, சூழ்நிலைகள் அமையும்போது, இந்த இரண்டும் இணைந்து வரும் என்பது சீன தத்துவப் பேருண்மையாம்.
எடுத்துக்காட்டாக, வானம் - பூமி, பகல்-இரவு, நீரும் - நெருப்பும், ஆக்கமும் - எதிர்மறையும், ஆணும் - பெண்ணும் (இப்படி) இன்பம் -துன்பம் உட்பட ஒரே வாழ்க்கையின் இரண்டு இணை கோடுகள் என்ற விளக்கம் தரும்.
பொதுவாக யான் என்பது சக்தி (energy) பொருள்களைக் குறிக்கும்! யுன் என்பது குறைவான அளவுக்கு கீழே !
பிரதானமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இருட்டில் உள்ளவர்கள், துன்பத்தை அனுபவிப்பவர் கள் துவண்டுவிட வேண்டாம். நம்பிக்கை இழந்து மனம் உடைந்துவிடவேண்டாம். வெளிச்சம் - விடியல் - தொடரும். அது இயற்கையின் தத்துவம். இன்பம் வந்து கதவு திறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் என்பதே!
இது வாழ்வில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் அல்லவா? எந்த துன்பம், தொல்லை, துயரம் தொடர்ந்திடினும் மனந் தளராமல், தடைக் கற்களைத் தாண்டும் தடந்தோள் வீரர்களாகவும் , வீராங்கனைகளாகவுமே வாழ்வோம்!

இது ஒரு மோ(ச)டி அரசு!


செப்டம்பர் 17 முதல் மூன்று நாள்கள் உண்ணா விரதம் இருந்தார் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி.
இதற்கு 60 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளதாம். இந்த செலவு கட்சி நிதியிலிருந்தா? சொந்தப் பணத்தில் இருந்தா?
அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. எல்லாம் அரசுப் பணத்தில் இருந்துதான்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரஜாபதி, ஷா என்னும் இருவர் விண்ணப்பம் போட்டனர்.
பதில் அளித்ததா நேர்மை என்னும் சுத்த நெய்யில் பொரிக்கப்பட்ட மோ(ச)டி அரசு?
அதுதான் இல்லை. உண்ணாவிரதத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதால் இதுபற்றித் தகவல் தெரிவிக்க முடியாதாம்.
எப்படி இருக்கிறது?
பல துறைகள் ஈடுபட்டாலும் எல்லாம் அரசு செலவுதானே?
அதனைத் தெரிவிக்கவேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம்?
இதில் ஒரு உண்மை - கோணிப் பைக்குள்ளி ருக்கும் பூனை வெளியில் வந்துவிட்டது. குஜராத் முதலமைச்சர் மோடி இருந்த உண்ணாவிரதத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பின்னணியில் இருந்தனர் - அரசு துறைகளின் நிதி, தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
பா.ஜ.க.வுக்குள் நடக்கும் உள் கட்சிப் போராட் டத்துக்கு - அரசின் நிதி பயன்படுத்தப்படலாமா? அதிகார மீறல் மட்டுமல்ல; அதிகாரத்தைப் பயன் படுத்தி அரசு நிதி அத்துமீறி செலவழிக்கப் பட்டுள்ளது - இது ஒரு வகையில் ஊழலைவிட மோசமான செயலாகும்.
மாநிலங்களில் நடக்கும் ஊழல்பற்றி விசாரணை நடத்தும் லோக் அயுக்தா என்ற அமைப்பு குஜராத் மாநிலத்தில் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளதற்கு என்ன பொருள்?
அதற்கான நீதிபதியின் பதவி பல ஆண்டுகள் காலியாக வைக்கப்பட்டதன் பின்னணி என்ன? குஜராத் பி.ஜே.பி. அரசு ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மை கொஞ்சி விளையாடும் ஒன்றாக இருப்பது உண்மையானால், லோக் அயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமித்திருக்க வேண்டுமே. மடியில் கனமிருப்பதால் தானே இந்தப் பயத்திற்குக் காரணம்?
நீதிபதி பதவி காலியாக இருந்த நிலையில் ஆளுநர் நீதிபதி ஒருவரை நியமனம் செய்தவுடன் பூமிக்கும், வானுக்கும் தாவிக் குதித்தது ஏன்? திடீரென்று மாநில சுயாட்சி உணர்வு பீறிட்டுக் கிளம்பிவிட்டதோ!
மாநிலங்களே கூடாது ஒரே ஆட்சி - ஒற்றையாட்சி என்பதுதானே பி.ஜே.பி.யின் கொள்கை? தங்களுக்கு வசதி குறைவு என்றால் மாநில சுயாட்சி முழக்கமோ!
அகில இந்திய நுழைவுத் தேர்வு உள்பட மாநில ஆட்சியின் கொள்கை முடிவில் மத்திய அரசு தலையிடுகிறதே - அப்பொழுதெல்லாம் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களிலிருந்து எதிர்ப்புக் குரல் வருவதில்லையே ஏன்?
தகவல் அறியும் உரிமையை குடிமக்களுக்கு வழங்குவதில்கூட குஜராத் அரசுக்கு விருப்பம் இல்லை என்பது அம்பலமாகிவிட்டதே!
இவர்கள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத் தங்கள் செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்த போது கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்; எதிலும் இரட்டை வேடம் என்பது பி.ஜே.பி.,க்குக் கைவந்த கலையாகும்.
கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநில முதலமைச்சர் மோடி அவசர அவசரமாக உயர்மட்ட அதிகாரிகளைக் கூட்டி பிறப்பித்த கட்டளை பிரச்சினையாக வெடித்துள்ளது. முசுலிம் மக்களுக்கு எதிரான இந்துக்களின் கோபம் - செயல்பாடுகளில் தலையிடவேண்டாம் என்று முதலமைச்சர் மோடி கட்டளையிட்டதை அக்கூட் டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உயரதிகாரி சஞ்சய் பட் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது - மோடி அரசின் பச்சைப் பாசிச நடவடிக்கை யல்லவா!
மோசமான - மக்கள் விரோத அரசு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் அது குஜராத்தில் நடைபெற்றுவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசுதான் என்பதில் அய்யம் இல்லை!
ஆனால், நம் நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் தலைகீழாகத் திரிப்பதை மக்கள் அறியவேண்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...