Friday, June 28, 2013

மருத்துவருக்கு வைத்தியம் தேவை



இராஜபாளையத்தில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு 04.05.2013 அன்று நடைபெற்றது.இதில் அதிரடி அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை.

மருத்துவருக்கு வைத்தியம் தேவை

Monday, June 24, 2013

2003 முதல் 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குண்டு வெடிப்பு மூளையாக செயல்பட்டவர் இந்துத்துவாவாதி

தேசிய புலனாய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு
புதுடில்லி ஜூன் 24- 2003-ஆம் ஆண்டிலி ருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கி யத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.
சம்ஜவ்தா எக்ஸ் பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்ற வாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹமீத் சவ்கான் என்ற ஹக்லா என்ப வரின் உண்மையான அடையாளம் என்ன என்பதை தேசிய புல னாய்வு அமைப்பு சமீ பத்தில் தாக்கல் செய் துள்ள துணை குற்றப் பத்திரிகையில் தெரி விக்கப்பட்டிருக்கிறது. அவரது உண்மை பெயர் ரமேஷ் வெங்கட் மஹால்கர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச மகாராஷ்டிரா ஆகிய மாநில இந்துத்துவ தீவிர வாத ஆசாமிகளுக்கு இவர் இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத் தில் மாலேகான், அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜவ்தா வெடிகுண்டு தாக்குதல் 2006-லிருந்து நிகழ்ந்தன. மகாராஷ்டிர மாநிலத் தில் பார்ப்பனி, பூர்ணா, ஜல்னா மற்றும் நந்தால் ஆகிய இடங்களில் நடத் தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் 2003-லிருந்து 2006 வரை நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு செயல்பட்டவிதம் இந்துத்துவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒரு நபரின் தலைமையின் கீழ் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள் ளது. ஹக்லாவின் உண்மை யான அடையாளம் வெளிப்படுவதற்குமுன் அவர் இமான்சுபான்சி என்பவரின் சொந்த ஊரான நந்தால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2006-லிருந்து 2008 வரை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்தார் என்று கண்டு பிடிக்கப் பட்டது.
இமான்சு பான்சி 2006 ஏப்ரல் மாதத்தில் இந்த நந்தால் என்ற இடத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண் டிருக்கும் போது இறந்து விட்டார். அவுரங்கா பாத்தில் உள்ள ஒரு மஸ் ஜிதை தகர்க்க அந்த வெடி குண்டு தயாரிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு நிறுவன வட்டார தகவல் படி ஹக்லாவின் குடும் பம் விஸ்வ ஹிந்து பரிஷத்துடன் தொடர்பு டையது. மேலும், ஹக்லா வி.எச்.பி.யில் ஒரு உறுப்பினர் ஆவார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஒரு அரசு ஊழியரின் மகன் ஆவார். இந்துத்துவ கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு அவர் தனது 20-ஆவது வயதில் 2003-ஆம் ஆண் டில் வீட்டை விட்டு வெளியேறினார்.
2003-ஆம் ஆண்டில் தான் மகாராஷ்டிரா மாநிலம், பார்ப்பானி மாவட்டத்தில் இந்துத் துவ தீவிரவாத ஆசாமி களின் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கால மான இமான்சு பான்சி யும் அவரது கூட்டாளி களும் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஹக்லாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2003-இல் வீட்டை விட்டு வெளியேறி தலை மறைவான ஹக்லா 2005-ஆம் ஆண்டில் ஜம்மு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி மறைந்திருந்த இடத்தை சென்றடைந் தது, தெரியவந்துள்ளது. அதே ஆண்டில் சுனில் ஜோஷி ஹக்லாவை மத் தியப்பிரதேச மாநிலத் தில் உள்ள தேவாஸ் என்ற இடத்துக்கு அழைத்து வந்தார் அங்கே ஹக்லாவுக்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
2000-ஆம் ஆண்டில் புனே நகரில் சிங்காகட் என்ற இடத்தில் நடந்த குண்டு வெடிப்பு பயிற்சி முகாமில் இந்த ஹக்லா பயிற்சி பெற்றாரா என் பதையும் தேசிய புல னாய்வு நிறுவனத்தினர் விசாரித்து வருகின்றனர். அந்த பயிற்சி முகாமில் இமான்சு பான்சி வெடி குண்டுகளை எப்படி வெடிக்கச் செய்வது என் பதையும், வெடி குண்டு களை தயாரிப்பது பற்றி யும் பயிற்சி பெற்றார்.
ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பயிற்சி முகாமில் பயிற்சியளித் ததாக சந்தேகிகப்படு கிறது. இமான்சு பான்சி தன்னை வழி நடத்துபவர் களுக்கு தெரியாமல் சில குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை, தானா கவே வெடிக்கச் செய் தார். சக்தியில்லாத அந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் எந்த சேதமும் ஏற்படாத தால் இமான்சு பான் சியை அவரது தலைவர் கள் கண்டித்ததாகவும் தேசியப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யார் காரணம்?

