Thursday, January 30, 2014

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை


- மதுக்கூர் இராமலிங்கம்
 

“இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.

குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.

என்னுடைய அண்ணன் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர் எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். நாங்கள் இருவரும் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகாவில் வளர்ந் ததுதான் அதிகம் என்கிறான் நாதுராமின் தம்பி கோபால் கோட்சே. காந்தியே ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினார் என்று உண்மை சற்றும் கலவாத அண்டப்புளுகை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றனர் அவர்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் காந்தி பங்கேற்றது உண்மை. ஆனால் அங்கு சென்றபோதும் (1925) காந்தி அவர்கள் தலையில் ஓங்கி குட்டிவிட்டுத்தான் வந்தார். “இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைத்தால், இந்துக்கள் அல்லாத பிறர் குறிப்பாக முஸ்லிம்கள் இங்குவசிக்க விரும்பினால் இந்துக்களுக்கு அடி மைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்துமதத்தை கொன்றுவிடுவீர்கள்” என்றார் காந்தி. ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவா கோட்பாட்டின்படி சிறுபான்மை முஸ்லிம்கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் தர குடிமக் களாகவே இருக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் இந்து மதத்தை கொன்றுவிடுவீர்கள் என்று காந்தி கூறியதால்தான், அவரையே இவர்கள் கொன்றுவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அபாயகரமான முகம் குறித்து காந்தியின் சீடரான நேருவுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. தேசப்பிரிவினையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பட்டேலிடம் நேரு இப்படி கூறினார்,

 “தில்லியில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடைபெற்ற கலவரங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும் பங்கு உண்டு. அமிர்தசரஸில் அவருடைய செய்கைகள் தெளிவாக தெரிந்தன”. கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான இழிந்த போக்கே தன்னை கொலைசெய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாக கூறியிருக்கிறான்.இவ்வாறு கோட்சேயை கொலைக்களம் நோக்கி துரத்திய வார்த்தைகள் ஆர்எஸ் எஸ் தலைவர் கோல்வார்க்கருக்கு சொந்தமானவை. 1939ல் கோல்வார்க்கர் இப் படிக் கூறினார், “துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர் கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது,

 மிக மிக விசித்திரமானது”.கோட்சேயின் குல குருவான கோல் வார்க்கர் 1947ல் இப்படிச் சொன்னார். “இந்துமுஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுதந்திர மில்லை என்று அறிவித்திருப்பவர்கள் அதன் மூலம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்கள். மகத்தான, தொன்மைமிக்க மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்கிற கொடும்பாவத்தை செய்து விட்டார்கள்”.இந்து - முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம் பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர். கோல் வார்க்கரின் வார்த்தைகளில் ஜீவாத்மாவை கொலைசெய்த, மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியை கொலை செய்வது கோட்சேவுக்கு குற்றமாகப்படவில்லை.

மாறாக இந்துத் துவாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண் டாகவே பட்டது.கோட்சேவின் கைகளில் கொலைக் கருவியை தந்ததில் வி.டி.சாவர்க்கருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1944ம் ஆண்டில் சாவர்க்கர் இப்படி எழுதினார், “காந்திஜிக்கு ஒரு பத்தானிய ஆட்சியோ அல்லது நிஜாம் முஸ்லிம் ஆட்சியோதான் நூறு சதவீத சுயராஜ்யமாக தெரிகிறது”.இவ்வாறு காந்திக்கு எதிராக கோல் வார்க்கர், சாவர்க்கர் போன்றவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட வெறுப்புத்தான் கோட்சேவின் கைகளில் துப்பாக்கியாக உருவெடுத்தது. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட் டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்களால் அவர்விடுவிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்சே உள்ளிட்டகைதிகள் சாவர்க்கரின் கால்களில் விழுந்துஆசி பெற்று தாங்கள் செய்த கொலையை புனிதப்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இந்துத்துவா கும்பலுக்கு போற்றத்தக்க பங்கு எதுவும் இல்லை என்பதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்நியரிடம் வாய்தா கேட்கவும், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஆனால், சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக மக்களிடம் உருவாகியிருந்த ஒற்றுமையை, சமயம்கடந்த தேசப்பக்தியை சிதைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதற்கு தடையாக இருந்த காந்தியை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. காந்திஜியைப் பொறுத்தவரை அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான். ஆனால்அவருடைய மதம் இந்துத்துவாவாதிகள் முன்னிறுத்திய மதம் அல்ல. “என்னைப் பொறுத்தவரை ராமனும், ரஹீமும் ஒன்று தான். ஒரே கடவுள்தான். வாய்மை மற்றும்நியாயம் என்ற கடவுளைத்தவிர வேறுஎந்தக்கடவுளையும் நான் அங்கீகரிக்க வில்லை” என்றார் காந்தி.

ஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்போ மனுவின் நவீன பதிப்பு. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, பய உணர்ச் சியை பரப்புவதன் மூலம் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றவன் மனு. அவனை மனதிற்குள் கோவில்கட்டி கொண்டாடிய இந்துத்துவா கும்பலுக்கு காந்தி சொன்ன சத்தியம் எட்டிக்காயாய் கசக்கத்தானே செய்யும். அரசியலில் மதத்தைக் கலப்பதை காந்தி அடியோடு நிராகரித்தார். மதம் கடவுளுக்கும் மனிதனுக்குமான தனிப்பட்ட விஷயம் என்றார் அவர். “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனி யாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்“ என்பது காந்தியின் கருத்தோட்டமாக இருந்தது.`உலகில் எந்த பகுதியிலும் தேசிய இனமும், மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை’ என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது. ஆனால் இவர்களோ இந்தியா முழுவதும் இந்து சாம்ராஜ்யம் விரிந்து பரந்து இருந்ததாகவும், முகலாயர்கள் வந்தபிறகுதான் அந்த சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டதாகவும் பொய்யான வரலாற்றை மெய் போல காட்டி வந்தவர்கள். எனவேதான் காந்தியின் மீது இவர்களுக்கு அளக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் இருந்தது.

காந்தியை கொலை செய்த கைத்துப்பாக்கி தற்போது கார்ப்பரேட் கைக்கூலி விளம்பர மினுமினுப்பில் வளர்ச்சிவேடம் போடுகிறது. காந்தியின் உருவப்படத்தின் மீது மலர்தூவி மவுனம் சாதிப்பது மட்டுமல்ல அவருக்குசெலுத்தும் அஞ்சலி. அவர் காத்துநின்ற, அதற்காக உயிரையும் தந்த மதச் சார்பின்மையை பாதுகாக்க உரக்கமுழங்குவதும், ஒன்றுபட்டு களமிறங்குவதும் தான் அவரை நினைக்கும் பொருத்தமான வழியாகும்!

-- நன்றி : தீக்கதிர்  30-01-2014

Wednesday, January 29, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வுப் பிரச்சினை - புதிய திருப்பம்

தமிழ்நாடு அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தாக்கீது!
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங்கிடுக!
தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!



ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங் காததைச் சுட்டிக் காட்டி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், உடனடியாக தகுதித் தேர்வில்   இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது; அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பாலும், வழிகாட்டுதலாலும் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்புக்கு வழி விட்டவர் அன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

தலைகீழ் மாற்றம் ஏன்?

இப்பொழுதோ அதற்கு மாறாகத் தொடர்ந்து நடந்து வருகிறார். குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ. அ.தி.மு.க. அரசு செய்து வரும் குளறுபடிகள் மூலம்  ஒடுக் கப்பட்ட மக்கள் மத்தியில் கண்டனத்தையும் எதிர்ப்பையும் அதிமுக அரசு தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டு விட்டது.

பிற மாநிலங்களைப் பாரீர்!

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது.
அதன்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.

ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறை பின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய - தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணிலே, சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டப்பட்டது - மிகவும் கண்டிக்கத்தக்கது.

திராவிடர் கழகத்தின் தொடர் நடவடிக்கைகள்

பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு இந்தப் பிரச் சினைக்காக சென்னைப் பெரியார் திடலில்  நடத்தப்பட்டது (5.7.2013).

மக்களின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் 18.7.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!

அ.இ.அ.தி.மு.க. அரசின் சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை  நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபு  அவர்களால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது  - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy)
 
 என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறிய அதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு வீண் வீம்பும், பிடிவாதமும் காட்டாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறோம்.

