Saturday, June 30, 2012

தமிழ் ஈழம்: மருத்துவரின் நிலைப்பாடு என்ன?


இன்றைக்குத் தமிழ் ஈழம் விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றியெல்லாம் வான்முட்டப் பேசும் மருத்துவர் ச. இராமதாசு ஒரு கட்டத்தில் கொண்டிருந்த கருத்து என்ன?
பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சி (15.7.1989) தலையங்கம் என்ன கூறியது?
ஈழ விடுதலையை அடகு வைத்துள்ள விடுதலைப் புலிகள் என்று எழுதியதே! உங்கள் தலைமையைத் (மாவீரன் பிரபாகரனே) தகர்த்தெறிந்து புதிய போரட்டப் பாதைக்கு முன் வாருங்கள் என்று தலையங்கமே தீட்டவில்லையா?
பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சியின் (29.6.1989) நாளிட்ட தலையங்கம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி, ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது
இது விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தது ஆகாதா? அதே நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது தி.மு.க. என்பதும் விளங்கவில்லையா?
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த ஒரு கட்சியை, அதன் தலைவர் கலைஞர் அவர்களை விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்த கட்சியின் தலைவர் ஏளனம் செய்யலாமா? ஈழத் தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு ஓரளவு தெளிவு வந்ததே திராவிடர் இயக்கத்தால் தானே!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தீண்டாமைச் சுவர்கள்


அண்மைக் காலமாக சில கிராமங்களில் தீண்டாமை என்னும் பாம்பு தலைகாட்டுகிறது. தீண்டாமைச் சுவர் என்னும் தகவலும் வெளி வருகிறது. தேநீர்க் கடைகளில் இரட்டைத் தம்ளர் முறை நடைமுறையில் இருப்பதாகவும், ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன.
இதற்குக் காரணம் என்ன? இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டிப் பாகக் காவல்துறை உளவுப் பிரிவினருக்கு மிகவும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங் களைவிட விழிப்புணர்வுப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் மிக மிக அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; அதற்குக் காரணம் ஈ.வெ. ராமசாமி  என்பது அமெரிக்கப் பேராசிரியர் களின் கருத்து என்று அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி கூறியதை ஆனந்தவிகடன் இதழேகூட வெளிப்படுத்தியதுண்டு.
திராவிடர் கழகம் ஒவ்வொரு நாளும் இந்தத் திசையில் பாடுபட்டுக் கொண்டுதானிருக்கிறது என்பதும் ஊருக்குத் தெரியும்.
இதற்கு மேலும் அந்த அசிங்கமானது (ருபடல ழநயன)  தலை தூக்குவது ஏன் என்பது முக்கியமான அவசியமான கேள்வியாகும்.
தமிழ்நாட்டில் கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டங்கச்சியேந்தல் முதலிய ஊராட் சிகளில் ஊராட்சித் தேர்தலையே நடத்த முடியா திருந்த கொடுமையை மானமிகு கலைஞர் அவர்கள் கடந்த முறை முதல் அமைச்சராக இருந்தபோது நீக்கி, சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஊராட்சித் தேர்தல்கள் சுமூகமாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதே!
ஆட்சியர்களாக இருக்கக் கூடியவர்களின் அணுகுமுறையும், அக்கறையும் இதில் மிக முக்கியமானது. சில நாட்களுக்குமுன் ஈரோடு கொடுமுடியையடுத்த நகப்பளையம் என்னும் கிராமத்தில் 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் தலையிட்டு, சுவர் அகற்றப்பட்டது என்பது நல்ல செய்தியாகும். மதுரை மாவட்டத்திலும் உத்தபுரத்தில் இப்படி நடைபெற்றதுண்டு.
