Wednesday, February 12, 2014

நளினிக்கு உரிமை இல்லையா?

90 வயது மூப்படைந்த தனது தந்தையார் பி.சங்கர நாராயணன் அவர்களை - ராஜீவ் கொலை சம்பந்த மாக 22 ஆண்டுகாலம் சிறையிலிருக்கும் நளினி நேரில் பார்ப்பதற்காக ஒரு மாதம் பரோலில் சென்றிட நீதிமன்றத்தின் துணையை நாடினார்.

அதனை எதிர்த்து வேலூர் மத்திய சிறைச் சாலை கண்காணிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் தாக் கல் செய்த மனுவில், நளினியைப் பரோலில் அனுப்பினால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற் படும் என்று கூறியுள்ளார். சிறைக் கண்காணிப்பாளர் சொல்லுகிறார் என்றால், அதன் பொருள் தமிழக அரசு சொல்லுகிறது என் பதே!

முதலமைச்சர் ஜெய லலிதா அவர்களை நம்பி யவர்கள், தமிழ்த் தேசிய வாதிகள். இதற்கும் ஏதா வது முட்டுக் கல்லு தேடி னாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

(நளினி பரோல் கேட் டது ஒன்றும் சட்ட வரம் பிற்கு அப்பாற்பட்டதும் அல்ல; சட்ட ரீதியான உரிமையின் அடிப்படை யில்தானே நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் - சிறை யில் இருப்பதாலேயே அவர்களுக்கு எந்த உரிமை யும் கிடையாது என்று எந்தச் சட்டமும் சொல்ல வில்லையே! அதேநேரத் தில் சஞ்சய் தத் என்ற நடி கர் சிறையில் இருப்பதை விட வெளியில் இருப்பது தான் அதிகம் - என்னே நீதி, சட்டம்?).

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...