Monday, October 13, 2008

சீனிவாசனும் சீனிவாசனும் - சார்வாகன்



இது ஏதோ கம்பெனியின் பெயரல்ல. ஆனால், ஒருவகையில் ஒரு லிமிடெட் கம்பெனியின் பெயர்தான்.   முதல் சீனிவாசன் நிறுவனத்தின் ஃபவுண்டர் புரொமோட்டர், மானேஜிங் டைரக்டராக இருந்தவர். இரண் டாம் சீனிவாசன் கம்பெனியின் நிருவாக இயக்குநர். வேறுபாடு அவ்வளவே, மேம்போக் காகப் பார்த்தால்!

கண்டு பிடித்துவிட்டிருப்பீர்களே, ஓ! இது தாத்தாத்ரேய நாமக் கம்பெனி என்று! பக்கா புத்திசாலிகளாயிற்றே!

தாத்தா சீனிவாசன் எதுவாக இருக்க நேர்ந்த போதும் தன் தஞ்சை மாவட்டப் பின்னணியை, படிக்கும்படி ஏறிப் பழைய ஏட்டுக்கு விளம்பரம் சேர்த்ததையோ, பழைய ஏட்டை வாங்கச் சொன்னவரையோ, அதற்குப் பணம் உதவியவரையோ ஒரு போதும் மறக்காதவர் ஏடு தொட்டு எத்துணையோ ஏணிப் படிகளில் ஏறிச் சிகரம் தொட்டவர்.

தஞ்சை மண்ணுக்கோ, தன் குடும்பத்துக்கோ நவீனமான ஒரு தொழில் நுழைந்து அதிலும் தடம் பதித்த  சாதனையாளர்.

அவர் பேரைக் கொண்ட பேரன் சீனிவாசன்,  கதை வேறு/ ஃபாஷனில் இருக்கிறது. கம்பெனிக்கு பேரும் வேண்டாம், கம்பெனிப் பொருளுக்குத் தரமும் வேண்டாம். காசு மட்டும்தான் வேண் டும் என்று காசு காரியத்தில் கண்வைக்கும் ஆரியக் கூத்தாடி!

தாத்தா சீனிவாசன், குந்தியிருந்த தாயின் கருப்பை வாசலில்  மெல்ல நழுவி வந்தபோது முரட்டுச் சாக்குத் துணியால் உடல்பற்றி மருத் துவச்சியால் இழுத்துப் போடபட்ட  உயிர்!

அம்மாவுக்கும் வலி கொடுக்காமல், தனக் கும் வலி தெரியாமல் மணிலாப் பயிறு உடைப் பதுபோல், கருப்பை பிளந்து கச்சிதமாக வெளியே கொண்டு வரப்பட்ட பேரன் சீனி வாசன்  சுக ஜென்மம்! யாரோ உழைத்து, யாரோ வளர்த்துச் சேர்த்ததை வாரிசு பாத்யதையில் சொந்தம் கொண்டாடும் அனுபவ ராஜா!

அதனால் பழசு தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் அக்கறையும் இல்லை.

ஆனால், ஆபே துயிபா  எழுதியதுபோலத் தமக்கே உரிய கல்யாண குணங்களைக் காட்டத் தவறுவதே இல்லை.

சிண்டு முடிந்திடும் பழக்கம், குள்ள  நரித் தந்திரத்தை வெளிப்படுத்தும் வழக்கமும் ஒட்டுவித்தை கற்ற இவர்களிடமிருந்து அகலாது எனும் உண்மை நாம் அறிந்ததுதான்.

நம் இனம் கெடுக்கும் செயலில் ஈடுபடும் ஈடில்லாக் கெடுமதியினர் செயலும் நமக்குத் தெரிந்ததுதான்.

பொய்க் குரு ஒருவர் கூறியதைப் பேரனே அச்சுப் போட்டிருக்கிறார்: செய்வதைத் திருந்தச் செய்யுங்கள்... வயதின் வேகத்தில், சுபலத்தின் உந்துதலில் செய்யாதீர்கள்.

ஆனால் வயதின் வேகத்தில் (பேரும் புகழும் பெறவேண்டும் என்கிற) கபலத்தின் உந்துதலில் செய்தவரைப் பெருமைப்படுத்திப் (பெரியா ரைச் சிறுமைப்பத்துவதாக நினைத்துக் கொண்டு) படம் காட்டுகிறார் பேரன் சீனிவாசன்.

