Wednesday, October 31, 2012

போர் சின்னமா?


இலங்கைத் தீவில் உண்மையான பூர்வ குடிகளான தமிழர்களை முற்றாக அழித்துத் விட்டு, அது சிங்கள இன நாடாக முற்றாக மாற்றும் ஒரு வன்முறை வெகு காலமாகவே நடந்துவருகிறது.
அதில் ஒரு உச்சக் கட்டம்தான் மூன்றாண்டு களுக்கு முன் ராஜபக்சே தலைமையில் அமைந்த சிங்கள இனவாத அரசின் அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட போர் ஆகும்.
வாழ்வுரிமைக்காக இலங்கைத் தீவில் சுதந்திரப் போர் நடத்தி வந்த அந்தத் தீவுக்குரிய மக்களை அழிக்கும் வேலையைச் செய்தது -  சிங்கள இனவாத அரசு!
சீனா, ருசியா, பாகிஸ்தான், இந்தியா முதலிய நாடுகளின் இராணுவ உதவி, ஆயுதங்களைத் துணையாகக் கொண்டு தமிழின அழிப்பு வேலையில் (Genocide)
இறங்கி அதில் பெரும் அளவு முடிந்தும் விட்டது.
அழிக்கப்பட்ட தமிழர்கள்போக எஞ்சியிருக்கும் தமிழர்கள் வாழ்வுரிமை சுயமரியாதையுடன் காப்பாற்றப்படுவதற்கான முயற்சிகள் உலகெங்கும் முகிழ்த்துள்ளன.
அதில் ஒரு முக்கியமானது இரண்டாவது கட்டமாக தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது தான் டெசோவாகும்.
இன்றைய நிலையில் இந்தத் திசை நோக்கி தான் காய்கள் நகர்த்தப்பட வேண்டியுள்ளன.
இதனைத் திசை திருப்பும் வகையில் தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இயங்கும் சில அமைப்புகள், டெசோமீது விமர்சனக் கணைகளைத் திருப்பியுள்ளன.
சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி  அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், கடமை உணர்ச்சியுடனும் அனைத்துத் தரப்பினருக்கும் கனிவான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். முதலில் நம்மிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை உறுதியாகச் செய்து கொள்வோம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காகக் குரல் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு டெசோவையும், அதன் தலைவரையும் பலகீனப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பல அமைப்புகள், அவற்றின் தலைவர்கள் நடந்து கொண்டு வருவது, டெசோவைக் கேலி செய்வது என்பதெல்லாம் சிங்கள இனவாதத்தின் ஊற்று ராஜபக்சேக்குக் கூடுதல் பலத்தை கொடுக்கவே பயன்படும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியலைக் கொண்டு வந்து திணித்து, காழ்ப்புணர்ச்சியோடு மேடைகளைப் பயன்படுத்தினால், நமது நாட்டில் உள்ள பரம்பரை எதிரிகள் சிண்டு முடியும் வேலையில் இறங்குவார்களே - அதற்கு இடம் கொடுக்கலாமா என்கிற பொருள் நிறைந்த ஆழமான கருத்தை நினைவூட்டினார் தமிழர் தலைவர்.
டெசோவின் தலைவரை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு ஈழத் தமிழர் பிரச்சினையில் இரும்பு மனப்பான்மையோடு எதிர்வாதம் செய்து கொண்டிருந்த - அதிகாரம் கிடைத்ததும் ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்களைப் பல வகைகளிலும் ஒடுக்கிய ஒருவருடன் நெருக்கம் காட்டியது - மன்னிக்க முடியாத, சீரணித்துக் கொள்ளவே முடியாத கீழான போக்கே!
ராஜபக்சே எந்த எல்லைக்குப் போயிருக்கிறார்? ஏதோ இன்னொரு நாட்டோடு யுத்தம் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக போர் நினைவுச் சின்னம் நிறுவியதுபோல சொந்த நாட்டு மக்களான தமிழர்களைக் கண் மூடித்தனமாக - பல நாட்டு இராணுவ உதவியுடனும், ஆயுதங் களுடனும் அழித்தொழித்ததற்காக போர் நினைவுச் சின்னம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதை உலகம் ஏற்குமா?
கொலைக் குற்றவாளியாக அய்.நா.வால் நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் உலகில் ஓங்கி ஒலிக்கும் கால கட்டத்தில் ராஜபக்சே இன்று நிறுவியுள்ள வெ(ற்)றிச் சின்னம் அவருக்கு எதிராக அமையப் போகும் என்பதில் அய்யமில்லை.
சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்புக் கூட்டம் அதற்கு மேலும் அடி எடுத்துக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா? அல்ல - அது வெறிச் சின்னமே!


ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததற்காக வெற்றிச் சின்னமா?
அல்ல - அது வெறிச் சின்னமே! தமிழர் தலைவர் முழக்கம்!
ஈழத் தமிழர்கள் பிரச்சினையை கலைஞர் மீதான விமர்சனமாகக் குறுக்க வேண்டாம்!
பேரா. சுப வீரபாண்டியன் வேண்டுகோள்!


- நமது சிறப்புச் செய்தியாளர்

சென்னை, அக்.30 - ஈழத் தமிழர்கள் பகுதியில் போர் நினைவுச் சின்னம் என்பது, சிங்கள அரசின் வெறிச் சின்னமே தவிர, வெற்றிச் சின்னமல்ல என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
ஈழத் தமிழர்களுக்காகப் பேசுவது என்ற பெயரில் கலைஞர் மற்றும் திமுக மீதான விமர்சன மாகக் குறுக்க வேண்டாம் என்றார். திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.
ஈழத் தமிழர்களை இழிவுபடுத்த போர் நினைவுச் சின்னமா? எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - பெரியார் திடலில் நேற்று (29.10.2012) மாலை 7 மணிக்கு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.
ஈழத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எதற்காக இந்த நினைவுச் சின்னம்? யாரை எதிர்த்துப் போரில் வெற்றி பெற் றனர்?
சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்ததற்காக நினைவுச் சின்னமா? விடுதலைப்புலிகளை எதிர்த்து எப்பொழு தாவது இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதுண்டா?
சீனா, பாகிஸ்தான், இந்தியா உள் ளிட்ட நாடுகளின் இராணுவ உதவிகளை யும், ஆயுதங்களையும் பெற்று தானே அப் பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்காக ஒரு நினைவுச் சின்னமா என்று கேட்டார் வரவேற்புரையில்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:
இலங்கையில் இரு நாடுகளுக்கிடை யேவா போர் நடந்தது? இல்லையே; அப்படி இருக்கும்பொழுது எங்கிருந்து வந்தது போர் நினைவுச் சின்னம்? ஈழத் தமிழர்கள் இலங்கையின் குடிமக்கள் இல்லையா?
வெளிநாட்டோடு ஒரு நாடு சண்டை யிட்டால்தான் அது போர்! மாறாக இலங்கைத் தீவில் நடைபெற்றது சுதந்திரப் போராட்டம்! (பலத்த கரஒலி!)
இந்து ஏட்டில் இன்று வெளிவந்துள்ள கட்டுரையில் அவர்களையும் தாண்டி சில உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதி யுள்ளனர்.
வங்கிகளில் கடன் வாங்குவ தற்கு சொத்து ஆதாரங்கள் கேட்கப்படு கின்றன; அவர்களின் ஆதாரங்கள் எல்லாம்தான் அழிக்கப்பட்டு விட்டனவே - இந்த நிலையில் பரிதாபத்திற்குரிய எங்கள் தமிழர்கள் எந்த ஆதாரங்களைக் கொண்டு வந்து கொடுக்க முடியும்? உலகத்தை  ஏமாற்றுவதற்குத்தானே இந்தப் பிரச்சாரங்கள்?
இராணுவத்துக்குச் சம்பந்தமில்லாமல், காவல்துறைக்குச் சம்பந்தமில்லாமல் உடல் முழுவதும் கிரீசைத் தடவிக் கொண்டு தமிழர்களின் வீடுகளில் புகுந்து தாக்குகிறார்கள் - பெண்களிடம் வார்த் தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நடந்து கொள்கிறார்கள் - உடல் முழு வதும் கீரிஸ் தடவிக் கொண்டு வருவதால் அவர்களைப் பிடிக்கவும் முடிவதில்லை - வழுக்கிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
ஈழத் தமிழர்கள் கல்வியில் ஆர்வம் உடையவர்கள். ஆனால் ஒரே ஒரு பல்கலைக் கழகம் - அதிலும் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கைக்கு அனுமதி கல்வியிலும் மண்ணை அள்ளிப் போடு கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் அங்கே வாழும் மன நிலையில் இல்லை. அனைத்தையும் பறிகொடுத்த மன நிலையில் பரிதாபத்தின் எல்லைக்கே விரட்டப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் அழிக்கப்பட்டதாக நினைக் கலாம்; அவர்கள் அழிக்கப்படவில்லை - உண்மையைச் சொல்லப் போனால் விதைக்கப்பட்டுள் ளனர். (கரஒலி)
