Friday, July 10, 2015

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

வணிகத்துறை நிறுவனங்களில் நிருவாகப் பொறுப்புகளில் பெண்களை நியமனம் செய்வதில்லை

அரசும் இப்பிரச்சினையில் அக்கறையோடு இருப்பதில்லை

மத்திய அமைச்சர் மேனகா குற்றச்சாட்டு!

கூட்டத்தை விட்டு கோபமாக வெளியேறினார்

புதுடில்லி, ஜூலை 10_ அசோசெம், எப்அய்சி சிஅய், சிஅய்அய் உள் ளிட்ட வணிகத்துறை களின் பல்வேறு பிரிவு களாக உள்ளவர்களி டையே நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பாஜக அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறைக்கான அமைச்சரான மேனகா காந்தி பங்கேற்றபோது, கொஞ்சம்கூட அக் கறையே இல்லாத கூட்ட மாக இருக்கிறது, கால விரயம்தான் என்று கோப மாகக்கூறிவிட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறி விட்டார்.

நாட்டை கட்டமைப் பதில் போதிய அக்கறை யுடன் அவர்களில் எவ ருமே இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள் ளார். மேனகா காந்தி கூட் டத்தில் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்தால் கூடியிருந்த பார்வையா ளர்களிடையே கடும் அதிருப்தி நிலவியது. கால விரயமானது
வணிக அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பது என்பது மிகுந்த கால விரயமானது என்று மேனகா கூறியுள்ளார்.

நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ப தற்காகத்தான் இந்தக் கூட்டம் கூட்டப்படு கிறது. ஆனால், செயலாற் றுவதைக் காட்டிலும், அவர்களிடையே பேச்சு தான் பெரிதாக இருக் கிறது.

மேலும் அவர் கூறும் போது, நாடுமுழுவதும் பெண் களுக்கான 300 கழிப் பிடங்கள் மட்டுமே சிஎஸ்ஆர் மூலமாக கட் டப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறும் போது,

நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி, தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருக்கின் றன. நிறுவனங்களில் பாலி யல் புகார்களை பெற்று விசாரணை செய்து நட வடிக்கை எடுத்திட குழு அமைக்கப்பட்டு குறைந்த பட்சம் நிர்வாகத் தில் இயக்குநர்களாக ஒரு பெண்ணைக்கூட நிய மிக்காமல் உள்ளனர். அவர்கள் ஏராளமாக பேசுகிறார்கள். ஆனால் சிறிய அளவில் மட்டுமே அவர்களின் செயல்பாடு கள் உள்ளன. அரசு என்றாலும் வேண்டு கோளாகத்தான் கடமைக் காக செயல்பட்டுவரும் நிலை உள்ளது என்றார்.

பொதுவாக உள்ள குற்றச்சாட்டாக இருப்பது என்ன வென்றால், நிறு வனத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் உறவினர் களை, குடும்பத்து உறுப் பினர்களையே இயக்கு நர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.

உங்களில் (நிறுவனத் தாரில்) எத்தனைபேர் உறவுமுறைக்கு அப்பாற் பட்டவர்களாக இருக்கும் பெண்களை நிர்வாகங் களில் நியமனம் செய்து வருகிறீர்கள்? அக்கறையு டன் கூடிய நிர்வாகிகளை நீங்கள் (நிறுவனத்தார்) நியமனம் செய்வதில்லை. அதேபோலவே நாங் களும்(அரசும்) கடமைக் காக வேண்டுகோளை முன்வைத்துவருகிறோம். அனைவரும் கூடுகிறோம், ஏற்கெனவே தயாரிக்கப் பட்ட பேச்சைப் பேசிவரு கிறோம் என்று கூறினார்.

பதில் அளிக்க வேண்டும்

மேலும் அவர் குறிப் பிடும்போது, உண்மையிலேயே அக் கறையுடன் பேசுபவர் களாக பேசுவதாக இருந்தால்தான், இங்கு கூடி விவாதிப்பதிலும், எதையாகிலும் செய்வதி லும் ஓர் பொருள் இருக்க முடியும் என்றார்.

உறவுப்பெண்களைத் தவிர்த்து நிர்வாகப் பொறுப்புகளில் பெண்  கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்போகி றேன் என்றார் மேனகா.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...