ஆசிரியர் தேர்வு ஆணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க வாய்ப்பு உண்டே!

பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையிலான கல்விக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் எளிதாகக் கிடைத்து விடுமே! இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.
வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என்பதும் ஓர் அரசின் அடிப்படை கடமை என்பதையும் நினைவூட்டுகிறோம். தமிழ்நாடு அரசு செயல்படுமாக!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
28.1.2014


குறிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு அரசு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பிய ஆணை




இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://viduthalai.in/headline/74259-kveeramani.html#ixzz2rlihIZZk

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மண்டல இயக்குநர் டி.வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜனவரி 16-ஆம் தேதி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்ததில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசின் ஆணையிலேயே (அரசாணை எண்.181) குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் ஆசிரியர் தேர்வு வாரியம் சலுகை வழங்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசாணையின் 9 (ஏ) பிரிவைச் செயல்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதியும் வழங்கவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் கூட விரிவுரையாளர்களுக்கான ஸ்லெட், நெட் தேர்வு நடைமுறைகளே ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஸ்லெட், நெட் தேர்வுகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசின் அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தாததற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷயங்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், புதுதில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைமையகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம்  எடுத்துச் செல்லப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை :

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்து உள்ளார். இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, January 6, 2014

தமிழருவி மணியனின் தவறான தர்க்கங்கள்!

- மஞ்சை வசந்தன்

மதவாதக் கட்சியான பா.ஜ.விற்கு மகுடம் சூட்டி மகிழ தமிழருவி மணியன் தவியாத் தவிக்கிறார். பரிதவிக்கும் இலங்கைத் தமிழரின் வாழ்விற்கு பா.ஜ.க., விடிவு காணும் என்பது அவரது ஒற்றை நம்பிக்கை! யாரை நம்புவது என்ற தீர்க்கம்கூட இல்லாத இவர், கற்பனைகளின் உந்துதலில் கூட்டணி அமைத்து, மதவெறிக் கும்பலுக்குத் துணை நிற்கின்றார். தமிழில் பேச வல்லவர் என்ற தகுதிமட்டும், அரசியல் தீர்க்கத்திற்கும், தீர்விற்கும் போதாது என்ற பால பாடம்கூட இவர் அறியாதது பரிதாபந்தான்!

காங்கிரஸும் வேண்டாம், தி.மு.க., அ.தி.மு.க.வும் வேண்டாம் இது மணியனின் மார்க்கம். திராவிடக் கட்சிகள் வேண்டாம் என்ற பா.ம.க.வினின்று இவர் மாறுபடுகிறார். இந்த முரண்பாட்டிற்குள் பா.ம.க.வை நுழைக்க முட்டித் தள்ளுகிறார்.

தி.மு.க. அணி வலுப்பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, கரு உருவாகும்போதே கலைத்து விட்டுக் கொண்டிருக்கும் தினமணி அய்யர், தற்போது அணி அரும்பும் என்று செய்தி வந்ததுமே துடித்துப் போய், தமிழருவி மணியனின் தலைவாசலைத் தட்டியுள்ளார்.

முதலில் நாம் கேட்கும் சில கேள்விகள்:

1. ஊழல் இல்லாத தூய கட்சி எது?

2.இலங்கைப் பிரச்சினையில் உறுதி யான நிலைப்பாடுள்ள கட்சி எது?

3. 2016இல் ஆட்சி அமைப்போம் என்று சொல்லாத கட்சி எது?

இதற்கு நாணயத்தோடு தமிழருவி மணியன் பதில் சொல்ல வேண்டும். இதில் தி.மு.க.வை மட்டும் குற்றவாளி என்று பழி சுமத்துவது அயோக்கி யத்தனமல்லவா?

ஆக, ஊழல், இலங்கைப் பிரச்சினை என்பதெல்லாம் மக்களைத் திசை திருப்ப செய்யப்படும் வஞ்சகத் திட் டங்கள். இலங்கைப் பிரச்சினையில் அதிகம் இழந்த கட்சி, பாதிக்கப்பட்ட கட்சியென்றால் அது தி.மு.க. மட்டுமே. ஆனால், மற்ற எல்லாமும் ஆதாயம் அடைந்த கட்சிகள்.

