Tuesday, December 15, 2015

கோவிலுக்குள் செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் என்னை தடுத்தனர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு


புதுடில்லி, டிச.15 அண்மையில் அசாம் சென்றிருந்த போது பார் பேதா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் என்னை செல்லவிடாமல் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் தடுத்ததாகவும், இது தான் பாரதீய ஜனதாவின் அரசியல்  பாணி என்றும் இது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று எனவும் காங்கிரஸ் துணைத்தலை வர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார். 
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நான் அசாம் மாநிலத்திற்கு சென்றிருந்த பொழுது, அங்குள்ள பர்பேதா மாவட்டத்தில் இருக்கும் கோவில் ஒன்றுக்கு செல்ல விரும்பினேன். ஆனால், கோவில் இருந்த ஆர்.எஸ். எஸ். தொண்டர்கள் என்னை கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுத் தனர். பாரதீய ஜனதா செயல்படும் விதம் இது தான். 
என்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார்? எனவும் மிகவும் ஆவேச மாக ராகுல் காந்தி பேசினார். கடந்த வெள் ளிக்கிழமை பர்பதா மாவட்டத்திற்கு சென்று இருந்த ராகுல் காந்தி, இந்த பிரச்சினைக்கு பிறகு  ஆர்.எஸ்.எஸ் தொண் டர்கள் கோவிலில் இருந்து வெளியேறிய பின்னர் அன்றைய தினம் மாலை கோவிலுக்கு சென்று வழி பட்டார். 
அசாம் முதல் அமைச்சர் தருண் கோகாய் நேற்று இவ்விவ காரம் குறித்து பேசும் போது, ராகுல் காந்தியை பர்பேதே கோவிலுக்குள் செல்லவிடாமல் தடுக்க பாஜகவும் ஆர்.எஸ். எஸும் சதியில் ஈடுபட் டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மாநகராட்சியும், அரசும் செய்யாததை கழகம் செய்தது!


மாநகராட்சியும், அரசும் செய்யாததை கழகம் செய்தது!
அமைந்தகரையில் கழகத் தோழர்களின் தூயத் தூய்மைப்பணிகள்!
நன்றிப் பெருக்கும்! மக்களின் வாழ்த்தும்!!
சென்னை. டிச. 15_ கடந்த 1_ஆம் தேதியிலிருந்து அடுப்பு பற்ற வைக்காத குடும்பங்கள் ஏராளமாக இங்கு இருக்கிறார்கள் என்று அமைந்தகரை கூவம் நதிக்கரையோரம் உள்ள மஞ்சக்கொல்லை தெருவிலி ருக்கும் மக்கள் வேதனையோடு துப்புரவு பணி செய்ய நம் இயக்க தோழர்கள் சென்றிருந்தபோது கூறினர்.
தமிழர் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த வெள்ள நிவாரணப் பணிகள் மக்களின் தேவை கருதி அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று கொண்டேயிருக்கின்றன. முதலில் உடனடித் தேவையான உணவு கொடுக்கப்பட்டது. இதில் பெரியார் திடல், ஆவடி, மதுரவாயல் ஆகிய பகுதி களையும் சேர்த்து ஏறக்குறைய 60,000 மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி-யிலிருந்து தாம்பரம் பொழிச்சலூர், 
மல்லிகா நகர், குரோம்பேட்டை, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் மழை வெள்ளத்தால் குப்பையும், கூளமும், சாக்கடையோடு கலந்து சாலைகளே சகதி யாக மாறிப்போனதால் மக்கள் சொல்லொண்ணா மன உளச்சல்களுக்கு ஆளாகியுள்ளதால் எதையும்  செய்யும் மனத்திண்மை பெற்ற திராவிடக் கழகத் தோழர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இந்த துப்புரவு பணியிலும் இணைந்து ஈடுபட்டனர்.
கூவம் நதிக்கரை ஓரம்!
முதலில் கூவம் நதிக்கரையோரம் உள்ள அமைந்த கரையில் இப்பணியை தொடங்கலாம் என்று முடிவு செய்து முதல்தளம் முழுவதும் மூழ்கிய பகுதியான மஞ்சக்கொல்லை தெருவில் 13.12.2015 அன்று காலை 7 மணிக்கு 20 பேர் அடங்கிய குழு களமிறங்கியது.