மும்பையில் உள்ள பால் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன் தன் கழுத்தில் கட்டியி ருந்த கொட்டை, மணிகளை யெல்லாம் அறுத் துப் போட்டார். வீட்டிலிருந்த (அவர் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருந்த) பொம் மைகள், படங்கள் எல்லாவற்றையும் உடைத் துப் போட்டார். கடவுளே கிடையாது என்று உரக்கக் கூறினார். ஊர் முழுக்க கேட்டது.  ஏடுகள் எல்லாம் எடுத்து எழுதின.

கணேசனை வைத்துப் பால கங்காதர் திலக் அரசியல் பண்ணியது அந்தக் காலம். இன்றைக் கும் அரசியல் பண்ணிக் கொண்டிருப்பவர் பால் தாக்கரே! அப்படி இருக்கையில் அவரா? இப்படிப் பேசினார்? எல்லோரும் ஆச்சரியப் பட்டார்கள். சிலர் வாய்விட்டே கேட்டுவிட் டார்கள்.

அப்போது தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் சொன்னார், ஏதோ ஒரு ஆத்திரத்தில்  அவர் பேசியிருக்கிர், கடவுள் இல்லை என்பதைப் பெரும் ஆராய்ச்சிக்குப் பிறகுதான் சொல்லமுடியும். மனைவி இறந்த ஆத்திரத்தில் அவர் கூறிவிட்டார். அதனை உளப்பூர்வமாகக் கூறியதாக ஏற்க முடியாது என்று பதில் கூறினார்.

பால்தாக்கரேயின் துணைவியார் திடீரென இறந்துவிட்டார். இறந்த நாள், பிள்ளையாரின் பிறந்தநாள். பிள்ளையாரையே கும்பிட்டுக் கொண்டிருந்த தம் துணைவி பிள்ளையாரின் சதுர்த்தி அன்றைக்கே  மண்டையைப் போட்டு விட்டதைச் செரிக்க  முடியாமல், கபலத்தின் உந்துதலில் கடவுளே இல்லை எனக் கூறி விட்டார். அவர் பகுத்தறிவாதியா? நாத்திகரா? இல்லவே இல்லை! ஆத்திரத்தில் தடுமாறிக் கொட்டிய நாத்திகச்  சொற்கள் அவை! அதனால் அவரை நாத்திகராக நாத்திகர் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

விடலைப் பருவத்தில் - வயதின் வேகத்தில் - கபலத்தின் உந்துதலில் - எதையோ செய்த ஓர் ஆள், சில வாய்ப்புகள் பெற்று நாத்திகர் தலை வரின் அருகில் இருக்க நேர்ந்ததைப் பயன்படுத் திக் கொண்டு - வேறு ஒரு சபலத்தின் உந்துத லில் தப்புக் காரியம் பண்ணியதால், வெளியேறி இருக்கிறார். வேறு அமைப்புக்குப் போய் அங்கேயும் இருக்க முடியாமல்  மனைவிக்கு மரியாதை கொடுத்து மனசாட்சிக்கு மரி யாதை கொடுத்து  சுட்ட மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டிருக்கிறாராம்.

பாலகாட்டுக்குப் பக்கத்தில் ரப்பர் தோட் டத்தில் தேடிப்பிடித்துப் படம் பிடித்து எழுதித் தீர்க்க வேண்டிய தேவை என்ன பேரன் சீனி வாசனுக்கு? (பார்க்க: ஆனந்த விகடன் - 10-.9-.08). பகுத்தறிவாளர்களுக்கு  இந்தப் பெருமாள் களெல்லாம் அதிர்ச்சியோ, ஆச்சரியத்தையோ தருபவர்களல்லர்! கொதி தாங்க முடியாத  நொய் யரிசிகளை, புடம்  போடும்போது உதிர்ந்த சாம் பல்களை,  அடித்துத் தூற்றிச் சலித்து நீக்கிய பிறகும், ஊறவைக்கும்போது  மிதக்கும் நெற் பதர்களை கணக்கில் எடுத்துக் கொள்வதே கிடையாது.

தன்னாலான கைங்கர்யத்தைச் செய்து அல்ப சந்தோஷம் அடைகிறது ஆரியம் என்பதல்லா மல் வேறு என்ன? அக்கிரகாரத்துப் பூணூலால் கட்டி ஆலமரத்தை இழுத்துப்போட முடியுமா? ஆசை வெட்கமறியாது என்ற முறையில் அம்பி எம்பிக் குதிக்கிறது. யானையின் வாலில் ஈ உட்கார்ந்ததாலேயே, யானையின் கம்பீரம் குறைந்து விடுமா? பெருமாள் சேதியைப் போட்டதாலேயே, பெரியார் அப்படி அல்ல என்றாகிவிடுமா? அவர் கொள்கைகள் குறைவுபட்டவை என பெருமாள் உதிர்த்து விட்ட காரணணத்தா லேயே - எவரும் கருதிவிடுவார்களா?