- தந்தை பெரியார்
மனிதன் மின்சார விளக்கைப் பயன் படுத்துகின்றானே தவிர, முன்னோர் கள் காலத்திலிருந்து இருந்து வந்தது என்று எவனும் அகல் விளக்கைப் பயன் படுத்துவது கிடையாதே!
இங்கு மனிதன் சிந்திப்பது பாவம், மதத்திற்கு விரோதம், கடவுளுக்கு விரோதம் என்று சொல்லி மனிதனின் சிந்தனையைத் தடுத்து விட்டதால் அறிவு வளர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. ரஷ்யாக்காரன் கடவுள், மதத்தை ஒழித்து சிந்தனைக்குச் சுதந்திரம் கொடுத்ததால் அங்கு ஏழை யும் இல்லை - பணக்காரனுமில்லை, தொழிலாளியும் இல்லை - தாழ்ந்த சாதிக்காரனும் இல்லை - உயர்ந்த சாதிக் காரனும் இல்லை. எல்லா மக்களும் சமமாக இருக்கிறார்கள்.
உலகில் நாம் பல பாகங்களைப் பார்த்துச் சிந்திக்க ஆரம்பித்த பின் தான் நம் இழிவிற்குப் காரணம் பகுத் தறிவிருந்தும் அதனைக் கடவுள் - மதம் - சாஸ்திரம் - புராணம் - முன் னோர் - பெரியோர் என்கிற காரியங் களில் பயன்படுத்தாததே என்பது புலப்படுகிறது.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதனால் புகுத்தப் பட்டதல்ல, தானாக ஏற்படுவ தாகும். ஏசு கிறிஸ்து ஆயிரம் கடவுள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்றான். அப்போது அவன் பகுத்தறிவு வாதி! முகமது நபி ஆயிரம் கடவுள் இல்லை; கடவுளுக்கு உருவ மில்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன்னான்; அந்தக் காலத்தில் அவன் பகுத்தறிவு வாதி! இப்போது நான் அந்த ஒரு கடவுளும் தேவையில்லை என் கின்றேன்.
குரங்கை எப்படி மனிதன் அடக்கி ஆட்டி வைக்கின்றானோ அதுபோல் மூடமக்களை மதவாதிகள் ஆட்டி வைக்கின்றனர். எதற்காக ஒருவன்மேல் சாதி என்றால், கடவுள் அமைப்பு, மத அமைப்பு, தலையெழுத்து, முன் ஜென் மத்தில் அவன் செய்த புண்ணியம் என் கின்றான். எதற்காக ஒருவன் கீழ்சாதி என்றால் அவன் தலையெழுத்து, கடவுள் அமைப்பு, மத அமைப்பு, முன் ஜென்மத்தில் அவன் செய்த பாவம் என்கின்றான். ஆகையால்தான் மனி தனின் இழிவை ஒழிக்க இந்தக் கடவுள், மதம், சாதி, சாஸ்திரம் முன்ஜென்மம் என்கின்ற முட்டாள் தனங்களை ஒழிக்க வேண்டுமென்கிறோம்.
நோய்க்கு மூலகாரணம் என்ன என்பதை அறிந்து அதற்குப் பரிகாரம் செய்தால்தான் நோய் குணமாகும். அதுபோன்று நம் இழிவிற்கு, அறிவற்ற தன்மைக்கு, மானமற்ற தன்மைக்கு, அடிப்படை மூலம் எது என்று பார்த்து அதனை அழித்தால் தான் மனிதனின் இழிவு, அறிவற்றதன்மை, மானமற்ற தன்மை ஒழியும். இந்து மதம் இருப்ப தால்தான் ஒருவன் பார்ப்பானா கவும், ஒருவன் பறையனாகவும் இருக் கின்றான். இந்துமதம் இல்லை என்றால் பார்ப்பானுமில்லை, பறையனுமில் லையே! கிறிஸ்து மதத்தில், முஸ்லிம் மதத்தில் பார்ப்பான் - பறையன் என்று எவனுமில்லையே!
