Saturday, November 28, 2015

காவல்துறைப் பெண் அதிகாரியை, கண்ட மாதிரி பேசிய பிஜேபி அமைச்சர்




ஹிஸ்ஸார் நவ 28 அரியானா மாநில சுகா தாரம் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் மாவட்ட காவல்துறை பெண் ஆணை யர் சங்கீதா காலியாவை மக்கள் சபையின் முன், நீ என்னிடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரி, நான் சொல்வதைக் கேட்க வேண்டும் வெளியே போ என்று கூறி அவமானப் படுத்தியுள்ளார். இந்து அமைப்பைச் சார்ந்தவர்களுக்குப் பதவி கொடுத்தால் ஏதோ அவர்கள் தான் நாட் டிற்கே ராஜா போன்று நடப்பது பாஜக ஆளும் மாநிலங்களில் தினசரி நடக்கும் கதையாகிப் போனது. 
அரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் பள்ளிவிழாவில் ஆசிரி யர்களை அழைத்து அவ மானப்படுத்திய சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து பரபரப்பை ஏற் படுத்தியது.  அரியானாவின் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ள ஃபதேஹபாத் என்ற நகரத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அனில் விஜ் அங்குள்ள பஞ்சா யத்து தலைமை அலுவல கத்தில் தனது ஆதரவா ளர்களைச் சந்தித்தார். அப்போது மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர் உடனிருந்தனர்.   இந்த நிலையில் மாவட்ட பாஜவைச் சேர்ந்த சிலர் இந்த மாவட்டத்தில் பஞ்சாப் பில் இருந்து சாராயம் கடத்தி வரப்படுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்தும் ஒன்றும் செய் யாமல் இருப்பதாகவும் புகார் கூறினர்.
பொதுவாக இது போன்ற புகார்கள் பிற துறை அமைச்சர்களிடம் எழுத்து மூலம் கொடுக்கப் பட்டால் அதை மாநில உள்துறை அமைச்சரிடம் கொடுக்கவேண்டும், அல்லது மாவட்ட காவல் துறை ஆணையரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லவேண் டும், இது தான் பிற துறை அமைச்சர்களின் வேலை, 
ஆனால் அனில் விஜ் அரசியல்சாசன விதிமுறை கள் எதுவும் தெரியாமல், தான் தோன்றித்தனமாக அங்கிருந்த காவல்துறைப் பெண் ஆணையர் சங் கீதா காலியாவைப் பார்த்து நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? என்று ஒருமையில் பேசியதுமல் லாமல் நீ எங்களிடம் சம்பளம் வாங்கும் ஒரு வேலைக்காரி, இவர்கள் அளித்த புகாருக்கு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை, உனக்கு திமிர் அதிகமாகிவிட்டது என்று பேச ஆரம்பித்து விட்டார், அருகில் உள்ள வர்கள் அவரைச் சமா தானப்படுத்தியும் அவர் அடங்காமல் ஒருமையில் பெண் காவல்துறை ஆணை யரை வெளியே போ என்று கூறினார். ஆனால் பெண் காவல் துறை ஆணையர் இவரது பேச்சுக்கு பயந்துவிட வில்லை, 
அவர் இருக்கை யில் இருந்துகொண்டு இது சட்டம் ஒழுங்கு தொடர்பான விவகாரம் மனுவை என்னிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கமாறு தான் கேட்கவேண்டும் அப்படி நான் எடுக்காத பட்சத்தில் நீங்கள் என் மீது உள் துறை அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம், எந்த ஒரு நடைமுறையும் தெரியாமல் உங்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க, அதிகாரி என்றும் பாராமல் என்னை ஒரு மையில் பேசுவது உங்கள் பதவிக்கு நல்லதல்ல என்று துணிச்சலுடன் கூறினார். இதனால் கோபம் கொண்ட அனில் விஜ் அங்கிருந்த காகிதங் களை வீசிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.  இந்த சம்பவம் அனைத் தும் ஊடகவியளார்களின் காமிராவில் பதிவானது, இந்தக் காட்சி செய்தி தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது.   இது குறித்து உள்துறை அமைச்சரும் மாநில முதல்வருமான மனோகர்லால் கட்டர் எந்த ஒரு கருத்தும் கூற மறுத்து விட்டார்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தென் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி அடையாளமா? கண்டிக்கத்தக்கது!

தென் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்களிடையே  ஜாதி அடையாளமா? கண்டிக்கத்தக்கது!
கண்காணிப்புக் குழுவை அமைத்து திராவிடர் கழகம் களத்தில் இறங்கி செயல்படும்

