Thursday, August 31, 2017

பிரதமர், முதல்வர்களுக்கு ஆரம்ப அறிவியல் கல்வி தேவை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் 2016-17ஆம் ஆண்டிற்கான  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி கூறியிருப்பது ஒரு நகைச்சுவை விருந்துதான்.
"இராமாயண காலத்திலேயே இலங்கைக்கு சேதுப்பாலம் கட்டியுள்ளார்கள். இதற்கு  திட்டமிட்டவர் ராமன். அவரது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று உலகம் முழுவதும் பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ராமன் தலைசிறந்த பொறியியலாளர் மட்டுமல்ல, அவர் ஒரு பொதுநல நோக்காளர். ஆகையால் தான் சேது பாலம் கட்டி இலங்கையையும், இந்தியாவையும் இணைத்தார். அவர் பாலம் கட்டுவதற்கு அணில்கள் உதவி செய்துள்ளன. தற்போதும் அந்த பாலம் கடலுக்கு அடியில் இருப்பதை நாம் பார்க்கிறோம். ராம் சேது பாலம் ராமனின் கற்பனையில் தோன்றியது. அதன் பின் தான் தற்காலிக பாலத்தை என்ஜினியர்கள் கட்டியுள்ளனர்" என்றார்.
"போரில் லட்சுமணன் மயங்கி விழுந்தவுடன், வடக்குப் பகுதியில் அதற்கான மூலிகை இருக்கிறது. அதை எடுத்து வரச் சென்ற அனுமன் மூலிகையின் பெயரை மறந்துவிடுவார். அதன் பின் அந்த மலையையே தூக்கிக் கொண்டு வருவார். மலையையே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது எத்தகைய தொழில்நுட்பம்!.உள்கட்டமைப்பு பணிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் தான் கைகொடுத்தது.
இன்று நமது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஏவுகணைகள் இலங்கையுடன் போர் புரிந்த ராமனின் அம்புகளை மய்யமாக வைத்துத்தான் செய்யப்பட்டுள்ளன. இராமாயணத்தில் ராமன் ஏவிய ஒவ்வொரு அம்பும் ஒரு ஏவுகணையாகும். இதனை முதன்மையாக வைத்துதான் அதே தொழில் நுட்பத்தில் இந்திய ராணுவம் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. தற்போதுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் ராமன் மற்றும் இராமாயணத்துடன் தொடர்புடையதாகும். ஆயுதம் மற்றும் உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக பொறியியலிலும் ராமன் ஈடுபட்டுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைக்கிறோம்.
ஆனால், அப்போதே அனுமன் குரங்குகள் படையை ஒன்றிணைத்தார். இது தான் சமத்துவம். இதைத் தான் ராமராஜ்ஜியம் என்று மகாத்மா காந்தி பேசினார். இதை நரேந்திரமோடி தற்போது செயல்படுத்தி வருகிறார்" என்றார்.
இதே குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் முதல் வரும், இன்னாள் பிரதமருமான மோடி 2015ஆம் ஆண்டு மும்பையில் அம்பானிக்குச் சொந்தமான மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப அறுவைசிகிச்சை மய்யம் ஒன்றை திறந்துவைத்து "இந்தியாவில் தான் முதல் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நடந்தது; அதனைச் செய்தது சிவன்" என்றாரே பார்க்கலாம்.
2016ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தின் போது பேசிய பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான விஜய் வர்கியா "மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு சென்றதால்தான் நேபாளத்தில் பூகம்பம் வந்துவிட்டது" என்று கூறினார்.
உத்தரப் பிரதேச முதல்வரும், சாமியாருமான ஆதித்தியநாத் "சாமியார்கள் மற்றும் விரதமிருந்து பாதயாத்திரை செல்லும் சிவ பக்தர்களின் பார்வையில் வழியில் உள்ள அத்திமரங்கள் பட்டால் அவர்களின் விரதத்தின் பலன் நீர்த்துப்போய்விடும். ஆகையால் பாதயாத்திரை செல்லும் பாதையில் உள்ள அத்தி மரங்களை வெட்டிவிட வேண்டும்" என்று உத்தர விட்டார்.
இதே போல் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மாநில அரசு அலுவலகங்களில் தினசரி பசுமூத்திரம் (கோமியம்) தெளிக்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் கிருமிநாசினிகளுக்குப் பதில் கோமியம் தெளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு ராஜஸ்தானின் பல்வேறு மருத்துவமனை மருத்துவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஃபகன்சிங் குலுஸ்தே இந்தூரில் உள்ள பசுமூத்திரத்தின் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மய்யம் ஒன்றில் நடந்த விழாவில் பேசும் போது, "பசுமாட்டின் மூத்திரம் விலைமதிப்பில்லாதது, நாம் தங்கத்தை விலைமதிப்புள்ளது என்று கூறுகிறோம், ஆனால் அதை விட அதிக மதிப்புடையது பசுமூத்திரம்" என்று கூறியிருந்தார்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி-லீ) வலியுறுத்துகிறது. முதலில் பிஜேபியைச் சேர்ந்த பிரதமர் மோடி முதல் மாநில முதல் அமைச்சர்கள் வரையில் அறிவியலின் ஆரம்பப் பயிற்சியினைச் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஈரோட்டில் ஓர் உணர்வுப் பூர்வமான விழா வாரீர்!

