Thursday, November 24, 2016

சாய்பாபா பி.சி.சர்க்கார்

இன்று புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள் (1926). அவர் மறைந்த பிறகு சீரடி சாய்பாபாவை நிமிர்த்தி நாடெங்கும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்துத்துவா வாதிகளுக்கு எப்படியும் ஒரு ‘பாபா’ தேவைப் படுவார்.
அற்புதங்களைச் சொன் னால்தானே  எந்த மதமும் பாமர மக்களின் நம்பிக்கைகளில் வேர்ப் பிடித்து நிற்கும்.
அந்த முறையில் மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா ஒரு மேஜிக் நிபுணர் - அதனை கடவுள் சக்தி தம்மிடம் இருக்கிறது என்பதற்குப் பயன் படுத்திக் கொண்டவர்.
திராவிடர் கழகத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் தோழர்கள் உண்டு. புட்டபர்த்தி சாய்பாபா செய்து காட்டும் அனைத்து மேஜிக் காட்சிகளையும் மக்கள்முன் செய்து காட்டி எப்படி அதனைச் செய்தோம் (தந்திரமாக) என்ப தையும் விளக்கிக் காட்டுவர்.
பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் - உலகப் புகழ் பெற்றவர். கடவுள் அவதாரம் என்றுகூறிமக்களைஏமாற்று வோரின் குறிப்பாக புட்ட பர்த்தி சாய்பாபாவின் ஏமாற்றுத் தனத்தை அம்பலப்படுத்திட விரும்பினார்.
சாய்பாபாவை சந்திக்க அனுமதி கேட்டார். பதில் இல்லை. என்ன செய்தார் தெரியுமா? அசாமைச் சேர்ந்த ஒரு பிரபல பணக்கார வியா பாரி என்றும், ஆஸ்துமா வியாதி தனக்கு இருக்கிறது; அதனை சாய்பாபா குணப் படுத்தவேண்டும் என்றும் கூறி சாய்பாபா ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டார்.
அசாமி மொழியில் பேசி னார்; கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் சாய்பாபாவுக்கு மொழி தெரிய வில்லை என்று முதற்கட்டமாக அம்பலப்படுத்தி விட்டார்.
தனது நோயைச் சொல்லி திருநீறு வரவழைத்துக் கொடுங்கள் என்று கேட்டார் பி.சி.சர்க்கார். அவர் அன்று கடைசி பக்தர் என்பதால், திருநீறு தீர்ந்துவிட்டது.
என்ன செய்தார் பாபா? ‘சூ மந்திரக்காளி’ போட்டு பலகாரத் தட்டிலிருந்து கொஞ்சம் சந்த னத்தை கொடுத்தார். (எல்லாம் அதிவேகமும், தந்திரமும்தான்) பி.சி.சர்க்கார் என்ன செய்தார், தன் கையை அசைத்து ஒரு  ரசகுல்லாவை வரவழைத்து சாய்பாபாவிடம் கொடுத்தார்! (பலகார தட்டிலிருந்துதான்) பாபாவுக்கும், சீடர்களுக்கும் கடும் அதிர்ச்சி! கூச்சல் போட் டார்கள்.
‘பாபா அவர்களே, நான் வேறு யாருமல்ல - மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் நான்தான்!’ என்றார். அவ்வளவுதான், பக்கத்திலிருந்த ஒரு வழியாக உள்ளே ஓடிவிட்டார் சாய்பாபா.
(ஆதாரம்: இம்பிரிண்ட் ஜூன் 1987)
பக்தியும், பாமரத்தனமும் உள்ளவரை எத்திப் பிழைப்ப வர்கள் இருக்கத்தானே செய் வார்கள்.
- மயிலாடன்

விவசாய வீக்கமும் - பணமுடக்கமும்!

19.11.2016 அன்று அரக்கோணத்தில் நடைபெற்ற காஞ்சி மண்டல திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநாட்டில் நவமணியாக (ஒன்பது) தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
சமூகநீதி தொடர்பான தீர்மானங்கள், வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு குறித்த தீர்மானம்; மத்திய பி.ஜே.பி. அரசின் இந்துத்துவா போக்கைக் கண்டிக்கும் தீர்மானம், கள்ளப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மத்திய அரசு அறிவிப்பினைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொது மக்கள் மிகப்பெரிய அளவுக்குப் பாதிப்புக்கு ஆளான போக்கு - இவற்றை மய்யப்படுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்பதைவிட மிகவும் கொடூர மாக வஞ்சிக்கப்படுகிறது என்றுதான் கூறவேண்டும்.
சட்டத்திற்கு விரோதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு மாநில அரசு செயல்படுகிறது என்பதைவிட மிகப்பெரிய கொடுமை - மத்திய அரசே, அந்த சட்ட விரோத செயலுக்குத் துணை போவதுதான். மத்திய அரசின் இந்த சட்ட விரோதப் போக்கு - இளைஞர்களை சட்ட மீறலுக்கு ஆவேசப்படுத்தும் என்பதை அறியாமல் ஓர் ஆபத்தான அரசியல் விளையாட்டை ஆடிப் பார்க்கிறது.
சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க மத்திய அரசே தூபம் போடுகிறது. பச்சைக் கொடியைக் காட்டுகிறது என்று சொன்னால், அது தவறாகாது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளி யானால், உடனடியாக அதனைச் செயல்படுத்த வேண்டும் என்கிற சாதாரண சட்ட நடைமுறையைக்கூட அறியாமலா ஒரு மத்திய அரசு இயங்கும்? இதற்குமுன் குஜராத் மாநில நதிநீர்ப் பிரச்சினையில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறையைக்கூட அறியாதவரா இந்தியப் பிரதமர்?
கருநாடக மாநில அரசும், மத்திய பி.ஜே.பி. அரசும் கைகோத்துக் கொண்டு சட்ட விரோதமாக செயல்படும் காரணத்தால், தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மடிகிறார்கள். இந்த மரணத்துக்குக் கண்டிப்பாக மத்திய அரசுதான் பொறுப்பேற்கவேண்டும். அரக்கோணம் மாநாட்டில் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ.10 லட்சம் அளிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் விவசாயி களின் தற்கொலை மரணத்திற்கு மத்திய அரசு முக்கியப் பொறுப்பாளி என்பதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கூடுதலாக நிதி உதவியை மத்திய அரசு செய்வதுதான் அறம் சார்ந்த கடமையாகும்.
தமிழ்நாட்டு அரசை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை! அரசு என்று ஒன்று இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. முதலமைச்சர் நோய் வாய்ப்பட்டார் என்றால், அரசு கூடவா நோய்வாய்ப்பட வேண்டும்?
யார் தற்கொலை செய்துகொண்டால் நமக்கென்ன? யாருக்கோ வந்தது என்ற போக்கில் மாநில அரசு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கதாகும்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாயியின் குடும்பத்தில் பட்டினி காரணமாக ஒரு குழந்தை இறந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் பிரச்சினையை எழுப்பியபோது, அப்படியென்றால், அந்த வீட்டில் இன்னும் குழந்தைகள் இருக்கின்றனவே - ஏன் சாகவில்லை என்று அ.தி.மு.க. முதலமைச்சர் சட்டப்பேரவையில் அன்று சொன்னதை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழக அரசு இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஒரு பக்கத்தில் விவசாயப் பாதிப்பு, இன்னொரு பக்கத் தில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பைத் தொடர்ந்து தவறான அணுகுமுறைகளால் பொதுமக்கள் அவதி! கடந்த ஆண்டு இதே காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் கடும் மழையால் பாதிக்கப்பட்டு பட்டினியின் எல்லையைத் தொட்டனர் என்றால், இவ்வாண்டு மத்திய பி.ஜே.பி. அரசின் பொருளாதாரக் கொள்கை என்னும் சுனாமியால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கிடக்கின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் அளித்து அதற்குரிய ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றுதானே மக்கள் நினைப்பார்கள். ஆனால், நடந்து கொண்டு இருப்பது என்ன? அரசாங்க உத்தரவாதமே நாணயமில்லாத வாக்குறுதி என்று ஆகிவிட்டதே!
கடந்த நான்கு நாள்களாக வங்கிகளில் பணம் இல்லை. ஏ.டி.எம்.கள் இயங்கவில்லை என்று சொன்னால், நாட்டு மக்கள் மத்திய அரசின்மீது நம்பிக்கை இல்லை என்ற நிலை உருவாகி விட்டது என்று கொள்ளலாமா?
நாடாளுமன்றத்தில்வாக்கெடுப்பின்மூலம்தான்நம் பிக்கை இல்லாத தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ஒரு நிலை. ஆனால், இன்றைய தினம் நாட்டு மக்கள் மத்தியில் மத்திய அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டதே!
இதன் நிலை எங்கே கொண்டு போய்விடும்? உச்சநீதி மன்றமே எச்சரித்துவிட்டதே! நாட்டில் கலவரம் உருவாகும் என்று கூறிவிட்டதே!
இதற்குமேல் ஓர் ஆட்சிக்கு என்ன சூடு வேண்டும்? அதையும் தூசி போல் துடைத்துக் கொண்டு அரசு என்ற ஒன்று பெயரளவுக்கு இருக்கிறது அவ்வளவுதான்.
நாடும் முடங்கிக் கிடக்கிறது- நாடாளுமன்றமும் முடங்கிக் கிடக்கிறது! பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்து விளக்கம் சொல்லவேண்டும்என்றுஎதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், பிரதமரோ நாடாளுமன்றத்திற்கு வெளியில்தான் 52 அங்குல மார்பைப் புடைத்துப் பேசுவாரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் அடங்கிய அவையில் பேசமாட்டாரா?
இவ்வளவு சீக்கிரத்தில் மோடியின் பிம்பம் சிதறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்!