தமிழர்  தலைவரின் காலங் கருதிய அறிக்கை


தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல் வேலியில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர் களைப்  பிரித்து அடையாளப்படுத்துவதற்காக  ஜாதி அடையாளம் காட்டும் சின்னங்களோடு பள்ளிக்கு வரச் செய்வது கண்டிக்கத்தக்கது. திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, கண்காணித்து உரிய செயல்களில் கழகம் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சில தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் - ஜாதி வெறி நோயால் பீடிக்கப் பெற்ற தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் சிலர், ஜாதியை அடையாளம் காண (குறிப்பாக தாழ்த்தப்பட்டோரை) கையில் குறிப்பிட்ட வண்ணத்தில் கயிறு கட்ட வற் புறுத்தப்பட்டுள்ளது. அவர்களை எதிரிகள் போல் கருதுவது பைத்தியக்காரத்தனமானது; கண்டனத்திற் குரியது. பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த சிலர் பார்ப்பனிய நச்சுத் தொத்து காரணமாக இப்படி நடப்பதாக அறிந்த போதெல்லாம் பகுத்தறிவாளர்களும், முற்போக்கா ளர்களும் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அதன் காரணமாக இந்த நோய் மேலும் பரவாமல் ஆங்காங்கு துடைத் தெறியப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஜாதிப் பாம்பு!
நெல்லை மாவட்டத்தில் கோபாலபுரம் பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூக மாணவச் செல்வங்களை அடையாளப் படுத்த  தனி உடை அணிந்து வரச் சொல்லும் நிலை உள்ளது என்ற புகார் எழுந்ததன் காரணமாக, பள்ளிக் கல்விச் செயலாளர் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதன் காரணமாக நிலைமை மாற்றம் அடைந்துள்ளது! மாவட்ட ஆட்சியரைப் பாராட்டுகிறோம். ஆற்றல் மிகு தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் அம்மையார் அவர் களும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தேனி மாவட்டத்திலும் இந்த நோய் பரவி வருவதை அறிகிறோம். இது தொடர்பாக கல்வித் துறைச் செயலாளருக் கும் கழகத்தின் சார்பில் இன்று ஒரு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. பள்ளியில் சீருடை அணிந்து மாணவ  - மாணவிகளை வரச் சொல்வதன் தத்துவம் என்ன? ஏழை, பணக்காரர், இல்லாதோர், இருப்போர் என்ற பிரிவுகூட பள்ளியில் மாணவச் செல்வங்களிடையே தலை நீட்டக் கூடாது என்பதால் தானே!
அப்படி இருக்கையில், இந்த பகுத்தறிவு பூமியில் - பெரியார் மண்ணில் - இப்படி ஒரு அவலம் - அசிங்கம் அரங்கேற்றம் என்றால் இதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை வேறு உண்டா?
திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு...
தென் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத்தவர் இதற்கென ஒரு தனி கண்காணிப்புக் குழுவைப் போட்டு, உளவுத் துறைபோல ஆய்ந்தறிந்து தலைமைக் கழகத்திற்கும், கழகத்தின் வழக்குரைஞரணிக்கும் உடனடியாக அறிவிக்க வேண்டுகிறோம்.
இதேபோல கவுரவக் கொலை என்ற காட்டுமிராண்டிச் செயல் நடந்தால், நமது இயக்கக் குழுக்கள் சரியான தகவல்களைச் சேகரித்து தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
மேற்கொண்டு, நேரடி நடவடிக்கையோ, சட்டப் பரிகார நடவடிக்கையோ, அறப் போராட்டமோ எதுவென முடிவு செய்து செயலில் இறங்குவது திராவிடர் கழகத்தின் 2016ஆம் ஆண்டு முக்கிய பணியாகவே தொடரும்!
கழகத்தில் தனி அணி!
இதற்கென வெளிப்படையான பெரியார் தொண்டர் அணி - தனியே பணியாற்றும்; 30 வயதுக்குட்பட்ட  விருப்பமுள்ள இளைஞர்களே முன் வருக. அதில் பங்கும் பயிற்சியும் பெறுக.
கி.வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்
சென்னை
28-11-2015
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Friday, November 27, 2015

“சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிட இயக்கம் என்ற நூற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்டது சிவகங்கை’’



சிவகங்கை 27 கழகத்தின் சார்பில் நாடு முழுவதும் நடைபெறும் தெருமுனை  பகுத்தறிவு பரப்புரை தொடர் பயணத்தின் இரண்டாம் குழு நிறைவு விழா மற்றும் 370ஆவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு 26.11.2015 அன்று சிவகங்கை நகரில் சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் உ.சுப்பையா தலைமை வகித்திட நகர தலைவர் அ.மகேந்திரராசன் வரவேற்புரையாற்றி னார்.  மாநில வழக்குரைஞரணிச் செயலாளர் வழக்கு ரைஞர் ச.இன்பலாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் வேம்பத்தூர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் ஜெ.தனபாலன, பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை சுப்பையா, மாவட்ட அமைப்பாளர் சி.ச.கருப்பையா,மண்டல இளைஞர் அணி செயலாளர் காளாப்பூர் ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் ஜாதி ஒழிப்பு வீரர் ஜெயராமன் நினைவு கம்பத்தில்  கழக கொடியினை மொழிக்காவலர் தூதை கணேசன் ஏற்றி வைத்தார்.
தொடக்கத்தில் தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.அவர் தமது உரையில்:_
நீண்ட இடைவெளிக்கு பின் சிவகங்கை நகருக்கு வந்துள்ளேன். இடையிடையே  தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு வந்திருப்போம் என்றாலும் இன்றைக்கு சுயமரியாதை இயக்கத்திற்கு 100 ஆண்டுகள் ஆக போகிறது என்ற நிலையில் இந்த இயக்கத்தின் சேவைகளில் சிவகங்கை நகருக்கு பெரும் பங்கு உண்டு என்ற அடிப்படையில் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி அதனை தொடர்ந்து திராவிட இயக்கம் என்று பாரம்பரியமாக தனிப்பெருமை கொண்ட நகரம் சிவகங்கை ஆகும்.
அய்யா இராமச் சந்திரனார், அவரை தொடர்ந்து இராம.சுப்பிரமணியம், நீதிபதி சத்தியேந்திரன், அய்யா சண்முகநாதன் என்று தொடர்ந்து இந்த பகுதிகளில் மக்களுக்கு பல்வேறு வகையில் சமூக சேவை செய்தவர்கள். சர்வீஸ் கமிசன் துறையில் எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியவர்கள் ஆவார்கள். இங்கே இந்த கருத்துக்கள் அடங்கிய நூல்கள் மலிவு விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கி படித்து வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் படிக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் துறவிகளுக்கு மேலானவர்கள் என்று அய்யா பெரியார் சொன்னார்கள். ஏன் என்றால் துறவிகளுக்கு கூட கீழ் லோகம், மேல்லோகம் என்று சில பற்றுகள் இருக்கும். அதையும் தவிர்ப்பவர்கள் எங்கள் தொண்டர்கள் என்ற அடிப்படையில் அதை சொன்னார்கள்.திராவிட இயக்கம் அறிவுலகம் நோக்கி சிந்திக்க வைக்கின்ற இயக்கமாகும்.
செவ்வாய் மண்டலத்தில் இறங்கி  ஆராய்ச்சி நடத்தும் காலம் வந்து விட்டது. ஆனால் நம் நாட்டில் இன்னும் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு பெண்களுக்கு திருமணம் செய்வதில் தடையாக உள்ளது. இன்றைக்கு  மிகப்பெரிய மாற்றத்திற்கு வந்து விட்டோம். உடை, கல்வி என்று அனைத்தும் மாறி விட்டது. பச்சை தமிழர் காமராசர் அவர்களை வைத்துக்கொண்டு குலக்கல்வி திட்டத்தை குழி தோண்டி புதைத்து விட்டோம்.
இன்றைக்கு உடல் உறுப்பு தானம் என்பது மிகப் பெரிய அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. அதற்கெல்லாம் முன்னோடியாக தந்தை பெரியார் அவர்கள்தான் தமிழனுக்கு முதுகெலும்பை தானமாக தந்தவர். எதற்கெடுத்தாலும்  காலில் விழுகிறான். 
மந்திரியாக இருந்தவர்களும்சரி மந்திரியாக ஆக வேண்டும் என்று நினைப்பவனும் சரி.கால் எதற்கு இருக்கிறது நடப்பதற்கல்லவா? சிந்திக்க வேண்டும். இத்தனை கோயில்கள் இருக்கிறதே அத்தனையும்  தமிழன் கட்டிய கோயில்கள் ஒரு கோயிலாவது பார்ப்பான் கட்டி யிருப்பானா? கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல நாம் கட்டிய கோயிலில் பார்ப்பான் குடிகொண்டு நம்மை உள்ளே விட அனுமதிக்க வில்லையே?
இந்த நிலை மாறத்தான் கலைஞர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வருவதற்கு சட்டம் கொண்டு வந்தார். இது போன்ற நிலைகளை கொண்டு வர தந்தை பெரியாரால் மட்டும் தான் முடிந்தது. மறுக்க முடியுமா?மாட்டு மூத்திரத்தை குடிக்க வச்சுட்டானே பார்ப்பான். 
அதுவும் அய்.ஏ.எஸ்.அய்.பி.எஸ், நீதிபதி என்று வித்தியாசமில்லாமல் அவ்வளவு பேரும் வரிசையில் நின்னு வாங்கி குடிக்கிறார்களே! பஞ்ச கவ்யம் என்பது என்ன சந்திர மண்டல மிக்சரா?இவ்வளவு நாகரிகம் வளர்ந்த காலத்தில் நரபலி கொடுக்கிறானே? அப்படியென்றால் இந்த நாட்டில் பகுத்தறிவு இயக்கத் திற்கு இன்னும் எவ்வளவு தேவை இருக்கிறது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்
ஒரு முறை தி.மு.க. அமைச்சர் மன்னை நாராயணசாமி அவர்களை மேடையில் பக்கத்தில் வைத்துக்கொண்டு அய்யா பெரியார் அவர்கள் சொன்னார்கள். என்னதான் மந்திரி ஆனாலும் எனக்கும் மன்னை நாராயணசாமிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். நான் வெறும் சூத்திரன். இவர் மாண்புமிகு சூத்திரன் அவ்வளவுதான் என்று சொன்னார்கள். எட்டு வயது பாப்பார பையன் என்பது வயதான நமது மிராசுதாரை பேரைச் சொல்லி அழைக்கும் காலம் ஒரு காலம்! பஞ்சமன், பறையன் என்ற பெயரை மாற்றிய இயக்கம் திராவிட இயக்கம்.  பழைய நிலைகளை மீண்டும் கொண்டு வரத்தான் மத்தியில் உள்ள ஆட்சி யாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைகளில் இருந்து நாங்கள் சொல்வதை நன்றாக சிந்தித்து பாருங்கள் என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார் தமிழர் தலைவர்.