நம் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம்  அவர்கள் பெயரில் இயங்கி வரும் பன்னீர் செல்வம் பூங்கா.  அதற்கு முன் இது  ஆங்கிலேயர் காலத்தில் "வேல்ஸ் பார்க்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கே இருந்த அய்யா தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா ஆகியோர் திருவுருவச் சிலைகளைப் புதுப்பித்து மக்கள் பயன் பாட்டிற்கு வழங்கப்படு கின்றன (31.8.2017)  உருவ வழிபாட்டை மறுக்கும் பகுத் தறிவாளர்களாகிய அய்யாவிற்கும்,  அண்ணாவிற் கும் எதற்காக சிலைகள்!!  நம் வழிபாட்டிற்கா?  அல்ல .. அல்ல!
பெரியாரே அதற்கு விடை சொல்கிறார்! "பிற் காலத்தில் வரும் தலை முறையினர்க்கு நம் வர லாற்றை சரியாகச் சொல்லவில்லை என்றால் என்னையும் ஒரு கடவுளாக்கி 11ஆவது அவதாரம் இவர் என்று பொட்டு வைத்து பூணூலும் மாட்டி விடுவார்கள்" என்று கூறினார்.  எனவே தான் அய் யாவிற்கு ஊர் தோறும் சிலைகள் அமைக்கப்பட்டு அதனடியில் அவரது அடிப்படைக் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைப் பொறித்து வைத்துள் ளோம்!
அந்த வகையில் தமிழகத்தில், இந்தியாவில் கூட எங்கும் காணாத வகையில் போக்கு வரத்திற்கு துளியும் இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ளது.  இவர்களது கருத்துக்களை உலகோர் வியந்து பார்ப்பது போல், படிப்பது போல் இச் சிலைகளையும் நாம் வியந்து தான் பார்க்க வேண்டும்!
காலம் காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த ஒரு இனத்தை பண்பாட்டு ரீதியாக தலைநிமிர வைத்த தலைவர்களை நாம் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டும்!  உயர்ந்த எண்ணங்களை மக்களின் மனங்களில் விதைத்த விந்தையான இருபெரும் தலைவர்களை அறிவுத்தூண்களாக நம் ஈரோட்டுக் கழகத் தோழர்கள் மிக உயர்ந்த இடத்தில் அமைத் துள்ளார்கள்!!