Saturday, November 19, 2016

பக்கவாதம் - மூளைத் தாக்குதல் நோய் அரிய விளக்கவுரை!

அமெரிக்காவில் மேற்படிப்புப் படித்து - பணியாற்றிய பின் நம் நாட்டிற்குப் பயன்பட வேண்டும், தம்முடைய அறிவு, ஆற்றல், அனுபவம் என்ற பெருநோக்கத்தில் தமிழ் நாட்டிற்கு வந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில், நரம்பியல் டாக்டராக பணிபுரியும் நடுத்தர வயதுக்காரரான டாக்டர்
ப. சீனுவாசன் அவர்கள், தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் கடந்த 12.11.2016 அன்று, "பக்கவாதமும் மூளைத் தாக்குதலும்" (Stroke & Brain Attack) என்ற தலைப்பில், எளியவர்களுக்கும் புரியக் கூடிய வகையில், "பவர் பாயிண்ட் சிலைடு"களைப் போட்டு விளக்கும் வகையில், அருமையானதொரு பயனுறு உரையைத் தந்தார். வந்திருந்து கேட்ட அனைவரும் பயன் பெற்றார்கள்.
உரைக்குப்பின் சுமார்  30 நிமிடங்களுக்கு மேலாக, அரங்கத்தில் குழுமியிருந்து, அந்தப் பேச்சைக் கேட்ட, கேட்பாளர்களான மக்களின் கேள்விகளுக்கு நன்கு விளக்கம் அளித்தார் - தெளிவு பெற்றோம் கேட்டவர்களாகிய நாங்கள்.
இத்தகைய உரைகள் மக்களுக்குப் பரவலான பரப்புரையாகக் கிடைத்தால், அந்நோய் பற்றிய விழிப்புணர்வு, காரணங்கள், தடுப்பு முறை, சிகிச் சைகள், செலவினங்கள் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ள பெரிதும் உதவும்.
டாக்டர் உரையிலிருந்து கிடைத்த தகவல்கள் இம்மாதிரி பக்கவாதம், மூளைத் தாக்குதல் (Stroke & Brain Attack) ஏற்பட்டால்,
உடனடியாக தாமதிக்காமல் நல்ல மருத்துவ மனைகளுக்குச் சென்று சிகிச்சையைத் துவங்கினால் - 8 மணி நேரத்திற்குள் சென்று சிகிச்சையைத் துவக்கி விட்டால் முழுமையாக அத்தகைய நோயாளிகளைக் காப்பாற்றிவிட முடியும். 4½ மணி நேரத்திற்குள் மருந்து கொடுக்கப்பட்டு சிகிச்சை செய்தால் நிச்சயம் குணமாக்க வாய்ப்புகள் அதிகம்.
எனவேதான் இதற்கு முக்கியத்துவம் - Time is Brain.
கால தாமதிக்காமல் உரிய நேரத்துக்குள் மருத்து வரிடம் காட்டினால் நோயாளிகளைக் காப்பாற்றலாம்.
காரணம் மூளையின் செல்கள் துவக்கத்தில் பிறக்கும் போது எப்படி அமைந்திருக்கின்றனவோ - அது மற்ற உடல் உறுப்புகள்போல வளராது; மாறாக 'இம்' மாதிரி நோய் ஏற்படும்போது இந்த செல்கள் (முதுமையின் போதும்) குறையவே செய்யும்.
எனவே, இதன் பாதுகாப்புக்கு அவசரம், உரிய நேரத்துக்குள் சிகிச்சை, சரியான மருத்துவர், சரியான மருத்துவமனைகள் - இவைகளைத் தேர்வு செய்வதும், அத்தகைய நோயாளிகள் காப்பாற்றப்படப் பெரிதும் உதவிடும்.
பக்கவாதம் வந்து விட்டதா என்று எப்படிக் கண்டு பிடிப்பது?
மிக எளிதான வழி:
1.      கண்ணாடி முன் புன்சிரிப்பு சிரியுங்கள்; முகம் கோணலாகப் போகும்.
2.     கைகளை மேலே தூக்கிப் பாருங்கள்; தாராளமாக வழக்கம் போல் வருகிறதா என்று பார்த்தால், வராத நிலை என்றால் அலட்சியப்படுத்தாமல் உடனே டாக்டர் - மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்.
இந்த மூளைத் தாக்குதல், பக்கவாதம் பற்றிப் பேசுகையில் இதன் தொடர்பான நோய்களை வரிசைப்படுத்தினார் டாக்டர்.
1.      இதய நோய் (Heart diseases)  ரத்தக் குழாய் அடைப்பு
2.     இரத்தக்குழாய் நோய் (Blood vessel diseases)
3.     சிஸ்டமஸ் என்ற நீரிழிவு (Diabetes) அதிகமான ரத்த அழுத்த நோய் (Hypertension)
4.     ரத்த நோய்கள் - ரத்தப்புற்று முதலியன.
5.     அதிகமான அளவு கொலஸ்ட்ரால் (System diseases) காரணம்
6.     அதிகமான அளவு ரத்தத்தில் சர்க்கரை சேர்தல் (High Blood Sugar)
இவைகளைச் சரிப்படுத்திக் குணப்படுத்தலாம்!
மூளைக்குச் செல்லும் ரத்தம் - குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் (Ischemic Stroke)
நோய் தாக்கும். ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு விடும். இம்மாதிரி நோய்க்கு முக்கியமாகும்.
கை, கால், விழுந்து போதல் என்பதினால் உயிருடன் வாழ்ந்தாலும், வாழ்நாள் முழுவதும் அத்தகைய  நிலை  - அடுத்தவர்களுக்குச் சுமையாகவும் அமையும் நிலைதான்.
எனவே முழுமையாக  குணமடைந்திட Time is Brain என்ற அடிப்படையில் உடனடி  4½ 
மணி நேரத்திற்குள் நோயாளியை சேர்த்து, உரிய சிகிச்சை தந்தால் காப்பாற்றலாம். அதற்குரிய மருந்து, ஊசிகளின் விலை 60 ஆயிரம். காரணம் அது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகிறது. இனிமேல் நம் நாட்டில் தயாராகி விலை வருங்காலத்தில் குறையும்!
சிறந்த மருத்துவமனைகள், அதற்குரிய அத்தனை மருந்துகள், அப்படியே நேரத்தைத் தேடுவதில் கழிக்காமல் அடுத்தடுத்து வழிமுறைகள் (Procedure) எல்லாம் தயார் நிலையில் வைத்திருப்பதால், சிகிச்சை தொடங்கி தடையின்றி செய்வார்கள்.
1960 முதல் 2016 வரை இந்நோய் அதிகமாகியுள்ளது.
காரணம் சர்க்கரை - நீரழிவு நோய், அலட்சியம் தான்! பல பெரிய மருத்துவமனைகளில் Package Deal என்று சேர்ந்து சிகிச்சை பெற ஒரு தொகையை மொத்தமாகவும் பெறுகின்றனர்.
நம் நாட்டு அரசு மருத்துவமனைகளில் சில சிறப்பான வகையில் இதைச் செய்தாலும், மருந்துகள் மற்றவைகளை வாங்குவதில், அரசு பல கட்ட ஒப்புதல்களைப் பெற கால தாமதமாகி, பயனுறு வகையில் இதனை இயக்க, நடைமுறை சாத்தியம் குறைவாக தற்போது உள்ளது என்றார் அம்மருத்துவர் நிபுணர்
அருமையான விழிப்பு உணர்வை இந்த உரை தந்தது.
இந்த விளக்கம் தந்த டாக்டர் (பரமசிவம்)
ப. சீனுவாசன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்!
- கி.வீரமணி