இந்த நிகழ்ச்சியில் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தென் மாவட்ட அமைப்பு செயலாளர் மதுரை வே.செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தி.எடிசன் ராசா, காரைக்குடி மாவட்ட கழக தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட கழக செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா, மாவட்ட துணை செயலாளர் இரா.பெரியார் குணாஹாசன், 
சிவகங்கை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் திருமலை ஆ.முத்துராமலிங்கம், மாவட்டதி.மு.க. மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், சிவகங்கை நகரமன்ற தலைவர் அர்ச்சுனன், தி.மு.க.நிர்வாகி ஜெயக் குமார்,  மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாவட்டச் செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை நா.முருகேசன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மண்டபம் முருகேசன்,மந்திரமா?தந்திரமா நிகழ்ச்சியாளர் பழனி அழகிரிசாமி,சிவகங்கை நகர செயலாளர் புகழேந்தி, காரைக்குடி நகர தலைவர் ந.செகதீசன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் கொ.மணிவண்ணன், வையகளத்தூர் ஆ.தங்கராசன், நாட்டரசன்கோட்டை முரளிதரன் நகர இளைஞர் அணி தலைவர் சிவகங்கை அ.நேரு மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அரசியல்சாசன நாள் கொண்டாட பாஜகவிற்கு தகுதியுள்ளதா?