பொதுவாக சிலை என்றால் ஒரு பீடம் இருக்கும், ஆனால் இச்சிலைகள் அப்படி ஒரு பீடத்தில் வைக் கப்படவில்லை!  மாறாக "அறிவுத் திருக்கோயில்"   (இங்கே கோயில் என்பது அரசன் வசிப்பிடம் என்ற பொருளில் கூறப்படுகிறது என்பதறிக..!)   என்று சொல்லப்படுகிற ஒரு நூலகமே சிலைகளைத் தாங்கி நிற்கிறது.
மனுவாதிகளால் கல்வி மறுக்கப்பட்ட ஒரு தலைமுறைக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தவர் அய்யா பெரியார்.  அதுபோல் இல்லந் தோறும்  நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அறி வுறுத்தியவர் நம் அண்ணா!  இவர்களுக்கு சிறப்பு சேர்ப்பிக்கின்ற வகையில் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ஒரு நூலகம்.  அரசுப்பணிக்கும், இந்திய ஆட்சிப் பணி,இந்திய காவல் பணிக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் பயன் பெறுகிற வகையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் எண்ணற்ற நூல்களைக் கொண்டு  அமைக்கப்பட்டுள்ளது!
இந்த நூலகத்தின் மேல் அய்யா, அண்ணா சிலைகள்  எழிலார்ந்த வகையில், காண்போர் எழுச்சி  பெறத்தக்க அளவில் அமைக்கப்பட்டுள்ளன!
அய்யா தந்தை பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிலை!! இன்று அவரது இளவல் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க தமிழர்களின் எதிர்காலம்,  நம் அன்புத் தளபதி அவர்கள் திறந்து வைக்கிறார்கள்..!!
இந்த அரும் பெரும் பணியை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் மனிதநேயர் திரு.சு.முத்துசாமி அவர்கள்  நம் இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ கத்தின் புதிய தலைமைச் செயலகத்தை எப்படி  பார்த்து பார்த்து, வடிவமைத்துக் கட்டினாரோ, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்படி ஆசை ஆசையாக வடிவமைத்துச் செய்தாரோ அதே போல் இந்த சிலைகளையும், நூலகத்தையும், அதைச் சுற்றிய பூங்காவையும் தானே முன்னின்று பணி துவங்கிய நாள் முதல் இரவு பகல் பாராமல் தொழிலாளர்களோடு ஒரு தொழிலாளியாக நின்று சிறப்பாக பணியாற்றிய நம் செயல் வீரர் அண்ணன் சு.முத்துசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!
தமிழர்களே! ஈரோடு என்றாலே உலகப் பகுத் தறிவாளர்களுக்கு ஒரு தாய் வீடு போன்றது.  இனி ஈரோட்டிற்கு இப்பகுத்தறிவுச் சின்னம் மேலும் ஒரு   லேண்ட் மார்க் என்று சொல்கிற "தனித்த அடையாளம்" ஆகும்!  இது திண்ணம்..!!
தமிழர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு வரலாற்று நாயகர்களைப் போற்றுவோம்...!! வாரீர்...!! வாரீர்...!!!

அன்புடன்

ஈரோடு மாவட்ட திமுக சார்பாக பி.என்.எம்.நடேசன், பி.என்.எம்.பெரியசாமி

மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்கா? பாஜகவுக்கா?

பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடல்

சண்டிகர், ஆக. 30- மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்குத்தானே தவிர, பாஜகவுக்கு அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடு மையாக சாடியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஅய் கடந்த 2002ஆ-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான இந்த வழக்குகள் அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஅய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தண் டனை குறித்த விவரம் 28ஆ-ம் தேதி அறிவிக் கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதி களில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 36-ஆக அதிகரித்துள்ளது.

