Tuesday, July 7, 2015

என் உயிருக்கும் ஆபத்து வருமோ! மத்திய அமைச்சர் பயப்படுகிறார்

பிஜேபி ஆட்சியில் வியாபம்
என் உயிருக்கும் ஆபத்து வருமோ! மத்திய அமைச்சர் பயப்படுகிறார்
போபால், ஜூலை 7- தினம் தினம் மரணம் என்ற ஒரு கோரமான ஊழல் களமான வியாபம் கொலைகள் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறும் போது எனக்கு நாளை என்ன நேரும் என்று தெரியவில்லை, நடப்பதைப் பார்த்தால் எனக்கு பயமாக உள்ளது என்று கூறியுள்ளார்.  வியாபம் ஊழல் தொடர்பானவர்கள் தொடர்ந்து அய்யத்திற் கிடமான முறையில் மரண மடைந்து வருகிறார்கள். சனிக்கிழமை முதல் தொடர்மரணம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஆரோசா மாவட்டத்தில் உள்ள காவலர் தங்குமிடத்தில் தலைமைக் காவலர் ரமாகாந்த் பாண்டே அய்யத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.  இன்று காலையில் அவ ரது நண்பர்கள் அவரை எழுப்ப முயலும்போது அவர் இறந்து கிடந்ததாக தகவல் தெரி வித்தனர். ஆனால் காவல் துறை தரப்பில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மரண மடைந்த தலைமைக் காவலர் ரமா காந்த் பாண்டே, வியாபம் ஊழல் தொடர்பாக விசா ரணை செய்துவரும் சிறப்பு புலனாய்வுத்துறையில் சில தகவல்களைத் தெரிவித் ததாகவும் அதனடிப்படை யில் முக்கியப் புள்ளிகள் சிலரின் பெயர்களும் குற்ற வாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ப தும் குறிப்பிடத்தக்கது.  இந்த தொடர் மர ணங்கள் குறித்து நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியதாவது, வியாபம் தொடர்பானவர் களின் தொடர் மரணம் மிகுந்த அச்ச உணர்வை உருவாக்குகிறது.
எனக்கு மிகவும் பயமாக உள்ளது நாளை எனக்கு என்ன நேரும் என்று  பயந்து வாழ்கிறேன், ஆனால் என்னுடைய பெயரும் இதில் சேர்க்கும் முயற்சி நடந்துவருகிறது. என்னுடைய பெயரும், மரணமடைந்தவர்களின் பெயர் பட்டியலில் சேர்க் கப்படுமா? என்ற உணர்வு உள்ளூர இருந்துவரு கிறது என்றார்.  இந்தியாவையே உலுக்கிவரும் பாஜகவின் வியாபம் முறைகேடு குறித்து சி.பி.அய். விசார ணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரிய மனுக்களை உச்சநீதிமன் றம் ஏற்றுள்ளது.
வியாபம் ஊழலில் முதல்வர் முதல் ஆளுநர் வரையிலான பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளது இந்த நிலையில் மாநில அரசின் கீழ்வரும் காவல் துறை முறையாக விசாரணை நடத்தாது என்று கூறி சி.பி.அய் விசாரணை வேண்டுமென்று என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலை வர் விஸ்வாஸ் உள்பட பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந் தனர்.  இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனுக்கள் விசார ணைக்கு எடுத்துக் கொள் ளப்படுகின்றன. மேலும், அனைத்து மனுக்களும் வரும் 9-ந் தேதி விசாரிக்கப் படும் என்று உத்தரவிட் டுள்ளது. இதனால் 9-ந் தேதி சிபிஅய் விசா ரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் வியாபம் முறைகேட்டில் உள்ள சந்தேக முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம்.
கொலை மிரட்டல் வியாபம் ஊழலை வெளிபடுத்திய நாள் முதல், தொடர்ந்து பல் வேறு மிரட்டல்களை சந்தித்து வருவதாக ஊழல் விவகாரம் வெளி உலகுக்கு தெரிவதற்கு காரணமாக இருந்த ஆஷிஷ் சதுர்வேதி தெரி வித்தார்.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...