முக்கியமாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சில இந்து அமைப்புகள் தலித் அமைப் புகளின் தலைவர்களை அழைத்துக் கொண்டு டிசம்பர் 6 ஆம் தேதி புனித நதிகளில் அம்பேத்கரின் திதியை கொண்டாடும் திட்டத்தில் இறங்கியுள் ளார்கள். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் இந்தச் செயல்மூலம் அம்பேத்கரின் இந்துமத எதிர்ப்பைக் குழிதோண்டிப் புதைத்து அவர் இந்துக்களுக்கு என்றும் ஆதரவாக இருந்தார் என்னும் மனநிலையை மக்களிடையே உருவாக்க தந்திரமான காரியத்தைச் செய்து வருகிறார்கள்.
பாஜகவினர் ஏற்கனவே காந்தி பிறந்த தினத்தின் மாண்பைச் சீர் குலைக்கும் வகையில் அவரது நினைவுதினத்தில் தூய்மை இந்தியா என்னும் திட்டத்தைத் துவக்கி அவரையும் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று நினைத்தனர். ஆனால் மக்கள் மனதில் இருந்து காந்தியையும் அவரது புகழையும் அகற்ற முடியவில்லை. இந்து வெறியனான நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக்கொன்ற போது தரையில் விழுந்த காந்தியின் மூக்குக் கண்ணாடியை எடுத்து அதை தூய்மை இந்தியா திட்டத்தின் அடை யாளமாக வைத்துக் கொண்டனர். 
இதே போல் நேருவின் பிறந்த நாளை மாணவர் குழந்தைகள் தின மாக கொண்டாடவேண்டிய அரசு மோடி தினமாக மாற்றிவிட்டது, இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மோடியின் பேச்சுக்கள் பெரிய திரையில் ஒளிபரப்பானது, இதன் மூலம் நேருவின் முகத்தை மறைத்து தனது பெயரை முன்னிறுத் தும் தந்திரமும் மோடி திறம்படச் செய்தார்.   அரசின் அனைத்து விளம்பரங் களில் இருந்தும் 14 நவம்பர் அன்று நேரு படம் அகற்றப்பட்டுவிட்டது, காந்தி நேருவிற்கே இந்த நிலை என்றால் முன்னாள் பிரதமர்களாக இருந்து தீவிரவாதத்திற்காக உயிரைப் பலி கொடுத்த இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி பற்றிய கேள்வியே இங்கு எழக் கூடாது.
எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் தேசத் தலைவர்கள் மிகவும் முக்கியமான வர்கள் ஆவர், அந்த நாட்டை நினைவில் கொள்ளும் போதே அந்த நாட்டின் தேசத் தலைவர்கள் மக்களின் மனதில் தோன்று வார்கள். இந்தியா போன்ற நாட்டில் காந்தி, நேரு போன்ற தலைவர்கள் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தவர்கள். 
இவர் களை மக்கள் மனதில் இருந்து அவ்வளவு எளிதில் நீக்கிவிடமுடியாது. ஆனால் பாஜக அரசு எப்படியும் இவர்களை மக்கள் மனதில் இருந்து நீக்கவேண்டும் என்று பல சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது.  இப்படி மக்களின் நினைவில் வாழும் தலைவர்களை திட்டமிட்டு அவமானப் படுத்தி வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்து மதத்தில் பிறந்ததே அவமானம் என்று கூறி பவுத்த மதம் மாறிய அம்பேத்கரின் பெருமையை கொண்டாடுவதை சந்தேகக் கண் கொண்டே பார்க்க வேண்டும்.
அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறிய கருத்து என்ன தெரியுமா? மனுதர்மத்தை விட அரசியல் சாசனம் பெரிதல்ல என்று கூறிய அமைப்பும் அதன் அரசியல் பிரிவான பாஜகவும் இன்று அரசியல்சாசன நாள் கொண்டாடு கின்றன. இதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மூவர்ணக் கொடியை தீட்டுபட்ட கொடி என்றும், மூவர்ணம் நாட்டிற்கு அபச குணம் நிறைந்த கொடியாகும், என்றும் கூறியது அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது.  இந்திய அரசுச் சின்னமான அசோகச் சின்னத்தையும், கொடியின் நடுவில் இருக் கும் அசோகச் சக்கரத்தையும் இந்து மதத்தை இழிவு படுத்திய பவுத்த மதச் சின்னம் அதை அகற்றவேண்டும் என்று லால்கிருஷ்ண அத்வானி கூட கூறினாரே!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் ஆன்மாவிற்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது. அம்பேத்கர் அரசியல் சாசனத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது பேசியதாவது, ஒரு பகுதிமக்கள் தங்களின் பிரதிநிதிகளாக தங்களுள் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டுமே, ஒழிய புத்திஜீவி என்று கூறிக்கொள்பவர்களை அல்ல என்று கூறியுள்ளார். 
அம்பேத்கர் இதன் மூலம் என்ன கூறவருகிறார் என்றால் மெத்தப் படித்த வர்கள் மட்டும் அரசியலில் இருக்கலாம் என்ற நிலை மிகவும் ஆபத்தானது, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள் ளும் மக்கள் பிரதிநிதிகள் தான் அரசிய லுக்குத்தேவை என்றும் இவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் இதன் மூலம் அரசியலில் சாதாரண மக்களின் அதி காரத்தை உறுதிப்படுத்தினார்.  இதன் மூலம் மக்களுக்கு அரசியல் சாசனத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை எழுந்தது. சுதந்திர இந்தியாவில் காமராஜர் போன்ற தலைசிறந்த தலை வர்களை மக்கள் பிரதிநிதியாக்கியது, இதே போல் இந்தியா முழுவதும் பல்வேறு சிறந்த தலைவர்கள் உருவாகினார்கள்.
ஆனால் பாஜக அரசு மக்களாட்சி மாண்பின் இந்த அடித்தளத்தை உடைத்து மீண்டும் மனுவாதி ஆட்சியைக் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது, முக்கியமாக அரியானா, குஜராத், ராஜஸ் தான் போன்ற மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டுவர முயல்கிறது. 
இது நமது அரசியல்சாசனச் சட்டத்தின் ஆன்மாவையே கொலைசெய்யும் சூழ்ச்சி யாகும். ராஜஸ்தான் அரியானா போன்ற மாநிலங்களில் இன்றளவும் படித்த வர்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாகவே உள்ளது. மேலும் கிராமங்களில் ஆதிக்கஜாதியினர் மாத்திரமே 10 ஆம் வகுப்பைத் தாண்டுகின்றனர். இதர ஜாதியினர் குழந்தைப்பருவத்தில் இருந்தே விவசாயக் கூலிகளாக மாற்றப்டுகின்றனர்.  சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டு காலமாக நீடித்த சாதாரண குடிமகனின் அரசியல் உரிமையை கேவலப்படுத்தும் செயலை எந்த அரசும் செய்யத்துணிய வில்லை, ஆனால்இந்து அமைப்புகளும் பாஜகவும்  அம்பேத்கர் மீதான வன்மத்தை வேட்பாளர்களுக்கு கல்வித்தகுதி என்ற சிக்கலை ஏற்படுத்தி தீர்த்துக்கொள்ள முயல்கிறது.
இதே மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கிராமங்களில் தேர்தலே இல்லாமல் பெரும்பான்மையானவர்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர் களே பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கட்டும் இதனால் தேர்தல் செலவுகள் மிச்சமாகும் என்று கூறி அதற்கு சம்ரஸ் கிராம் மஞ்ச் என்று பெயரும் வைத்தார், தேர்தல் இலலா மல் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறையை ஆதரிக்கும் கிராமங் களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப் படும் என்றும் கூறினார்.  
ஒரு புறம் தேர்தலுக்காக கல்வித் தகுதி, மறுபுறம் தேர்தலே இல்லாமல் ஆதிக்கஜாதியினர் கிராமப் பஞ்சா யத்து தலைவர்களாக தேர்தெடுக்கும் முறை போன்ற அரசியல் சாசனச் சட் டத்தைக் கொலைசெய்யும் நடவடிக் கைகளில் இறங்கிய பாஜக இன்று அரசியல்சாசன நாளை மிகவும் விமர்சையாகக் கொண்டாடுகிறது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மாநிலங்களவையே தேவையில்லை என்றும் மாநிலங்களவையின் அனுமதி யின்றி அரசின் சட்டங்கள் நிறைவேற் றப்படவேண்டும் என்று கூறினாரே  ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத் தின் முன்பு மனுவின் சிலை உள்ளதே, அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்கள். 
இன்றளவும் சட்டம் மனுநீதிப்படிதான் செயல்படும் அரசியல் சாசனப்படி அல்ல என்று தான மறைமுகமாகக் கூறுகிறார்கள்.   2015 இந்திய வரலாற்றில் தலித் துகள், சிறுபான்மையினர் போன் றோருக்கு மிகவும் மோசமான ஒரு ஆண்டாக அமைந்துவிட்டது, அரசி யல் சாசனம் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளையும் வரையறைசெய்து மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது, அரசியல் சாசனத்தில் கூறப்பட்ட உரி மைகளை எந்தச் சட்டம் கொண்டு வந்தும் தடைசெய்ய முடியாது, ஆனால் அரசியல் சாசனத்தை எள்ளளவும் ஏற்காத ஒரு கட்சி இன்று ஆட்சியில் இருந்துகொண்டு சிறுபான் மையினருக்கு 
எதிராகவும் தலித்து களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது, மோடி முதல் பாஜக கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப் பினர்கள் என அனைவருமே தாங்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமா ணத்தை மீறி செயல்பட்டு வருகின் றனர்.  இந்தியா என்னும் குடியரசு நாட்டை இந்து ராஷ்டிரமாக, மனு தர்மத்தை இந்த நாட்டின் சட்ட நூலாக மாற்ற முனைப்புக் கொண்டு செயல் பட்டு வரும் பாஜகவும் அதன் தாய மையமைப்பும் அரசியல் சாசன நாளைக் கொண்டாடுவதன் பின்புலத் தில் கடுமையான சூழ்ச்சி ஒளிந்துள் ளது என்பதை அனைவரும் மனதில் வைக்கவேண்டும்.
நன்றி:  BBC.com
ஆங்கில  இணையதளத்திலிருந்து A. Ananth
- 26.11.2015
தமிழில்: சரவணா ராசேந்திரன்