பொதுநல வழக்கு
இந்த நிலையில், கலவரம் குறித்த பொது நல வழக்கில்,  பஞ்சாப், அரியானா உயர்நீதி மன்றம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், மனோகர் லால் கத்தார் தலைமையிலான அரியானா அரசையும் சாடி யுள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித்ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அரியானாவில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 36 பேர் பலியாகினர். 250க்கும் அதிக மானோர் காயம் அடைந்தனர். ஆனால் பஞ்சாப்பில் இந்த அளவுக்கு வன்முறை நடக்க வில்லை. அங்கு காங்கிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக அம்ரீந்தர் சிங் இருக்கிறார். அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வன்முறை பெரிய அளவில் வெடிக்காமல் பார்த்துக்கொண்டார். ஆனால் பாஜக ஆட்சி நடக்கும் அரியானாவில் அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுஎழுந்தது. இது தொடர்பாக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரையும், பிரதமர் மோடியையும் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பான நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது,
நாம் அனைவரும் வாழ்வது ஒரே நாடு தானே தவிர, ஒரு கட்சியை சார்ந்து இயங்கும் நாடு அல்ல. எனவே, அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண் டும். பிரதமர் என்பவர் இந்திய நாட்டிற்காக த்தானே தவிர, பாஜக-விற்கானவர் அல்ல. மாநில முதலமைச்சர், அரசு தலைமை வழக் குரைஞர் சத்யபால் ஜெயின் ஆகியோர் பாஜகவின் பதவியில் இருப்பவர்கள் அல்ல. இது மக்களுக்கான பதவி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கடுமையாக கண்டித்தனர்.
மத்திய அரசானது பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது போல தெரிகிறது. மத்திய அரசு தனது கடமையை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. வாக்கு வங்கியை மய்யமாக வைத்து மாநில அரசு செயல்படுவதாகவும் விமர்சித் தனர்.
மாநிலத்தின் முதலமைச்சர்தான் உள் துறை அமைச்சராக இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவலரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் வெளி ஊர்களில் இருந்து பஞ்சகுலாவிற்கு வந்து தங்கியுள்ளனர்.
அரசியல் தொடர்பான முடிவுகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய வித்தியா சம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் ரீதியிலான முடிவுகளால், அரசு நிர்வாகம் முடக்கப் பட்டுள்ளது என்று கடுமையாக கண்டித்து உள்ளனர்.

இதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் வன்முறை தொடர்பான அறிக்கையையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

