Friday, February 15, 2008

விடுதலை - தற்காலிக முகவரி


விடுதலை இணைய தளத்தின் முகவரி தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
வாசகர்கள் இங்கு செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்.

Wednesday, February 13, 2008

மோடியின் வெற்றி: காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?



தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து, கர்நாடகத்தில் 7 நாள் ஆட்சி என்ற கேலிக் கூத்தால் அவமானப்பட்ட பா.ஜ.க.,வுக்கு குஜராத்தில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது, உற்சாக பானத்தை அருந்தியவன் போல திடீர் மகிழ்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கிளம்புவது இயல்பானது-தான்.

குஜராத் சட்டப்பேரவையின் மொத்த இடங்கள் 182.

இதில் மோடியின் கட்சியான பா.ஜ.க., 117 தொகுதிகளையும், காங்கிரஸ் 59 தொகுதிகளையும், அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூன்று தொகுதிகளையும், அய்க்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியையும், சுயேச்சைகள் இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

காங்கிரஸ் முன் இருந்ததைவிட சற்றுக் கூடுதலான இடங்-களை இம்முறை பெற்றுள்ளது. என்றாலும், இது அதற்கு ஆறுதலாக அமையவில்லை.

மோடிக்கு எதிரான வாக்குகளை, காங்கிரஸ் ஒரு சிறப்பான முற்போக்குக் கூட்டணி அமைத்து - 2004 இல் தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் ஒரு அருமையான அரசியல் வியூகம் அமைத்து, பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, உழைத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை உள்பட 40 மக்களவைத் தொகுதி-களையும் கைப்பற்றியது போல செய்திடத் தவறியதனால்தான் இந்த தோல்வி காங்கிரசுக்கு!

மோடியைத் தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங் கிணைத்து, பொது வேட்பாளர்களை (இடங்களைப் பகிர்ந்து கொண்டு) நிறுத்தியிருந்தால் வெற்றி, இப்படி கானல் நீராக ஆகி இருக்காது!

செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் உள்ள 182 இடங்களில் 166 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, அது போட்டியிட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த 14 தொகுதிகளில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துவிட்டது.

50 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுமார் 5000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியா-சத்தில்தான் தோல்வி அடைந்து உள்ளனர்.

மாயாவதி கட்சி (பகுஜன் சமாஜ்) தனது வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரித்ததே இதற்கு முக்கிய காரணம். தாழ்த் தப்பட்ட சமுதாய வாக்குகள், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், பார்ப்பனர் போன்ற முன்னேறிய ஜாதியினர் - இவர்கள் எல்லாம் மோடிக்கு எதிரான வாக்குகளை, பகுஜன் சமாஜ் கட்சிக்கே போட்டனர்!

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது படுதோல்வி அடைந்தது என்றாலும், காங்கிரசு பெரும்பான்மை பெரு வதைத் தடுத்து இருக்கிறது என்பதே ஆய்வாளர்-களின் கருத்து.

காங்கிரஸ் பிரச்சாரத்தில், மோடியை மரண வியாபாரி என்று திருமதி சோனியா காந்தி பேசியது (அவரது உரையை தயாரித்தவர்களின் மாபெரும் தவறு அது) எதிர்மறை விளைவை உருவாக்கி, பூமராங் ஆகிவிட்டது!
தேர்தல் பிரச்சாரம் என்பது சர்க்கஸ் கம்பியில் வித்தைக்காரன் நடப்பதுபோல! விழிப்போடு செய்யவேண்டும்.

மோடியின்மீது இருந்த வெறுப்பு, எதிர்ப்பு, கசப்பு உணர்வுகளை சரியான வகையில் ஒருமுனைப்படுத்தி, ஒரு வெற்றிகரமான கூட்டணியை அமைக்கத் தவறியதால்தான் மோடி மீண்டும் வந்து, அரசியல் ஆணவத்து-டன் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது!

மற்ற காரணங்கள் சாதாரணமானவை.

மீண்டும் ஒரு இந்துத்துவா ஆட்சி உருவாகி, சிறுபான்மைச் சமுதாயத்தவர்களான இஸ்லாமியர், கிறித்தவர்களின் பாது காப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது!

பா.ஜ.க., முக்கியத் தலைவர்களுக்கு உள்ளுக்குள் மோடியின் வெற்றி உற்சாகத்தினை தரவில்லை. ஆனால், அத்வானி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டாளிகளுக்கு இது பெரிய உள்காயத்தை ஏற்படுத்தியுள்ளது!