இரு தரப்பாரையும் அழைத்துப் பேசுவது, அமைதிக் குழு (ஞநயஉந ஊடிஅஅவைவநந) போடுவது என்பதெல்லாம் சடங்காச்சாரமாக நடைபெறு வதாகத் தான் பொருள் - அதுதான் யதார்த்தமும் கூட!
அதைவிட இந்த விஷம வேலைகளில் ஈடுபடுபவர்கள் யார்? அமைப்பு எது? என்பதைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் கட்சிகளுக்கும். ஜாதிகளுக்கும் அப்பால்கூடி, சீர்திருத்த முற்போக்கு எண்ணத்தோடு செயல்பட முன் வருவார்களேயானால், இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைத்து விடும்.
அனைத்துக் கிராமங்களிலும் அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தக் கட்சியும் தீண்டாமை இருக்க வேண்டும் என்று சொல் லுவதில்லை. (பி.ஜே.பியைத் தவிர).
இந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பில் நம்பிக் கையுள்ள கட்சிகள் இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றன என்பது மிகவும் முக்கிய மல்லவா! கொள்கைப் பூர்வமாக அரசியல் கட்சிகள் இயங்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
தீண்டாமையை எந்த நிலையில் அனுசரித்தாலும் அது சட்டபடி குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை! இதற்கென்றே காவல்துறையில் தனிப்பிரிவே கூட இயங்குகிறது. ஆனாலும் விளைவு ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.
திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வேண்டுகோள்: எந்த இடத்தில் எந்த வகையில் தீண் டாமை மற்றும் ஜாதி வெறிப் பாம்பு தலை தூக்கி னாலும், உடனடியாக தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முதற் கட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நட வடிக்கை - அடுத்த கட்டமாக நேரில் களத்தில் இறங் குவது - தொடர் பிரச்சாரம் செய்வது என்பது போன்ற முறைகளில் நமது பணிகள் அமைதல் வேண்டும்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியதுதான்; அதே நேரத்தில் ஜாதியின் விளைவுதான் தீண்டாமை என்று மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்க தேவையான திட்டங்களைச் செயல் படுத்துவோம்.
இந்து சமய அமைப்பு என்பது வருண பேதம் எனும் அடித்தளத்தின்மீது நிமிர்ந்து நிற்கிறது.
இந்த மூலபலத்தைத் தகர்த்தெறிவதுதான் நிரந்தரமான தீர்வு.
ஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க இளைஞர்களே ஒன்று திரள்வீர்!

Thursday, June 28, 2012

தினமணியின் திரிபுவேலை


எம்.பி.பி.எஸ்., சென்னை கல்லூரிகளில் சேர கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? எனும் தலைப்பில் தினமணி நேற்று (27.6.2012) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 140 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 127 எம்.பி.பி.எஸ். இடங்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 128 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.
மேலே குறிப்பிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளிலும் முற்பட்ட வகுப்பினருக்கு (எஃப்ஓசி) மொத்தம் 123 எம்.பி.பி.எஸ். இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மொத்தம் 106 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 123 எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே உள்ளதால் 200-க்கு 199.50 கட்ஆஃப் மதிப்பெண் இருந்தால் மட்டுமே சென்னையில் உள்ள 3 கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்கும் என்பதுதான் இந்தச் செய்தி. இதில் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது முற்பட்ட வகுப்பினருக்கு 123 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படியோ, இடஒதுக்கீட்டு முறையிலோ எந்த இடத்திலாவது முற்பட்டவர்களுக்கென்று தனியாக சதவிகித அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவா? உயர்ந்த ஜாதியினருக்கு இடஒதுக்கீடுக்கு வகை செய்ய எங்காவது சட்டமோ, ஆணையோ உள்ளதா? உண்மையும், நடைமுறையும் இவ்வாறு இருக்கையில், உண்மைக்கு மாறாக தினமணி இப்படி செய்தி வெளியிடுவது ஏன்? இடஒதுக்கீடு - பார்ப்பனர் பார்வையில் விரும்பத் தகாததாக இருக்கக் கூடும். அதற்காக தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்ய ஆசைப்படலாமா?