Thursday, November 17, 2016

வாராக் கடன்காரர்களை என்ன செய்ய முடிவு?

ரூபாய் நோட்டுகள் மாற்றம், புதிய நோட்டுகள் அறிமுகம் மற்றும் நோட்டுகள் செல்லாத்தன்மை குறித்து அறிவிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், அவர் நிலையில் இருக்கும் ஒருவருக்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. ஆனால், பிரதமர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் திடீரென தொலைக்காட்சியில் தோன்றி அறிவிப்பதும், அவர் அறிவித்த பிறகு நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறைச் செயலாளர் வேறு வேறு விதமாக அறிக்கைகள் தொடர்ந்து விடுவதும், ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று இறுதி முடிவு எடுக்கப்பட்ட தேதியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதும் போன்ற குழப்பமான செயல்களால் நாட்டின் பணப் பரிமாற்றம் முற்றிலும் உறைந்து போய்க் கிடக்கிறது.
மோடி இந்த புதிய ரூபாய் நோட்டுப் பணி குறித்து கூறும்போது இந்தப் பணி கடந்த 6 மாதமாக நடைபெறுகிறது என்று கூறிக்கொண்டு வருகிறார்.
தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் அக்டோபர் 6 ஆம் தேதி பதவியேற்றார்.
புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் போது ஆளுநரின் கையொப்பமில்லாமல் அச்சடிக்க முடியாது.  ஆளுநராக ரகுராம் ராஜன் பதவியில் இருக்கும்போதே தனியார் நிறுவன பொருளாதார ஆலோசகர் ஒருவர் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணியினை கண்காணித்தது எப்படி? முக்கியமாக உர்ஜித் படேல் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பொருளாதார நிர்வாக தலைமை இயக்குநராக பணியாற்றியவர். அதானி குழும வர்த்தக ஆலோசகர் குழுவில் முக்கியப் பொறுப்பை வகித்தவர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவரிடம் பணப் பரிவர்த்தனை போன்ற மிகவும் முக்கியமானத் தகவல்களை மோடி பகிர்ந்துள்ளது சரியானதுதானா?
இதனடிப்படையில் இந்த ரூபாய் நோட்டு ரத்து விவகாரத்தில் தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களான அதானி மற்றும் அம்பானி குழுமத்தின் ஆலோசனையின்கீழ் நடத்தியுள்ளார் பிரதமர்  என்றெல்லாம் செய்திகள் உலா வருகின்றன.
2015 ஆம் ஆண்டு இந்திய வாராக் கடன் பட்டியலில் மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரை நிதிஅமைச்சகம் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. அதில் முதலிடம் பிடித்த குழுமம் எது? மோடியின் நெருக்கமான, இன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்படேல் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவராக பணிபுரிந்த அம்பானி குழுமம் தான் அது.
1)  ரிலையன்ஸ் குழுமம் (அனில் அம்பானி) - 1,25,000 கோடிகள்
2)  வேதாந்தா குழுமம் - 1,03,000 கோடிகள்
3)  எஸ்ஸார் குழுமம் - 1,01,000 கோடிகள்
4)  அதானி குழுமம் - 96,031 கோடிகள்
5)  ஜே.பி குழுமம் - 75,163 கோடிகள்
6)  ஜே.எஸ்.டபிள்யு (ஜிண்டால்) - 58,171 கோடிகள்
7 )  ஜி.எம்.ஆர் குழுமம் - 47,976 கோடிகள்
8 )  லாண்கோ குழுமம் - 47,102 கோடிகள்
9 )  வீடியோகான் குழுமம் - 45,405 கோடிகள்
10 ) ஜி.வி.கே குழுமம் - 33,933 கோடிகள்
இந்த பட்டியலில் உள்ள முதல் பத்து நிறுவனங்கள் அனைத்தும்,மோடிக்குமிகவும்நெருங்கியநண்பர் களுக்குரியவை என்பதை நாடே நன்கு அறியும். பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்களின் உறவினர்களையும் கணக்கிட்டு  இந்த வாராக்கடனை கூட்டினால் மொத்தம் 7,32,781 கோடி ரூபாய் வருகிறது.
கருப்புப் பணம் என்று கூறி நாட்டு மக்களை பொருளாதார அவசர நிலைக்குத் தள்ளியுள்ள மோடி கூறும் கருப்புப் பணம் வெறும் 5 விழுக்காடு மட்டுமே! இந்த 5 விழுக்காடு கருப்புப் பணங்களும் நோட்டுகளாக இல்லாமல், தங்கமாகவும், நிலங்களாகவும், பங்குவர்த்தகத்தில் பங்குப் பத்திரமாகவும்தான் உள்ளன. இந்தக் குறைந்த விழுக்காடு கருப்புப் பணத்தை வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையை திறம்பட பயன்படுத்தினால் சில நாள்களில் வெளிக்கொண்டு வந்துவிடலாம்.
திமிங்கலங்களை விட்டுவிட்டு கெண்டைக் குஞ்சு களை வலை வீசிப் பிடிக்க முயலுவது ஏன்?
கருப்புப் பண நடவடிக்கைகளை வரவேற்பவர் களைக்கூட அதனைச் செயல்படுத்திட மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகள், செயல்பாடுகள் முகம் சுளிக்க வைக்கின்றனவே!
இன்னும் 50 நாள்கள் பொறுத்துக் கொள்ளச் சொல் கிறார் பிரதமர்; அதுவரை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு பட்டினிச் சாவூருக்குப் பயணம் செய்யவேண்டுமா? நோயைவிட வைத்தியம் வக்கிரத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடாதல்லவா!
‘நாயர் பிடித்த புலிவால்’ என்பார்களே, அது இது தானோ!

Wednesday, November 16, 2016

தங்கள் சொந்தப் பணத்தை மாற்றிக்கொள்ள விரல்களில் மையா? தேசிய அவமானம் இதைவிட வேறு என்ன?