மக்கள் மாநகராட்சி மீதும், அரசு மீதும் கடுமை யான கோபத்தில் இருப்பதை நாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போகும் போதெல் லாம் காண முடிந்தது. மஞ்சக் கொல்லை தெருவில் நசநசத்து கிடந்த குப்பைகள் மிகுந்த துர்நாற்றத்தை பரப்பிக் கொண்டிருந்தன. பல வீடுகளில் சாக்கடை அடைத்துக் கொண்டு இயற்கை உபாதைகளைக்கூட வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அந்தத் தெருவில் வசிக்கும் பெயிண்டிங் பணி செய்யும் கென்னடி என்பவர், டிசம்பர் 2ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்து விட்டனர், இந்த தெருவில் ஏழடி உயரம் வரை தண் ணீர் வந்து விட்டது; எங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கினோம். அங்கேயும் தண்ணீர் வந்து விட்டதாலும் அங்கிருந்தும் வெளியேறினோம், பள்ளிக்கூடங்கள் நிறைந்து விட்டதால், தெரியாத வர்கள் வீட்டில் எல்லாம் தங்கினோம். அந்த நேரத் தில் அரசுத்தரப்பில் இருந்து யாரும் வரவில்லை. தொண்டு நிறுவனங்கள், வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உதவி செய்தனர் என்று தன்னிரக்கத்தோடு கூறிவிட்டு, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு 5000 ரூபாய் போதுமானதல்ல என்று வேதனையை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இப்படி பலரும் நம்மிடம் புலம்பினார்கள். கென் னடி பாதிரியாராகவும் இருந்து வருகிறார். மக்களின் அனைத்து துயரங்களையும் கேட்டுக் கொண்ட தோழர்கள் முதலில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர் கூவம் நதியில் கலக்கும் வண்ணம் ஏற்கனவே இருந்து தூர்ந்து போன சிறு கால்வாயை தூர்வாரினர். அதைதொடர்ந்து சாலையோரம் நாற்றமடித்து இருந்த குப்பையை பாலிதீன் பைகளில் சேகரித்து மாநகராட்சி வண்டியை வரவழைத்து அவற்றை எடுத்துச் சென்று உரிய இடத்தில் கொட்டிவிட்டுத் திரும்பினர்.
மாநகராட்சி செய்யாததை...
மாநகராட்சி செய்யாத பணியை, காசாவது கொடுக் கிறோம் செய்யுங்கள் என்று மக்கள் சொல்லியும், மாநகராட்சி செய்யாத பணியை தேர்தலின் போது மட்டும் வந்ததாக மக்களால் சொல்லப்படும் 102ஆம் வார்டின் அதிமுக கவுன்சிலர் ஜீவா கவனம் செலுத் தாத அந்தப்பணியை பெரியார் திடலில் இருந்தும், வேறுவேறு பகுதிகளில் இருந்தும் வந்திறங்கும் தன்னார்வ தொண்டர்கள் பொறுப்போடு அம்மக் களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே பணியைச் செய்ததால், கென்னடி போன்ற சிலர் வரிந்து கட்டிக் கொண்டு நம்மோடு களத்தில் இறங்கி வேலை செய்தனர். குப்பை பைகள் வேகவேகமாக இடம் பெயர்ந்தன. இப்பணிகளை ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் ஆளாளுக்கு வீடுகளில் தேனீர் தயாரித்தும் பிஸ்கட்டுகளை எடுத்து வந்தும் குடியுங்கள்! குடியுங்கள்! என்று அன்போடு வேண்டுகோள் வைத்தனர்.
12ஆம் தேதியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து போர்வை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் நமது தோழர்களோடு சரளமாக பேசத் தொடங்கிய பிறகு, மாநகராட்சி தங்களை எப்படி யெல்லாம் கேட்பாரற்று விட்டுவிட்டது என்பதைச் சொல்லி தங்கள் மனதிலிருக்கும் பாரத்தை இறக்கி வைத்தனர். இவர் இதையெல்லாம் சொல்லியபோது சொல்ல வேண்டாம் என்று அச்சத்துடன் பேசியவர் களைத் சிலர் தடுத்தனர். அவர்களோ துணிச்சலுடன் என்ன இப்போ என்று தடுத்தவர்களை மடக்கிவிட்டு தொடர்ந்து தம்முடைய வேதனைகளை நம்மிடம் கூறினர்.
குப்பையையெல்லாம் இடம் மாற்றிய பிறகு அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் தூவிவிடப்பட்டது. மக்கள் மிகுந்த நன்றிப்பெருக்கோடு நம் தோழர்களை வழியனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு மஞ்சக் கொல்லையை விட மிகமிக மோசமாக இருந்த கதிரவன் காலனிக்குச் சென்றனர். நம் தோழர்களின் குழு, அங்கு சாலையே சாக்கடை கலந்த சகதியாக கணுக்கால் அளவு படர்ந்து இருந்தது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. நம் தோழர்கள் கொஞ்சமும் சளைக்கவில்லை. அதற்குரிய உபகரணங் களை கைகளிலும் கால்களிலும் அணிந்திருந்த தோழர்கள் களத்தில் உற்சாகமாக இறங்கினர்.
மக்களும் எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்து பார்த்து சுய முயற்சியற்றுப் போயிருந்தனர். வெள்ளம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னமும் மீளாமலேயே இருந்தனர். நகராட்சி வராதா? அரசு வராதா? வேறு யாராவது வரமாட்டார்களா? என்று ஏக்கக்தோடு எதிர்பார்த்து காத்திருக்கத்தான் முடிந்ததே தவிர யார் வந்தாலும் வராவிட்டாலும் முடிந்தவரையில் நாம் இருக்கும் இடத்தை நாம் தூய்மை செய்து கொள்வோம் என்று சிந்திக்கவும் திராணியற்றுப்போயிருந்தனர். அந்த தன்னம்பிக்கை இழப்பை யாராவது தூண்டி விட்டால் அவர்கள் வீறுகொண்டு எழுந்து விடுவார்கள் என்பதை மஞ்சக்கொல்லை தெருவைப் போல பலமடங்கு மக்களின் தன்னிரக்கம் விடைபெற்று தன்னம்பிக்கை கொழுந்துவிட்டு எரிந்து, ச்சே! எங்கிருந்தோ வந்து செய்யறாங்க! நாம் சும்மா இருப்பதா? என்று ஆண்கள், பெண்கள் என்று தோழர்களுடன் களத்தில் இறங்கி விட்டனர்.
சகதியும் சாக்கடையும்
கால்வாயில் தேங்கியிருந்த சகதியும், சாக்கடையும் அள்ளி சின்னச்சின்ன வாளிகளில் ஊற்றப்பட்டு, அமைந்தகரை கழகத்தோழர் தளபதி பாண்டியனால் ஏற்பாடு செய்யப்பட்ட தள்ளு வண்டிகளில் கொட்டி வெகு தூரம் சென்று நம் தோழர்களும் கொட்டி விட்டு வந்தனர். தோழர்களும், தன்னார்வத் தொண் டர்களுக்கும் பழக்கம் இல்லாத பணியாதலால் சிலருக்கு கைகளில், கால்களில் காயம்பட்டு இரத்தம் வந்தது. அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக் கப்பட்டது. மக்களின் முகங்களில் தெரிந்த நம்பிக்கை கீற்று தோழர்களின் உற்சாகத்தை பலமடங்காக்கின. இந்த மக்கள் தொண்டில் நமக்கு கிடைத்த உற்சா கத்தால் பல மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய பணியை சில மணி நேரத்திலேயே முடிக்க வைத்து விட்டது. இது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் குடியி ருக்கும் பகுதி.
பணிநிமித்தமாக லக்னோ சென்று திரும்பியிருந்த புருசோத்தமராஜ், நம்மோடு களத்தில் இறங்கி பணிபுரிந்து கொண்டே, மாநகராட்சியின் மீதும், அரசின் மீதும் தனக்குள்ள காட்டத்தை, ஓட்டு போட்டவன் நடுத்தெருவில்? ஓட்டு வங்கியவன் நான் கடுக்கு மாளிகையில் என்று சொல்லி தமது கோபத்தை காட்டிக்கொண்டார். இவர் மருத்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிபவர். நம்மோடு பணியாற்றிய ஆட்டோ ஓட்டுகிற சலீம் பாஷா நன்றிப் பெருக்கு டன், ஒரு வாரமே இப்படியேதான் இருந்தது. வேற யாரும் வரலே. நீங்கதான் வந்தீங்க என்று கண்ணீ ருடன் வாழ்த்தினார்.
இதற்கிடையில் அங்கு வந்த கார்ப்பரேசன் மேஸ் திரியை மக்கள் கேள்விக் கனைகளால் துளைக்க அவர் களோ, உங்களுக்கு எவ்வளவு செஞ்சாலும் போதாது என்று கோபத்தோடு கூறிவிட்டு போய்விட்டார், அப்படி என்ன செய்து விட்டீர்கள் என்றனர் மக்கள்.
கதிரவன் காலனியில் சாக்கடை அள்ளும் பணி நடந்து கொண்டிருக்க, தோழர்கள் சிலர் ஒவ்வொரு வருக்கும் முன்னால் உள்ள குப்பைகளை பாலிதின் பைகளில் சேகரித்து தெருவோரங்களில் வைத்தனர். மக்களும் வீட்டினுள் உள்ள குப்பைகளையும் சேகரித்து வந்து அதில் போட்டனர். 
பிளீச்சிங் பவுடர் தூவிய பிறகு அங்குள்ள மக்களுக்கு தனியாக தேவையான அளவிற்கு பிளீச்சிங் பவுடர் கொடுத்து விட்டு அவர்களின் ரொம்ப நன்றிங்க! ரொம்ப நன்றிங்க! என்று நமக்கு அளித்த நெஞ்சம் நிறைந்த நன்றிகளை பெற்றுக் கொண்டு திரும்புகிற வழியில் இருந்த குப்பைகளையெல்லாம் பைகளில் சேகரித்துத் கொண்டே வந்ததை பார்த்த மக்கள் பலரும் பாராட்டினர். குறிப்பாக பள்ளிக்களுக்கே போகாத ரீட்டா என்ற பெண் தோழர்களின் பணியைப் பாராட்டி ஆங்கிலத்தில் பேசி நம்மை அசத்தினார். எப்படி வர்றாங்க பாரு! நம்ம வீட்டு பசங்கக் கூட இந்த மாதிரி செய்ய மாட்டாங்க என்றெல்லாம் கூறி தோழர்களின் பணியை வியந்து போற்றினர்.
பெரியார் பற்றி குமணன் சொன்னவை
முன்னதாக தூய்மை செய்த மஞ்சக்கொல்லைத் தெருவில் நமது பணிகளை பாராட்டி பேசிய குமணன் என்பவர் 5 ஆண்டுகளில் இங்கு கவுன்சிலர் ஒரே ஒரு முறைதான் வந்தார் என்ற வழக்கமான பல்லவியைப் பாடிவிட்டு, பெரியாரைப் பற்றியும், அவர்தம் புத்தகங்களைப் பற்றியும், முரளீஸ்கபே போராட்டம் பற்றியும், பார்ப்பனர், பார்ப்பனரல் லாதாரின் போராட்டங்கள் பற்றியும் பேசி நம்மை அசத்தினர்.
இந்தப் துப்புரவுப் பணியில் பெரியார் திடல் சுரேஷ், உடுமலை வடிவேல், தீபிகா, இசையின்பன், பசும்பொன், கலைமதி, சீர்த்தி (மறைந்த இறையன், திருமகள் செய்து கொண்டிருந்த கழகப் பணிகளின் தொடர்ச்சியானது போல இசை அண்ணன் குடும்பத் தினரும் இந்த துப்புரவுப் பணியில் தங்களை ஈடுபடுத் திக்கொண்டனர்) ரோஸ், பழனிகுமார் ரேவந்த்குமார், தமீம், சரண்யா, தாமு, சிவா, பிரசாந்த், சல்மா, பிரேம்ஷா, விஜய், மோகன் ஆகியோர் அடங்கிய குழுவை பிரின்சு என்னாரெஸ் பெரியார் ஒருங்கி ணைத்தும் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர். தளபதி பாண்டியன் வழிகாட்டியும் சிறப்பித்தனர்.
மேற்பட்ட 20 பேரடங்கிய குழுவோடு ஒன்றி ணைந்து மஞ்சள் கொல்லை பாதிரியார் கென்னடி, மதன், மோகன், தண்டபாணி ஆகியோரும் கதிரவன் காலனியைச் சேர்ந்த சலீம்பாஷா, தேன்மொழி, மசூதா, தேவி, குமார், வினோத், சசி, ஹசீனா, பர் ஹானா, இலியாஸ், போன்றோரும் பணி செய்தனர். மேற்கண்ட பணிகளுக்கு தளபதி பாண்டியனின் இல்லத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
பணிகள் தொடரும்
மக்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும் இந்தத் தூய்மை பணி மற்ற நிவாரணப் பணிகளோடு மக்களுக்கு தேவை இருக்கிற வரையிலும் தொடரும்.
இந்த துப்புரவுப் பணியில் நாம் ஈடுபட்டிருந்ததை முகநூலில் பார்த்த தோழர்கள் பலர் நம்மிடம் எங்களை ஏன் கூட்டிக்கொண்டு போகவில்லை என் றும், அடுத்தமுறை நாங்களும் இந்தப்பணிக்கு வருவோம் என்று உரிமையோடு கூறியது நம் கழகத்தின் மனித நேயப் பணிக்கு கட்டியம் கூறியது போல இருந்தது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அழகிய சென்னையை உருவாக்கலாம்