இந்துமதம் என்பதாக ஒரு மதமே கிடையாது. காந்தியும் இதைச் சொல்லி விட்டார். இந்து என்றால் கருப்பு நிறமுடை யவன் என்றுதான் பொருள். இந்துமதம் இருந்தது என்பதற்கு எந்த இலக்கியத்திலும் சான்றில்லை. இந்து மதம் எப்போது தோன்றியது? அதன் தலைவன் யார்? மதநூல் (வேதம்) எது? என்றால் இவைகள் எதற்கும் தெளி வான விளக்கம் இல்லை. இவற்றிலி ருந்தே இந்துமதம் இல்லை என்பதை உணரலாம்.
சிந்திக்காததனாலே எவன் அதை உபயோகப்படுத்திக் கொண்டு வாழ் கின்றானோ,  அவன்தான் நம்மை யெல்லாம் சிந்திக்க ஒட்டாமல் தடுக் கின்றான். மற்றவற்றில் பகுத் தறிவைப் பயன்படுத்துவது போன்று கடவுள் - மத - சாஸ்திர விஷயத்திலும் மனிதன் தன் சிந்தனையை - பகுத் தறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று நாம் சொல்கின்றோம்.
நாம் கடவுள் இல்லை என்று சொன்னால், கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று சொன்னால், இது நாமாக சொன்னது இல்லையே. கடவுள் நம்பிக்கைக்காரன் நம்மைப் பற்றிச் சொன்னதற்குப் பதில்தான் நாம் சொல்வதாகும்.
பைபிளிலேயே இருக்கிறதே! எவன் கடவுளை நம்ப வில்லையோ அவன் முட்டாள், அயோக்கியன் என்கின்றான். துலுக்கனை எடுத்துக் கொண்டால் எவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வில்லையோ அவன் காபிர், முட்டாள், அறிவில்லாதவன், அயோக்கியன் என்கின்றான்! கடவுள் நம்பிக்கையற்ற வனையெல்லாம் கொலை செய்திருக் கிறார்களே! சமணனும், புத்தனும் என்ன அயோக்கியத்தனம் செய்தான்? எதற்காக அவர்களைக் கொலை செய்ய வேண்டும்? கழுவேற்றிக் கொல்ல  வேண்டும்? மதத்தைப் பரப்பியதே மக்களை வெட்டி வீழ்த்திக் கொன்று தானே? துலுக்கன் முஸ்லிம் அல்லாத வன்களைக் கொன்றுதானே மகம்மதிய மதத்தைப் பரப்பினான்?
1920இல் மலையாளத்தில் மாப் பிள்ளா கலகம் ஏற் பட்டதே மதத்தைப் பரப்புவதற்காக ஏற்பட்ட கலவரம்தானே! அது 1920லேயே இப்படிப்பட்ட கொடுமை நடந்திருக்கிற தென்றால் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஏசுவை எதற்காகக் கொன்றார்கள்? ஆயிரம் கடவுள்கள் இல்லை; ஒரு கடவுள்தான் உண்டு என்று சொன் னார். அதற்காகத்தான் அவரைச் சிலுவையிலறைந்து கொன்றார்கள். இப்படிக் கடவுள் நம்பிக்கையற்றவர் களை அழித்து ஒழித்துத்தான் மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கின் றார்கள்.
நாம் இப்போது இது போன்ற கழகங்கள் துவக்குவதன் நோக்கம் மனிதர்களுக்கிடையே இருக்கிற மடைமை, முட்டாள்தனம், அறிவற்ற தன்மை ஒழிக்கப்பட வேண்டும். மற்ற உலகிலுள்ள மனிதர்களைப் போல் இழிவற்று அறிவு பெற்று வாழ வேண்டுமென்பதற்காகவும் மனிதன் தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்வதற்குச் சிந்தனை வேண்டும். அந்தச் சிந்தனையைத் தூண்டுவதற் காகவும் ஏற்பாடு செய்யப்படுவதே யாகும் என எடுத்துரைத்தார்.
10.12.1970 அன்று கோவை மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி (விடுதலை, 20.1.1971)

