Saturday, September 29, 2012

பள்ளிகளில் சர்வ சமய வழிபாடா?


தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணையினை கல்விக் கூடங்களுக்கு அனுப்பி உள்ளார். (தனியே காண்க)
இப்படி ஓர் ஆணைக்கு அவசியம் என்ன? சர்வ சமய வழிபாடு என்ற ஒன்று சரியானது தானா? அப்படி ஒரு திட்டம் அவசியமானது தானா?
இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதன் பின்னணி என்ன? முதல் அமைச்சர் அல்லது வேறு அமைச்சர் யாராவது இப்படி ஓர் ஆணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினரா?
சமயவழிபாடு கட்டாயம் என்றால், எந்தச் சமயத்தையும் சாராத பிள்ளைகளின் நிலை என்ன?
சமய நம்பிக்கையுள்ள மாணவன் அல்லது மாணவிதான் பள்ளிக்கூடம் செல்லவேண்டுமா?
இந்த நம்பிக்கை இல்லாதவர்களின் வீட்டுப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லக்கூடாதா?
மதச் சார்பற்ற ஓர் அரசின் இத்தகு ஆணை சட்டப்படி சரியானதுதானா?
சர்வசமய வழிபாட்டின் மூலம்தான் ஒழுக் கத்தைக் கற்பிக்க முடியுமா?
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அறிவைக் கூர்மைப்படுத்துவற்கா அல்லது மழுங்கச் செய்வதற்கா?
இந்திய அரசமைப்புச் சாசனம் 51 -கி(லீ) விஞ் ஞான ரீதியான சிந்தனை, அணுகுமுறை, மனிதாபி மானம்,  ஆய்வு, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப் பது காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?
அதற்கு மாறாக சர்வசமய பிரார்த்தனை நடத் துவது சட்டத்தையே அவமதிப்பதாக ஆகாதா?
இந்திய அரசமைப்புச் சாசனத்தில் கூறப்பட் டுள்ள மேற்கண்ட கடமைக்காக எந்த செயல் திட்டம் கல்வித் துறையிடம் உள்ளது?
தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆணையின் கர்த்தா யார்?
இதில் காவிகளின் - ஆர்.எஸ்.எஸ்.சின் ஊடுரு வல் ஏதாவது இருக்கிறதா?
இது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும். தன்னிச்சையாகச் செயல்பட்டிருந்தால் அவர்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஆணை உடனடியாக விலக்கிக் கொள்ளப் படவும் வேண்டும்.
இல்லையென்றால் பகுத்தறிவாளர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும்!
எச்சரிக்கை!  எச்சரிக்கை!!
(குறிப்பு: யோகா பயிற்சி என்ற பெயரால் கடைப் பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளும் கைவிடப்பட வேண்டும்.).

தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசாணை
சுருக்கம்
பள்ளிக் கல்வித்துறை- அனைத்து வகை அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2012-2013ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது திட்டங்கள் சிறப்பாக அமைய பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளல் ஆணை வெளியிடப் பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் (இ1) துறை
அரசாணை (1டி) எண்.264    நாள்:06.07.2012 படிக்கப்பட்டது:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின், கடித ந.க.எண்.796/ஈ2/2012 நாள் 16.05.2012.
---------
ஆணை:
2012- 2013 ஆம் கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை முப்பருவப் பாடநூல் முறையையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையையும் நடைமுறைப் படுத்த ஆணையிடப்பட்டுள்ளது எனவும், இத்திட்டத்தின் முதன்மையான நோக்கம் மாணவர்களுக்குப் புத்தகச் சுமை, பாடச் சுமையைக் குறைத்து, மன அழுத்தமின்றிப் பாடங்களை மனப் பாடம் செய்யாமல், செயல்பாடுகள் வாயிலாகப் புரிந்து கொண்டு கற்பித்தல் ஆகும் என்றும், இம்முறைமூலம் மாணவர்கள் அறிவை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் முழுமையாக வெளிக்கொணர்ந்து நல்ல பண்புகளை உடைய ஆளுமைத் திறன் பெற்றவர்களாக உருவாக்க இயலும் என்றும் தெரிவித்து, மேற்கண்ட நோக்கங்கள் முழுமை யாகவும், சிறப்பாகவும் அமைய, பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆணை வெளியிடுமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் அரசிடம் வேண்டியுள்ளார்.
2) மேற்காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநரின் கருத்துருவினை நன்கு பரிசீலிக்கப்பட்டு பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கீழ்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று பொது காலை வழிபாட்டுக் கூட்டமும் மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அனைத்து மாணவர்களும் சுழற்சி முறை யிலும் அமைக்குமாறும், சான்றாகப் பட்டியலில் உள்ள நிகழ்வான தமிழ்த்தாய் வாழ்த்தை ஒவ்வொரு மாணவனும் தன்முறை வரும்போது பாட வேண்டும். இச்செயல்பாடுகளை மேற்கொள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள கையேட்டினைப் பள்ளிகள் பின்பற்றுதல் வேண்டும்.
வ. எண்.                       நிகழ்வுகள்                                              நிமிடங்கள்