விடுதலை நாளிதழில்  2015 ஜூன் மாதம் உலக சுற்றுப்புறச்சூழல் நாள் குறித்த சிறப்புக் கட்டுரையில் எல்நினோ விளைவு பற்றி தெளிவாகக் குறிப்பிட்டு இந்திய நகரங்களுக்கு வரும் பாதிப்பு குறித்து அன்றே விரிவாக விளக்கப்பட்டு இருந்தது.    அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நல்ல மழை பெய்யும், 
வங்காள விரிகுடாக் கடலில் தொடர்ந்து ஏற்படும் காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் அதிக மழை பெறும், உள் மாவட்டங்களுக் கும் மழைப் பொழிவு இருக்கும். முக் கியமாக தலைநகர் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங் களான காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் போன்றவை எப்போதும் அதிக பாதிப்பைப் பெறும் மாவட்டங்களாகும். சென்னை மாநகரைப் பொறுத்த வரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ந்து மழைவெள்ளப் பாதிப்பின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டு இருக்கிறது.
சென்னை நகரின் பதிவு களைக் காணும் போது, முதல் முதலாக  1943 ஆம் ஆண்டு கடுமையான வெள்ளப் பாதிப்புகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் பிறகு, 1950, 1957, 1961, 1962, 1978, 1985, 2002,  2005, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் வெள்ள பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012 நீலம் புயலின் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு இரண்டு ஆண்டுகள் சென்னை மழைப்பொழிவைப் பெறவில்லை. 2015-ஆம் ஆண்டு கோடையில் இந்தியா, இலங்கை, 
உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் ஏற்பட்ட கடுமையான வெப்பமே மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பிற்கு அச்சாரமிட்டு விட்டது, ஒன்று கடுமை யான வறட்சி அல்லது கடுமையான மழைவெள்ளம் இரண்டில் ஏதாவது ஒன்று நிகழ்வது உறுதியாகிவிட்டது. மழைக்காலத்தில் புயலுடன் கூடிய மழை ஏற்பட்டால் கோடைகாலத்தில் கடுமையான வறட்சி என்பது உறுதி யாகியுள்ளது.  சென்னையில் மழை பெய்து வெள்ளம் வரும் போதெல்லாம் செம் பரம்பாக்கம், புழல், 
வீராணம் உள் ளிட்ட  சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்து தண்ணீர் வீணாக கடலில் கலப்பது ஆண் டாண்டு காலமாக சென்னை நகர மக்கள் பார்த்து வந்த தொடர் விளைவுகள். அதே போல் கோடைக் காலம் என்ற உடனேயே ஆந்திர மாநிலம், கிருஷ்ணா ஆற்றிலிருந்து நீர் கேட்டு கையேந்தி நிற்பதும் தொடர் கதையாக உள்ளது.  தீவுக்கூட்டங்கள் எப்படி மும்பை நகரமாகியதோ அதேபோல் நன்னீர் ஏரிகள் சூழ்ந்த நகரமாக சென்னை இருந்தது. 
இயற்கை எப்போதும் தன்னுடைய பாதையை சீராக அமைத்து முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அது படைப்புத்தூண் என்ற ஒளிர்முகில் கூட்டத்தில்  ஞாயிறு பிறந்தது முதல் இன்று பூமி என்ற ஒன்று உயிரோட்டம் நிறைந்து காணப்படுவது வரை தொடர்கிறது. இயற்கையின் ஆற்றல் முன்பு எந்த ஒரு செயற்கை ஆற்றலும் எதிர்த்து நிற்க முடியாது, அப்படி நிற்க முயன் றால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும். ஆனால் அந்த இயற் கையை, சிதைக்காமல் ஆக்கத்திற்குப் பயன்படுத்தலாம். இதைத்தான் அய்ரோப்பிய நாடுகளில் உள்ள பல நகரங்கள் மற்றும் தாய்லாந்தின் பாங்காக் நகரமும் செய்துள்ளது.
ஏரிகள்
சென்னையைச் சுற்றி 1800-ஆம் ஆண்டு வாக்கில் 700-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. மேலும் நூற்றுக்கணக் கான சிறிய குளம் மற்றும் கண்மாய்கள் (நீர்த்தேக்கங்கள்) இருந்தன. பருவ காலத் தில் கிடைக்கும். மழை நீர், ஏரிகள் மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களில் தங்கிவிடும். அதில் 1. செம்பரம்பாக்கம், 2.பூண்டி, 3. சோழவரம், 4. புழல், 5. வியாசர்பாடி ஏரி, 6. வேளச்சேரி ஏரி, 7.ஆதம்பாக்கம் ஏரி, 8. மாதவரம் ஏரி 9.விருகம்பாக்கம் ஏரி, 10.வில்லிவாக்கம் ஏரி போன்றவைகள் இன்றும் உள்ளன.  பெரிய ஆறுகள் 1.ஆந்திராவில் இருந்து வரும் கொசஸ் தலை ஆறு சென்னை நகருக்குள் 17 கிமீ தூரம் ஓடுகிறது. 2. திருவள்ளூர் மாவட்டம், கேசாவரம் ஏரியில் இருந்து புறப்படும் கூவம் ஆறு சென்னைக்குள் 60 கிமீ தூரம் பயணிக் கிறது,
3. மாகாணியம் மலையம்பட்டு ஏரியில் இருந்து துள்ளியோடும் அடையாறு சென் னைக்குள் 40 கிமீ தூரம் பயணிக்கிறது.
இந்த ஆற்றுநீரை கடலுக்கு எடுத்துச் செல்லவும், நகரில் பல்வேறு சிறிய குளம் மற்றும் கண்மாய்களுக்கு ஆற்று நீரை  கொண்டு சேர்க்கவும் பல்வேறு நீர்வழித் தடங்கள் சென்னையில் இருந்தன. அவற்றில் இன்று இருப்பவை கால்வாய்
1. வடக்கு பக்கிங்காம் கால்வாய் எண் ணூரில் இருந்து துவங்கி வடக்கு கூவம் ஆறுவரை 58 கி மீ பயணிக்கிறது.
2. மத்திய பக்கிங்காம் கால்வாய்  தெற்கு கூவத்தில் துவங்கி அடையாறு வரை 7 கிமீ தூரம் நகருக்குள் பாய்கிறது.
3. தெற்கு பக்கிங்காம் கால்வாய் அடையாற்றில் துவங்கி மரக்காணம் வரை 108 கிமீ தூரம் பயணிக்கிறது.
4. ஓட்டேரி நல்லான் கால்வாய் வில்லி வாக்கம் ஏரியில் இருந்து வடக்கு பக்கிங் காம் கால்வாய் வரை 11 கிமீ சென்னை நகருக்குள் பயணிக்கிறது.
5. விருகம்பாக்கம் கால்வாய் விருகம் பாக்கத்தில் துவங்கி மத்திய கூவம் வரை 7 கிமீ தூரம் பாய்கிறது.
6. கொடுங்கையூர் கால்வாய் மாத வரம் ஏரியில் துவங்கி வடக்கு பக்கிங்காம் வரை நகருக்குள் 7 கிமீ தூரம் பாய்கிறது.
7. வீராங்கல் கால்வாய் ஆதம்பாக் கத்தில் இருந்து பள்ளிக்கரணை வரை 3 கிமீ வரை செல்கிறது.
8. காட்டன் கால்வாய் வியாசர்பாடி ஏரியிலிருந்து தொடங்கி  தண்டையார் பேட்டையில் வடக்கு பக்கிங்காம்  கால் வாய்வரை 7 கிமீ தூரம் பயணிக்கிறது.
9. வேளச்சேரி கால்வாய், வேளச்சேரி ஏரியில் இருந்து பள்ளிக்கரணை வரை 2.30 கிமீ நகருக்குள் ஓடுகிறது.