இலங்கைப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டில் இருந்த கட்சி எதுவும் இல்லை. ம.தி.மு.க.வைச் சொல்லலாமே என்றால், விடுதலைப்புலிகளை, அதன் தலைவரை அறவே வெறுத்து, இராச பக்சேவிற்கு வக்காலத்து வாங்கிய அ.தி. மு.க.வுடன் கைகோர்த்தவர் வைக்கோ.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு தி.மு.க. ஆட்சியில் நடந்திருந் தால், பழ. நெடுமாறனும் வைக்கோவும் எப்படி எகிறியிருப்பார்கள்? இது என்ன இரட்டை அளவுகோல்?

முள்ளிவாய்க்காலில் முனைப்புடன் நடந்த போரின்போது, பிரணாப்முகர்ஜி கலைஞரை ஏமாற்றியது உண்மை; கலைஞர் நம்பி ஏமாறியதும் உண்மை.

தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்ற உள்ளுணர்வு உடையவர் கலைஞர். அரசியல் பண்ண வேண்டிய கட்டாயத்தில் சில நிலைப்பாடுகள் இருந்திருக்குமே தவிர, இனத் துரோகம் செய்யும் உள்ளம் உடையவர் அல்ல அவர்.

அவரைத் தவிர இனத்திற்காக இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்?

பிரணாப் முகர்ஜி பேச்சில், உறுதியில் ஏமாறாமல் கலைஞர் எச்சரிக்கையாய் இருந்து, காங்கிரஸ் ஆதரவை விலக்கி வெளியில் வந்திருந்தால், இந்தியா - காங்கிரஸ் ஆட்சி - இலங்கை நட்பை விட்டு, விடுதலைப்புலிகளுக்கு உதவியி ருக்குமா? ஏன், பா.ஜ.க.வே. ஆட்சியில் இருந்தாலும் அதைச் செய்திருக்குமா?
தமிழருவிமணியனை கேட்கிறோம், பா.ஜ.க. தனியீழத்தை அங்கீகரித்து, விடுதலைப்புலிகளை ஆதரிக்கத் தயார் என்று அறிவிக்கத் தயாரா? தமிழருவி இந்த உத்தரவாதம் அளிக்கத் தயாரா/

தி.மு.க. அன்றைக்கு காங்கிரஸ் ஆதரவை விட்டு வந்திருந்தால், பதுங்கிப் பதுங்கி இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசு, வெளிப்படையாக உதவி யிருக்கும். தட்டிக் கேட்கக் கூட நாதி யிருந்திருக்காது. போர் இன்னும் தீவிர மாய் இருந்திருக்கும், இழப்பும் கூடியி ருக்கும்?  ஒரு மாநில ஆட்சி, கட்சி என்ன செய்துவிட முடியும்? காங்கிரஸில் இருக்கின்ற தமிழனே காட்டிக் கொடுக்கும்போது, இலங்கைச் சிக்கலில் என்ன தீர்வுகாண முடியும்?

இன்றைக்கு கூட்டணி அமைக்க முயலும் தமிழருவி மணியன், தனி ஈழத்தை பா.ஜ.க. அமைக்கும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்க செய்வாரா? அது இயலாது என்றால், அருவியாய் பேசிக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டும்!

இனி விஜயகாந்த் விவகாரத்திற்கு வருவோம்:

தி.மு.க. --_ தே.மு.தி.க. கூட்டணிக்கு வாய்ப்பு என்றவுடன் வைத்தியநாத அய்யருக்குத் தூக்கம் வரவில்லை. உடனே தமிழருவிமணியனின் கதவைத் தட்டியுள்ளார். அவர் தர்க்க ரீதியில் விஜயகாந்தை குழப்பியுள்ளார்.

என்ன அவரது தர்க்கம்?

1. 2016-இல் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்பதை விஜயகாந்தால் ஏற்க முடியுமா? என்கிறார்.

2016இல் அன்புமணி முதல்வர் என்று சொல்லும் பா.ம.க.வுடன் மட்டும் விஜயகாந்த் இணைய முடியுமா? ஏற்க முடியுமா?