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

சகிப்புத் தன்மைக்கும் இந்து மதத்துக்கும் என்ன உறவு?



பிஜேபி - ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், சிவசேனை என்று சொல்லக் கூடிய இந்துத்துவாவாதிகள் - அதன் தலைவர்கள் நாள்தோறும் பேசி வருபவை சகிக்கவே முடியாத எல்லைக்குச் சென்று விட்டன.
வெறும் புரளியைக் கிளப்பி விட்டே கொலைகள் நடந்து கொண்டுள்ளன. மாட்டுக்கறி என்று உண்மைக்கு மாறாக புரளியைக் கிளப்பி விட்டதாலே முஸ்லிம் பெரியவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது என்ன கொடுமை என்று யாராவது கேட்டால், இன்னொரு பிஜேபி பிரமுகர் சொல்லுவது என்ன தெரி யுமா? அந்த வீட்டிலிருந்த பெண்ணை மானப்பங்கம் செய்யாமல் விட்டார்களே, அதற்காகச் சந்தோஷப்பட வேண்டும் என்று ஊத்தை வாயைத் திறக்கிறார்.
நடிகர் அமீர்கான்  என்பவர் இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டிப் பறக்கக் கூடியவர்; நாட்டில் நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால், நாம் நமது பிள்ளைகளுடன் வெளிநாட்டுக்குச் சென்று விடலாம் என்று அவரின் மனைவி கூறினார் என்ற ஒரு செய்தியைத் தெரிவித்தார் - இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள்?
நாட்டில் நடக்கும் நிலைமைகள்பற்றிய ஒரு கருத்தை விமர்சனத்தை வைப்பதற்கு, இந்த நாட்டு குடிமகனுக்கோ, குடிமகளுக்கோ உரிமை இல்லையா? கருத்துச் சொல்லும் உரிமையை, விமர்சனம் செய்யும் உரிமையை ஒட்டு மொத்தமாக பி.ஜே.பி. சங்பரிவார், இந்துத்துவ பரிவாரங்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு விட்டனவா?
பஞ்சாப் மாநில சிவசேனாவின் தலைவர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் கன்னத்தில் அறைப வருக்கு ஒரு லட்சம் ரூபாய்ப் பரிசு என்று அறிவித் துள்ளாரே!
இதில் என்ன வேடிக்கை என்றால், இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதற்கு இந்த நாட்டில் உரிமை இருக்கிறது; இப்படி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள்மீது இந்த நாட்டில் சட்டம் பாயாது.
அதே நேரத்தில் நாட்டில் நிலவும் மதவெறித் தாண்டவத்தின் கொடூரங்களின் அடிப்படையில் நடிகர் அமீர்கானோ அவரது மனைவியோ ஒரு கருத்தை வெளிப்படுத்தினால் அது நாட்டுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாம்!
இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருக்கக் கூடியவரே நாடாளுமன்றத்தில் மறைமுகமாக நடிகர்அமீர்கான் கூறிய கருத்தை குற்றமாகச் சாடுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?
இன்றைக்கு நாட்டின் நிலை என்ன? எழுத்தாளர் களும், கலைஞர்களும், சிந்தனையாளர்களும், தங்க ளுடைய விருதுகளைத் திருப்பி அனுப்பும் அளவுக்கு நாட்டின் நிலைமை கலவரப் பூமியாக  ஆகிவிட வில்லையா?
உண்ணும் உணவில்கூட மதவாதத்தைத் திணிப்பது எந்த வகையில் நாகரிகம்? என் மேசையின்முன் என்ன உணவு என்பதை நான்தான் தீர்மானிக்க முடியும். அதனைத் தட்டிப் பறிக்கும் உரிமையை எடுத்துக் கொள்ள யாருக்கு உரிமை உண்டு?
வாழ்கிற மக்களுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத அரசு எந்த உணவைச் சாப்பிடுவது - எந்த உணவைச் சாப்பிடக் கூடாது என்று தீர்மானிக்க இவர்கள் யார்?
இந்து மதத்தைப் பொறுத்தவரை, மதத்தோடு கடவுளோடு முடிச்சுப் போடாத ஒன்று இருக்கிறதா? கடவுள் பத்து அவதாரங்களை எடுத்ததாகக் கூறுகிறார்களே, பன்றி அவதாரம், மீன் அவதாரம், ஆமை அவதாரம் என்றெல்லாம் மகாவிஷ்ணு எடுத்ததாக எழுதி வைத்துள்ளனரே - அப்படி என்றால் மீன் உணவைச் சாப்பிட்டால் அது கடவுளுக்கு விரோதம் - அந்தக் கடவுள் சம்பந்தப்பட்ட இந்து மதத்துக்கு விரோதம் என்று சொல்லலாமா?
மாட்டிறைச்சியில்கூட பசு மாட்டுக் கறியை மட்டும்தான் சாப்பிடக் கூடாதாம். ஏன் எருமை மாட்டின்மீது, காளை மாட்டின்மீது (ரிஷபம்கூட சிவனின் வாகனமாயிற்றே!) இந்த இந்துத்துவ வாதிகளுக்கு அப்படி என்ன வெறுப்பு?
இந்த இந்துத்துவவாதிகள் எந்த எல்லைக்குச் சென்றுள்ளனர்? முஸ்லிம்களும், கிறித்தவர்களும் இந்துக் கடவுள்களான இராமனையும் கிருஷ்ண னையும் வணங்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால்  இவர்கள் எந்த அளவு சகிப்புத் தன்மை கொண்டவர்கள்?
இந்து மதத்தின் அடிப்படையே ஜாதிகள்தான்! ஜாதி என்பதே மனதனுக்கு மனிதன் பிளவை ஏற்படுத்தக் கூடிய உயர்வு - தாழ்வை வலியுறுத்தக் கூடியதுதான். இத்தகைய மதத்தில் சகிப்புத் தன்மை என்பதை கிஞ் சிற்றும் எதிர்ப்பார்க்க முடியாது - முடியவே முடியாது.
ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