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரச்சினையில்
முன்கூட்டி எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளில் தோல்வி!
தங்கள் சொந்தப் பணத்தை மாற்றிக்கொள்ள விரல்களில் மையா?
தேசிய அவமானம் இதைவிட வேறு என்ன?
‘மை’ வைக்கும் திட்டத்தை ‘மை’ய அரசே கைவிடுக!
‘மை’ய அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்

தங்கள் சொந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள சாதாரண மக்கள் கால் கடுக்க நாள் முழுவதும் ‘கியூ’வில் நிற்கவேண்டும். தங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் கைவிரலில் ‘மை’ வைப்பது தேசிய அவமானம் - இதனை உடனே கைவிட வேண்டும் என்று ‘மை’ய அரசுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
கருப்புப் பணத்தை ஒழிக்க நவம்பர் 8 ஆம் தேதி இரவு 12 மணிமுதல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார் (அமைச்சரவையில் முடிவெடுத்து, குடியரசுத் தலைவர் அவர்களிடம் விளக்கி விட்டு). இதை அறிவித்தபோது, மக்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமலிருக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறி, 4000 ரூபாய் வரையில் வங்கிகளில் வாங்கிக் கொள்ளலாம் - அடையாள அட்டையைக் காட்டி என்று அறிவித்தார்.
ஆனால், இப்போது நிதித்துறை அதிகாரிகளும், நாளுக்கு ஒரு விசித்திரமான அறிவிப்புகளைச் செய்து வருவது, அரசின் நிலைப்பாட்டை கேலிக்குரியதாக்கி வருகிறது!
போதிய முன்னேற்பாடு இல்லை
போதிய முன்னேற்பாட்டினை திட்டமிட்டுச் செய்து விட்டு, அதன் பிறகே இம்மாதிரி அதிரடி அறிவிப்பு, நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கவேண்டும். ஆனால், அதைச் செய் யாமல், கடந்த 8 நாள்கள் எல்லா தரப்பு மக்களும் - பெருமுதலாளிகளைத்  தவிர - அன்றாட வாழ்க்கைக்கான பணப் பரிவர்த்தனையைச் செய்ய முடியாமல், வங்கிகளின் முன்பும்,  ஏ.டி.எம்.களின் முன்பும் கால் கடுக்க நின்று போதிய பணம் எடுக்க முடியாமல், ஏமாந்தும், எரிச்சலும் கொண்டு, ‘என்று தணியும் இந்தக் கொடுமையின் வேகம்‘ என்று சொல்லொணா துன்பத்துடன் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 50 நாள்கள் அவதியுற சொல்கிறார்!
மணிக்கணக்கில் வங்கிகளின் முன் வரிசையில் நிற்கும் நிலை ஒருபுறம்; சில முதியவர்கள் மயங்கி விழுந்து மரணமடைந்த கொடுமை மறுபுறம். அன்றாட அழுகும் பொருள் - மீன், காய்கறி போன்றவைகளைக்கூட விற்று வாழ்வாதாரத்தை நடத்த முடியாதவர்கள் மிகவும் எளிய நிலையில் உள்ளவர்கள்தான். வியாபார மந்தத்தால் வேதனைப்படுவோர் பலர் - இப்படி 8 நாள்களாகியும் குறையாத துன்பத்தில் துவண்டுள்ள நிலைதான் நீடிக்கிறது!
புதிய 500 ரூபாய் நோட்டே இன்னமும் வங்கிகளுக்கே வந்து சேராதது, திட்டமிடலில் உள்ள கோளாறை உலகுக்கே பகிரங்கப்படுத்துவதாக உள்ளது!
இவைகளுக்கெல்லாம் உச்சகட்ட வேதனை பணம் எடுக்க வங்கிகளுக்கு மீண்டும் மீண்டும் வருவதால், ‘கியூ அதிகம்‘ என்ற ‘புதிய கண்டுபிடிப்பை’ சில அறிவு ஜீவி அதிகாரிகள் கண்டறிந்து, அதனைத் தடுக்க விரலில் கருப்பு ‘மை’ வைக்கப்படும் என்று நேற்று (15.11.2016) அறிவித்தது - வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். நொந்த உள்ளங்களை மேலும் நொந்து போகச் செய்யும் முன்யோசனையற்ற தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் மிக மோசமான செயல் இது!
டாட்டா - அம்பானியா கியூவில் நிற்கிறார்கள்?
மக்கள் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க, செலுத்த உள்ள உரிமையை இப்படிப் பறிப்பதோடு, அதை ஏதோ கிரிமினல் குற்றம் போல காட்டுவது நியாயம்தானா?
டாட்டா, அம்பானி, அடானிகளின் பிரதிநிதிகளா இப்படி வருகிறார்கள்?
அடையாள அட்டையைக் காட்டித்தான் பணம் வாங்குகிறார்கள்; அங்கே பதிவு உள்ளது. இந்நிலையில், வங்கியில் கருப்பு மை வைப்பது தேவையா? மேலும் வங்கி அலுவலர்களின் வேலைப் பளு மேலும் சுமையாக ஏறும். வங்கி அலுவலர்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்!
நாணயங்கெட்ட மக்கள் என்று சகட்டு மேனிக்கு அனைவரையும் கூறும் அவலமும், அசிங்கமும் தேசம் முழுவதும் என்றால், உலகோர் கண்ணுக்கு இதைவிட பெருத்த ‘‘தேசிய அவமானம்‘’ வேறு உண்டா?
ஏற்கெனவே நமது ஜனநாயகத் தேர்தல் முறையில் விரலில் கருப்பு மை வைப்பதே ஒழுக்கமும், நாணயமும் அற்ற வாக்காளர்களைக் கொண்ட ஒரு நாடு என்று நாமே உலகுக்குச் சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தும் முறையாக உள்ளது. (அதுவே கூட ஆதார் அட்டை, புகைப்படச் சான்று வாக்காளர் அட்டை வந்துவிட்ட பிறகு மை வைப்பது - நீக்கப்பட வேண்டிய, தேவையற்ற ஒரு சம்பிரதாய நிகழ்வாகும்).
எத்தனை விரல்களில் மை?
இந்த நிலையில், இப்படி வங்கிகளில் பணம் எடுக்க கருப்பு மை வைத்தல், ஒவ்வொரு முறையும் எடுக்கும்போது நியாயமான வங்கி வாடிக்கையாளர்களுக்கு எத்தனை விரலில் எத்தனை முறை கருப்பு மை வைப்பது?  நடைமுறையில் இது சாத்தியப்படுமா?
கை விரல்கள், கால் விரல்கள் என்றா வரிசைப்படுத்த முடியும்? எனவே, மிகவும் வெட்கமும், வேதனையும் தரும் முறையல்லவா இது?  கணினியுகத்தில் கண்டறிய முறைகளுக்கா பஞ்சம்?
உடனடியாக இந்த அரைவேக்காட்டு அவசர முடிவை அறவே கைவிட முன்வரவேண்டும் மோடி அரசு!
‘மய்ய அரசு’ என்று அழைக்கப்படும் இதனை ‘மை அரசு’ ஆக்கப்பட்டால் அதன் அவமானம் மக்களுக்கு அல்ல; மத்திய அரசுக்குத்தான்.
எனவே, உடனடியாக இம்முடிவை மறுபரிசீலனை செய்து, கைவிடவேண்டும்.
கருப்பு மை வைப்போம் என்பதோ - வேறு வேறு திடீர் திடீர் அறிவிப்புகளோ சட்டங்கள் ஆகிவிடுமா? இது என்ன? ராஜாக்கள் காலமா? ஜனநாயகக் குடியரசு என்பதில் சட்டப்படித்தானே அரசு இயந்திரங்கள், அதிகாரிகள் (வங்கி அதிகாரிகள் உள்பட) இயங்கவேண்டும் - இயங்க முடியும்? எந்தச் சட்டத்தின்கீழ் வங்கியில் பணம் வாங்க வருவோருக்குக் கருப்பு மை வைக்க முடியும்? வெறும் வாய் ஆணைகளே போதுமா?
‘அவசர சட்டமா?’ அதுவும் நாடாளுமன்றம் கூடிவிட்ட நிலையில், முடியாதே! அரசு விதிகளில் திருத்தம் என்றால், எப்போது? எப்படி?
இதையெல்லாம் ஜனநாயக நாட்டில் தகவல் அறியும் உரிமையின்கீழ் எவரும் கேட்கலாமே! ஆட்சித் தலை மைக்கு முன்யோசனை வேண்டாமா?
எண்ணித் துணியவேண்டும்
துணிந்தபின் எண்ணுவது இழுக்கு அல்லவா?
குதிரைக்கு முன்னால் வண்டியா?
‘50 நாள்கள் அவதிப்படுங்கள்’ என்று ஹிதோபதேசம் சாமானிய மக்களுக்கு என்றால், அவர்களை வாழ முடியாத வர்களாக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசாங்கம் தெரிந்தே செய்கிறது என்கிற பழிக்கு அது ஆளாகியுள்ளது - அதன் செயல்திறன். வண்டிக்கு முன்னால், குதிரையா, குதிரைக்கு முன்னால் வண்டியா? என்பதுபோன்று ஆகிவிடாதா?
உடனே கைவிடுக இந்த கருப்பு மை வைக்கும் திட்டத்தை!
‘மை’ போடும் வேலையைத் தவிர்த்திடுக!



கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
16.11.2016 

ஆப்பதனை அசைத்துவிட்ட மந்திபோல...!

கருப்புப் பணம் ஒழிப்பு என்ற பெயரில் கடந்த 8 ஆம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தாணீர்.  அதனை வரவேற்றவர்கள்கூட உரிய போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால்வெகுமக்கள்அவதிப்படுவதுகண்டு சினம் கொண்டு எழுந்துள்ளனர். இந்த முன்னேற் பாடில்லாத நடவடிக்கையால், ஏற்பட்டுள்ள இழப்பு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, ஏறக் குறைய ரூ.14.18 லட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் உள்ளதாக தெரியவந்துள்ளது.  இந்த ரூபாயில் முக்கால் பாகம் வங்கியிடம் உள்ளது. அதாவது ரூ.10 லட்சம் கோடி. மீதமுள்ள ரூ.4 லட்சம் கோடி பணம்தான் மக்களிடம் புழக்கத்தில் இருக்கும். மக்களிடமுள்ள இந்த ரூ.4 லட்சம் கோடிக்குள் தான்  கள்ள நோட்டு, கருப்புப் பணம், நேர்மையாக உழைத்த பணம் என்று எல்லாமே அடங்கும்  இந்த ரூ. நான்கு லட்சம் கோடிக்குள் பொது மக்களின் சிறுசேமிப்பு மற்றும் கையிருப்பு போன்றவை கணக்கில் எடுத்தால், ஒரு லட்சம் கோடிக்குள் வந்து விடும் (இன்று வரை 70,000 கோடி ரூபாய் வரை மக்களிடமிருந்து வங்கிக்கு சென்றுள்ளது).
அரசின் நடவடிக்கையால், இந்தியப் பங்குச்சந்தை தொடங்கிய 15 நிமிடத்தில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்க ரூ.20,000 கோடி செலவு ஆகிறது.  இந்தியாவில் ஒரு நாள் வியாபார பணப் பரிவர்த்தனை ஒரு லட்சம் கோடி என இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு கணக்கிட்டுக் கூறியுள்ளது. அதில் சராசரியாக 25 விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கணக்கிட்டாலும், இன்னும் சில நாள்களில், ஏற்படும் இழப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கு வந்துவிடும்.
இந்த இழப்புகள் ஒரு புறமிருக்க ஏடிஎம்  இயந் திரங்களை புதிய ரூபாய் நோட்டுக்கு ஏற்றவாறு மாற்ற தனி மென்பொருள் அமைக்கும் செலவுகள், வங்கி ஊழியர்களின் பகுதி நேர பணிக்கான செலவுகள் (ஓவர் டைம்). இதையெல்லாம் கணக்கிட்டால் ரூபாய் பத்தாயிரம் கோடியாவது வரும். மோடியின் அதிரடி என்னும் விளம்பர அறிவிப்பால் சில மணித்துளிகளில் பல லட்சம் கோடி ரூபாய் விரயம் ஏற்பட்டுள்ளது.  இவை மட்டுமல்லாமல் தனிப்பட்ட நபர்களின் உழைப்பு, அவர் களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், நேரம் ஒதுக்குதல் போன்றவற்றை  இதோடு ஒப்பிட்டால், மோடி கூறியுள்ள  கள்ள நோட்டுகளின் மதிப்பு என்பது சொற்பமே ஆகும், மோடி தன்னுடைய அரசியல் மற்றும் தனிநபர் எதேச்சதிகார முடிவினால் ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதாரத்தை நேரடியாக அசைத்துப் பார்த்து இருக்கிறார். இனி வரும் காலங்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும், ஆக அரசின் நிலைமை, புலிவால் பிடித்த கதையாகப் போகிறது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, கோவா வில் பிரதமர் மோடி முழங்கியிருக்கிறார். 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், கோடானுகோடி ஏழை மக்கள் நிம்மதியாக தூங்கச் செல்லுகின்றனர்என்றும்,ஊழல்வாதிகள்தான்தூக்க மாத்திரைக்காக அலைகின்றனர் என்றும் சொல்லியி ருப்பது, வெகுமக்களின் வாழ்க்கை நிலைக்கும், மோடி யின் சிந்தனைக்குமிடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்திருப்பதை அறிய முடிகிறது.
மோடியின் இந்தப் பேச்சை படித்த வெகுமக்கள் - வங்கிகளின் முன் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள், இந்தியப் பிரதமரை எப்படியெல்லாம் வசைபாடியிருப் பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பழைய காலத்து நீரோ மன்னனின் பேச்சுக் கவிச்சி மோடியின் வார்த்தைகளில் வீசுகிறதா இல்லையா?
மூன்று நாள், அய்ந்து நாள், ஒரு வாரம் பொறுத்திடுக - விடியல் பிறக்கும் என்று சொன்னவர்கள் இப்பொழுது டிசம்பருக்கு கைகாட்டுகிறார்கள்.
நீங்கள் சொல்லுகிற காலம்வரை எங்கள் வயிற்றுப் பசியைப் போக்க என்ன வழி என்று மக்கள் கேட்க மாட்டார்களா?
பசிக்கிறது என்றால் ரொட்டி சாப்பிடுங்கள் என்று சொன்ன நீரோ மன்னன்களின் பட்டியலில் இடம்பிடிக்க மோடி அரசு முயற்சி செய்கிறதா? எலிக்கறி சாப்பிடுங்கள் என்று உணவமைச்சர் கே.எம்.முன்ஷி ஒருமுறை சொல்லவில்லையா?
அன்றாடம்வேலைக்குச்சென்றுஅதன்மூலம் கிடைக் கும் கூலியைக் கொண்டு வந்து வயிற்றைக் கழுவும் மக்கள் செல்லாத நோட்டுகளை வைத்து என்ன செய்வார்கள்?
வங்கியின்முன் வரிசையில் நிற்க நேரிட்டால் அன்றைய கூலி நட்டம்தான். ‘டெபிட் கார்டு’, ‘கிரெடிட் கார்டு’ நோக்கி நாடு செல்லவேண்டுமாம். வக்கணைப் பேசுகிறார்கள் சில மே(ல்)தாவிகள் தொலைக்காட்சிகளில்.
மக்களுக்கு வரும் கோபத்துக்கு அளவேயில்லை. பணக்காரர்களும், பார்ப்பனர்களும், மேல்தட்டு ஊடகக் காரர்களும் மக்களை மக்கலாகப் பார்க்கிறார்கள் - பொறுமைக்கும் ஓர் அளவு வேண்டும். ஏழை - எளிய மக்களைச் சீண்ட வேண்டாம் - எச்சரிக்கை!

Tuesday, November 15, 2016

கோவில்களைக் கவனிக்க உகந்த நேரம்?