பெரியார் உலகளவில் உயர்ந்து வளர்ந்து வருகிறார், உலகப் பெரும் மனிதநேயப் பகுத் தறிவு நாத்திகர் டாக்டர் பால்கர்ட்சு தமிழகம் வந்து, 5,67,9 நாள்களில்  பெரியார் கோட் டத்தில் பேசுகிறார் என்ற சேதி பார்த்தவுடன் பேரன் சீனிவாசன் பெருமாள் சேதி வெளியிடுகிறார்.

பெரியாரின் பழைய காரை வாங்கியவர், பெரியாரின்  கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வில்லை, என்பதை அவரே தெரியபடுத்தியிருக் கும் நிலையில்சேதி மூலம் சீனிவாசன் தெரிவிக்க விரும்பும் மெசேஜ் என்ன?

மெசேஜ் என்னவாக இருந்தாலும், ஆரியத் தின் யூசேஜ்  என்ன என்பது புரிந்த எங்களுக்கு அதிகமாகத் தோன்றவில்லை - நாங்கள் ஆரிய மாயையை அறிந்தவர்கள், புரிந்தவர்கள், அதனை அழித்துத் திரா விடர்களை மீட்டவர்கள். ஆனாலும் ஆரியம் தலை நீட்டுகிறது, துளிர்க்கப் பார்க்கிறது.

அதனை வெட்டிக் கருக்கித் தீர்த்துப் பொசுக்கிடும், கந்தகக் கருஞ்சிறுத்தைகள் லட்சோப லட்சம் உண்டு.  என்பதைப் பேரன்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

பெருமாள்கூட, கடவுளைக் கும்பிட்டுத் தடம் மாறியிருக்கிறாரே யொழிய, பெரியாரின் ஏனைய பன்முக ஆற்றல்களில் இன்னமும் பற்றும் பிடிப்பும் கொண்டு விளங்கி, கண்ணுக்குப் புலப்படாத கருப்புச் சட்டைக்காரராக (ஆவி எழுதுவதைப்போல கண்ணாடியின் கருப்பு ஃபிரேம்) இருக்கிறார் என்பதாகும். அவரை வெளிக்காட்டிய பேரன் சீனிவாசனுக்கும் நன்றி கூறலாமோ?

Tuesday, July 29, 2008

இன்றைய விடுதலை இதழை படியுங்கள்!

விடுதலை இணையத்தின் தொழில்நுட்ப மாற்றங்கள் செயல்பாட்டுக்கு வரும்வரை இவ்விணைப்பில்
இன்றைய விடுதலை இதழை படியுங்கள்!

Thursday, April 10, 2008

நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

நேரடி ஒளிபரப்பு தொடங்கியது:
இட ஒதுக்கீடு விவாதம்

இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கருத்துமேடை- நேரடி ஒளிபரப்பு

உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தீர்ப்பு குறித்து கருத்துமேடை
-நேரடி ஒளிபரப்பு-

கலந்துகொள்வோர்:
* கவிஞர் கலி.பூங்குன்றன்
(திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்)
* மருத்துவர் ரவீந்திரநாத்
(சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்)
* இதழாளர் கோவி.லெனின்

இன்றிரவு இந்திய நேரப்படி 8 மணிமுதல் 8: 30 மணிவரை உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

webvision.periyar.org.in

Wednesday, April 9, 2008

திராவிடர் செல்வங்கள்

'திராவிடர் செல்வம்' சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் மறைந்த நாள் மார்ச் 1
_______________________________________________________


நீதிக் கட்சித் தலைவர் பொப்பிலி அரசர் மறைந்த நாள் மார்ச் 10

கல்வெட்டு பகுதியில் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உரை !

உங்கள் பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்

Friday, April 4, 2008

திராவிட இயக்க படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்துவதா? - கவிஞர் கனிமொழி


திராவிட இயக்க படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்துவதா?
திராவிட இயக்கப் படைப்பாளிகளின் படைப்புகளை இலக்கியங்கள் இல்லை என்று மறுக்கும் ஜெயமோகன் உள்ளிட்ட சுயமோகிகளை புரட்டுகளை உடைக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி!
பெரியார் வலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்!