இந்தக் கால்வாய்கள் அனைத்தும் சென்னை மற்றும் புறநகரை  முழுமையாக இணைத்து பாய்ந்துகொண்டு இருக்கின் றன. இந்தக் கால்வாய்களுடன் 500-க்கும் மேற்பட்ட சிறிய கால்வாய்கள் இணைந் துள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியின் மொத்த பரப்பளவு 1600 கி.மீ சுற்றளவு தற்போது சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் புறநகர் மின் தொடர்வண்டி இணைப்பு ஏற்பட்டதால் எல்லை மாவட்டங்களும் சென்னையா கவே மாறிவிட்டன. ஒரு திரைப்படப் பாடலில் என்னவளம் இல்லை இந்த திருநாட்டில், 
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற வரிகளை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  அய்ரோப்பாவில் பல்வேறு நகரங்கள் இதே நடைமுறையைப் பின்பற்றி தங்கள் நகரங்களுக்குள் செல்லும் கால்வாய்களை உள்ளூர் நீர்வழிப் பயணத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் அந்த நாட்டின் சுற்றுலாவும் சிறந்து விளங்குகிறது.
முக்கியமாக வியன்னா, பெல்கிரேட்ஸ், ஆம்ஸ்டர்டாம், மாட்ரீட், ரோஸ்வீக் போன்ற நகரங்களைக் கூற லாம். மேலும் நார்வே ஓஸ்லோவில் ஆண்டுக்கு 7 மாதங்கள் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கும் கால்வாய்களைக் கூட, கோடைக் காலத்தில் நீர்வழித்தடமாக பயன்படுத்துகின்றனர்.  மேலே சொன்ன நகரங்கள் எல்லாம் பெரும்பாலும் செயற்கையான கால்வாய் களை உருவாக்கி நகரங்களின் பல்வேறு பகுதிகளை இணைத்துள்ளனர்.
பாங்காக் நகரமும், சென்னை நகரமும் ஒரே பருவநிலையைக் கொண்டதுதான் பாங்காக் நகருக்குள் சாவோ பரையா நதி பாய்கிறது. அந்த நகர நிர்வாகம் அந்த நதியை நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைச் சுற்றிச்செல்லும் கால்வாய் களாக மாற்றியதன் விளைவு, பாங்காக் நகர சுற்றுலாவில் அந்த நதிக்கால்வாய்ப் பயணமும் முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டாண்டு காலமாக ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தாய்லாந்து நல்ல மழையைப் பெறுகிறது.  பாங்காக் நகரத்தில் ஜூலை முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை கடுமையான மழை பொழிகிறது. ஆனால் அங்கு எந்த ஒரு இடத்திலும் மழைநீர் தேங்காது,
 காரணம் நகருக்குள் இருக்கும் கால்வாய்கள் அனைத்தும் மழை நீரை கொண்டுசென்று ஆற்றுடன் கலந்து விடுகின்றன. எளிமை யான தொழில்நுட்ப உதவியுடன் நகருக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் ஆற்று நீர் கடலில் கலந்துவிடுகிறது. சென்னை நகரில் உள்ள ஏரிகளை வலுப்படுத்தி சென்னை நகரத்தின் ரத்த நாளங்களைப் போல் இருக்கும் கால் வாய்களிலும் ஆற்றிலும் கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கடை மடை மதகு முறையைப் பயன்படுத்தி மழைக்காலங்களில் எவ்வளவு பெரிய பயமுறுத்தும் மழை வந்தாலும் அந்த நீரை சில மணிநேரங்களில் கடலில் சென்று கலக்கும் வகையில் கால்வாய்களை சீர் செய்யலாம், அதன் பிறகு ஆண்டு முழு வதும் கால்வாய்களில் தண்ணீர் இருப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
பயன்கள்
இதன் பயன்களைப் பட்டியலிட் டால் சென்னை சந்திக்கும் பல்வேறு சிக்கல்களை எளிதாக தீர்த்துவிடலாம் முக்கியமாக நகரில் குடிநீருக்கும் பஞ்சம் வராது. கால்வாய்ப் போக்கு வரத்தின் மூலம் வாகன நெரிசலை அறவே தவிர்க்கலாம்.
அதுமட்டுமா சென்னை நகருக்கு சுற்றுலா வருப வர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகும். இதன் மூலம் குறைந்த பட்சம் நேரடியாகவும், மறைமுகமாக வும் லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை கள் நடுத்தர மக்கள் பயனடைவார்கள். கால்வாய்க் கரைகளை தோட்டங் களாக்குவதன் மூலம் நகரின் கால நிலையில் இனிமையான மாற்றங்கள் வரும், நாம் குளுமையான பெங் களூரை எண்ணி ஏங்கிக்கொண்டு இருக்கும் காலம் மாறி பெங்களூரு மக்கள் சென்னையை எண்ணி ஏங்கும் நிலை வரும். 
பாஜக போன்ற கட்சிகள் எடுத்த எடுப்பிலேயே ஏழைகளை சென்னை நகரை விட்டு விரட்டவேண்டும் என்றும் அவர்கள் தான் சென்னை நகரின் வெள்ளபாதிப்பிறகு காரணம் என்று அறிக்கை விடுகிறது. சென்னை மட்டுமல்ல உலகின் பெரிய நகரங் களின் உருவாக்கத்திற்கு பின்புறம் அந்த ஏழைகளின் கடின உழைப்பு தான் உள்ளது என்பதை பணத் திமிரில் இருக்கும் கட்சிகள் மறந்து விடுகின் றன. இந்த ஏழைகளின் வாழ்வாதாரத் தையும் வசிப்பிடத்தையும் பல்வேறு வசதிகளுடன் மாற்றி சென்னை நகரை அழகான உயிரோட்டம் நிறைந்த சிங்காரச் சென்னையாக மாற்றும் திறன் இந்தக் கால்வாய்களுக்கு உண்டு.
இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யவோ, அல்லது அயல் நாட்டுப் பொறியியல் வல்லுநர்களுக்கு நமது வரிப்பணத்தை அள்ளித்தந்து யோசனை கேட்கவோ தேவை யில்லை. மெட்ரோ தொடர்வண்டிக் கான திட்டப்பணிகளுக்கு செலவழித்த தொகையில் சிறுபங்கை இந்தக் கால்வாய்சீரமைப்பிற்கு செலவழித் தால் போதும், மெட்ரோ தொடர் வண்டி திட்டப் பணியால் 90 விழுக் காடு வட இந்தியர்கள் தான் பயன் பெற்றனர், பெறுகின்றனர். 
ஆனால் இந்தக் கால்வாய் சீரமைப்புப் பணியை தொடங்கினால் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மக்களின் உழைப்பைப் பயன் படுத்தி நமது மக்களின் பொருளா தாரத்தை மேம்படுத்தலாமே? இதோ தேர்தல் வருகிறது, கண்டிப்பாக மழைவெள்ள பாதிப்பும் வரும்தேர்தலில் எதிரொலிக்கும். கால்வாய்களைச் சீர்செய்யாமல் சென்னையை மழைவெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியாது, கால்வாய்களைச் சீர் செய்து சென்னை நகர மேம்பாட்டிற்கு திட்டங்களைக் கொடுக்க வலியுறுத்துங்கள்.
வரும் நமது எதிர்காலத்தலைமுறையாவது அழகிய பசுமையான வாகனநெரிசல் இல்லாமல், விடுமுறைக்காலங்களில் நகரை சுற்றிவர குடும்பத்துடன் படகுச் சவாரி செய்ய வழிவகுப்போம். அதைவிட இனிமேல் மழை வெள் ளத்தால் அழிவில்லாமல் இதை விட அதிக மழை பொழிந்தாலும் அந்த மழைநீரை சேமித்து அழகிய சென்னை யின் பயன்பாட்டிற்குச் செலவழிப்போம். - சரவணா ராஜேந்திரன்