உண்மையென்னவென்றால், தி.மு.க. வுடன் கூட்டு சேர்வது தே.மு.தி.க.விற்கு வலு, இலாபம் பா.ம.க.வுடன் கூட்டு சேர்வது தற்கொலைக்குச் சமம். ஆதாயம் பா.ம.க.விற்குதான்! அ.தி.மு.க .வுடன் கூட்டு சேர்ந்து நேர்ந்த இழப்பை விட பெரும் இழப்பு இதில் வரும் இதை விஜயகாந்த் சிந்திக்க மாட்டாரா?

2. தி.மு.க. ஊழல் மூட்டையை தே.மு. தி.க. சுமக்குமா? மணியன் கேட்கிறார்.

பா.ஜ.க. ஊழல் செய்யாத கட்சியா? பங்காரு லட்சுமணன்கள் பட்டவர்த்தன மாய் வாங்கியதெல்லாம் மணியனுக்கு மறந்து போய் விட்டதா?

3. திராவிடக் கட்சிகள் கூட்டணி இல்லையென்றால், பா.ம.க., திராவிடக் கட்சியான மதிமுகவுடன் எப்படி கூட் டணி வைக்க முடியும். அது திராவிடக் கட்சியில்லையென்று வைக்கோ சொல்வாரா?

தே.மு.தி.க. திராவிடக் கட்சி தானே! அ.இ.அ.தி.மு.க.வை திராவிடக் கட்சி என்று ஏற்கும்போது, தே.மு.தி.க.விற்கு தர முத்திரைத் தரலாமே! அப்படியிருக்க இரு திராவிடக் கட்சிகளுடன் பா.ம.க. எப்படி கூட்டுச் சேரும்?
தலித்திற்கு எதிரான கட்சி பா.ஜ.க. என்பதை, தலித் கட்சியை சேர்ப்பதன் மூலம் துடைக்கப் போகிறாராம். ஒரு கட்சியை ஒட்ட வைத்தால் தலித்து களின் மோசக் கட்சி, பாசக் கட்சியாகி விடுமா? இந்த இரசவாத வித்தையை மணியன் எங்கு கற்றார்? என்ன செய்ய! சேர்க்கை அப்படி!!

விஜயகாந்த் அவர்களுக்கும், வைக்கப்பட வேண்டிய வேண்டுகோள் இதுதான். என்றைக்கு இருந்தாலும் தமிழர் உணர்வுள்ள தி.மு.க.வுடன் சேர்வதுதான் எதிர்காலத் தமிழர் நலனுக்கு நல்லது. கலைஞரை, ஸ்டா லினை தட்டிக் கேட்க இவர்களுக்கு உரிமையுண்டு. இந்த உரிமை வேறு எங்கு கிடைக்கும்?
உரிமையுள்ள இடமா? உருமாறி கபடம் ஆடும் கூடாரமா? விஜயகாந்தும், வைக்கோவும் சிந்திக்க வேண்டும்!

திராவிடத் தீண்டாமையை பா.ம.க.வும் கைவிட்டு, தாழ்த்தப்பட்ட வர்களும் வன்னியர்களும் மீண்டும் ஒன்றுபட்டு, தமிழர் என்ற உணர் வோடு, தமிழர் அணியை அமைத்து தமிழர் நலன் காக்க வேண்டும்; தமிழர் உரிமைகளை, அடையாளங்களை, சிறப்புகளை மீட்க வேண்டும்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


தாழ்த்தப்பட்டோரே, பிற்படுத்தப்பட்டோரே உங்களுக்குத் தகுதி இல்லையாம்!

சமூக நீதிக் கொள்கையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதாரணமாக விழவில்லை; தந்தை பெரியார் சொல்லுவதுபோல தடுக்கி விழுந்தவன் அரிவாள் மணையில் விழுந்தது போல அல்லவா விழுந்திருக்கிறது!

அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். (பக்கம் 4) இடஒதுக்கீட்டுக்கு இன்னல் என்றால் பொறுக்க மாட்டோம் என்று பொங்கு கிறாரே கருணாநிதி? என்று பெட்டிச் செய்தியை வெளியிட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் கருணாநிதி கருணாநிதி என்ற காமாலைக் கண்ணனின் (Phobia)  பார்வை தானா?

சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசக் கூடாதா? அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருக்கு இல்லாத அக்கறையா இவர்களுக்கு?
சமூகநீதியில் சரித்திரம் படைத்தவராயிற்றே! இது சூத்திரர்களுக்கான அரசு என்று சட்டப் பேரவை யிலேயே முழங்கிய முத்தமிழ் அறிஞர் ஆயிற்றே! கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்றால் வக்கணையாக எழுதுவதால் என்ன பயன்?

கலைஞர் மட்டுமா கண்டித்துள்ளார்? முதல் அறிக்கையை திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளனரே!

உயிர் காக்கும் மருத்துவத்தில் அதுவும் பல் நோக்கு சிகிச்சை மய்யம் என்ற தலை சிறந்த விஞ் ஞானத் தரமான மருத்துவ சிகிச்சைக்கு இலக் கணம் வகுக்கின்ற ஓர் அமைப்பில் இட ஒதுக்கீட்டு முறை இடையூறாக அமைந்து விடக் கூடாது என்பதை மக்களின் ஆரோக்கியத்தில் அளவில்லா முன்னுரிமை அளித்துவரும் நம் அன்னைத் திருமக ளின் அரசு பரிசீலித்ததை ஏதோ இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது போல கருணாநிதி இட்டுக் கட்டிய பித்தலாட்டத்தை அரங்கேற்றப் பார்ப்பது அவரது அரசியல் மோசடியையே காட்டுகிறது என்று எழுதுகிறது அதிமுக ஏடு?

இதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது?  தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப் பட்டோருக்கும் இடஒதுக்கீடு அளித்தால் உயிர் காக்கும் மருத்துவம் செத்துப் போய் விடும் என்கிறார்களா?

உயிர்காக்கும் மருத்துவப் பணிகளுக்கு தாழ்த்தப் பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் லாயக்கு அற்றவர்கள் என்கிறதா அ.இ.அ.தி.மு.க. ஏடு? இதுதான் இந்த ஆட்சியின் நிலைப்பாடா?

இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தால் தகுதி திறமை  போய் விடும் என்று பார்ப்பனர்களிடம் இரவல் குரல் வாங்கி அம்மையாருக்காக வக்காலத்து வாங்குகிறதா அண்ணா தி.மு.க.?

இதுதான் அண்ணா கூறிய சமூக நீதியா? அண்ணா திமுக என்று பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இடஒதுக்கீட்டில் அண்ணாவின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ளாதவர்கள் எல்லாம் அண்ணா பெயரைப் பயன்படுத்தலாமா? பெரியார் பெயரைப் பயன்படுத்தலாமா? திராவிட என்ற சித்தாந்தத்தின் குறியீட்டை வைத்துக் கொள்ளலாமா?

தாழ்த்தப்பட்ட மக்களே, பிற்படுத்தப்பட்ட மக்களே! உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் உயிர் காக்கும் மருத்துவத் தொழில் உருப்படாமல் போகுமாம்  - உயிர் களைக் காக்கும் ஆற்றல், சக்தி உங்களுக்குக் கிடையாதாம்.
இதுதான் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி - புரிந்து கொள்வீர்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குரங்கு சாமிக்கு இப்படி ஒரு கொண்டாட்டமா?


ஆஞ்சநேயர் என்ற அனுமாருக்கு ஜெயந்தியாம் - அதாவது பிறந்த நாளாம்!
 
அனுமாருக்குப் பிறந்த நாள் முன்பெல்லாம் கொண்டாடுவதில்லை; அண்மைக் காலத்தில் பார்ப்பனப் பண்பாட்டின் பரிமாணங்கள் பெருகிய வண்ணமே உள்ளன! இந்து மதப் பிரச்சாரப் புதிய உத்தி!
 
யாருக்காவது சந்தேகம் வந்தால் நம்ம சன் டிவி போன்ற பல டி.வி.களில் வரும் சீரியல்களையும் மெகா சீரியல்களையும் பார்த்தாலே தெரியும்.
 
