Wednesday, February 12, 2014

மோடியின் நல்லிணக்க கார்ப்பரேட் கூட்டணியை இஸ்லாமியர்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்



அகமதாபாத், பிப். 12- நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதை கருத்தில் கொண்டு இஸ் லாமியர்கள் மீது அக்கறை யுள்ளவர் போல் மோடி கபட வேஷமிட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக சில சுயநலம் கொண்ட பணக் கார இஸ்லாமியர்கள் இயங்கி வருகின்றனர். இவர் களை ஒட்டு மொத்த இஸ்லா மியர்களும் நம்புவதற்கு தயாராக இல்லை. மோடியின் கார்ப்பரேட் கூட்டணியை அவ்வளவு எளிதாக நம்பி ஏமாற மாட்டோம் என்று குஜராத்தில் வாழும் இஸ்லா மிய மக்கள் தெரிவித் துள்ளனர்.

குஜராத்தில் பிப்.7ஆம் தேதி உம்மத் வர்த்தகக் கண் காட்சி மற்றும் வர்த்தகர்கள் மாநாடு துவங்கியது. குஜராத்தில் இப்படியொரு கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறையாகும். குஜராத் தில் தொழிலதிபராக இருக் கக்கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் இந்தக் கண் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந் தார். உள்நாடு மட்டுமன்றி துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்தும் பல நிறு வனங்கள் இந்தக் கண் காட்சியில் கலந்து கொள்ள வுள்ளதாக அறிவிக்கப் பட்டது. சமுதாயங்களுக் கிடையே நல்லிணக்க வர்த்தகம் என்ற மய்யக்கருத் தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக மாநாட்டு அமைப் பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மோடியின் நெருக்கத்தை பெறுவதற் காகவே இந்த மாநாடு நடத் தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த மாநாட்டின் மூலம் இந்து - முஸ்லிம் வர்த்தகர் களிடையே எவ்வித மாற்ற மும் ஏற்படப்போவதில் லை என்றும், 2002ஆம் ஆண்டு தாங்கள் (முஸ்லிம்) தாக்கப்பட்டதை மக்கள் மறக்கமாட்டோம்.
யார் இந்த ஜாபர்?

 இந்த மாநாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கக் கூடிய ஜாபர் சரேஷ்வாலா என்பவர் குஜராத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். இவர் பர்சோலி மோட்டார்ஸ் என்ற பெயரில் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார்களை விற்பனை செய்து வருகிறார். அதேசமயம், தொழிலில் பல்வேறு முறை கேடுகளில் அவர் ஈடுபட் டுள்ளார். இதனை இந்தியப் பங்குச்சந்தை வாரியமான செபி கண்டுபிடித்து, கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி,பர் சோலி கார்ப்பரே சன் லிமிடெட்டுக்கு வழங் கப்பட்ட அங்கீகாரத்தை தேசிய பங்குச்சந்தை வாரி யம் மற்றும் மும்பை பங்குச் சந்தை வாரியத்திலிருந்து ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த தகவல் வாட்ச்அவுட் இன்வெஸ்டார்ஸ் என்ற வலைதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இதேசெய்தி, குஜராத் டெய்லி மற்றும் குஜராத் சமாச்சார் ஆகிய செய்தித் தாள்களில் மாநாடு துவங் கும் நாளன்று வெளியிடப் பட்டது.இப்படியொரு களங்கம் கொண்ட நபர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி, முஸ்லிம் களை பூரிப்பில் ஆழ்த்தும் வகையில் பேசியுள்ளார். அவர் பேசுகையில், இந்துக் களும், முஸ்லிம்களும் வளர்ச்சியின் இருசக்கரங்கள். முஸ்லிம்கள் பெரிய தொழில்களை கொண்டுள் ளனர். அவர்கள் மிகப்பெரிய வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளனர். முஸ்லிம் இளைஞர்களும், பெண் களும் மிகப்பெரிய திறமை யைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பொருத்த மான தளம் வேண்டும்.