இந்தியாவில் மத மோதல்: வெளிநாட்டு மாணவர்கள் வருகைக் குறைவு உள்துறை அமைச்சகம் ஒப்புதல்




புதுடில்லி, நவ.27 - இந்தியாவில் மத மோதல் கள் அதிகரித்து வருவதால் இந்தியாவிற்குக் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண் ணிக்கை குறைந்துள்ளது என்று இந்தியாவின் உள்துறை அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து உள்துறை அறிக்கை கூறுவதாவது: மதமோதல் காரண மாக, கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர் களின் எண்ணிக்கை 73 விழுக்காடு குறைந்துள்ளது. 
ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் இருந்து மருத்துவம், வணிகக் கல்வி, பொருளாதாரம், மொழியியல் கல்வி போன் றவற்றை கற்க ஆண்டு தோறும் இந்தியாவிற்கு மாணவர்கள் வந்து கொண்டு இருப்பார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் இந்தியா விற்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை கடுமையான அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. 
இது குறித்து பெங் களூரு அய்.அய்.எம்., மத்திய உள்துறை அமைச் சகத்தின் அறிக்கையை மய்யமாக வைத்து வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு பொருளாதாரக் கல்வி மய்யங்களில் ஜெர் மனி, கொரியா, பிரான்ஸ், சீனா, சிங்கப்பூர், மற்றும் மத்திய ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பல்வேறு மாண வர்கள் கல்வி பயில இந்தியா வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட் டுள்ள அசாதாரண சூழலின் காரணமாக திடீரென்று மாணவர்களின் வருகை குறைந்துவிட்டது,
பொதுவாக இயற்கை காரணங்களால் மாணவர் களின் வருகைகள் சிறிது குறைவது எப்போதும் நடைமுறையில் உள்ளது, இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை, ஆனால் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் எப்போது மில்லாத அளவில் 73 விழுக்காடு மாணவர்கள் வருகை குறைந்துள்ளது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. 2013-2014 ஆம் கல்வி ஆண்டில் மாணவர் களின் வருகை 13,961-ஆக இருந்தது, 
ஆனால் 2014-2015 ஆம் ஆண்டில் வெறும் 3,737 மாணவர்களே வருகை புரிந்துள்ளனர். பிரதமர் மோடி சிங்கப் பூர் மற்றும் மலேசியா சென்று தொழில் முதலீடு குறித்து பேசிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் மலேசியாவில் இருந்து 2013 ஆம் ஆண்டு 4000 மாண வர்கள் வருகை புரிந்துள் ளனர். ஆனால் இந்த ஆண்டு மலேசிய மாண வர்களின் வருகை முற் றிலும் இல்லாமல் போனது, 
அதே நேரத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் 200 பேர் 2013-2014 ஆம் ஆண்டு கல்வி பயில வந்தனர். இந்த கல்வியாண்டில் வெறும் 53 பேர்தான் கல்வி வருகை புரிந்துள்ளனர்.   முக்கியமாக வணிகக் கல்வி நிறுவனங்கள், மருத் துவக் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர் களின் வருகைக் குறைவால் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளன.
வெளிநாட்டு மாணவர் களின் வருகையால் பல் கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங் களுக்கு வருமானம் மட்டுமின்றி இந்திய மாணவர்களுக்கு அந்நிய நாட்டுக்கலாச்சாரம் மற்றும் மொழியறிவு பெற வும் பேருதவியாக இருந் தது, வெளிநாட்டு மாண வர்களின் வருகையின்மை யால் அதிக இழப்பு அவர் களுடன் இணைந்து பயிலும் இந்திய மாணவர் களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குவது ஜனநாயகமல்ல! கோவனை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குவது ஜனநாயகமல்ல!
கோவனை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்