எதற்கும் எல்லைக் கோடு தேவை!


சுதந்திரம் வேண்டுமென்று விரும்பு கிறோம். நியாயந்தான், தேவைதான். ஆனால் அச்சுதந்திரம் ஓர் எல்லை யுடன் இருந்தால்தானே, மக்களுக்கும் சரி, தனி மனிதர்களுக்கும்  சரி அது பயன்படும்?
வறட்சி பற்றி வருத்தப்பட்டோம் சில வாரங்களுக்குமுன்.
மழை வராதா என்று ஏங்கினோம்! இன்று தமிழ்நாட்டில் பல மாவட் டங்கள், சென்னை துவங்கி குமரி வரை, மழை பெய்து பயிர்களையும், உயிர் களையும் நாசப்படுத்தும் கொடுமை கண்டு குமுறாத நெஞ்சங்களே இல்லை. காரணம்  என்ன? பல மடங்கு அதிகமான மழை - அதன் காரணமாக வெள்ளக்காடு - அதனால் ஏற்பட்ட சொல்லொணா இழப்பும் துயரமும், துன்பமும் - விளைவுகள்!
அளவோடு பெய்திருந்தால் வளமோடு பயிர்கள் செழிக்குமே. இது, ஓர் உதாரணத் திற்காகத்தான்! சாலைகளில் கார் ஓட்டும் நாம், எவ்வளவுதான் சாலைவரி கட்டினாலும், கார் புதிய கார் என்றாலும், சாலை சிமெண்ட் சாலை என்றாலும், அதி வேகமாக எல்லா இடங்களிலும் கார் ஓட்டும் சுதந்திரத்தை, கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாமல் பயன்படுத்த முடியுமா?
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிற்சில நேரங்களில் அவதிப்படுவோர், நோய் வந்தவுடன் அந்நோய் பற்றி அரைகுறை அறிவுடன் இனிமேல் நமக்கு வாழ்வே இல்லை என்று அச்சத்தின் உச்சிக்குச் சென்று, அதீதக் கற்பனையை, தம் இஷ்டம்போல் - எல்லையின்றி செலுத் தினால் அதுவே இறப்பில்கூட பல நோயாளிகளைக் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடுமே - இல்லையா?
அண்டை நாடுகளுக்கு இடையே போர் மேகம் குவிவதற்கு ஒருகாரணம் எல்லை தாண்டுவதுதானே!
எதற்கும் எல்லை வேண்டும் - கட்டுப்பாடுகள் தேவை.
காட்டாற்று வெள்ளத்தால் யாருக்கு, ஊருக்கு என்ன பயன்?
அதையே அணைக்கட்டித் தேக்கி, வெள்ளத்தடுப்பு காரணமாக (தடுப்பணை) பயனுறு வகையில் செய்தால் பொது நலம் - குடி மக்கள் வாழ்வு வசதிகள் பெருகுமே!
மனித வாழ்வில்கூட மனிதர்களுக்கு இயல்பாக உள்ள சுயநலம், ஓர் எல்லைக் குட்பட்டு இருந்தால் தனி மனிதர்கள்கூட நல்ல வகையில் ஒளி வீசும் பல நற்பணிகளுக்குச் சொந்தக்காரர்கள் ஆக முடியும்!
ஆனால் 100-க்கு 90 பேர்கள் எல்லை யற்ற சுயநலத்துடன்தான் தங்கள் வாழ்வை மட்டுமே கணக்குப் போட்டு காய் நகர்த்தும் எப்போதும் எதையோ எதிர்பார்த்த வாழ்வாகவே ஆக்கிக் கொண்டு எல்லை தெரியாத தொல்லைக்கு ஆளாகித் திண்டாடுகிறார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் குடும்ப வாழ்வின் சங்கிலித் தொடர் விலங்கு களை நாமே எப்படி மாட்டிக் கொள் ளுகிறோம் என்பதை நன்கு விளக்குவார்.
முதலில் திருமணம் - பிறகு பிள்ளை குட்டிபெறல், அதை வளர்க் கக் கவலை - அதற்கு படிப்பு, வேலை கவலை, (சுயநலத்தின் வெளிப் பாடுகள்) அதன்பின் அவர்களுக்குத் திருமணம் - குழந்தைப் பேறு என்று எல்லையற்ற தீய வட்டம் சுழன்று கொண்டே உள்ளதால் மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தையும், சுயமரியாதை யையும் இழந்து மாறி மாறி ஒரு சுழற்சி - சைக்கிள்போல நடப்பதால் அதில் சிக்கிச் சீரழிகிறார்கள்.
பறவைகளை ஒப்பிடுகையில் தாய்ப் பறவைகள் குஞ்சுகள் இறக்கை முளைக்கும் வரைதானே காப்பாற்று கின்றன. பிறகு அதற்காக சிபாரிசுக்காக  செல்லுகின்றனவா? ஆனால் மனிதர் கள்  அப்படியா? யோசியுங்கள்.
- கி.வீரமணி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை:
சட்ட விரோதமாக கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி! தமிழக முதல் அமைச்சர் எதிர் நடவடிக்கை எடுக்காதது- ஏன்?
குதிரை காணாமற் போனபின் லாயத்தை இழுத்துப்  பூட்டுவதில் பயனில்லை - அவசரம்- அவசியம்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2015/dec/05/a15.jpg

