Tuesday, March 4, 2008

சூரியனில் கன்னிமேரியைத் தேடிய 48 பேருக்கு கண் பார்வை பறிபோனது

திருவனந்தபுரம், மார்ச் 4-
சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தியை நம்பி, அதைப் பல மணி நேரம் உற் றுப் பார்த்த 48 பேருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தீ கேரள மாநிலம் கோட்டம் மாவட்டத்தில் எரி மேலிக்கு அருகே அண்மையில் வேகமாகப் பரவியது. இதை நம்பிய ஏராளமானோர் ஓரி டத்தில் கூடி சூரியனைப் பல மணிநேரம் உற்றுப் பார்த்தனர்.அதனால் கண்ணில் கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்குச் சென்றனர். கான் ஜிராப்பள்ளி என்ற ஊரில் உள்ள ஜோசப் காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவமனைக்கு வந்த 48 பேருக்கு கண்பார்வை பறி போனது தெரிய வந்தது. கண் ணின் விழித்திரையில் காயம் ஏற்பட்டதே இதன் காரணம்.இது குறித்து அம்மருத்துவ மனையில் கண் மருத்துவர் ஜேம்ஸ் அய்சக் கூறுகையில், அண்மையில் கண்கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினையே காணப்பட்டது. அவர்களின் விழித்திரையில மிக முக்கிய பாகத்தில் சேதம் ஏற்பட்டிருந் தது. சூரியனைப் பலமணி நேரம் உற்றுப் பார்த்ததே இப்பிரச்சினைக்குக் காரணம் என்று கூறினார்.இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள், வதந்தி பரப்பப் பட்ட பகுதியில் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
இதைப் படிக்கவும் அவர்களுக்குப் பார்வை இல்லையே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...