Friday, August 25, 2017

தமிழ்நாடு வழிகாட்டும்


தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் ஒரு சவாலான சூழல்களை நாம் சந்திப்பது இது முதல்முறையல்ல.
1950ஆம் ஆண்டு, செண்பகம் துரைராசன் என்கிற பார்ப்பனப்பெண்மணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பினால், தமிழகத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்கிற நூறு விழுக்காடு இடஒதுக்கீடு முறை செல்லாது என்று ஆக்கப்பட்டது. தந்தை பெரியார் அதை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார். தந்தைபெரியாரின் கர்ஜனை நாடாளுமன்றத்தை அசைத்தது,  அதன் விளைவாக நேரு தலைமையில் அமைந்த மத்திய அரசினால் முதலாவதாக இந்திய அரசமைப்புச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியா முழுமைக்கும் இன்று பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் கல்வியில் பயன்பெறும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமானது!
1979ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தவறான ஆலோசனையின் காரணமாக ஒரு தீயமுடிவினை எடுத்தார். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை பெறுவதற்கு ரூ.9000 வருமான உச்சவரம்பு என்கிற பொருளாதார அளவுகோலை கொண்டுவந்தார். திராவிடர் கழகமும், திமுகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளும் அதைக் கண்டித்து தமிழகம் முழுக்க மக்களைத் திரட்டினார்கள். அதன் விளைவு 1980ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. தன் தவறை உணர்ந்த எம்.ஜி.ஆர். தான் கொண்டுவந்த சட்டத்தை பின்வாங்கியதோடு மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அதுதான் இன்றுவரை நீடிக்கிறது!
1993ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தபோது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிறப்பு சட்டம் இயற்றி அதை அரசமைப்பு சட்டத்தின் 9ஆவது அட்டவணை என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான சமூகநீதியைக் காப்பாற்றினார். இந்தப்பெருமை முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சாரும். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டே பாஜக ஆட்சி செய்கின்ற இராஜஸ்தான் உட்பட பல மாநிலங்கள், தமிழகம் காட்டிய வழி யினைப் பின்பற்ற முயற்சி செய்துகொண்டிருக்கின்றன.
இப்போது 'நீட்' கொம்பை நீட்டிக் கொண்டு கிளம்பியுள்ளது.
குறைந்தபட்ச நியாய உணர்வு கொண்ட ஒரு மத்திய அரசு இருந்திருந்தால்கூட, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு விலக்கு அளித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை எழுப்பிய மிகச்சரியான கேள்விகளை ஏற்றுக்கொண்டு, தமிழகத்திற்கு நீதி வழங்கியிருக்க வேண்டும்! தற்போதைய சூழலைப்பார்க்கும்போது, நீட் சிக்கலின் பேரபாயத்தை தமிழக மக்கள் பெரிதும் உணர்ந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. கெட்டவாய்ப்பாக, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடந்த நிலையில், தமிழகம் இப்போது இருப்பதுபோலவே எப்போதும் தூங்கிக்கொண்டிருக்காது என்பது உறுதி.
பாதிப்பு ஏற்படும் நிலையில் பதைபதைப்பார்கள் - பாய்ந்தும் எழுவார்கள் என்பதில் அய்யமில்லை.
மண்டல் குழுப் பரிந்துரையை எடுத்துக் கொண்டாலும், "பத்தாண்டு ஆகிவிட்டது. இனிமேல் அதற்கு உயிர் இல்லை. குழிதோண்டிப் புதைத்தாகி விட்டது" என்று ஆணவமாகப் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் ஏடுகள் ஊளையிட்டன.
""Burry the mandal Report" என்று ஓர் ஆங்கில ஏடு தலையங்கம் தீட்டியது. "Hurry the Mandal report" என்று பதிலடி கொடுத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அதில் வெற்றி கொண்டோமா இல்லையா? 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் அகில இந்திய அளவில் திராவிடர் கழகம் நடத்தியது அல்லவா?
திராவிடர் கழகத்தின் பங்களிப்பை அந்நாள் பிரதமர் வி.பி.சிங் அங்கீகரித்தாரே!
27 சதவிகித இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அவர் பிரகடனப்படுத்தியபோது, மறவாமல் தந்தை பெரியாரை நினைவு கூர்ந்தாரே!

எந்த இன்னல் வந்தாலும் சமூக நீதியில் தமிழ்நாடு முகம் கொடுத்து வெற்றி பெறும் - காரணம் இது பெரியார் பிறந்த மண்!

பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் வரும் 31ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்


சென்னை, ஆக. 24- கடல்சார் ஆராய்ச்சிக்காக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையிலான 7 செயற்கைகோள்களை விண் வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம்(இஸ்ரோ) முடிவு செய் தது. அதன்படி ஏற்கெனவே 7 செயற்கைகோள்களை திட்ட மிட்டப்படி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடையவிருப் பதை தொடர்ந்து, புதிதாக அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது.
இதனை ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் 31ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட் டுள்ளது.
320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ராக்கெட்டில் அனுப்பப்படும் அய்.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் இந்தியாவி லேயே வடிவமைக்கப்பட்டுள் ளது. பூமியில் இருந்து குறைந்த பட்சம் 284 கிலோ மீட்டர் உய ரத்திலும், அதிகபட்சம் 20 ஆயி ரத்து 657 கிலோ மீட்டர் உயரத் திலும் நிலை நிறுத்தப்படுகிறது.