சென்னை, நவ.27- சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை இன்று (27.11.2015) சந்தித்து பேட்டியளித்தார்.
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடிய ம.க.இ.க. கலைத் துறை பிரிவின் பாடகர் கோவன் மீது தமிழக அரசு தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. நீதிமன்றத்தில் வாதாடி தற்போது பிணையில் இருக்கிறார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து இருக்கிறது. 
இது, கருத்துரிமைக்கு எதிரான போக்கு என்பதையே காட்டுகிறது. டாஸ்மாக் இல்லாத தமிழகம் உருவாக்கும் நோக்கில் கோவன் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தின் சார்பில் டிசம்பர் மாதத்தில் சென்னையில் பெரிய அளவில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக கட்சி தலைவர் களை சந்தித்து பாடகர் கோவன் குழுவினர் ஆதரவு கேட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை பாடகர் கோவன் சந்தித்தார். அவருடன் மக்கள் அதிகார அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் ராஜூ, பாடகர் சத்யா, மருது ஆகியோர் உடன் வந்திருந்தனர். அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட தாவது:
அவரது பேட்டி வருமாறு:
செய்தியாளர்: மது ஒழிப்பிற்கு எதிராகப் பிரச்சாரப் பாடல் பாடிய கோவன் கைது செய்யப்பட்டு, இப்போது வெளியில் வந்து உங்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்; ஊடகம் சுதந்திரம்பற்றி நீங்கள் பேசி வருகிறீர்கள் அதுபற்றி...?
தமிழர் தலைவர் பதில்: ஜனநாயகத்தினுடைய நான்காவது தூண் பத்திரிகைகள் என்பதை ஜனநாயகத்தின்மூலமாக ஆட்சிக்குச் சென்ற ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்தால், பத்திரிகைகளின்மீது  இப்படி ஒரு பிளிட்ஸ் கிர்க் ஙிறீவீக்ஷ் நிவீக்ஷீரீ தாக்குதல் மாதிரி தொடர்ந்து பல வழக்குகள் போட்டு, அதை அழிக்க அல்லது அவர்களைச் சிறையில் தள்ளவேண்டும் என்கிற எண்ணத்திற்கு ஆளாக மாட்டார்கள்.
பொதுவாக அடக்குமுறைகள் வந்தால், எதிர்வினைகள் வந்தால்  - அதனால் வளருவார்கள். எந்தக் கொள் கையைச் சொன்னாலும் - மதுவிலக்கு என்பது மக்களாலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஒரு வகையில் தமிழக அரசுக்கு, மதுவிலக்கை ஆதரிக்கக் கூடியவர்கள், மதுவிலக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தக் கூடி யவர்கள் நன்றி செலுத்தவேண்டும். ஏனென்றால், கோவன் போன்ற எளிய தொண்டராக, தோழராக இருக்கக் கூடிய ஒருவரை, உலகப் பிரசித்திப் பெற்றவராக ஆக்கியதற்காக ஜன நாயகத்தின் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில், கடைசி வரையில் பழிவாங்கும் தன்மையில் போவோம் என்று சொன்னால், சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது தலையானது; மறுப்பு சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அந்த மறுப்பை ஊடகங்கள் வெளியிடா விட்டால், அதற்கு மேல் நடவடிக்கை எடுப்பதுதான் நியாயமானதாக இருக்குமே தவிர, வேறொன்றும் இருக்க முடியாது. சட்டப்படி பார்த்தால், வழக்குரைஞர் என்கிற முறையில் நான் சொல்கிறேன், மிஸீ நிஷீஷீபீ யீணீவீலீ   நல் எண்ணத்தோடு கூறினோம் என்றால், அந்த வழக்கு நிற்காது. அது வல்லடி வழக்காக முடியும். ஆகவேதான், இனி மேலாவது அரசு தங்களுடைய போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.
செய்தியாளர்: கேரள மாநிலத்தில் மது ஒழிப்பை அமல்படுத்தி விட்டார்கள்; பிகாரில் மது ஒழிப்பை செய்வோம் என்று சொல்லி யிருக்கிறார்கள். தமிழகத்தில் சாத்தியக் கூறுகள் இருக்கும் என்று சொல்கிறார்கள்; ஒரு மூத்த தலைவராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: பிகாரில் ஆட்சியில் இருப்பவர்கள் ஜன நாயகத்தை மதிக்கிறார்கள்; மக்கள் கருத்தை மதிக்கிறார்கள். அதிலும் நம்முடைய தமிழ்நாடு வரலாறு காணாத புதுமையில் இருக்கிறது.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஏடுகள், எதிர்க்கட்சிகள் என்றால் ஆட்சிக்குத் துதி பாட வேண்டும் என்று நினைக்கலாமா?

ஏடுகள், எதிர்க்கட்சிகள் என்றால் ஆட்சிக்குத் துதி பாட வேண்டும் என்று நினைக்கலாமா?
உச்சநீதிமன்றம் இடித்துக் கூறிய பிறகும்கூட தமிழக ஆட்சி அவதூறு வழக்குகளைத் தொடருவதா?