பார்ப்பனர்கள் ஏதோ தெரியாமல், அறியாமை காரணமாக இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று யாரும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக் கூடாது. நன்றாகவே தெரியும் அவர்களுக்கு; இருந்தாலும் மக்களைக் குழப்புவதன் மூலம் ஓர் அற்ப மகிழ்ச்சியில் கொஞ்சமாவது மிதக்கலாம் அல்லவா!
இது முதன் முறையில்லை; இதற்கு முன்புகூட தினமணி குழுமத்தின் ஆங்கில நாளேடான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்று சட்டத்தில் இருக்கிறதே தவிர எந்த இடத்திலும் பொருளாதார ரீதியாக என்று குறிப்பிடப்படவில்லை) செய்தி வெளியிட்டது. அப்பொழுதே அதனைக் கண்டித்து விடுதலை எழுதியதும்.
அதே போல OC என்பதை திறந்த போட்டி (Open Competition) என்பதற்குப் பிற சாதியினர் (Other Community)  என்று திரிபுவாதம் செய்து வந்ததும் பார்ப்பன ஏடுகளே.
செவிலியர்கள் விளம்பரம் ஒன்று இப்படி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திராவிடர் கழகமே. அப்பொழுது மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டே அதனைத் திருத்திக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான - தேர்வு ஆணையத்தின் விளம்பரத்திலும் திறந்த போட்டி என்பதை  - பிற சாதியினர் என்று தவறாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. விடுதலை சுட்டிக் காட்டியதற்குப் பிறகு திருத்த விளம்பரம் வெளியிடப்பட்டது.
இப்படி கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுக் கொண்டே திராவிடர் கழகமும், விடுதலையும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போதே - இப்படி திரிபு வேலைகளில் திரிநூலார் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
மத்திய தேர்வாணையம் வரை இத்தகைய சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்பட்ட துண்டு. எந்தக் கட்சிப் பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி. இடஒதுக்கீடு எனும் பிரச்சினையில் ஒன்றாகவே சிந்திப்பார்கள். சமூக நீதிக்கு எதிராகவே கொடி பிடிப்பார்கள் (நீதிபதிகள்கூட விதிவிலக்கு இல்லை என்பது கசப்பான உண்மையாகும்)
தினமணியின் ஆசிரியராக துக்ளக் குடும்பத் தில் தயாரிக்கப்பட்டவர் இருக்கும் பொழுது, இது போன்ற விஷமங்கள் நடைபெறுவதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் பார்ப்பன ஏடுகளைக் காசு கொடுத்து வாங்கும் தமிழர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பார்த்து கடைசியில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சரணா கதி அடைந்தும் அவர்கள் பாடம் பெறவில்லை - வெட்கக் கேடு!



கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கு கழகத் தலைவரின் கருத்துப் புதையல்!


நமது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த சில நாட் களாகக் கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்குத் திராவிட இயக்கம் 100 என்னும் தலைப்பில் பல அரிய வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிப் பேசி வருகிறார்கள்.
ஏற்கெனவே வாழ்வியல் சிந்தனை கள் என்பதுபற்றி மனித சமுதாயம் சிந்தித்திராத பல அரிய கருத்துக்களை எழுதி வருகிறார். அவற்றை மக்கள் சிந்தித்துப் பார்க்கவும், வாழ்வியல் நடைமுறையில் பல உண்மைகளை அறிந்து, வாழ்ந்து நலம் பெறவும் அய்யா அவர்கள் சில ஆண்டுகளாக எழுதி வருவது அனைத்துப் பிரிவினர்க்கும் வாய்க்கப் பெற்ற சிறந்த கருவூலமாகும்!
அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் இப்பொழுது திராவிட இயக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் புரிந்து கொள்ளும்படியாக மிகமிக எளிய பேச்சு நடையில் நேருக்கு நேர் அமர்ந்து, ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவதுபோலத் தெளிவான முறையில் மேற்கோள் விளக்கங்களுடன் கலைஞர் தொலைக் காட்சியில் நாளும் காலை  8 மணிக்கு உரையாற்றி வருகிறார். அவரது கருத் தாழம் மிக்க உரையை ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் தவறாமல் கேட்டு  உள்ளத்தில் பதிய வைப்பார்களே யானால் அறிவு வளர்ச்சியும், மான உணர்ச்சியும் உடையவர்களாக அவர்கள் சுயமரியாதை வாழ்வு பெற்று விளங்க வழிவகுக்கும் என்பது உறுதி!
காங்கிரசு இயக்கத்தில் உள்ள பலர் காங்கிரசு இயக்கம் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் 1800-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்திலேயே அயல்நாட்டவர் ஒருவரால் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது என்ற உண் மையைக் கூறி விளக்கமும் தந்தார் அய்யா அவர்கள். இது போலவே திராவிட அமைப்பும் நீண்ட காலத்திற்கு முன்பே இருந்ததையும் 1910-ஆம் ஆண்டு வாக் கில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியதற்கான காரணத்தையும் கூறினார். அதன் வளர்ச்சியாக நீதிக் கட்சி வரலாறு, பார்ப்பனரல்லாதார் பெற்ற நலன்கள், சுயமரியாதை இயக்கமாக மாறியதன் பலன், திராவிடர் கழகம் மலர்ந்த பரிணாம வளர்ச்சி ஆகிய வற்றையெல்லாம் அய்யா அவர்கள் நிரல்பட விளக்கி உரையாற்றினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் பள்ளியில் படித்த காலத்திலேயே சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்றவர் என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி விளக்கினார்கள். நாயுடு, முதலியார், நாயக்கர் என்று அக்காலத் தில் புகழப்பட்ட  சமுதாயச் சீர்திருத்தம் கண்டவர்கள் ஆற்றிவந்த உரிமை முழக்கங்களையும், பார்ப்பனர்களால் இழைக்கப்பட்டு வந்த இடையூறுகள் கொடுமைகள் பற்றியும் விரிவாகத் தொலைக்காட்சி மூலம் தெளிவு படுத்தினார்கள். அய்யா அவர்கள் கூறும் செய்திகளுக்கு இந்துப் பத்திரிகை ஆதாரங்களை மிகத் தெளிவாக - பொறுமையாக - சுவையாக விளக்கி உரை யாற்றி வருவது, எதிர்காலத் தமிழர்க்குக் கிடைக்கும் மிகப் பெரிய நன் கொடையாகும்!
இடைச் செருகல் இல்லாத - கற்பனை கலவாத தூய திராவிடர் இயக்க வர லாற்றைத் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களைத் தவிர இனி வேறு எவராலே தர முடியும்?
நடந்த நிகழ்ச்சிகள்பற்றிய இடம், காலம், இத்தனையாவது ஆண்டு என் றெல்லாம் அவரது உரை வீச்சில் குறிப் பிடுகிறார். அத்தனையும் நூலாதாரங் களோடு, அவற்றின் ஆசிரியர்களையும் அவ்வப்போது காட்டுகிறார்.
தமிழர் தலைவர் அவர்கள் கொள் கையின் தனி மனிதராய்த் திராவிட இயக்கப் பணியைப் புதுப்பிக்கும் பெருந் தொண்டில் ஈடுபட்டுள்ளார் என்பது இன்று நம்மில் சிலருக்குப் புரியாதிருக் கலாம். ஆனால், அய்யா அவர்கள் இன்று தொடங்கியுள்ள இந்தப் பணி, பார்ப் பனர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்ற செயலாகும் என்பது அவாளுக்கு நன்றாகத் தெரியும்! எனவே அன்று தந்தை பெரியார் அவர்களுக்கு எத்தகைய துன்பங்களையும், தொல்லைகளையும் பார்ப்பனர்கள் கொடுத்தார்களோ, அதுபோன்ற செயலை வெளிப்படையாக இன்று செய்ய முன்வராவிட்டாலும் அவர் களுக்காகத் திறந்திருக்கும் கொல்லைப் புற ஊடக வழிகள் கை கொடுக்கத் தயங்கா.