வரலாற்றில் இடி அமீன், கடாபி போன்றவர்களை நாம் பார்க்கவில்லையா? அவர்களின் இறுதிக் காலம் என்ன நிலைக்கு ஆளானது? பதவி அதிகாரத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாது பதவி பறிபோனால் அவர்கள் கதி என்னாகும் என்பதை வரலாறு நமக்குத் தெரிவித் துள்ளது. இத்தகையவர்களை வரலாறு குப்பைக் கூடையில்தான் தூக்கி எறியும்.
இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் நிலையை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். ராஜபக்சேயை மறந்து விட்டு நமக்குள் தேவையில்லாமல் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எங்கேயோ வைக்கப்பட வேண்டிய குறி, தடம் மாறிப் போய்க் கொண்டு இருக்கிறது.  இதன் மூலம் ராஜபக்சேக்களுக்கு பலம் சேர்க்காதீர்கள் என்பதுதான் எங்களின் கனிவான வேண்டுகோள்!
எங்களைவிட உங்களால் மேலும் வலிமையாக சிறப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் செயல்பட முடியுமானால் தாராளமாகச் செய்யலாம்; நாங்கள் ஒன்றும் குறுக்கே நிற்கப் போவதில்லை. யாரால் நடந்தது என்பது முக்கியமல்ல- காரியம் வெற்றிகரமாக நடக்கிறதா என்பதுதான் முக்கியம். இடையில் சிண்டு முடிந்திடுவோர் இருக்கின்றனர் என்பதை மறவாதீர்கள் என்பதும் நமது வேண்டுகோளாகும்.
போர் நிறுத்தம் மற்ற இடங்களில் ஏற்படுவது இருக்கட்டும்; முதலில் நம்மிடையே போர் நிறுத்தம் வர வேண்டும் - என்று கேட்டுக் கொண்டார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தம் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியிலே சிங்கள அரசு நிறுவி இருப்பது வெற்றிச் சின்னமல்ல- அவமானச் சின்னம்!
ராஜபக்சேவை விழுந்து விழுந்து ஆதரிக்கும்  இந்து ஏடுகூட இன்று ஓர் உண்மையை ஒப்புக் கொண்டு எழுதி யுள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் 18 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அத்தனைப்  பேரும் சிங்களவர்களே என்று இந்து குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் இலங்கை என்பது சீனாவின் தொங்கு சதையாகி விட்டது. போரே இல்லாமல், போரையை மேற்கொள் ளாமல் கொழும்பில் சீனாவின் நினைவுச் சின்னம் நிறுவப்பட இருப்பதை விரைவில் காணலாம்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் வளர்ந்தால், வலிமை பெற்றால் இந்தியாவுக் குப் பாதுகாப்பானது. இதனை பிரதமராக இருந்த இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே புலிகளை அவர் ஆதரித்தார். புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும் அனுமதி கொடுத்தார்.
சீனாவின் முத்துமாலை திட்டம் என்பது இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்குத்தான், தமிழர்களை இந்தியா காப்பாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
பெரியார் திடல் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந் தால் இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழர்கள் பற்றிய உணர்வு எங்களுக்கெல்லாம் உண்டாகி யிருக்குமா? இந்திய இராணுவம் ஒரு பேட்டை ரவுடிபோல் நடந்து கொள்ளலாமா என்று இதே மேடையில் வினா எழுப்பியவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்தான்.
ஈழத் தமிழர்களும் சாகக் கூடாது; இந்திய இராணுவ வீரர்களும் மடியக் கூடாது என்று சொன்னவர் திராவிடர் கழகத் தலைவர்.
அன்று கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ உருவாக்கப்பட்டது - போராளிகள் பக்கம் நின்று; இன்று கலைஞர் தலைமையில் டெசோ உருவாகி இருப்பது கொலைகாரன் ராஜபக்சேவைக் கூண்டில் ஏற்ற - எஞ்சி யுள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற.
இன்றைய தினம் ஈழத் தமிழர்களுக்காக என்று சொல்லப்படும் மேடைகள் ஈழத் தமிழர்களுக்காக என்ற நிலைமாறி கலைஞரையும், திமுகவையும் தூற்றுவது என்கிற அளவுக்குக் குறுகிவிட்டது என்று குறிப்பிட்டார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, October 30, 2012