காங்கிரசின் தலைமை, இந்த அமெரிக்-காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு, இடதுசாரிகள் மற்றும் முற்-போக்குச் சிந்தனையாளர்களின் ஆதரவினை இழக்காமல், 2009 வரை அய்ந்தாண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து நடத்திடவேண்டும்.

விலைவாசி போன்றவற்றில் மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தி மத்திய ஆட்சி-யாளர்-கள் நடந்துகொள்ளவேண்டும். இத்-தோல்வியை, ஒரு வகையில் காங்கிரசை ஒரு சுய பரிசோதனை செய்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகவே கருதிடவேண்டும்.

உடனடியாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (ருஞஹ)யின் முக்கியத் தலைவர்-களையும் டில்லியில் கூட்டி, அதன்  பொதுத் திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த உறுதி எடுத்துக் கொண்டு, அதில் உள்ள கட்சிகளையும், இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களையும் அரவணைத்து, 2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே ஒரு வியூகம் வகுத்து, இந்தக் கூட்டணி யினை மிகவும் வெற்றிக் கூட்டணியாக்க ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் சிற்பியான முதல்வர் கலைஞர், லாலுபிரசாத் போன்றவர்களிடம் நன்கு ஆலோசித்து, வரும் 2009-இல் மதவெறி சக்திகளுக்கு, ஜாதி வெறி சக்திகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள இப்போதே பணிகள் (2008 முதலே) தொடங்கிடவேண்டும்.

தோல்விகளை அனுபவங்களாகக் கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதே சிறந்தது!

விழுவது தவறல்ல; விழுந்தவுடன் எவ்வளவு விரைவில் எழுந்து நிற்க முடியுமோ அவ்வளவு விரைவாக எழுவதே முக்கியம்.
அதுவும் அரசியலில் மிகமிக முக்கியம்!


கி. வீரமணி
ஆசிரியர்

Thursday, February 7, 2008

எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு
இந்து முன்னணியினர் கைது - எதைக் காட்டுகிறது?



எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தட்டும்!




தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இந்து முன்னணியினரே குண்டு வைத்துத் தகர்த்துள்ள பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24 ஆம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டுவெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காய மடைந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் (வயது 40) அண்ணன் உள்பட 3 பேரை குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக் காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தென்மண்டல அய்.ஜி. சஞ்சீவ்குமார், டி.அய்.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. சிறீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட இந்து முன்னணி தென்காசி நகர பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன் (வயது 42), குமார் என்ற கேடிசி குமார் (வயது 28), நாராயண சர்மா (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம்.ரவிபாண்டியனிடம் நடத்தப் பட்ட விசாரணையில், தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அவருக்குச் சொந்தமான கேபிள் டி.வி., அறையில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து, அவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக, மின்சார ப்யூஸ் கேரியரை உருவி மின் தடையை ஏற் படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண் டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை வடிவமைத்துள்ளனர். - இவ்வாறு அவர்கள் கூறினர்.(தினகரன், 5.2.2008, பக்கம் 6)
இந்தச் செய்திகள் தெரிவிப்பது என்ன?
இந்தச் செய்திகள் தெரிவிக்கும் பாடம் என்ன? இந்து முன்னணி வகையறாக்கள் திட்டமிட்டு மதக் கலவரத்தை உண்டாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. மண்டைக் காடு கலவரம்பற்றிய ஜஸ்டிஸ் திரு. பெ. வேணுகோபால் அவர்களின் அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் எப்படியெல்லாம் மதக்கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சதுமுகையில் செருப்பு மாலை போட்டவர்கள் யார்?
ஈரோடு - சத்தியமங்கலம் அருகில் சதுமுகை என்ற ஊரில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டும், முனீஸ்வரன் சிலையைச் சிதைத்தும் மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக இரண்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்து ஏடே வெளிப்படுத்தியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது. (தி இந்து, 18.2.2002).கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்க்கின்றனர் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் செய்யமாட்டார்கள்?சதி வேலைநாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் அப்படி சொல்பவர்களே மதக் கலவரங் களை விளைவிக்கக் கத்தி தீட்டு வதும் எத்தகைய சதி வேலை!உளவுத் துறை தீவிரமாக விசாரிக்கட்டும்!காவல்துறை - உளவுத் துறை இந்த இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடி கண் திறப்பதற்குள் ளாகவே விஷ விதைகளை ஊன்றிடக் கூடிய பயிற்சி பெற்ற ஆபத்தானவர்கள் இவர்கள்.தென்காசி குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய ஏடுகள் கூறுகின்றன.இவர்களைத் தீவிரமாக விசாரித்தால், இவர்களின் பின்னணி யில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் - இந்தக் கும்பலின் தொடர்ச்சி எங்கெங்கெல்லாம் செல்லுகிறது என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.இந்தத் திசையில் புலனாய்வு தீவிரமாகட்டும்!