Wednesday, April 2, 2008

பெரியார் எனும் பெரும் படைப்பாளி! - சுப.வீ உரை

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 29.03.08 அன்று திராவிட இயக்கப் படைப்பாளிகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று "தந்தை பெரியார்" பற்றி திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை!

பெரியார் வலைக்காட்சியில் காண்த் தவறாதீர்கள்!

Tuesday, April 1, 2008

ஜாதகத்தை எரித்த இளைஞர்கள்!

ஜாதகத்தை எரித்த இளைஞர்கள்!
இளைஞர் இயக்கத்தினருடன் ஒரு சந்திப்பு!

உங்கள் பெரியார் வலைக்காட்சியில்...
காணத் தவறாதீர்கள்

Monday, March 31, 2008

'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.
ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு. சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை

உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ!
ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!
திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப் பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர்களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? -

இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?
அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.
- மயிலாடன்

Tuesday, March 4, 2008

சூரியனில் கன்னிமேரியைத் தேடிய 48 பேருக்கு கண் பார்வை பறிபோனது

திருவனந்தபுரம், மார்ச் 4-
சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தியை நம்பி, அதைப் பல மணி நேரம் உற் றுப் பார்த்த 48 பேருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தீ கேரள மாநிலம் கோட்டம் மாவட்டத்தில் எரி மேலிக்கு அருகே அண்மையில் வேகமாகப் பரவியது. இதை நம்பிய ஏராளமானோர் ஓரி டத்தில் கூடி சூரியனைப் பல மணிநேரம் உற்றுப் பார்த்தனர்.அதனால் கண்ணில் கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்குச் சென்றனர். கான் ஜிராப்பள்ளி என்ற ஊரில் உள்ள ஜோசப் காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவமனைக்கு வந்த 48 பேருக்கு கண்பார்வை பறி போனது தெரிய வந்தது. கண் ணின் விழித்திரையில் காயம் ஏற்பட்டதே இதன் காரணம்.இது குறித்து அம்மருத்துவ மனையில் கண் மருத்துவர் ஜேம்ஸ் அய்சக் கூறுகையில், அண்மையில் கண்கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினையே காணப்பட்டது. அவர்களின் விழித்திரையில மிக முக்கிய பாகத்தில் சேதம் ஏற்பட்டிருந் தது. சூரியனைப் பலமணி நேரம் உற்றுப் பார்த்ததே இப்பிரச்சினைக்குக் காரணம் என்று கூறினார்.இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள், வதந்தி பரப்பப் பட்ட பகுதியில் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
இதைப் படிக்கவும் அவர்களுக்குப் பார்வை இல்லையே!

சென்னையில் ஏசு! மூடப் பிரச்சாரம் பிசுபிசுத்தது!

சென்னையையடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில் இயேசுவின் முகம் தெரிவதாக ஞாயிற்றுக் கிழமை வதந்தி பரவியது. செய்தித்தாள்களும் படத்துடன் வெளியிட்டு விளம் பரம் செய்தவுடன் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். கடந்த ஞாயிறன்று (02.03.08) அக்கோயிலில் பூசைக்கு வந்த பக்தர்களில் யாரோ ஒருவர் முதலில் பார்த்ததாகவும், னர் பார்த்த அனைவரும் இயேசுவின் முகம் தெரிவதாகக் கூறியவுடன் வதந்தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இது பற்றி அப்பகுதியில் வசிக்கும் திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் தெரிவித்த தகவலையடுத்து திங்கள் கிழமை இரவு இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய றனர் இளைஞணியினர்.
மணிக்கூண்டில் இருந்து வழிந்த மழைநீரால் பாசி உருவாகியிருக்கிறது. அதில் மங்கலாகத் தெரியும் உருவத்தை, தங்களுக்கேற்றாற்போல் உருவகம் செய்துகொண்டு இயேசு தெரிவதாகப் புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் திடீரென ஒருவர் பக்கத்து தூணில் மேரி மாதா கையில் குழந்தையோடு தெரிவதாகச் சொல்ல அதையும் பார்த்து பரவசமடையத் தொடங்கிவிட்டார்கள். மேரி மாதாவின் கையில் குழந்தை, பின்னால் ஒளிவட்டம், அவர் அணிந்திருக்கும் கவுன், தலையில் மூடியிருக்கும் முக்காடு எல்லாம் தெரிவதாகக் கூறி இங்கே நடக்கிறார் என்றால் அங்கே பறக்கிறார் என்று வதந்தீ பரவும் என்பதைப் போல பரவத் தொடங்கி விட்டது.