இதுதான் பாரத புண்ணிய கலாச்சாரமா?

- ஊசி மிளகாய்
பாரத நாடு பழம் பெரும் நாடு - நீர் அதன் புதல்வர் என்று பாடிய பாட்டு - புண்ணிய பூமி, ஞான பூமி, என்று தனக்குத் தானே புகழ்மாலை சூட்டிக் கொண்டுள்ள நம் நாட்டில் வாழும் மனிதர்கள் எவ்வளவு கேவலமான மனிதர்களாக - ஏன் மனசாட்சியே இல்லாத மனித மிருகங்களாக வாழுகின்றனர் என்பதற்கு நேற்றும் இன்றும் தொலைக்காட்சி, ஊடகங்கள் - ஏடுகளில் வருகின்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளாக வருவன எல்லாம் செந்தேள் கொட்டுவதாக அல்லவா இருக்கின்றன!
உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள கேதார்நாத், பத்திரிநாத் போன்ற இடங்களுக்கு புண்ணிய புனித யாத்திரை கடவுள் அருள் கிட்டும்; தெய்வத் தின் கிருபையை மொத்தமாகச் சம்பாதித்து புண்ணியத்தை பிக்செட் டெப்பாசிட்டில் போட்டு மோட்சத்தில் முன் இடம் பிடிக்கலாம் என்று  பக்தர்கள் நம் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் சென்றனர். பரிதாபத் திற்குரிய நிலையில் சுமார் ஒரு லட்சம் பேர்கள் என்றால் இதில் - கடும் மழை, வெள்ளம் - இமாலய சுனாமி காரணமாக திடீர் வெள்ளத்தில் அடித்துச் சென்றோர், காணாமற் போனவர்கள் சுமார் 13 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்ற சோகச் செய்தி - நம் போன்ற நாத்திகர்கள் உட்பட அனைவரையும் நெஞ்சுருகச் செய்கிறது!
எஞ்சிய மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவரவர் வீடு திரும்பி, கதறி பதறிடும் உற்றார் உறவினருடன் மீண்டும் சந்தித்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டுமே என்று நாம் கவலைப்படுகிறோம்.
தமிழ்நாட்டின் ஒரு பெண்மணி - கவளம் சோறுகூட கிடைக்காமல் பட்டினியால் உயிர் விட்டார்; வேறு வழி இன்றி என்ற செய்தி நம் உள்ளத்தில் இரத்தக் கண்ணீர் வழியும்படிச் செய்துள்ளது!
நாடே - ஏன் உலகமே திரண்டு இச்சோகத் திலிருந்து பாதிக்கப்பட்ட அம்மக்களை - பக்தர்களை - காப்பாற்றிட வேண்டும் என்று விரும்புகின்றனர்!