1.               தமிழ்த்தாய் வாழ்த்து                                                   1.30
2.               கொடி ஏற்றுதல், கொடி வணக்கம் *                              2
3.               கொடிப் பாடல்*                                                             2
4.                உறுதிமொழி                                                                4
5.               சர்வ சமய வழிபாடு*                                                    1
6.               திருக்குறள் மற்றும் விளக்கம்                                     2
7.              செய்தி வாசித்தல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)               4
8.              இன்றைய சிந்தனை (பொது அறிவு/பழமொழி)            2
9.              பிறந்தநாள் வாழ்த்து                                                   0.30
10.            ஆசிரியர் உரை                                                              1
மொத்தம்                         20
* வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மட்டும் செயல்படுத் தப்பட வேண்டும் மற்ற நாள்களில் செயல்படுத்த தேவையில்லை.
தியானம் 5 நிமிடம்
(i)  மதிய உணவு இடைவேளைக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக
எளிய யோகா பயிற்சி - 15 நிமிடங்கள்.
அடுத்த 15 நிமிடங்களில் கையேட்டில் உள்ளவாறு பின்வரும் பாட இணைச் செயல்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
1. விழுமக் கல்வி
2. உடல் நலக்கல்வி
3. கலைக்கல்வி
4.    பணி அனுபம்
5.    சுற்றுச்சூழல் கல்வி
6.    முதல் உதவி மற்றும் தற்காப்பு விதிகள்
(ii)  மதிய உணவு இடைவேளைக்குப் பின்
1. வாய்ப்பாட்டை செலுத்துல்.
2.    ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல்.
3.    ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு இரண்டு சொற்களை சொல்வதை எழுதச் சொல்லுதல், வாக்கியமாக அமைத்தல்...
ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை யன்று இறுதி ஒரு மணி நேரம்.
(III) மாணவர்களின் பன்முகத் திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், நடித்தல், ஆடுதல், பாடுதல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழிகள் கூறுதல், பழமொழிகள் கூறுதல், படைப்பாற் றல் போன்ற செயல்பாடுகளை ஒவ் வொரு மாணவரும் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
3) மேற்கூறிய செயல்பாடுகளை, அனைத்து வகை அரசு மேல் நிலை, உயர் நிலை, நடுநிலை, மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலே - இந்தியன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்திட இவ்வாணையினை சுற்றறிக்கையாக அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
(ஆளுநரின் ஆணைப்படி)
த.சபிதா
அரசு முதன்மைச் செயலாளர்
பெறுநர்:
மாநில கல்வியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர், சென்னை-6
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6
தொடக்கக் கல்வி இயக்குநர்,  சென்னை -6
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநர், சென்னை - 6
நகல்:
மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை -9
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை - 9 பிற்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை - 9.
//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
பிரிவு அலுவலர்

- மின்சாரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...