வேலையைத் தேடுவ தற்குப் பதிலாக பிறருக்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய நிலைக்கு வர வேண் டும். நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவ சியம். முஸ்லிம் இளைஞர் களின் திறமையை வளர்க்க தனது அரசு உதவி செய்யும் என்று திடீர் கரிசனத்தோடு பேசியி ருக்கிறார்.

2002இல் மோடி


ஆனால், இதே மோடி கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உறவுகளை, உயிர்களை இழந்த நேரத்தில் பேசியது வேதனையின் உச்சம். கலவரத்திற்குப் பிறகு மோடி நடத்திய கவுரவ் யாத்திரையின் போது, மெக்சானா மாவட்டத்தின் பகுசார்ச்சியில் 2002ஆம் ஆண்டு செப்.9ஆம் தேதி அவர் பேசியதாவது, சகோ தரர்களே, நிவாரண முகாம் களை நாம் தொடர வேண்டுமா? குழந்தைகளை உற்பத்தி செய்யும் மய்யங் களை நான் திறக்க வேண்டு மா? குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கடைப்பிடிப் பதன் மூலம் நாடு முன் னேற்றத்தை அடைய வேண்டும். நாம் அய்ந்து பேர், அவர்களோ 25! குஜராத் தில் குடும்பக் கட்டுப் பாட்டை அமல்படுத்த முடி யாதா? நம்முடைய வழியில் யார் தடை போடுவது? எந்த மதப்பிரிவு நம் வழியில் குறுக்கிடுகிறது? உதவிகள் ஏழைகளுக்குச் சென்று சேரா தது ஏன்? சிலர் குழந்தை களை உற்பத்தி செய்தால், அவர்களது பிள்ளைகள் சைக்கிளுக்கு பஞ்சர் போடு வதையே செய்வார்கள் என்று பேசி னார்.

அவரது தற்போதைய பேச்சைக் கேட்கும்போது, இஸ்லாமியர்கள் மீதான திடீர் கரிசனம் ஏன் என்று கேட்காமல் இருக்க முடிய வில்லை. இப்படியான ஒருவருடன் சேர்ந்துள்ள ஜாபர் போன்றோருக்கு, சிறுபான்மையினரின் கண் ணியமும், உறுதியும் புரியப் போவதில்லை .சிறுபான் மையினர்களின் கேள்வி களுக்கு அரசுகளால் ஒரு போதும் தீர்வு காணப்பட்ட தில்லை. மேலும், நாடாளு மன்ற ஜனநாயகம் என்பது முரண்பாடுகளை அதிகரிக்க மட்டுமே செய்திருக்கிறது. சில அரசியல் கட்சிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக வும், சில கட்சிகள் பெரும் பான்மையினருக்கு ஆதர வாகவும் உள்ளன. 2002ஆம் ஆண்டு மோடி பெரும்பான் மையினரின் உதவியுடன் சிறுபான்மையினரைக் கொன்றுகுவித்து வெற்றி கண்டார். இதுபோன்ற துரோகிகளை சரேஷ்வாலா போன்றோர் தூக்கிப் பிடித்து வருகின்றனர்.

மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்ட இந்த மாநாட்டில், சொற்ப அளவி லான வர்த்தகர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதற்கு காலியாக இருந்த நூற்றுக்கணக்கான இருக்கை கள் சாட்சி. மேலும், முஸ்லிம்களின் வர்த்தகக் கண்காட்சியை குஜராத்தில் ஏற்படுத்தி, தன்னை இஸ்லாமிய மக்கள் மீது அக் கறையுள்ளவனாகக் காட்டிக் கொள்ளும் மோடி மற்றும் அவரது கைக்கூலிகளாக மாறி வரும் ஜாபர் சரேஷ் வாலா போன்றோரின் கபட நாடகத்தையும், 2002ஆம் ஆண்டு அனுபவித்த வலி களையும் இஸ்லாமியர்கள் ஒருபோதும் மறக்கமாட் டார்கள் என்று குஜராத்தின் உண்மை என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது.

(நன்றி: தீக்கதிர் - 12.2.2014)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...