அண்ணா பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் யார்?


அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர். ஏடு விமர் சனத்தை எதிர்கொள்ளும் திராணி யின்றி விழுந்து பிடுங்கும் ஒரு வேலையில் இறங்கி இருப்பது பரிதாபமே (30.10.2012).
மின்சாரத்தைப் பெற பிரதமரை நேரில் சந்திக்க வேண்டுமே தவிர, நீதிமன்றம் பரிகாரமாகாது. நீதிமன்றம் வேறுவித மாகத் தீர்ப்பு அளித்துவிட்டால் - வேறு மார்க்கமே இல்லாத ஒரு நெருக்கடிக்குத் தமிழ்நாடு அரசு தள்ளப்படும் என்ற  கருத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடு தலையில் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி விமர்சனம் செய்யலாம்; அந்தக் கருத்துத் தவறானது என்று எதிர்வாதம் வைக்கலாம்.
அதனை விட்டு, தரக்குறைவான வார்த்தைகளை வாரி இறைப்பது அந்த ஏட்டின், அந்தக் கட்சியின் தரத்தைத் தான் பறைசாற்றும் பந்தை அடிக்கமுடி யாத போது காலை அடிக்கும் ஆட்டக் காரன் போல சரக்கு இல்லாதவர்கள் ஆத்திரத்துக் கொம்பேறி அருவருப்பான வார்த்தைகளைத் தானே வாந்தி எடுப் பார்கள்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் என்பது குறள்.
இடித்துச் சொன்னால் எரிச்சலாகத் தான் இருக்கும். இனிப்பு இனிப்பாகப் பேசுபவர்களையும், ஆமாம் வெள்ளைக் காக்கை பறந்தது; நீங்கள் சொல்லுவது சரிதான்! என்று காக்கா பிடிப்பவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டால் முடிவு பரிதாபகரமாகத்தானிருக்கும் என்பது வரலாறு அடித்துச் சொல்லிக் கொடுக்கும் பாடமாகும்.
அண்ணாவை கட்சியின் பெயரிலும், கொடியின் உருவத்திலும் பொறித்துக் கொண்டு, திராவிட என்ற இனப் பண் பாட்டுப் பெயரையும் கட்சியில் இணைத் துக் கொண்டு, இந்தத் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கோட் பாடுகளுக்கு முரணாகவும் பூணூல் தத்துவத்தைப் பற்றியும், திருநீற்றின் மகிமை பற்றியும் பெரியார் கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள் வாரியார் கூறியதை வாந்தி எடுத்ததையெல்லாம் வக்கணையாக வெளியிடுபவர்கள் கருப்புச் சட்டையைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ பேசலாமா? எழுதலாமா? வாரியார் பற்றி அண்ணா எழுதியது பற்றி நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் எழுதுவோர்க்குக் கடுகளவாவது தெரியுமா? அந்தோ பரிதாபம்! (இது குறித்து எல்லாம் விடுதலை எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியவில்லை - பதுங்கிக் கிடக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
அண்ணா பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவோர் யார்? உண்மையான கொள்கையைப் புரிந்துகொண்ட ஒரே ஒருவர் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்தா லும் அவருக்கே நன்றாகத் தெரியுமே இந்த உண்மை!
அண்ணா திமுகவா? அக்ரகார திமுகவா? ஆன்மீக திமுகவா? கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்.