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு செயல்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
வேறு எந்த அணையும் இத்தனை முறை ஆய்வுப்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு வல்லுநர்களைக் கொண்ட 13 ஆய்வுகள் இதுவரை முல்லைப் பெரியாறு ஆணைமீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தனை ஆய்வுகளும் அணை மிக உறுதியாக உள்ளது என்று ஒருமித்த முடிவைக் கூறியுள்ளன.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இவை எல்லாவற்றிற்குப் பிறகு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் (5 நீதிபதிகள் கொண்ட அமர்வு) அணையில் 142 அடி உயரத்திற்கு நீர்த் தேக்கப்படலாம் என்பதை தெளி வாக  திட்டவட்டமாக  தீர்ப்பாகவே கூறி விட்டது.
இதற்குப் பிறகும் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோல, கேரள மாநில அரசு (அங்கு எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் இதே நிலைதான்) முல்லைப் பெரியாறு அணை பலகீனமாக உள்ளது. அணை உடைந்தால் இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கிப் போய் விடும் என்று ஒப்பாரி வைப்பது - எந்த வகையில் நியாயத்துக்கும், சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் உகந்தது?
142 அடி நீர் உயர்ந்தும் அணைக்கு ஆபத்து இல்லை
ஒரு நெருக்கடி இப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அண்மையில் பெய்த கடு மழையினால் முல்லைப் பெரியாறு அணை 142 அடி உயர நீரை எட்டிவிட்டது.
142 அடி நீரை எட்டினாலும் அணைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்பதை இயற்கையே நிரூபித்து விட்டது. 142 அடி நீரை தேக்கினால் அணைக்கு ஆபத்து, அணை உடையும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த கேரள அரசின் பொய்யழுகை - மாய்மாலம் - இதன் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது.
குற்ற உணர்வின் வெளிப்பாடு!
இந்த நிலையில் உளவியல் ரீதியாகக் குற்ற உணர்ச்சியோடுதான் அமைச்சரவையைக் கூட்டி, அதன் அடிப்படையில் பிரதமரையும் சந்தித்து, புதிய அணை ஒன்றைக் கட்ட ஆதரவு அளிக்கு மாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார் கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி.
செய்தியாளர்களிடம் கேரள முதல் அமைச்சர் உம்மன்சாண்டி என்ன பேசியுள்ளார்? முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
999 ஆண்டுகள் இந்த அணை உடையாமல் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா?
142 அடி வரை அணையில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம்  என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியுமா? (இதைவிட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை வேறு எந்த வகையில் கேலி செய்ய முடியுமோ!) என்றெல்லாம் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்; அதனை அடுத்து, பிரதமரையும் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமேதாவித்தனமோ!
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கடுமை யான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைச் சுட்டிக்காட்டி, அந்த நிலை கேரளாவிலும் நிகழ வேண்டுமா என்று வெகு, தந்திரமாக அதிமேதா வித்தனமாக கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எந்த அணையும் உடைந்து விட வில்லை. தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் ஏரிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தவறினை இத்துடன் இணைக்கக் கூடாது. சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும், கேரள அரசு இவ்வளவுத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழ்நாட்டின் இந்த உயிர் நாடிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு - முதல் அமைச்சர் இதுகுறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? தமிழ்நாட்டின்  நிலையை முன் வைக்காதது ஏன்?
தி.மு.க. தலைவர் உட்பட பல கட்சித்தலைவர் களும் இப்பிரச்சினை குறித்து உரத்த முறையிலே குரல் எழுப்பியும்கூட, தமிழ்நாடு அரசு நெடுந் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
கேரள முதல் அமைச்சர் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளார்; மத்திய அரசு இதில் எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெரிவிக்கப் பட வேண்டும். கேரள அரசை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொன்னாலும்கூட அதனை மதிக்கக் கிஞ்சிற்றும் தயாராக இல்லை என்பது யதார்த்தம்!

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகுமா மத்திய அரசு?
ஜஸ்டிஸ் கே.டி. தாமஸ் உச்சநீதிமன்ற நீதிபதி யாக இருந்தபோது - கேரள அரசின் அடாவடிப் போக்கால், முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதையும் பிரதமர் நினைத்து  பார்க்க வேண்டும்.  (இவ்வளவுக்கும் - அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரே!)
இதற்கு மேலும் அரசியல் காரணத்துக்காகவோ, வேறு காரணத்துக்காகவோ மத்திய அரசு வேறு மாதிரி நடந்து கொள்ளுமானால், அது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு இரையாக வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டி வரும்; அந்த விஷப் பரீட்சையை மத்திய அரசும், பிரதமரும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.  யாருக்கோ வந்த விருந்தா?
பிரமதரின் அலுவலக கதவைத் தட்டி திறக்கச் செய்து, கேரள அரசு சட்ட விரோத செயலுக்காக அழுத்தம் கொடுக்கும் நிலையில், சட்டத்தையும், நியாயத்தையும், நீதிமன்ற தீர்ப்பினையும் வலு வாகத் தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு யாருக்கோ வந்த விருந்து என்பதுபோல நடந்து கொள்வது - மிகப் பெரிய மக்கள் போராட்டத்துக்கு  வழி வகுத்து கொடுத்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து மக்கள் நலனுக்கு விரோதமாகவே தன் அணுகுமுறைகளை  வைத்துக் கொண்டி ருக்கும் தமிழ்நாடு அரசு - மக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள தன்மையில், இந்தப் பிரச்சினையில் காட்டும்  செயலின்மை மூலம் மக்கள் எதிர்ப்பு வெள்ளத்தில் மூழ்க நேரிடும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் சுட்டிக் காட்ட வேண்டியது எங்களின் கடமையாகும். குதிரை காணாமற் போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்? அவசரம் -  அவசியம்!
தமிழ்நாடு அரசு எழுந்து செயல்படட்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14.12.2015

இவற்றை இழக்கப் போகிறோமா?
முல்லைப் பெரியாறு
இந்த அணையின் உயரம்- 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம்  2,08,000 ஏக்கர்
தமிழகத்தில் 15 லட்சம் விவசாயிகள் பாசனத் திற்கும்,  60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
பயன்பெறும் மாவட்டங்கள் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், போன்ற மாவட் டங்கள் முழுமையாக முல்லைப்பெரியாறு அணையால் பயன் பெறுகின்றன.  விருது நகர், புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் சில பகுதிகள் முல்லை பெரியாறு அணையால் பயன்பெறுகின்றன.   2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 ஆவது முறையாக 142 அடி உயரம் தண்ணீர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.   142-அடி உயரம் தேக் கினால் அணை உடையும் அபாயம் என்ற கேரள அரசின் அழுகை பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இராணுவத்திலும் பார்ப்பன ஆதிக்கமா?