ஏராளமான நிதி உதவிகளும் நிவாரணப் பணிகளுக்கு பல தரப்பிலிருந்தும் அளிக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு பரிதாபச் சூழலில் அங்கிருந்து வரும் சில செய்திகள் - இப்படியும் பணத்தாசை பிடித்த மனிதத்தைக் கொன்ற - கொல்லுகின்ற மனித உரு மிருகங்களா? என்று வேதனையும் வெட்கமும் படக் கூடிய நிலை உள்ளதாக அல்லவா இருக்கிறது!
வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள், மீட்புக் குழுவினர் வருகைக்காகக் காத்திருக் கின்றனர். அவர்களது சொத்துக்கள் மற்றும் கொண்டு வந்த பொருள்கள் எல்லாம் பறி போன நிலையில், உயிரோடு திரும்பினோமே என்று அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் அவர்களை தண்ணீர்த் தாகத்துடனும் கடும் பசியுடனும் ஜீவ மரணப் போராட்டம் நடத்திடும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் அங்கு தற்காலிகக் கடைகள் வைத்திருக்கும் சிலர்; தங்களது பேராசை விஸ்வரூபம் எடுத்து ஆடுவதுபோல,
ஒரு பரோட்டா    - 250 ரூபாய்
ஒரு பாட்டில் தண்ணீர்    -    200 ரூபாய்
ஒரு சிறிய சிப்ஸ் பாக்கெட்    -    100 ரூபாய்
ஒரு சிறிய சப்பாத்தி    -    150 ரூபாய்
ஒரு சிறிய ரொட்டி (சிலைஸ்)    - 100 ரூபாய்
ஒரு சிறிய கப் சாதம்    - 40 ரூபாய்
என்று விற்பதைவிட, வெட்கப்படத் தகுந்த வேதனை வேறு உண்டா?
மனிதம் இவர்களிடத்தில் மரித்தே விட்டதோ!
இப்படி மனசாட்சியைக் கொன்று சம்பாதிக் கும் பணத்தை இவர்களுடன் சேர்த்துப் புதைக் கப் போகிறார்களா? எரிக்கப் போகிறார்களா?
பக்தி வியாபாரம் என்ற பெயரால் சுரண்டலை ஒரு புறம்; மறுபுறம் இப்படி செத்த பிணங்களைத் தான் கழுகுகள் கொத்தித் தின்கின்றன.
உயிரோடு உள்ளவர்களை - இந்தச் சுயநலப் பேராசைக் கழுகுகள் குத்திக் குத்தி உயிரையும் போக்க அனுமதிக்கலாமா? இவர்களைவிட அந்தப் பிணந் தின்னிக் கழுகுகள் மேலானவை அல்லவா!
பாரதக் கலாச்சாரமாம்! வெங்காயமாம்!
கடவுளுக்கு,
அவதாரங்களுக்கு
முனிபுங்கவர்களுக்கு
காவிச் சாமியார்களுக்கு
கோயில்களுக்கு பஞ்சமே இல்லை!
அன்றாடம் கோடிக்கணக்கில் வசூல்களும் கூட? கோயில் உண்டியல்களுக்குப் பஞ்சமில் லாத நாடு அல்லவோ இது! பூமியின் பொது ஒழுக்கமோ எவ்வளவு சீர்கேடடைந்து விட்டது பார்த்தீர்களா?
பக்தி வந்ததே தவிர,
மனிதநேயம் மறைந்து விட்டதே!
இது நாடா? உயிருடன் சக மனிதர்களைக் கொத்தித் தின்னும் மனிதக் கழுகுகள் உலவும் காடா?