இப்படி அடுத்தடுத்து வரும் செய்திகள் பற்றி அக்கோயிலின் இளம் பாதிரியார் சவரி முத்துவிடம் கேட்டபோது, கடவுள் பல வடிவங்களில் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதாகவும், அவ்வப்போது இவ்வாறு மக்களுக்கு காட்சி தருவதாகவும் கூறினார். நேற்று வெறும் இயேசுவின் உருவம் மட்டும் தெரிந்த நிலையில் இன்று மாதாவின் உருவமும் உருவாகியிருப்பதாகவும் சிலுவைத் தெரிவதாகவும் பார்த்து மக்கள் நம்புகிறார்கள். நாளை இந்த உருவம் இன்னும் தெளி வாகத் தெரியக்கூடும். எனவே இன்னும் கூர்ந்து பார்த்தால் உருவாகியிருக்கும் மற்ற உருவங்களையும் பார்க்கலாம் என்றார் அவர்.

இதுதான் சமயமென்று தூணில் தெரியும் உருவத்தைப் புகைப்படம் எடுத்து, அதை இயேசு உருவத்துடன் ஒப்பிட்டுப் புகைப்பட வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது.வினா எழுப்பிய கழகத் தோழர்கள்கூட்டத்தில் சிலரிடம் கேட்டபோது எனக்கு எம்.ஜி.ஆர் உருவம்போல் தெரிகிறது என்றார் சந்துரு என்ற எம்.ஜி.ஆர். பற்றாளர். இன்னொருவர் பக்கத்தில் இருந்த இன்னொரு தூணில் மான் உருவம் தெரிவதாகக் காட்ட பின்னர் மான் காட்சி யளிக்கத் தொடங்கிவிட்டது.

* கோயிலுக்குள் காட்சி தராமல் இப்படி தூணின் அடியில் பாசியில் தெரிவது ஏன்?

* இயேசு, மாதா என்று தொடர்ந்து உருவங்கள் உருவாகி வருகிறது என்றால், முதலில் மாதா உருவம் வந்து பின்னர்தானே மகன் இயேசு வின் வடிவம் வந்திருக்க வேண்டும்.?

* மழைநீரால் உருவாகி யிருக்கும் பாசி தானே அப்படித் தெரிகிறது. முழுதும் பாசியை சுரண்டிவிட்டு, அந்த இடத்தில் சுண்ணாம்பு அடித் தால் அவ்விடத்தில் மீண்டும் இவ்வுருவங்கள் தெரியுமா?

* சுரண்டப்பட்ட பாசி யைப் பரிசோதித்தால், அது இன்று நேற்று உருவானதா, அல்லது மழைநீர் வழிந்து உருவாகி நீண்ட நாட் களாகிவிட்டதா என்று தெரி யுமே? அதற்குத் தயாரா?

என்பது போன்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்கள் திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள்.ஆனால் இக்கேள்விகளுக்கு நம்பிக்கை என்று பதில் கூறித் தப்பித்தார்கள் பக்தர்கள். அங்கு குடியிருந்த இளைஞர் களோ, ஆம், அதுதான் சரி. அப்படி சுண்ணாம்பு அடித்த பின்னும் இயேசு உருவம் உருவானால் அப்போது நாங்கள் நம்புகிறோம் என்று உரக்கக் குரலெழுப்பட் தொடங்கிவிட்டனர்.

மாதா உருவத்தை தான் கண்டு பிடித்ததாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட சீனிவாசன் என்ற கணினிப் யாளரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஆட்டோ நர்கள் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டுட் திணறடித்தனர்.

உடுமலை, வை.கலையரசன், கருணாகரன், ரவிக்குமார், ராஜசேகர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான இளைஞரணித் தோழர்கள் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று கேள்விகளை எழுப்பினர்.

நன்றி: விடுதலை (04.03.2008)

Friday, February 15, 2008

விடுதலை - தற்காலிக முகவரி


விடுதலை இணைய தளத்தின் முகவரி தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
வாசகர்கள் இங்கு செல்லுமாறு கேட்டுகொள்கிறோம்.

Wednesday, February 13, 2008

மோடியின் வெற்றி: காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?



தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து, கர்நாடகத்தில் 7 நாள் ஆட்சி என்ற கேலிக் கூத்தால் அவமானப்பட்ட பா.ஜ.க.,வுக்கு குஜராத்தில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது, உற்சாக பானத்தை அருந்தியவன் போல திடீர் மகிழ்ச்சி வெள்ளம் பீறிட்டுக் கிளம்புவது இயல்பானது-தான்.