“கோவில்களை கவனிக்க உகந்த நேரம்‘’ என்ற தலைப்பில் ‘தினமலர்’ தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள் ளது. எப்போதும்போல் எழுத வேறு செய்தி இல்லாத நிலையில் எதையாவது எழுதி வைப்பது என்ற பாங்கை மிகவும் அருமையாக கடைபிடித்து வருகிறது ‘தினமலர்’.  சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தற்போது அதிகம் வெளிவரும் ‘பேய்’ப்படங்கள் குறித்து ஒரு திரைப்பட இயக்குநரிடம் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை ‘பேய்’ப்படம் எடுப்பதற்கும், ‘சாமி’ப்படம் எடுப்பதற்கும் கதையோ அதன் உண்மைத்தன்மையோ தேவையில்லை; படத்திற் கான கதைகளைத் திட்டமிடும்போது தேநீர் கொண்டு வருபவர் கூறும் கதைகளைக் கூட நாங்கள் சேர்த்துக் கொள்வோம் என்று கூறினார்.
இதையே பிரபல வடநாட்டுத் துறவி பெயரில் எடுத்த படத்தில் அந்தத் துறவியின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த சம்பவமாக சேர்த்து விட்டோம் என்றும் போகிற போக்கில் ஒரு உண்மையைக் கூறிவிட்டுச் சென்றார்.
சாயிபாபா பற்றி நூல் எழுதவேண்டுமென்றால் எந்த கதையையும் எடுத்து ஆங்காங்கே சாயி சாயி என்று சேர்த்து எழுதினால் போதும்; சிறீடி சாயிபாபா கோவில் டிரஸ்ட் அதை தனது செலவில் அச்சிட்டு வெளியிடும். இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுள் கதைகளைப் பரப்ப  கற்பனைக்கதைகள் போதும் என்றுதானே தெரி கிறது.
முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது பக்திப் பரவசம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது என்று கூறியுள்ள ‘தினமலர்’ முதல்வருக்காக பால்குடம் எடுத்து நாமக்கல், சேலம் போன்ற ஊர்களில்  3 பேர் செத்துப் போனார்களே - அதற்கு யாரைக் குறை சொல்லும் என்று தெரியவில்லை.
திராவிடக் கட்சிகள் பார்ப்பனரை பழிக்கும் செய லைத் தொடர்ந்து செய்து வருகின்றன என்று எழுது பவர்கள், அந்த ஜாதி - பார்ப்பன ஜாதி என்று நேரடியாக எழுதலாமே; பார்ப்பனர் என்றால் உயர்ந்தவன் என்றும் அதன் அடையாளமாக பூணூலை தோளில் தொங்க விடுவதும்தான் உயர்ந்தவன்; பிறர் எல்லாம் கீழ்ஜாதி என்ற திமிருக்கான அடையாளத்தை வெளிப்படுத்தத் தானே!
மாண்டூக்ய உபநிடதம் கலியுக பிறப்பைக் குறித்து கூறும் போது கலியுகத்தில் பார்ப்பனர், சூத்திரன் என்று இரண்டு வர்ணம் மட்டும் தான் இருக்கும் என்றும், இதர சத்திரியர் மற்றும் வைசியர் பிரிவுகள் இல்லாமல் போகும் என்றும் எழுதியுள்ளது. இதை ஆதாரமாக வைத்துதான் வாரிசு இல்லாத தஞ்சை மன்னரின் சொத்துகளை பார்ப்பனர்கள் கைப்பற்றினர்.  நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது பிரதமராக இருந்த பானகல் அரசரால் டிசம்பர் 18, 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, 1925 இல் நிறைவேற்றப்பட்ட சென்னை இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பல இந்துக் கோவில்களை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது ஏன் என்று தினமலருக்கு நன்கு தெரிந்திருக்கும், இன்றும் திருவண்ணாமலைக் கோவில்களுக்குச் சென்றால் உண்டியலில் பணத்தைப் போடும் முன்பே பார்ப்பனப் பூசாரிகள் தட்டை தூக்கிக்கொண்டு நீட்டி தட்டில் பணத்தைப் போட்டால் பிரசாதம் என்று மிரட்டும் தொனியில் கூறும்போது அக்காலத்தில் கோவில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மையால் - எவ்வளவு கொள்ளை நடந்திருக்கும் என்று சொல்லியா தெரியவேண்டும்.
இறுதியாக மும்பைக் கோவிலைப் பற்றியும் ‘தினமலர்’ குறிப்பிட்டுள்ளது.
மும்பையில் பிரசித்தி பெற்ற மும்பை சித்திவிநாயகர் கோவில் அதன் டிரஸ்ட்டிகளால் ஊழல் மலிந்து கோவி லின் புனிதம் கெட்டுவிட்டதாக திராவிடர் கழகமோ அல்லது மும்பையில் உள்ள நாத்திக அமைப்புகளோ வழக்குத் தொடுக்கவில்லை.  இந்து மதத்தின் புனிதத்தைப் பாதுகாக்கத் துவங்கிய அமைப்பான ‘இந்து ஜன ஜாகுரிதி சமீதி’ என்ற அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தது.
அதில் மும்பை சித்திவிநாயகர் கோவில் டிரஸ்ட்டிகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர் என்று வழக்குத் தொடுத்திருந்தது,   இந்த வழக்கில் சில ஆதாரங்களைக் கொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் டிரஸ்ட்டிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது, அந்தவழக்கு விசா ரணை நடந்துகொண்டு இருக்கிறது,
டி.என்.ஏ. என்ற ஆங்கில நாளிதழ் 26 ஜூனில் எழுதிய செய்தியில் மும்பையில் சித்தி விநாயகர் கோவில் உள்பட பல கோவில்களின் டிரஸ்ட்டிகள் கோவில் நிலங்களை சட்ட விரோதமாக பயன்படுத்தியது தொடர்பாக 7 நபர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.  கோவில்களில் என்ன நடக்கிறது என்று 2009 ஆம்  ஆண்டு வெளி யான காஞ்சீபுரம் மச்சேந்திர நாதர் கோவில் புகழ் தேவநாதன் என்னும் பார்ப்பன பூசாரி நடத்திய காமக் களியாட்டங்கள் குறித்துக் கேட்டால் தினமலர்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டியதுதான். ஏன் காஞ்சி ஜெயேந்திரர் கதைதான் என்ன?
இறுதியாக அதே தேவநாதன் கூறிய கருத்து ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம்,  ‘நான் சிக்கிக் கொண்டேன்; சிக்காதவர்கள் பலர் உள்ளனர்’ என்று கூறியிருந்ததை நினைவு படுத்துகிறோம்.
கோவில்களைப் புனருத்தாரணம் செய்யும்போது பழைமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ‘தினமலரின்’ கவலை.
எத்தனைப் பவுத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக உருமாற்றம் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் ஏகம்பரநாதர் கோவிலில் இருந்த புத்தர் சிலைகள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் வந்தது எப்படி?
‘தினமலர்’ கூட்டத்திடமிருந்து இதற்கெல்லாம் பதில் வராது.

Thursday, November 10, 2016

‘‘காகித ஓடம் கடல் அலை மேலே...!''