Sunday, June 23, 2013

இந்து முன்னணி எதிர்ப்பைப் புறந்தள்ளி ஜலகண்டேசுவரர் கோயில் அரசு வசம் ஆனது

வேலூர், ஜூன் 23-வேலூரில் 600 ஆண்டு கள் பழைமை வாய்ந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து அற நிலையத்துறை கையகப் படுத்தியது. இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித் துள்ளது.
விஜயநகர மன்னர் ஆட்சிக்காலத்தில் 16ஆம் நூற்றாண்டில் வேலூர் கோட்டை கட்டப்பட்டது. இங்கு, ஜலகண்டேஸ்வரர்  கோயில் உள்ளது. இங்கு கலை நயம்மிக்க மண்ட பம், சிலைகள், குளம், ஐம்பொன்னால் செய் யப்பட்ட 63 நாயன் மார்கள், நடராஜர் சிலை கள் உள்ளன. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், வெளி நாட்டு பயணிகளும் வருகின்றனர்.
இந்திய விடுதலைக்கு காரணமாக இருந்த சிப்பாய் புரட்சி 1806இல் நடந்தது இந்த கோட் டையில் தான். 600 ஆண் டுகள் பழைமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்கதாக வேலூர் கோட்டை திகழ்கிறது. இங்குள்ள கோயிலை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் என்ற அமைப்பு கடந்த 32 ஆண்டு களாக நிர்வகித்து வந்தது.
கடந்த 2003ஆம் ஆண்டு, இந்த கோயிலை கையகப்படுத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்து அறிவிப்பு வழங்கியது. இதை எதிர்த்த கோயில் நிர் வாகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கள், இந்து அறநிலையத் துறை கோயிலை கைய கப்படுத்தலாம்; இந்த விஷயத்தில் தரும ஸ்தா பனம் தலையிட முடி யாது என்று கடந்த 2012ஆம் ஆண்டு டிசம் பர் 14ஆம் தேதி தீர்ப் பளித்தது. இதைத் தொடர்ந்து, கோயிலை கையகப்படுத்த போவ தாக மத்திய, மாநில அரசுகளுக்கு இந்து அற நிலையத்துறை அறி விப்பு கடிதம் அனுப் பியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தரும ஸ்தாபன நிர்வாகிகளி டம், கோயிலை கையகப் படுத்துவதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவிப்பு கடிதம் அளித்தனர். அதைப்பெற்றுக் கொண்ட கோயில் நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக கூறிய தாக தெரிகிறது.
நேற்று காலை, உதவி ஆணையர் பாரிவள்ளல் தலைமையிலான அதி காரிகள், கோயிலில் இருந்த 10-க்கும் மேற் பட்ட உண்டியல்களை யும், அர்ச்சனை டோக்கன் களையும், கோயி லில் இருந்த கிணற்றையும் பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதை யடுத்து, கோயிலின் தக் காராக உதவி ஆணையர் பாரி வள்ளல் செயல்படுவார் என்று தெரி விக்கப்பட்டது.
அப்போது உதவி ஆணையர் பாரிவள்ளல் கூறியதாவது:
இந்து அறநிலையத்துறையே கோயிலை நிர்வகிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. அதனால் ஆணையரின் உத்தரவின் பேரில் இன்று (நேற்று) ஜலகண்டேஸ்வரர் கோயில் நிர்வ கத்தை ஏற்றுள்ளது. இனிவரும் காலங்களில் கோயிலில் வழக்கமான பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும். இதுவரை, வேலூர் மாவட்டத்தில் 1,109 கோயிலை இந்து அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. ஜலகண் டேஸ்வரர் கோயிலின் ஆண்டு வரு மானம் ரூ.10லட்சம் ஆகும். கோயிலை வளர்ச்சி பெற செய்யும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தும் விஷயம் அறிந்து, அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த அன்புமணி, ஆதிமோகன் உள்ளிட் டோர், கோயிலை ஒப்படைக்க மாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
இந்து முன்னணி எதிர்க்கிறதாம்
இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிமோகன் கூறுகையில் இந்த கோயிலில் வரு மானம் வருவதால், கோயிலை கையகப் படுத்துகிறார்கள். ஆனால் 300 ஆண்டுகள் பழைமையான அப் துல்லாபுரத்தில் உள்ள கைலாயநாதர் கோயிலை ஏன் கையகப்படுத்த வில்லை? எந்த கோயிலில் வருமானம் வருகிறதோ, அந்தக் கோயிலை ஏற்றுக்கொள்வார்கள். கோயிலை கையகப்படுத்துவதை கண்டித்து, நாங்கள் பெரிய அளவில் போராட் டம் நடத்துவோம் என்றார்.
ஏன்? ஜலகண்டேசுவரரிடம் முறை யிடுவதுதானே?


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...