குஜராத் சட்டப்பேரவையின் மொத்த இடங்கள் 182.

இதில் மோடியின் கட்சியான பா.ஜ.க., 117 தொகுதிகளையும், காங்கிரஸ் 59 தொகுதிகளையும், அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மூன்று தொகுதிகளையும், அய்க்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியையும், சுயேச்சைகள் இரு தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

காங்கிரஸ் முன் இருந்ததைவிட சற்றுக் கூடுதலான இடங்-களை இம்முறை பெற்றுள்ளது. என்றாலும், இது அதற்கு ஆறுதலாக அமையவில்லை.

மோடிக்கு எதிரான வாக்குகளை, காங்கிரஸ் ஒரு சிறப்பான முற்போக்குக் கூட்டணி அமைத்து - 2004 இல் தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் ஒரு அருமையான அரசியல் வியூகம் அமைத்து, பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து, உழைத்து, தமிழ்நாடு மற்றும் புதுவை உள்பட 40 மக்களவைத் தொகுதி-களையும் கைப்பற்றியது போல செய்திடத் தவறியதனால்தான் இந்த தோல்வி காங்கிரசுக்கு!

மோடியைத் தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளையும் ஒருங் கிணைத்து, பொது வேட்பாளர்களை (இடங்களைப் பகிர்ந்து கொண்டு) நிறுத்தியிருந்தால் வெற்றி, இப்படி கானல் நீராக ஆகி இருக்காது!

செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் உள்ள 182 இடங்களில் 166 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும்கூட, அது போட்டியிட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த 14 தொகுதிகளில், ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணம் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மோடி எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்துவிட்டது.

50 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் சுமார் 5000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியா-சத்தில்தான் தோல்வி அடைந்து உள்ளனர்.

மாயாவதி கட்சி (பகுஜன் சமாஜ்) தனது வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரித்ததே இதற்கு முக்கிய காரணம். தாழ்த் தப்பட்ட சமுதாய வாக்குகள், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், பார்ப்பனர் போன்ற முன்னேறிய ஜாதியினர் - இவர்கள் எல்லாம் மோடிக்கு எதிரான வாக்குகளை, பகுஜன் சமாஜ் கட்சிக்கே போட்டனர்!

பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது படுதோல்வி அடைந்தது என்றாலும், காங்கிரசு பெரும்பான்மை பெரு வதைத் தடுத்து இருக்கிறது என்பதே ஆய்வாளர்-களின் கருத்து.

காங்கிரஸ் பிரச்சாரத்தில், மோடியை மரண வியாபாரி என்று திருமதி சோனியா காந்தி பேசியது (அவரது உரையை தயாரித்தவர்களின் மாபெரும் தவறு அது) எதிர்மறை விளைவை உருவாக்கி, பூமராங் ஆகிவிட்டது!
தேர்தல் பிரச்சாரம் என்பது சர்க்கஸ் கம்பியில் வித்தைக்காரன் நடப்பதுபோல! விழிப்போடு செய்யவேண்டும்.

மோடியின்மீது இருந்த வெறுப்பு, எதிர்ப்பு, கசப்பு உணர்வுகளை சரியான வகையில் ஒருமுனைப்படுத்தி, ஒரு வெற்றிகரமான கூட்டணியை அமைக்கத் தவறியதால்தான் மோடி மீண்டும் வந்து, அரசியல் ஆணவத்து-டன் பேசும் நிலை ஏற்பட்டு விட்டது!

மற்ற காரணங்கள் சாதாரணமானவை.

மீண்டும் ஒரு இந்துத்துவா ஆட்சி உருவாகி, சிறுபான்மைச் சமுதாயத்தவர்களான இஸ்லாமியர், கிறித்தவர்களின் பாது காப்பைக் கேள்விக்குறியாக்கிவிட்டது!

பா.ஜ.க., முக்கியத் தலைவர்களுக்கு உள்ளுக்குள் மோடியின் வெற்றி உற்சாகத்தினை தரவில்லை. ஆனால், அத்வானி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டாளிகளுக்கு இது பெரிய உள்காயத்தை ஏற்படுத்தியுள்ளது!

காங்கிரசின் தலைமை, இந்த அமெரிக்-காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டு, இடதுசாரிகள் மற்றும் முற்-போக்குச் சிந்தனையாளர்களின் ஆதரவினை இழக்காமல், 2009 வரை அய்ந்தாண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து நடத்திடவேண்டும்.

