Wednesday, July 8, 2015

பெண் கேலி செய்தவனை காவல் நிலையத்திற்குள் தர்மஅடி கொடுக்கும் மாணவி

பிலிபிட், ஜூலை 8_- உத்தர பிரதேசம் மாநி லத்தில் பெண் கேலி செய்தவனை பாதிக்கப் பட்ட மாணவி தர்மஅடி வழங்குவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பிலிபிட்டில் மாணவியை, இளைஞன் ஒருவன் பெண் கேலி செய்து உள்ளார். இது தொடர்பாக காவல் துறையில் புகார் தெரி விக்கப்பட்டது. இளை ஞரை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் பாதிக் கப்பட்ட மாணவியை வைத்து அடிக்க செய்து உள்ளனர்.
இளைஞருக்கு பாதிக்கப்பட்ட மாணவி தர்மஅடி வழங்குகிறார். அந்த இளைஞன் சாரி, சாரி என்று கெஞ்சு கிறான். சாரியா.. என்று கோபப்படும் அந்த பெண் செருப்பை கழற்றி இளை ஞன் கன்னத்தில் பளார் விடுகிறார். அடி தாங் காமல் இளைஞன் அந்த பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட் கிறான்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி யுள்ளன.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...