ஆனால் தந்தை பெரியார் சுயமரி யாதைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற தமிழர்கள் - இளைஞர்கள் - பெண்கள் ஏராளமாக இன்று வளர்ந்துள்ளனர் என்பதால் கழகத் தலைவர் அய்யா அவர்களின் உரைவீச்சு கலைஞர் தொலைக்காட்சியில் இனி நாளுக்கு நாள் ஒளிவீச்சாக வளர்ந்து திராவிட இயக்கம் புதுப் பொலிவுடன் திகழவுள்ளது என்பதை இனிவரும் இளைஞர் உலகம் மெய்ப் பிக்கும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!
தென்மொழி ஞானபண்டிதன்
(மாநிலத் துணைத் தலைவர்
பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

பிள்ளை விளையாட்டைப் பாரீர்!


மதுரை மீனாட்சிக் கோயிலைக் குண்டு வைத்துத் தகர்க்காமல் இருக்க கடவுளைப் பாதுகாக்கும் நோக்கோடு மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படும் காட்சி.
கோயில்களில் உள்ள கடவுள்களும், சிறைக் கைதிகளும் ஒன்றுதான்; கைதிகளைப் போல பூட்டித்தான் வைத்திருக்கிறார்கள். மணி அடித்து சிறையில் கைதிகளுக்கு உணவு கொடுப்பது போல கோயிலிலும் மணி அடித்துதான் ஆறு காலப் பூஜை நடக்கிறது.
கருவறைக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகள் வெறும் பொம்மைகள் என்பது நம்மைவிட அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
முக்கியமாக கோயில்களில் உள்ள மூல விக்கிரகங்கள் இப்பொழுது அந்தக் கோயில் களில் கிடையாது. பக்கத்தில் உள்ள பெரிய கோயில் ஒன்றில் அவற்றைப் பாதுகாத்து (ளுயகந னுநயீடிளவை) வைத்துள்ளனர். (இன்சூரன்சும் செய்யப்படுகிறதாம்) மூல விக்கிரகங்களுக்குப் பதில் போலி சிலைகள் (னுரயீடஉயவந) மூலக் கிரகங்களில் வைக்கப்படுகின்றன.
முக்கிய திருவிழாக் காலங்களில் மட்டும் தக்க பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் மறுபடியும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. (அய்ம் பொன்னால் ஆனது - திருடப்பட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!)
முக்கிய கோயில்களில் உள்ளே நுழையும் போது பக்தர்கள் மெடல்டிடெக்டர் வைத்துச் சோதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய்கள் சுற்றித் திரிகின்றன. (இவ்வளவையும் மீறி சாமி சிலைகள் திருடப்படுகின்றன என்பது வேறு சேதி)
இன்னொரு தகவல் முக்கியம்; அதுவும் வரலாற்றுத் தகவல்:
சிதம்பரம், சிறீரங்கம், மதுரைக் கோயில்களில் இருந்த மூல விக்கிரகங்கள், முஸ்லீம் அரசர்களின் படையெடுப்பால் கொள்ளையடிக் கப்படும் என்று பயந்து அச்சிலைகளை வேறு இடத்திற்குத் தூக்கிச் சென்றனர் என்பதுதான் அந்தச் சுவையான தகவல்கள் இதோ! 24.4.1648 முதல்  சிதம்பரம் நடராஜன் சிலை வெளியேற்றப் பட்டு முதல் நாற்பது மாதங்கள் குடுமியான் மலை யிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. பிஜப்பூர் சுல்தானின் படையெடுப்புக்குப் பயந்து கொண்டே இது நடந்திருக்கிறது. கடைசியில்  இந்த நடராஜனை மராட்டிய மன்னன் சகசிதான் மதுரையிலிருந்து மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தான் (ஆதாரம்: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், மறு வெளியீடு மணியனின் இதயம் பேசுகிறது)
அதேபோல முகமது பின் துக்ளக் திருவரங்கம் நோக்கிப் படையெடுத்து வருகிறார் என்றவுடன் வைணவப் பார்ப்பனர்களின் வயிற்றில் எல்லாம் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.