இதன்மூலம் இயற்கைச் சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். ராக் கெட்டை ஏவுவதற்கான பணி களில் தீவிரமாக இறங்கியிருப் பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

'நீட்': சமூக நீதியின் தலையில் விழுந்த பேரிடி! வாரி சுருட்டினர் பார்ப்பனர்கள்


சென்னை, ஆக. 24- 'நீட்' தேர்வு காரணமாக மாநிலக் கல்வி வழி பயின்ற ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மாணவர்களும் வஞ் சிக்கப்பட்டுள்ளனர். சிபிஎஸ்இ முறையில் படித்தவர்கள், பார்ப்ப னர்கள் இடங்களை வாரி சுருட்டிக் கொண்டு விட்டனர்.
நீட் தேர்விற்கு முன்பு இருந்த நிலையும், நீதிமன்றம், மத்திய அரசு, அதிமுக அரசு மூன்றும் சேர்ந்து தமிழகத்திற்கு இழைத்த தீங்கின் விளைவும் பட்டியலிடப் பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத் திற்கு விலக்கு அளிக்கப்படாது என்றும்,  மாணவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என் றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறி உள்ளனர்.
பல்வேறு தீர்ப்புகளில் சமூக நீதி காக்கப்படும் என்று கூறிய உச்சநீதி மன்றம் இந்த விஷயத்தில் தமிழகத்திற்கு நீதி வழங்கி உள் ளதா? என்பது கேள்விக்குறியே!
நாட்டின் அடிப்படை தேவை யான கல்வியில்கூட, நாடு முழுவ தும் ஒரே வகையான கல்வித் திட் டத்தை கொண்டுவர முடியாத மத் திய அரசும், நீதிமன்றமும் தமிழ கத்திற்கு எதிராகவே செயல்பட்டு உள்ளன.
காவிரி வழக்கில், உச்சநீதி மன் றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கிய மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் இன்று தமிழகத்திற்கு எதிரான ஒரு தீர்ப்பை கொடுத்து, அதை அமல் படுத்த சொல்லியிருப்பதும், அதை சிரமேற் கொண்டு தமிழக அரசு நிறைவேற்றி வருவதும் தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோ கமாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக யாருக்கு லாபம்...? மத்திய அரசின் பாடத்திட்டங்களின் மூலம் படித்த மாணவர்களுக்கு மட்டுமே!
இந்த கல்வித்திட்டத்தில் ஏழை எளிய மக்கள் படிக்க முடியுமா? அதற்கான கல்வி கட்டணம் என்ன? அதை ஏழை எளிய மக்கள் செலுத்த முடியுமா என எதையுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இந்தத் தீர்ப்பு காரணமாக  தமிழகபாடத் திட்டம் மூலம் நீட் தேர்வெழுதிய 75000 தமிழக மாண வர்களுக்கு 300 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஆனால், சிபிஎஸ் இ-ன் மத்திய பாடத்திட்டத்தின் மூலம்  தேர்வெழுதிய 9000 மாண வர்களில் 4500 மாணவர்களுக்கு  மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 80 சதவிகிதம் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்!
“நீட்"டின் கொள்ளை
கடந்த ஆண்டில்
சிபிஎஸ்இ மாணவர்கள்
பெற்ற இடம்: 30,
இவ்வாண்டு 1310
கடந்த கல்வியாண்டில் சிபி எஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 30 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் இந்தாண்டு தமிழகத் தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப் படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், மொத்த முள்ள 3,534 இடங்களில் சுமார் 1,310 இடங்களை சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கல்வியாண்டில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டு ஓராண் டுக்கு மட்டும் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டது.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனி யார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை பிளஸ் 2 கட் - ஆஃப் மதிப் பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக் கப்பட்டு, கலந்தாய்வு நடத்தி நிரப்பப்பட்டன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறு கையில், கடந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படை யில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட் டதால் சுமார் 30 இடங்கள் மட்டும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிறபாடத் திட்ட மாணவர்களால் பெற முடிந் தது. மீதி இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களே பெற் றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வின் காரணமாக மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து, பிற பாடத்திட்ட மாண வர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது என்று தெரிவித்தனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...