தலைவர், திராவிடர் கழகம்.

Monday, February 4, 2008

தினமணி கக்கும் நஞ்சு


நாட்டு நடப்பு
தமிழர் பண்பாட்டைப்பற்றி தினமணிகள் பேசலாமா? தமிழர் பண்பாடு என்றால் என்ன? என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒருமுறை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்த்து ஒரு பேட்டியில் வினா எழுப்பினார்.அதுவா? - அம்மாவை வாடி என்றும், அக்காவை போடி என்றும் சொல்லாததுதான் தமிழர் பண்பாடு என்று கூறினார்.தினமணி (3-2-2008)யின் முதல் பக்கம் கார்ட்டூனை பார்க்கும்பொழுது, தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் அவர்கள் காட்டும் வெறி இன்னும் அடங்கவில்லை என்பதைதான் வெளிப்படுத்துகிறது. கணவன் பேசுவதை மனைவி ஒட்டுக் கேட்பதும், மருமகள் பேசுவதை மாமியார் ஒட்டுக் கேட்பதும், பிள்ளைகள் பேசுவதை பெற்றோர்கள் ஒட்டுக் கேட்பதும் தமிழர் பண்பாடுதானே என்று கருத்துப் படம் வெளியிட்டிருக்கிறது தினமணி.டெலிபோனில் ஒட்டுக் கேட்பது பற்றிய பிரச்சினையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தமிழர்களை இழுத்துக் கொச்சைப்படுத்த வேண்டுமா? டெலிபோனில் ஒட்டுக் கேட்கப்படுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு.பிரச்சினை எதுவாயிருந்தாலும் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமிரும், ஆணவமும்தானே இதன் பின்னணியில் இருக்கிறது.ஒட்டுக் கேட்பது இயல்புதானே என்று பொதுவாகச் சொன்னால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒட்டுக் கேட்பது என்பது தமிழர் பண்பாடுதான் என்று தினமணிகள் எழுதுவது - தமிழினத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் அடக்க முடியாத திமிர் பிடித்த துவேஷம் என்பது அல்லாமல் வேறு என்ன?ஒட்டுக் கேட்பது, போட்டுக் கொடுப் பது, உயர் பதவிகள் பெறுவதற்காக மேலதிகாரிகளை அந்தரங்கத்தில் சந்திப்பது என்பதெல்லாம் பார்ப்பன வட்டாரத்துக்குக் கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!பண்பாட்டைப் பற்றியெல்லாம் பார்ப்பனர்கள் பேச ஆரம்பித்தால் அது எங்கே கொண்டு போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும், கண்ணாடி வீட்டிலிருந்தா கல் எறிவது?பெற்ற மகளையே பெண்டாண் டான் படைப்புக் கடவுள் பிர்மா - என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டுள்ள கூட்டமா பண்பாடு களைப் பற்றிப் பேசுவது? கோள் சொல்லுவதற்கும், சண்டை மூட்டி விடுவதற்கும், ஒட்டுக் கேட்பதற் கும் என்றே நாரதன் என்ற கடவுளை கற்பித்துள்ள கூட்டத்திற்கு இதுமாதிரி பிரச்சினைகளைப்பற்றி பேசவோ, எழுதவோ அருகதை உண்டா?தமிழைப் பேசிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழிலேயே பத்திரிகைகளை நடத்தி, தமிழர்களின் பணத்தால் வயிறு நிரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது என்பதையே தம் ரத்த ஓட்டமாகக் கொண்டு திரிகிறது என்பதைத் தமிழர்கள் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டாமா?தமிழ் செம்மொழியானால், நாலு பிளேட் பிரியாணி கிடைக்குமா? என்று தினமலர் கேள்வி கேட்கிறது. தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று கலைஞர் அறிவித்தால் - கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணை யிலே வை என்ற கதைதான் என்கிறது கல்கி.வேறு எது எதற்கெல்லாமோ கச்சை கட்டிக் கொண்டு கிளப்பும் நம் தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் - இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களைச் சீண்டுவதையே, கொச்சைப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படுகிறார்களே, இவர்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டாமா?தினமணி மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையிலே தஞ்சம் புகுந்துவிட்டது. திருவாளர் சோ வின் பினாமியாக இருக் கக் கூடிய ஒருவர், தினமணியை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கும் வரை ஓயமாட்டார் என்று தெரிகிறது.
- மயிலாடன்


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...