விலைவாசி போன்றவற்றில் மிகவும் கவனத்துடன் கட்டுப்படுத்தி மத்திய ஆட்சி-யாளர்-கள் நடந்துகொள்ளவேண்டும். இத்-தோல்வியை, ஒரு வகையில் காங்கிரசை ஒரு சுய பரிசோதனை செய்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகவே கருதிடவேண்டும்.

உடனடியாக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (ருஞஹ)யின் முக்கியத் தலைவர்-களையும் டில்லியில் கூட்டி, அதன்  பொதுத் திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த உறுதி எடுத்துக் கொண்டு, அதில் உள்ள கட்சிகளையும், இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களையும் அரவணைத்து, 2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே ஒரு வியூகம் வகுத்து, இந்தக் கூட்டணி யினை மிகவும் வெற்றிக் கூட்டணியாக்க ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் சிற்பியான முதல்வர் கலைஞர், லாலுபிரசாத் போன்றவர்களிடம் நன்கு ஆலோசித்து, வரும் 2009-இல் மதவெறி சக்திகளுக்கு, ஜாதி வெறி சக்திகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள இப்போதே பணிகள் (2008 முதலே) தொடங்கிடவேண்டும்.

தோல்விகளை அனுபவங்களாகக் கொண்டு, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதே சிறந்தது!

விழுவது தவறல்ல; விழுந்தவுடன் எவ்வளவு விரைவில் எழுந்து நிற்க முடியுமோ அவ்வளவு விரைவாக எழுவதே முக்கியம்.
அதுவும் அரசியலில் மிகமிக முக்கியம்!


கி. வீரமணி
ஆசிரியர்

Thursday, February 7, 2008

எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு
இந்து முன்னணியினர் கைது - எதைக் காட்டுகிறது?



எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தட்டும்!




தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இந்து முன்னணியினரே குண்டு வைத்துத் தகர்த்துள்ள பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24 ஆம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டுவெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காய மடைந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் (வயது 40) அண்ணன் உள்பட 3 பேரை குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக் காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தென்மண்டல அய்.ஜி. சஞ்சீவ்குமார், டி.அய்.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. சிறீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட இந்து முன்னணி தென்காசி நகர பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன் (வயது 42), குமார் என்ற கேடிசி குமார் (வயது 28), நாராயண சர்மா (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம்.ரவிபாண்டியனிடம் நடத்தப் பட்ட விசாரணையில், தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அவருக்குச் சொந்தமான கேபிள் டி.வி., அறையில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து, அவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக, மின்சார ப்யூஸ் கேரியரை உருவி மின் தடையை ஏற் படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண் டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை வடிவமைத்துள்ளனர். - இவ்வாறு அவர்கள் கூறினர்.(தினகரன், 5.2.2008, பக்கம் 6)
இந்தச் செய்திகள் தெரிவிப்பது என்ன?
இந்தச் செய்திகள் தெரிவிக்கும் பாடம் என்ன? இந்து முன்னணி வகையறாக்கள் திட்டமிட்டு மதக் கலவரத்தை உண்டாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. மண்டைக் காடு கலவரம்பற்றிய ஜஸ்டிஸ் திரு. பெ. வேணுகோபால் அவர்களின் அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் எப்படியெல்லாம் மதக்கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சதுமுகையில் செருப்பு மாலை போட்டவர்கள் யார்?
ஈரோடு - சத்தியமங்கலம் அருகில் சதுமுகை என்ற ஊரில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டும், முனீஸ்வரன் சிலையைச் சிதைத்தும் மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக இரண்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்து ஏடே வெளிப்படுத்தியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது. (தி இந்து, 18.2.2002).கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்க்கின்றனர் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் செய்யமாட்டார்கள்?சதி வேலைநாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் அப்படி சொல்பவர்களே மதக் கலவரங் களை விளைவிக்கக் கத்தி தீட்டு வதும் எத்தகைய சதி வேலை!உளவுத் துறை தீவிரமாக விசாரிக்கட்டும்!காவல்துறை - உளவுத் துறை இந்த இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடி கண் திறப்பதற்குள் ளாகவே விஷ விதைகளை ஊன்றிடக் கூடிய பயிற்சி பெற்ற ஆபத்தானவர்கள் இவர்கள்.தென்காசி குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய ஏடுகள் கூறுகின்றன.இவர்களைத் தீவிரமாக விசாரித்தால், இவர்களின் பின்னணி யில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் - இந்தக் கும்பலின் தொடர்ச்சி எங்கெங்கெல்லாம் செல்லுகிறது என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.இந்தத் திசையில் புலனாய்வு தீவிரமாகட்டும்!