வழக்குகளை - வாபஸ் வாங்குக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
ஆளும் கட்சிமீது குறைகூறும் - விமர்சனம் செய்யும் ஏடுகள்மீது பழி வாங்கும் நோக்கில் அவதூறு வழக்கு களைத் தொடர்ந்து கொண்டு இருப்பது ஒரு ஜனநாயக ஆட்சிக்கு உகந்ததல்ல - இன்னும் சொல்லப் போனால் விமர்சனங்களை வரவேற்கும் பக்குவம் தான் ஓர் ஆட்சிக்கு நல்லது; தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை உடனடியாக வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒரு ஜனநாயக நாட்டில், ஆட்சி, நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை முறையே தூண்கள் என்பது உலகம் ஒப்புக் கொண்ட நியதி.
பாராட்டுவதற்காகத்தான் பத்திரிகையா?
பத்திரிகைத் துறை என்றால் வெறும் பாராட்டும் ஒலி குழல் என்று நினைப்பது தவறானது. இன்னும் சொல்லப் போனால் பத்திரிகைகளுக்குத் தான் பல கண்கள். துழாவித் துழாவி செய்திகளைக் கொண்டு வருவதும்,  அவற்றின் அடிப்படையில் விமர்சனங்கள் எழுதுவதும் பத்திரிகைத் துறையின் மிகப் பெரிய பண்பாடும் கடமையும் ஆகும். துதிபாடுவதுதான் பத்திரிகா தர்மம் என்று எதிர்பார்ப்பது ஒரு வகையான எதேச்சதிகார மனப்பான்மையாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஆட்சியின் பார்வை என்பது ஜனநாயகத்துக்கு விரோதமாக இருந்து வருவது வேதனைக்குரியது - கண்டிக்கத்தக்கதும்கூட
விமர்சனத்தை விரும்புவதே ஆளும் கட்சிக்கு நன்மை!
உண்மையைச் சொல்லப் போனால் ஆட்சியைக் குறை கூறியும், கண்டித்தும் எழுதுவதை நல்லாட்சி என்றால் அதனை வரவேற்க வேண்டும். தவறுகளைத் திருத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ வேண்டும்; நோயைக் சுட்டிக் காட்டினால் டாக்டர்மீது பாயலாமா?
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்               (குறள் 448)
என்ற குறள் மற்றவர்களைவிட ஆட்சியில் இருப்ப வர்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆட்சிக்கு எதிராகப் பேசுவோர்மீதும், ஆட்சியைக் குறை கூறும் ஏடுகள்மீதும் வழக்கு என்பது எந்த வகையில் மக்கள் ஆட்சிக்கு உகந்தது?
ஒருபடி மேலே சென்று விமர்சனம் செய்யும் ஏடுகளை விற்பனை செய்யும் இடத்திலும் சென்று அச்சுறுத்துவது, முக நூலை முடக்குவது போன்றவை அபாயகரமான போக்காகும்.
மறுப்பு எழுத வேண்டியது தானே?
ஒரு இதழில் - ஏட்டில் வெளிவந்த தகவல் தவறாக இருந்தால் - அதனைச் சுட்டிக் காட்டி, மறுப்பு அறிக்கையை அரசு சார்பில் கொடுக்கலாம். அந்த மறுப்பை வெளியிடா விட்டால், சட்டப்படியான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட ஏடுகள்மீது எடுக்கலாம் - அது நியாயமும்கூட!
அத்தகு சந்தர்ப்பத்தைக் கொடுக்காமல், ஒரு சார்பாகவே முடிவெடுத்து - ஏடுகள்மீது  வழக்குத் தொடுப்பதற்குப் பெயர் வழக்கல்ல - வல்லடி வழக்கே!
உள்ளெண்ணம் இல்லாது நல்லெண்ணத்துடன் விமர்சனம் செய்தால் அது சட்டப்படி எப்படி குற்றமாகும்?
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் இதே நிலைதான்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - அதுவும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஆட்சிக்கு எதிராக விமர்சனம் எழுந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளும் - அதனைப் பற்றி சிந்திக்கும் பக்குவமின்றி, இம்மென்றால் சிறைவாசம் என்ற எதேச்சதிகாரத் தொனி ஏற்புடையதல்ல.
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஒரு கட்டு ரைக்காக ஆனந்த விகடன் மீதும், அதனை எடுத்துக்காட்டி, கட்டுரை எழுதியதற்காக 5 முறை முதல் அமைச்சராக இருந்த - மூத்த பத்திரிகையாளர் கலைஞர்மீதும் அவதூறு வழக்கு என்பதெல்லாம் எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.
பழி வாங்கப்பட்ட ஏடுகளின் பட்டியல்!
நக்கீரன்  தி இந்து, இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆனந்தவிகடன் ஜூனியர் விகடன் முரசொலி, தினகரன் ஏடுகள் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியால் அவதூறு வழக்குப் புனையப்பட்ட ஏடுகளாகும்.
இதுவரை இத்தகு வழக்குகளில் ஆட்சிக்குச் சாதகமான தீர்ப்புகள் வந்ததுண்டா?
2003ஆம் ஆண்டில்கூட இந்து நாளிதழில் எழுதப்பட்ட தலையங்கம் தமிழக சட்டசபையின் உரிமையை மீறியதாக ஹிந்து ஏட்டின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர், அந்தத் தலையங்கத்தை மொழி பெயர்த்து வெளியிட்ட முரசொலி யின் நிர்வாகியைக் கைது செய்ய ஆணைப் பிறப்பித்தார் - சபா நாயகர் மாண்புமிகு காளிமுத்து என்பதையும் - இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியம் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
சகிப்புத் தன்மை இன்மை!
சகிப்புத் தன்மை இன்மைபற்றி இந்தியாவில் மதவா தத்தை முன்னிறுத்தி சர்ச்சைப் பெரும் அளவுக்குப் புயலாக வீசிக் கொண்டு இருக்கிறது. அந்தச் சகிப்புத் தன்மை இன்மைப் பட்டியலில் தமிழக ஆட்சியின் இந்தச் செயல் பாடுகளையும் இணைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
வடக்கைப் பாரீர்!
மத்திய அமைச்சர்களை முகநூலில் விமர்சித்திருந்த அய்தராபாத்தைச் சேர்ந்த இரு நபர்கள் கைது செய்யப் பட்டனர்; 2012ஆம் ஆண்டில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயை அவமதித்து முகநூலில் எழுதிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவை எல்லாம் தமிழக ஆளும் தரப்பினருக்குத் தெரியாதா?
உச்சநீதிமன்றம் இடித்துக் கூறியதே!
தமிழ்நாடு அரசு தொடர்ந்து வரும் அவதூறு வழக்கின் தன்மைபற்றி உச்சநீதிமன்றமே இடித்துச் சொன்ன பிறகாவது, தம் போக்கைத் தமிழக அரசு மாற்றிக் கொண்ட தாகத் தெரியவில்லையே!
2001-2006 ஆட்சியில் இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. வின் இத்தகு நடவடிக்கைகளால் மக்கள் தேர்தலில் பாடம் கற்பித்ததைக்கூட ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
மத்திய மாநில ஆட்சியில்..
மத்தியிலும் மாநிலத்திலும் சகிப்புத்தன்மை இல்லாத ஜனநாயகக் கண்ணோட்டம் இல்லாத இரு ஆட்சிகளின் கீழ்  நாடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. திருத்திக் கொள்ளவில்லையென்றால் மக்கள் அதற்கான தண்ட னையைச் சரியான நேரத்தில் வழங்குவார்கள் என்பதில் அய்யமில்லை.
ஆளும் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடுகளில் அருவருக்கத்தக்க எழுத்துகளுக்கு என்ன பதில்?
ஒரு செய்தி - மற்ற மற்ற ஏடுகள்மீது அவதூறு வழக்கைப் போடும் தமிழக அரசு - அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் எழுதப்படும் அவதூறு கொழிக்கும் ஆபாசமான அருவருக்கத்தக்க அடாவடித்தனமான எழுத்துகளுக்கு என்ன பதில்? ஒவ்வொரு நாளும் வெளிவரும் அவ்வேட்டின்மீது வழக்குத் தொடுக்க ஏராளமான காரணிகள் உண்டு. அவற்றை அலட்சியப்படுத்தும் பெருமான்களாக தலை வர்கள் இருந்து வருகிறார்கள்; அதனைக் கோழைத்தனம் என்று எண்ணிவிட வேண்டாம்!
ஆளும் கட்சி என்பது கண்ணாடி மாளிகை எச்சரிக்கை!
ஆளும் கட்சி - ஆட்சி என்பது கண்ணாடி மாளிகை - அங்கிருந்து மற்றவர்கள்மீது கல்லெறிய ஆசைப்படக் கூடாது; ஆசைப்பட்டால் எதிர்வினையைத்தான், விளை வைத்தான் சுமக்க நேரிடும். அவதூறு வழக்குகளை வாபஸ் வாங்குவது அவசியம். கட்சிக் கண்ணோட்டமின்றி இதனை எடுத்துச் சொல்லுவது எங்கள் கடமை - கசப்பான உண்மையும் ஆகும். ஆட்சித் தலைமை சிந்திக்குமாக!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
27-11-2015

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...