இராணுவத்தில் மதத்தைப் போதிக்கின்ற ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நியமனம் குறித்து விளம்பரம் வெளியாகியுள்ளது.
இராணுவம் என்பது முற்போக்குச் சிந்தனைக்கும், தன்னம்பிக்கைக்கும், அறிவியல் பகுத்தறிவுச் சிந் தனைக்கும் அதிக இடம் அளிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான துறையாகும். அத்தகைய துறையில் மூடநம்பிக்கை வித்துகளை விதைக்கும் எல்லாம் ஆண்டவன் செயல், நம் கையில் என்ன இருக்கிறது? என்று திண்ணைத் தூங்கி வேதாந்தங்களைக் கற்பிக்கும் மதம்பற்றிய வகுப்புகள், பயிற்சிகள் தேவையா?
மூடநம்பிக்கைதான், நம் நாட்டு வளர்ச்சிக்குத் தடை என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராம கிருஷ்ணன் பேசியதாகச் செய்தி வெளி வந்துள்ள இதே நாளில் இப்படி ஒரு செய்தி வருவது மிகப் பெரிய கெட்ட வாய்ப்பே!
எதிரி இராணுவம் தாக்க வரும் பொழுது எதிர்த்துத் தாக்கும் நேரம் இராகு காலம் என்று யோசித்தால் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பார்க்க வேண்டாமா?
இன்னும் சொல்லப் போனால், இராணுவத்தில் பணியாற்றுவோர் யார்  எந்த மதம்? எந்த ஜாதி என்பது தெரியாமலிருப்பதே நல்லது, இல்லையென்றால் இராணுவ வீரர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமை கூட துப்பாக்கிக் குண்டுகள்போல வெடித்துச் சிதறி விடும்.  இந்த அடிப்படை  கூடத் தெரியாமலா இருக் கிறது இந்திய இராணுவத் துறை?
இதிலும் என்ன கொடுமை தெரியுமா? இராணுவத் துறை வெளியிட்டுள்ள பணிகளுக்கான விளம்பரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது. இராணுவத்தில் பாடப் பிரிவுகளாக உள்ள 80,81, மற்றும் 85 ஆகிய பிரிவு களின்கீழ் மதத்தைப் போதிக்கின்ற பயிற்சி மய்யங் களின்மூலமாக நடத்தப்படுகின்ற மத போதனைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அவர்களுக்கான பணியாக உயிரிழப்பவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது, மருத்துவமனைகளில் நோய் வாய்ப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, மற்றும் அவர்கள் குணமடைவதற்காக பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துவது, தண்டனைக்குள்ளாகிய இராணுவத்தினரை (சிப்பாய்களை) பார்வையிட்டு சிறப்பு பிரார்த்தனைசெய்து அவர்கள் குழந்தை களுடன் மதப்பயிற்சி மேற்கொள்ளும் பிற பையன் களையும் வழிநடத்துவது, இராணுவ அலுவலர்கள், இராணுவ சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினரின் நலனுக்காகவும் மத வழிபாடுகளை, சிறப்புப் பூஜைகளை செய்வது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்திட வேண்டும்.
பணிவாய்ப்பு கோருபவர்கள் இணையத்தின் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். 1.12.2015 தொடங்கி 31.12.2015 முடிய விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
பண்டிட்டுகள்-74, கிராந்தி-4, பாதிரி- 2, கூர்கா பகுதிக்கான பண்டிட்- 1, மவுல்வி (ஷியா) லடாக் பகுதி-1, மகாயான புத்த பிக்கு-3 ஆகிய எண்ணிக்கைகளில் மத ஆசிரியர்கள் பணிக்கு எடுக்கப்படுகிறார்கள்.
தகுதி நிலைகள்: 1.1.2016 அன்று 27 வயது முதல் 34 வயதுக்குள் இருக்கவேண்டும். (1.1.1982 முதல் 1.1.1989க்குள் பிறந்தவர்கள்)
இராணுவப் பணிகளில் இருப்பவர்கள் விண்ணப் பித்திட 25 வயதுமுதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். (1.1.1982 முதல் 1.1.1991க்குள் பிறந்தவர்கள்)
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு இருக்க வேண்டும். கூடுதலாக மதத்தின்படி இருக்க வேண்டிய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
பண்டிட் - இந்து விண்ணப்பதாரர்கள் சமஸ்கிருதத் தில் மத்யமா அல்லது இந்தியில் பூஷண் அல்லது அதற்கு சமமாக பகுதி மொழியில் தகுதி (அல்லது) சமஸ்கிருதத்தில் மத்யமா அல்லது இந்தியில் பூஷண் இல்லாமல் இருந்தால், சமஸ்கிருதம் அல்லது இந்தியை முக்கியப் பாடமாகக் கொண்டு பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதுதான் அந்த விளம்பரம்.
இந்து மதம் தொடர்பாக இராணுவ வீரர்களுக்கு பாடம் நடத்துபவர்கள் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துபவர்கள் யார்? பண்டிட்டுகள் - அதாவது பார்ப்பனர்; பார்ப்பனர் ஆதிக்கம் அங்கு இங்கு எனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கு இந்த ஒரே ஒரு எடுத்துக்காட்டுப் போதுமே!
இவர்களுக்குச் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண் டுமாம். இந்தி  தெரிய வேண்டுமாம். ஆக சமஸ்கிருதம், இந்தி தெரியாதவர்களுக்கு இராணுவத்தில் இடம் இல்லை என்பது இதன் மூலம் விளங்கி விட்டதா இல்லையா?
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஒரு நிலை ஒரு கால கட்டத்தில் இருந்ததை இங்கு நினைத்துப் பார்ப்பது பொருத்தமாகும்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தந்தை பெரியார் குரல் கொடுக்க, அன்றைய நீதிக்கட்சியைச் சார்ந்த முதல் அமைச்சர் பனகல் அரசர் தான் அந்தத் தடையை உடைத்தெறிந்தார்.
இந்திய இராணுவத்தில் இந்தி, சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் மட்டும்தான் பணியாற்றுகிறார்களா? இவ்விரு மொழிகளையும் தெரியாதவர்களுக்கு மத போதனை தேவையில்லை என்று அரசு முடிவுக்கு வந்துவிட்டதா?
இன்னொன்று, இந்து மதம் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தான் ஏகக் குத்தகைக்காரர்களா?
இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்கிறார்களே, அந்த இந்து ராஜ்ஜியம் எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் அறியலாமே -  இராணுவத்தினருக்கு விஞ்ஞான சிந்தனைகள், பகுத்தறிவு மனப்பான்மையை ஊட்டுவதற்கு ஏற்பாடு  இல்லாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவார்களா? எங்கே பார்ப்போம்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை:
சட்ட விரோதமாக கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சி! தமிழக முதல் அமைச்சர் எதிர் நடவடிக்கை எடுக்காதது- ஏன்?
குதிரை காணாமற் போனபின் லாயத்தை இழுத்துப்  பூட்டுவதில் பயனில்லை - அவசரம்- அவசியம்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