நாட்டில் யாருக்குமே தெரியாத புதிய சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள், சாபங்கள், பேய் வந்து பெண்கள்மீது ஏறிக் கொள்ளுதல் மஹா பாரதம் இப்படி பரிசு பெற வேண்டிய புருடாக்களை பலமாகப் பரப்பி வருகின்றனவே!
 
புராணக் கதைப்படி அனுமார் எப்படி பிறந்தார் என்றால் வாயு புத்திரன் அவர், அதாவது காற்றுக்குப் பிறந்தவர் - நம்நாட்டில் காற்றுக்குக்கூட பிள்ளைகளைப் பெற்றுத் தரும் விநோதமான சக்தி உண்டு போலும்!
 
இன்னொரு பக்கத்தில் பீமனோடும் தொடர்புபடுத் திக் கதைவிடல்!
 
அறிவியல்  - பரிணாமத் தத்துவப்படி டார்வின் கூற்றுப் படி, குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பது ஒருபுறமிருக்க, இந்த அனுமான் எப்போது, எப்படி பிறந்தான்? என்பதையெல்லாம் கிராஸ் எக்சாமின் பண்ணினால் அது வாதத்திற்கு நிற்காது!
 
அந்த அனுமார்  கடலைக் கடந்து இலங்கைக்குத் தாவி சீதா பிராட்டியைச் சந்திக்கும் இராம தூதுவனாகச் சென்று, சீதையிடம் அந்தக் குரங்கு பேசியதாம்!
அவள் தயங்கியவுடன், அந்த சந்தேகத்தைப் போக்கிட ஸ்ரீமான் இராமச்சந்திர மூர்த்தியின் அங்க மச்ச அடையாளங்களையெல்லாம் கூட அதுவும் வெகு ரகசியமானவைகளாக சீதை - இராமன் மட்டுமே அறிந்த வைகளைக்கூட அனுமன் புட்டு புட்டு வைக்கிறான்! என்னே கொடுமை!
 
(சந்தேகமிருந்தால் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டத்தைப் பார்த்து விவரம் தெரிந்து கொள்ளுங்கள்).
 
நாமக்கல் ஆஞ்சநேயர் கடவுள்! இவருக்கு அங்கே ஜெயராமய்யர்கள் அர்ச்சனை செய்யும் பிரபல ஜோதிடக் கோயிலுக்குத் தான் தேவகவுடா, எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் முதலிய பலரும் சென்று அர்ச்சனை, வேண்டுதல் நடத்தி  பதவியைக் காப்பாற்ற முடியாது ஏமாந்தவர் களானவர்கள் என்றாலும் புத்தி வரவில்லையே பக்தர்களுக்கு!
 
குரங்கைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் நாடு இந்தியா என்று கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிய கட்டுரைகளில் எழுதி யுள்ளார்! அதன் மூலம் கார்ல் மார்க்ஸ் பேனாவையும் நம்ம ஊர் அனுமார் ஒரு பதம் பார்த்து விட்டார்! ஜெய் அனுமான்!
 
வாழ்க ஜெய் அனுமான்! அவரது ஜெயந்தியில், தஞ்சை, திருச்சி பல கோயில்களில் 10,000 வடை மாலை சாத்தி அதோடு 10,000 லிட்டர் பால், தேன், நெய்யை அந்தக் கல்லின்மீது ஊற்றி பாழ்ப்படுத்தி பக்தி பரவசம் பெற்றுள்ள செய்தியை நமது டி.வி.கள். இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை விட்டு விடக் கூடாது என்று கருதி படம் பிடித்துக் காட்டி பக்தியைப் பரப்பிட புத்தியை ஒழிக்கவும் ஆயத்தமாகி விட்டார்கள். ஞான பூமியல்லவா நமது பூமி!
 
பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தைகள் கோடிக் கணக்கில் ஒருபுறம்!
மறுபுறம் இப்படி கல் சிலை - குரங்குக்கு பாலாபி ஷேகம் என்று கூத்து!
அட வெட்கம் கெட்ட ஜெனமங்களா? செவ்வாய் கிரகம் சென்றாலும் உங்கள் புத்தி மாறாதா? தெளி வடையாதா?
 
gt6அங்கும் சென்று அனுமாருக்குக் கோயில் கட்டி ஜெயந்தி கொண்டாட வடை சுடாமல் இருந்தால் சரி!
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...