இம்மாதம் (நவம்பர்) 8 ஆம் தேதி இரவு மத்திய அரசின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய திடீர் உரை, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு செல்லாது; நாளையும், நாளை மறுநாளும் ஏ.டி.எம்.  (கிஜிவி) வங்கி வசதிகள் இயங்காது; நாளை (9.11.2016) வங்கிகள் இயங்காது. அதற்கு மறுநாள் முதல் இயங்கும்.
நாளை (10.11.2016) பழைய இந்த நோட்டுகளை, வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்; நேற்றுவரை பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களில் பழைய நோட்டுகளை - இந்த இடைக்காலத்தில் கொடுத்து செலவு செய்தால், அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று அறிவித்தார்!
இந்த கருப்புப் பணவேட்டையில் திமிலங்கள் சிக்குமோ என்னவோ தெரியவில்லை; நடுத்தர ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், விவசாயத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்கள் இவர்களைப் போன்ற சாமானிய மக்களுக்கு இந்த ‘திடீர் அறிவிப்பு’ ஒரு பெரும் ‘சோதனையாகவே’ ஆகிவிட்டது!
நேற்று கையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு போய் சாப்பாட்டுக் கடையில் கொடுத்து, சிற்றுண்டியோ, சாப்பாடோ கூட சாப்பிட முடியாத நிலை; காரணம், கடைக்காரர்கள் வாங்க முடியாத நிலை. பணமிருந்தும் பட்டினி!
மருந்து கடைகளிலும்கூட பற்பல இடங்களில் தெளிவற்ற நிலை. சுங்கச் சாவடிகளில் ஏகப்பட்ட தகராறு. நல்வாய்ப்பாக இன்று முதல் இரண்டு நாள்களுக்கு சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
அழுகும் பொருள் விற்பனை யாளர்களுக்கு ஏகப்பட்ட நட் டம்; காரணம் கையில் பணம் உள்ளவர்களால் - 500 ரூபாய் நோட் டினைக் கொடுத்தால் ஏற்க மறுக்கும் நிலை இருப்பதால், விற்பனையோ இல்லை. மீன் விற்காமல் கண்ணீர் கடல்தான்!
கையில், பையில் உள்ள பணத் தால் பசி தீர்க்க முடியவில்லை; சில மணிநேரத்தில் அது வெறும் ‘காகிதமாகி’ மதிப்பிழந்து விட்டது!
குறுக்கு வழிகளிலோ, லஞ்சம் பெற்று கோடியாய் குவித்தவர்கள் நிலை எப்படியோ - அவர்கள் இதற் குள்ளாக மாற்றுவழி கண்டுபிடிக் காமலா இருப்பார்கள்!
என்றாலும், சில நாள்களுக்கு முன் நாம் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனை’ கட்டுரையில் ‘பணத்தால் எதனையும் வாங்க முடியுமா?’ என்று கேட்டிருந்தோம். பதில் கிடைத்துவிட்டது பார்த்தீர்களா?
அதற்குப் பிறகு நம் மக்கள் இப்போது ‘காகித ஓடம் கடல் அலைமேலே’ என்பதுபோல, கையில் பணம் இருந்தும், வயிற்றில் பசி, மனதில் வேதனை என்பனவற்றை அனுபவித்துக் கொண்டுள்ளனர்!
மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள் என்றவுடன், மனித நேயம் மிகுந்த திருநெல்வேலி உணவு விடுதியாளர் ஒருவர் அத்தகையவர்களுக்கு இலவசமாக கட்டணமின்றி உணவு அளித்துக் காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி மனிதநேயம் வற்றிப் போகவில்லை என்பதை உலகுக்குத் துல்லியமாய் உணர்த்தியது!
இதற்கிடையில், நேற்றுமுன்தினம் 8 ஆம் தேதி விடிவிடிய நகைக் கடைகளில் இடையிலாத வியாபாரம் - தங்கம் விலை திடீர் ஏற்றம்!
அப்போது பொன் மேலும் மின் னியது; பணம் சிறுத்தது, சிணுங்கியது!
ஒரு சில மணிநேரத்தில், மக்கள் பொருளாதார ‘சூறைப்புயலில்’ சிக் கியதுபோல் உணர்ந்த நிலை!
பின்னால் ஏற்படப்போகும்  ஆரோக்கியத்துக்கு இப்போது இத்தகைய பொருளாதார ‘விக்கல்கள்’ தவிர்க்க இயலாதவை என்று பொரு ளாதார நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறினாலும், அன்றாடத் தொழில் வருவாயில் வாழும் அடிமட்ட மக்கள் - திடீர் என்று பணம் வெற்று காகிதமாய் மதிப்பிழந்து விட்டதே என்று அவலத்தில் சிக்கி அழுது கொண்டே கூறுகிறார்கள்.
எப்படியானாலும், பணத்தைச் சேர்த்துக் குவித்து, கணக்கில் காட்டாத சுறாக்களுக்கும், திமிலங்களுக்கும் சரியான வலையாய் அமைந்தால்தான் எண்ணிய இலக்கை எட்ட முடியும்!
இடையில் சிக்கி அவதியுறும் நடுத் தட்டு மக்கள் கடல்தான் எப்போதும் போல்! உ.பி.யில் நோட்டு எரிப்பாம்!
என்ன உலகம்! எனவே, குறிக் கோள் இன்றி பணம் பணம் என்று அலையாதீர்! பிறகு இப்படி பணத்திற்கு திடீர் மாரடைப்புபோல் ஏற்பட்டால், அலறாதீர் என்பதே இந்த பணத்தாக்குதல் மூலம் கற்றுக் கொடுக்கப்படும் பாடமாகும்!
புரிந்துகொள்ளுவோமாக!

மாதவிடாய் காரணங்காட்டி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதா?

மாதவிடாய் காரணங்காட்டி அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பதா?
கேரளாவில் பகவதியம்மன் கோவிலில் மாதவிடாய்க் கடவுளுக்கு விழா நடைபெறுகிறதே!
பெண்களை அனுமதிக்கலாம் என்ற
கேரள இடதுசாரி அரசைப் பாராட்டுகிறோம்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினையிலும் தீர்வு விரைவில் கிட்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே!
கேரளா - அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், பெண்களை அனுமதிக்கலாம் என்று கூறிய கேரள இடதுசாரி அரசைப் (சி.பி.எம்.)பாராட்டுகிறோம். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கும், செயல்பாடு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10  வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்ற அக்கோவிலின் நடைமுறைச் சம்பிரதாயங்களை வலியுறுத்திடும் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு எதிராக, மனித உரிமையிலும், பாலியல் நீதியிலும் அக்கறையும், கவலையும் கொண்ட கேரளவாழ் பெண்கள், அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இவ்வழக்கு ஜஸ்டீஸ் தீபக் மிஸ்ரா அவர்கள் தலை மையில் உள்ள அமர்வின் முன் நடைபெற்று வருகிறது!
மகாராட்டிரத்தைப் பாரீர்!
இதுபோன்றே மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரபல கோவில்களில்  (சிங்கணாப்பூர் சனிக்கோவில், நாசிக் திரிசம்பேஷ்வர் கோவில்களில்) பெண்கள் உள்ளே நுழையும், வழிபடும் உரிமைப் போராட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். தொடக்கத்தில் கடும் எதிர்ப்பு - மகாராஷ்டிர பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி அரசு தயக்கம் காட்டியும், மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர்களது உரிமைக் குரலுக்குக் கிடைத்த ஆதரவு காரணமாக, அக்கோவில்களில் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் பெற்று, பாலியல் நீதி நிலைநாட்டப் பெற்றுள்ளது.
கேரள அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமை கோரும் வழக்கில் ஆணையிட்டது. முந்தைய அரசு  பழைய சம்பிரதாயங்களை மீறக்கூடாது என்று கூறி, பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிப்பதை  மறுதலித்துக் கூறியது; ஆனால், திடீர் திருப்பமாக, தோழர் பினராய் விஜயன் அவர்கள் தலைமையில் புதிதாய் ஆறு மாதங்களுக்குமுன் பதவியேற்ற  இடதுசாரி அரசு (சி.பி.எம்.), இந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையை - மறுக்கக்கூடாது; என்ற நிலைப்பாட்டை 7.11.2016 ஆம் தேதி  தனது வழக்குரைஞர் மூலம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளதை, நீதிபதிகள் வரவேற்கும் முறையில், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை, அவர்கள் பெண்கள் என்பதால், புறக்கணித்துவிட முடியாது; பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால் வழிபாட்டு உரிமையை அவர்களுக்கு மறுப்பது நியாயமல்ல என்ற கருத்தைக் கூறி, பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளி வைத்துள்ளனர்.
தோழர் பினராய் விஜயன் அவர்களது தலைமையிலான கேரள அரசின், முற்போக்கு நிலைப்பாடும், மகளிருக்குப் பாலியல் நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமானவை.
இங்கு பல ஊர்களில் அய்யப்பன் கோவில் சிலை, பெண் பக்கத்தில்  உள்ளதாகவே இருக்கும்பொழுது, பெண்கள் போகக்கூடாது என்பது முரண்பாடு அல்லவா?
கேரளாவில் பகவதியம்மன் கோவில் திருவிழா என்பது என்ன?
10 வயதுக்கு மேற்பட்டு, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் - மாதவிடாய் காரணமாக -  உள்ளே நுழைந்தால் தீட்டு -  என்று ஒரு பொருந்தாக் காரணம் கூறப்படுகிறது! சிவன் தலையில் உள்ள கங்கையின் மாதவிடாய் தான் சிவப்புப் பொட்டு (Ritu) என்று புராணக் கதை கூறுகிறது. (ஆதாரம்:  ‹:  encyclopedia of Hindu world by Benjamin Walkar) பெஞ்சமின் வாக்கர் தொகுத்த - ஹிந்து உலகக் களஞ்சியம்.
கேரளத்தில்  உள்ள பகவதி அம்மன் கோவிலில் இந்த ‘ரிட்டு’வை வணங்கப்படும் திருவிழா (குருதித் தர்ப்பணம் - (Kurithi Tharpanam) 10 நாள் விழா) நடைபெறுகிறதே!(மாதா மாதம் அம்மனுக்கு மாதவிடாய் வருகிறதாம்!)
‘அசாம் காமாயாக்னி' கோவில் விழாவும் இந்த அடிப்படையிலேதானே!
எனவே, பழைய பத்தாம் பசலித்தனத்தை சனாதனப் போர்வை போர்த்தி மூடி மறைத்து ‘அய்தீகம்‘ பேசுவதில் அர்த்தம் இல்லை. மின்சார விளக்கு உள்ளே வந்துவிட்ட பிறகு, ‘அய்தீகம்‘ - சம்பிரதாயம் பேசுவதில் அர்த்தமுண்டா?
எனவே, பாலியல் நீதி - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைப்படி மறுக்கப்படக் கூடாது. மக்கள் தொகையில் சரி பகுதியான பெண் மக்களுக்கு ஆதரவளித்த கேரள அரசைப் பாராட்டுகிறோம்.
உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு அளித்தால் ஒரு புது யுகம் பிறக்கும்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையும் இதே தத்துவ அடிப்படையில்தான் நிறைவேற்றப்படவேண்டிய ஒன்றே!