பிள்ளை உலகாசிரியர் என்பவர் ரெங்க நாதனை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் போவது என்றும் நாச்சியார் விக்கிரகத்தை இன்னொரு கோஷ்டியினர் வேறு திசையில் எடுத்துக் கொண்டு போவது என்றும் தேசிகர் (வைணவ மதத்தில் பெரிய மகான் என்று போற்றப்படும் வேதாந்த மகா தேசிகன்) ஏற்பாடு செய்துவிட்டார்.
தேசிகரும், சீடர்களும் மேற்கு நோக்கிப் பயணித்து சத்தியமங்கலம் சென்று அங்கே  சில காலம் தங்கினர். இதற்கிடையே இந்தக் கோயில்களும் மூடப்பட்டன. மதுரை மீனாட்சியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாள்.
விஜயநகர பிரதாணகோபணா என்பார் படையெடுத்து சமயபுரம், சிறீரங்கம் முதலிய இடங்களைக் கைப்பற்றி மதுரை சுல்தானியர் களையும் முறியடித்து, சிலைகள் மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டன.
இவை எல்லாம் நம் கைச் சரக்கல்ல - ஈரோட்டாரின் கற்பனையும் அல்ல - விடுதலையின் வேண்டா வெறுப்புச் சேதியும் அல்ல.
ஆன்மீகத்தை அப்படியே காப்பாற்றுவதற் காகவே அவதரித்ததாகக் கூறிக் கொள்ளும் மணியன் அய்யர்வாளின் ஞானபூமி இதழிலும் (ஆகஸ்டு 1983) மற்றும் சவுரி எழுதிய இந்தி யாவின் கலையும் கலாச்சாரமும் எனும் நூலிலும் (பக்கம் 145-146 வானதி பதிப்பகம் வெளியீடு) காணப்படுபவை.
இந்தக் கூத்து ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களில் அழித்தல் கடவுளாகிய - திரிபுரம் எரித்த விரிசடையோனான சிவபெருமானின் கதை என்ன தெரியுமா?
அந்தத் திருக்கைலாயங்கிரி எனும் பூலோக சொர்க்கம் இப்பொழுது யார் கையில் இருக்கிறது தெரியுமா? சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் பதுங்கிக் கிடக்கிறது!
ஹி... ஹி... இந்தப் பொம்மைகள்தான் கடவுள்களாம் - சர்வசக்தி படைத்தவையாம்.
இவற்றைப் பிரஸ்தாபிக்க ஸ்தலப் புராணங் களாம் திருமஞ்சனங்களாம் - ஆருத்ரா தரிசனமாம் - சிவராத்திரிகளாம் - வைகுந்த ஏகாதசிகளாம் - பிரமோத்வங்களாம் - தேர்த் திருவிழாக்களாம்!
சின்ன பிள்ளைகள் மண் வீடு கட்டி,  சிறு நீர் கழித்து குழம்பு வைத்து விளையாடுகிறார்கள் என்றால் பெரியவர்கள் பெரிய தேர் கட்டி ஊர் வலம் நடத்தி கிச்சு கிச்சு விளையாடுகிறார்கள்.
இதைத்தான் வடலூரார் பிள்ளை விளை யாட்டு என்றாரோ!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...