உருப்படுமா இந்த நாடு?


இந்து மதத்தால் ஏற்படும் சீரழிவு : 30 நாட்களில் 37 பண்டிகைகளாம்!

அர்த்தமுள்ள இந்துமதம் என்கிறார்களே - அந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் எத்தனை எத்தனை மூட நம்பிக்கைகள்? எத்தனை எத்தனை நாட்கள் வீண்? பொருளாதார நாசம்? இதோ ஓர் பட்டியல் - வரும் நவம்பர் மாதத்திற்கு நாட்கள் 30 என்றால் இந்து மதப் பண்டிகைகள் மட்டும் 37 - உருப்படுமா நாடு?
நவம்பர் 2 - கார்வ சவுத்
நவம்பர் 2 - சங்கஷ்டி சதுர்த்தி விரதம்
நவம்பர் 6 - அஹொய் அஷ்டமி
நவம்பர் 10 - ஏகாதசி விரதம்
நவம்பர் 11 - பிரதோஷ விரதம்
நவம்பர் 11 - தந்தேராஸ், தன்வந்திரி ஜெயந்தி
நவம்பர் 12 - ஹனுமன் ஜெயந்தி, காலி சௌடாஷ்
நவம்பர் 13 - தீபாவளி, லஷ்மி பூஜை
நவம்பர் 13 - நாரக் சதுர்தசி
நவம்பர் 13 - அமாவாசை
நவம்பர் 14  - குஜராத்தி புத்தாண்டு (விக்ரம் சம்வத் 2069 தொடக்கம்)
நவம்பர் 14 - குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா
மற்றும் கர்நாடகாவில் கார்த்திகை மாதம் தொடக்கம்
நவம்பர் 14 - ஸ்கந்த சஷ்டி விரதம் தொடக்கம்     (முருகனுக்குரியது)
நவம்பர் 14 - கோவர்த்தன் பூஜை
நவம்பர் 15 - பாய் தோஜ், யாம திவிதியை
நவம்பர் 15 - சித்திரகுப்த பூஜை
நவம்பர் 16 - மலையாளத்தில் விருச்சிக மாதம் தொடக்கம்
நவம்பர் 16 - தமிழில் கார்த்திகை மாதம் தொடக்கம்
நவம்பர் 16 - சபரிமலை கோவில் நடை திறப்பு
நவம்பர் 17 - வங்காளத்தில் அக்ரஹன் மாதத் தொடக்கம்
நவம்பர் 17 - சாத் பூஜை தொடக்கம்
நவம்பர் 19 - சூரசம்ஹாரம் ஸ்கந்த சஷ்டி
நவம்பர் 19 - சாத் பூஜை மாலை
நவம்பர் 20 - சாத் பூஜை காலை
நவம்பர் 21 - கோபஸ்தமி
நவம்பர் 22 - அக்ஷயம் நவமி- குஷ்மண்ட நவமி
நவம்பர் 24 - ப்ரபோதினி ஏகாதசி விரதம்
நவம்பர் 24 - சதுர் மாச விரதம் முடிவு
நவம்பர் 24 - துளசி விவாஹம் தொடக்கம்
நவம்பர் 24 - பந்தர்பூர் கார்த்திகை மேளா
நவம்பர் 25 - பிரதோஷ விரதம்
நவம்பர் 27 - வைகுந்த சதுர்தசி
நவம்பர் 29 - பவுர்ணமி
நவம்பர் 29 - தேவ தீபாவளி
நவம்பர் 29 - திரிபுரரி பவுர்ணமி
நவம்பர் 30 - வட இந்தியாவில் மகஷிரிஷ் மாதம்/  ஆகன் மாதம் தொடக்கம்
இவையெல்லாம் அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் உள்ள இந்துக்களின் முக்கியமான பண்டிகை நாள்களாம்.  (இதில் மாதத் தொடக் கம் என்பவற்றைக் கூடத் தள்ளிவிட முடியாது! ஏனெனில் அந்த நாள்களையும் பார்ப்பனர்கள் தங்கள் வசூலுக்கான நாள்களாகவே பயன் படுத்துகிறார்கள்.) அதாவது ஒரே ஒரு மாதத்திற்கு இத்தனைப் பண்டிகையாம்... விரதமாம்...இதையெல்லாம் கடைப் பிடிப்பதையே கர்மசிரத்தையாய் ஒருவர் செய்து கொண்டிருந் தால் விளங்குமா அவர் வாழ்க்கை! இது தான் இந்தியப் பண்பாடு என்று சொல்கிறார்களே, அப்படியிருந்தால் விளங்குமா இந்த நாடு!