http://viduthalai.in/images/stories/dailymagazine/2015/dec/05/a15.jpg

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரள அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு செயல்படாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
வேறு எந்த அணையும் இத்தனை முறை ஆய்வுப்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு வல்லுநர்களைக் கொண்ட 13 ஆய்வுகள் இதுவரை முல்லைப் பெரியாறு ஆணைமீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தனை ஆய்வுகளும் அணை மிக உறுதியாக உள்ளது என்று ஒருமித்த முடிவைக் கூறியுள்ளன.
உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
இவை எல்லாவற்றிற்குப் பிறகு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் (5 நீதிபதிகள் கொண்ட அமர்வு) அணையில் 142 அடி உயரத்திற்கு நீர்த் தேக்கப்படலாம் என்பதை தெளி வாக  திட்டவட்டமாக  தீர்ப்பாகவே கூறி விட்டது.
இதற்குப் பிறகும் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளைபோல, கேரள மாநில அரசு (அங்கு எந்தக் கட்சி ஆட்சி வந்தாலும் இதே நிலைதான்) முல்லைப் பெரியாறு அணை பலகீனமாக உள்ளது. அணை உடைந்தால் இடுக்கி மாவட்டமே நீரில் மூழ்கிப் போய் விடும் என்று ஒப்பாரி வைப்பது - எந்த வகையில் நியாயத்துக்கும், சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் உகந்தது?
142 அடி நீர் உயர்ந்தும் அணைக்கு ஆபத்து இல்லை
ஒரு நெருக்கடி இப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது. அண்மையில் பெய்த கடு மழையினால் முல்லைப் பெரியாறு அணை 142 அடி உயர நீரை எட்டிவிட்டது.
142 அடி நீரை எட்டினாலும் அணைக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்பதை இயற்கையே நிரூபித்து விட்டது. 142 அடி நீரை தேக்கினால் அணைக்கு ஆபத்து, அணை உடையும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்த கேரள அரசின் பொய்யழுகை - மாய்மாலம் - இதன் மூலம் தகர்க்கப்பட்டு விட்டது.
குற்ற உணர்வின் வெளிப்பாடு!
இந்த நிலையில் உளவியல் ரீதியாகக் குற்ற உணர்ச்சியோடுதான் அமைச்சரவையைக் கூட்டி, அதன் அடிப்படையில் பிரதமரையும் சந்தித்து, புதிய அணை ஒன்றைக் கட்ட ஆதரவு அளிக்கு மாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார் கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி.
செய்தியாளர்களிடம் கேரள முதல் அமைச்சர் உம்மன்சாண்டி என்ன பேசியுள்ளார்? முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
999 ஆண்டுகள் இந்த அணை உடையாமல் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா?
142 அடி வரை அணையில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம்  என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது என்பதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க முடியுமா? (இதைவிட உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை வேறு எந்த வகையில் கேலி செய்ய முடியுமோ!) என்றெல்லாம் செய்தியாளர் களிடம் கூறியுள்ளார்; அதனை அடுத்து, பிரதமரையும் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமேதாவித்தனமோ!
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த கடுமை யான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைச் சுட்டிக்காட்டி, அந்த நிலை கேரளாவிலும் நிகழ வேண்டுமா என்று வெகு, தந்திரமாக அதிமேதா வித்தனமாக கருத்தினைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எந்த அணையும் உடைந்து விட வில்லை. தமிழக அரசின் தவறான செயல்பாட்டால் ஏரிகள் கண்காணிப்பில் ஏற்பட்ட தவறினை இத்துடன் இணைக்கக் கூடாது. சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும், கேரள அரசு இவ்வளவுத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழ்நாட்டின் இந்த உயிர் நாடிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு - முதல் அமைச்சர் இதுகுறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? தமிழ்நாட்டின்  நிலையை முன் வைக்காதது ஏன்?
தி.மு.க. தலைவர் உட்பட பல கட்சித்தலைவர் களும் இப்பிரச்சினை குறித்து உரத்த முறையிலே குரல் எழுப்பியும்கூட, தமிழ்நாடு அரசு நெடுந் தூக்கத்தில் ஆழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?
கேரள முதல் அமைச்சர் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளார்; மத்திய அரசு இதில் எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்பது தெரிவிக்கப் பட வேண்டும். கேரள அரசை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொன்னாலும்கூட அதனை மதிக்கக் கிஞ்சிற்றும் தயாராக இல்லை என்பது யதார்த்தம்!

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகுமா மத்திய அரசு?
ஜஸ்டிஸ் கே.டி. தாமஸ் உச்சநீதிமன்ற நீதிபதி யாக இருந்தபோது - கேரள அரசின் அடாவடிப் போக்கால், முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் என்பதையும் பிரதமர் நினைத்து  பார்க்க வேண்டும்.  (இவ்வளவுக்கும் - அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரே!)
இதற்கு மேலும் அரசியல் காரணத்துக்காகவோ, வேறு காரணத்துக்காகவோ மத்திய அரசு வேறு மாதிரி நடந்து கொள்ளுமானால், அது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கு இரையாக வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டி வரும்; அந்த விஷப் பரீட்சையை மத்திய அரசும், பிரதமரும் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம்.  யாருக்கோ வந்த விருந்தா?
பிரமதரின் அலுவலக கதவைத் தட்டி திறக்கச் செய்து, கேரள அரசு சட்ட விரோத செயலுக்காக அழுத்தம் கொடுக்கும் நிலையில், சட்டத்தையும், நியாயத்தையும், நீதிமன்ற தீர்ப்பினையும் வலு வாகத் தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு யாருக்கோ வந்த விருந்து என்பதுபோல நடந்து கொள்வது - மிகப் பெரிய மக்கள் போராட்டத்துக்கு  வழி வகுத்து கொடுத்து விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து மக்கள் நலனுக்கு விரோதமாகவே தன் அணுகுமுறைகளை  வைத்துக் கொண்டி ருக்கும் தமிழ்நாடு அரசு - மக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள தன்மையில், இந்தப் பிரச்சினையில் காட்டும்  செயலின்மை மூலம் மக்கள் எதிர்ப்பு வெள்ளத்தில் மூழ்க நேரிடும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் சுட்டிக் காட்ட வேண்டியது எங்களின் கடமையாகும். குதிரை காணாமற் போனபின் லாயத்தை இழுத்துப் பூட்டி என்ன பயன்? அவசரம் -  அவசியம்!
தமிழ்நாடு அரசு எழுந்து செயல்படட்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14.12.2015

இவற்றை இழக்கப் போகிறோமா?
முல்லைப் பெரியாறு
இந்த அணையின் உயரம்- 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம்  2,08,000 ஏக்கர்
தமிழகத்தில் 15 லட்சம் விவசாயிகள் பாசனத் திற்கும்,  60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
பயன்பெறும் மாவட்டங்கள் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், போன்ற மாவட் டங்கள் முழுமையாக முல்லைப்பெரியாறு அணையால் பயன் பெறுகின்றன.  விருது நகர், புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் சில பகுதிகள் முல்லை பெரியாறு அணையால் பயன்பெறுகின்றன.   2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 2 ஆவது முறையாக 142 அடி உயரம் தண்ணீர் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.   142-அடி உயரம் தேக் கினால் அணை உடையும் அபாயம் என்ற கேரள அரசின் அழுகை பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...