கி.வீரமணி    
தலைவர்,    திராவிடர் கழகம்

.
சென்னை
10.11.2016

Wednesday, November 9, 2016

‘‘மாசு நிறைந்த’’ சிந்தனை!

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தலைநகர் டில்லி மாசடைந்த நகரத்தின் வரிசையில் உலகத்திலேயே முதலிடம் பிடித்து வருகிறது, உலக சுகாதார நிறுவனம் அதிக நச்சுத்தன்மை கொண்ட நுண்ணிய துகள்களை சுவாசிக்கும் மக்கள் அதிகம் வாழும் நகரம் டில்லி என்று அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மிகவும் அதிக மாசடைந்த நகர பட்டியலில் 7 ஆம் இடத்தில்  இருந்த பீஜிங் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்புடன் தற்போது 78 ஆம் வரிசைக்குச் சென்றுவிட்டது, ஆனால், இந்தியத் தலைநகர் டில்லி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரு கிறது,
மக்கள் நெருக்கம், வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை என பல வழிகளில் அங்கு காற்று மாசடைந்து வருகிறது. அங்குள்ள காற்றை அளவீடு செய்து பார்த்ததில், அந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பது தினமும் 40 சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமம் என்ற அதிர்ச்சியான செய்தி தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி முடிந்த பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது, முக்கியமாக பட்டாசு வெடிப்பதினால் உருவாகும் வேதிப்புகை, அக் டோபர் மாதத்தில் இருந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் காரணத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும், இந்த நேரத்தில் ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைப் புகை, மக்கள் நெருக்கத்தால் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு பட்டாசின் வேதிப்புகையும் கலப்பதனால் நச்சு நிறைந்த காற்றுக் கலவை உருவாகி விடுகிறது,
சாதாரண நிலையில் 1.0 என்ற அளவில் காற்றில் கரியமில வாயுவின் அளவு இருக்கவேண்டும் ஆனால், டில்லியில் 30+ என்ற ஆபத்தான அளவையும் தாண்டியுள்ளது; இது மிகவும் ஆபத்தான நிலையே!
தீபாவளிக்கு முன்பு 20% என்ற அளவில் இருந்த கார்பன் அளவு பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக 14% கூடி 34% என்ற ஆபத்தான எல்லையைத் தாவிப் பிடித்துள்ளது.  காற்றில் இந்த அளவு கார்பன்  அதிகரிப்பதால் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்குக்கூட மூச்சு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு, மேலும் நுரையீரல், இருதய நோய் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக ஒரே நாளில் தலைநகரில் உள்ள அய்ந்து அரசு மருத்துவமனைகளில் கண் எரிச்சல், தொண்டை வறட்சி, சுவாசக் கோளாறு மற்றும் தோல் அரிப்பு போன்ற நோய் அறிகுறிகளுடன் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக  அதிகரித்துள்ளது. தீபா வளிக்குப் பிறகு தொடர்ந்து  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது,
ஆரம்பம் முதலே பட்டாசுகளை வெடிக்கவேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.  ஈரப்பதம் அதிகமுள்ள குளிர் மாதத்தில் பட்டாசுப் புகைகள் சுற்றுப்புறச்சூழலை கெடுத்துவிடும் என்று அறிக்கை விட்டும் அக்கறையில்லாத மக்கள் பட்டாசுகளைக் கொளுத்தி கொண்டாடியதால் தாங்களே அதன்  நச்சு புகைவலையில் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில் தலைநகர் டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த காற்று மாசு குறித்து கவலை தெரிவித்துள்ளது, தலைநகர் டில்லிக்கு சுற்றுலா வரும் அமெரிக்கர்கள் காற்றுமாசுவிலிருந்து பாதுகாக்க உப கரணங்களை கையோடு கொண்டு வரவேண்டும் என்று சுற்றுலா கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
தலைநகர் டில்லியில் அளவிற்கு அதிகமாக காற்று மாசடைந்துள்ளதால்,  மாசு கட்டுப்பாட்டு வாரியம்  சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைநகர் டில்லியில் காற்றுமாசு ஏற்படுவதை கண்காணிக்கவும் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் உத்தரவை முழுமையாக அமல்படுத்தவும் ஆணையிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் மற்றும் நீதிபதிகள் டி ஒய் சந்திரசவுத், எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (8.11.2016) பிற்பகல் 3.30 மணியளவில் மனுவை விசாரிப்பதாகக் கூறியுள்ளது.
கடந்த ஆண்டும் இதே தீபாவளி அன்று காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதை அடுத்து பல் வேறு ஆலோசனைகளை டில்லி அரசுக்கும் மாசுக்கட்டுப் பாட்டுப்பாடு வாரியத்திற்கும் உச்சநீதிமன்றம் பிறப்பித்தி ருந்த நிலையில், அந்த ஆலோசனைகளை சரிவர பின்பற்றாததாலும் இந்த ஆண்டு மிகவும் அதிக அளவு பட்டாசுகளை வெடித்தகாரணத்தினாலும் காற்று மாசு சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்துள்ளது.
தீபாவளி என்ற இந்துப் பண்டிகையால் புத்தி நாசம், பொருள் நாசம், பொழுது நாசம் என்பதோடு ஒட்டு மொத்தமான பொது நாசம் (காற்று மாசு) என்ற நிலையில் இருப்பதைக் கவனிக்கவேண்டும். அமெரிக்காவில் கூட குடியரசு நாளன்று (ஜூலை 7) அரசு தரப்பு மட்டும்தான் குறிப்பிட்ட இடத்தில் வெடி, மத்தாப்பு, வாணவேடிக்கைகள் நடத்தும்.  பல நாடுகளில் பட்டாசுகள் தடை. அந்த நிலை என்று வருமோ இந்தியாவில்? இந்துத்துவாதிகளுக்கு பொதுநலன்கள் முக்கியமல்ல - மதவெறிதான் அவர்களின் மாசு நிறைந்த சிந்தனைக் காற்றாகும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...