தலைவர், திராவிடர் கழகம்.

Monday, February 4, 2008

தினமணி கக்கும் நஞ்சு


நாட்டு நடப்பு
தமிழர் பண்பாட்டைப்பற்றி தினமணிகள் பேசலாமா? தமிழர் பண்பாடு என்றால் என்ன? என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒருமுறை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்த்து ஒரு பேட்டியில் வினா எழுப்பினார்.அதுவா? - அம்மாவை வாடி என்றும், அக்காவை போடி என்றும் சொல்லாததுதான் தமிழர் பண்பாடு என்று கூறினார்.தினமணி (3-2-2008)யின் முதல் பக்கம் கார்ட்டூனை பார்க்கும்பொழுது, தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் அவர்கள் காட்டும் வெறி இன்னும் அடங்கவில்லை என்பதைதான் வெளிப்படுத்துகிறது. கணவன் பேசுவதை மனைவி ஒட்டுக் கேட்பதும், மருமகள் பேசுவதை மாமியார் ஒட்டுக் கேட்பதும், பிள்ளைகள் பேசுவதை பெற்றோர்கள் ஒட்டுக் கேட்பதும் தமிழர் பண்பாடுதானே என்று கருத்துப் படம் வெளியிட்டிருக்கிறது தினமணி.டெலிபோனில் ஒட்டுக் கேட்பது பற்றிய பிரச்சினையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தமிழர்களை இழுத்துக் கொச்சைப்படுத்த வேண்டுமா? டெலிபோனில் ஒட்டுக் கேட்கப்படுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு.பிரச்சினை எதுவாயிருந்தாலும் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமிரும், ஆணவமும்தானே இதன் பின்னணியில் இருக்கிறது.ஒட்டுக் கேட்பது இயல்புதானே என்று பொதுவாகச் சொன்னால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒட்டுக் கேட்பது என்பது தமிழர் பண்பாடுதான் என்று தினமணிகள் எழுதுவது - தமிழினத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் அடக்க முடியாத திமிர் பிடித்த துவேஷம் என்பது அல்லாமல் வேறு என்ன?ஒட்டுக் கேட்பது, போட்டுக் கொடுப் பது, உயர் பதவிகள் பெறுவதற்காக மேலதிகாரிகளை அந்தரங்கத்தில் சந்திப்பது என்பதெல்லாம் பார்ப்பன வட்டாரத்துக்குக் கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!பண்பாட்டைப் பற்றியெல்லாம் பார்ப்பனர்கள் பேச ஆரம்பித்தால் அது எங்கே கொண்டு போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும், கண்ணாடி வீட்டிலிருந்தா கல் எறிவது?பெற்ற மகளையே பெண்டாண் டான் படைப்புக் கடவுள் பிர்மா - என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டுள்ள கூட்டமா பண்பாடு களைப் பற்றிப் பேசுவது? கோள் சொல்லுவதற்கும், சண்டை மூட்டி விடுவதற்கும், ஒட்டுக் கேட்பதற் கும் என்றே நாரதன் என்ற கடவுளை கற்பித்துள்ள கூட்டத்திற்கு இதுமாதிரி பிரச்சினைகளைப்பற்றி பேசவோ, எழுதவோ அருகதை உண்டா?தமிழைப் பேசிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழிலேயே பத்திரிகைகளை நடத்தி, தமிழர்களின் பணத்தால் வயிறு நிரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது என்பதையே தம் ரத்த ஓட்டமாகக் கொண்டு திரிகிறது என்பதைத் தமிழர்கள் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டாமா?தமிழ் செம்மொழியானால், நாலு பிளேட் பிரியாணி கிடைக்குமா? என்று தினமலர் கேள்வி கேட்கிறது. தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று கலைஞர் அறிவித்தால் - கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணை யிலே வை என்ற கதைதான் என்கிறது கல்கி.வேறு எது எதற்கெல்லாமோ கச்சை கட்டிக் கொண்டு கிளப்பும் நம் தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் - இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களைச் சீண்டுவதையே, கொச்சைப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படுகிறார்களே, இவர்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டாமா?தினமணி மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையிலே தஞ்சம் புகுந்துவிட்டது. திருவாளர் சோ வின் பினாமியாக இருக் கக் கூடிய ஒருவர், தினமணியை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கும் வரை ஓயமாட்டார் என்று தெரிகிறது.
- மயிலாடன்


குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...