இந்தப் பட்டியலைப் போட்டுவிட்டு, இது இந்திய நேரத்தின் அடிப்படையில் அமைந்த ஹிந்து பஞ்சாங் கத்தின் படி பட்டியலிடப் பட்டுள்ளது என்று தனிக்குறிப்பு வேறு! இவர்கள் சொல்லும் நல்லநேரம் இந்திய நேரப்படி என்றால் அமெரிக்காவில் எது நல்ல நேரம்?
ஆப்கானிஸ் தானில் எது நல்ல நேரம்? கிரீன்வீச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒப்புக்கொள்ளப்பட் டுள்ள உலகளாவிய நேரங்களில் எப்படி நல்ல நேரத்தைக் கணக் கிடுவது என்று உங்கள் பஞ்சாங்கத்தில் இல்லையே, ஏன்? நல்ல நேரம், கெட்ட நேரத்தையெல்லாம் உங்கள் பஞ்சாங்கம் இந்தியாவைக் கொண்டு கணக்கிடு கிறதே, அந்த நேரங்களின் தாக்கம் எல்லாம் உஸ்பெகிஸ் தானில் செல்லுபடியாகாதா? அதற்கு அங்கே பவர் இல்லையா?
இந்த லட்சணத்தில் ஹிந்து மதம் அறிவியல் பூர்வமானது என்று ஆகாச அளப்புகள் வேறு! மதப் பண்டிகைகளுக்கான விடுமுறை நாள்கள் அனைத்தையும் விருப்ப விடுப்பு நாள்களாக மாற்ற வேண்டும் என்றும், மதப்பண்டிகை விடுமுறையைக் குறைத்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பயனாக இருக்கு என்றும் பல ஆண்டுகளாக திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறதே!
மக்கள் பிரச்சினைக்காகப் போராட்டம், கடையடைப்பு, பந்த் என்று அறிவித்தால் நாட்டின் பொருளா தாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆடம் ஸ்மித்களாக மாறி கருத்து சொல்லும் அறிவு ஜீவிகள் எல்லாம் மதம் என்று வந்துவிட்டால் ஆட்டம் போடாமல் அடங்கி விடு வதேன்?
மதம் மனித குல வளர்ச்சிக்குத் தடை என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை என்பதற்கு இவையெல்லாமே ஆதாரங்களா யிற்றே!

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து

டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அதன் விளக்கங்களை அய்.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனை நேரில் சந்தித்து, உரையாட தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.
அதனைப் பாராட்டி, வாழ்த்துக கூறும் வகை யில். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னையில் மு.க. ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்து சால்வை அணிவித்து கூண்டு (Gage) புத்தகத் தையும் வழங்கினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...