Thursday, August 31, 2017

மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்கா? பாஜகவுக்கா?

பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக சாடல்

சண்டிகர், ஆக. 30- மோடி பிரதமராக இருப்பது இந்தியாவுக்குத்தானே தவிர, பாஜகவுக்கு அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடு மையாக சாடியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஅய் கடந்த 2002ஆ-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான இந்த வழக்குகள் அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஅய் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 25-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதில், சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், தண் டனை குறித்த விவரம் 28ஆ-ம் தேதி அறிவிக் கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் பல்வேறு பகுதி களில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 36-ஆக அதிகரித்துள்ளது.

பொதுநல வழக்கு
இந்த நிலையில், கலவரம் குறித்த பொது நல வழக்கில்,  பஞ்சாப், அரியானா உயர்நீதி மன்றம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசையும், மனோகர் லால் கத்தார் தலைமையிலான அரியானா அரசையும் சாடி யுள்ளது.
பாலியல் வன்முறை வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித்ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று அரியானா மாநிலம் பஞ்ச்குலா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அரியானாவில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 36 பேர் பலியாகினர். 250க்கும் அதிக மானோர் காயம் அடைந்தனர். ஆனால் பஞ்சாப்பில் இந்த அளவுக்கு வன்முறை நடக்க வில்லை. அங்கு காங்கிஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்வராக அம்ரீந்தர் சிங் இருக்கிறார். அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வன்முறை பெரிய அளவில் வெடிக்காமல் பார்த்துக்கொண்டார். ஆனால் பாஜக ஆட்சி நடக்கும் அரியானாவில் அத்தகைய நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டுஎழுந்தது. இது தொடர்பாக அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரையும், பிரதமர் மோடியையும் பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பான நீதிபதிகள் கருத்து தெரிவிக்கும்போது,
நாம் அனைவரும் வாழ்வது ஒரே நாடு தானே தவிர, ஒரு கட்சியை சார்ந்து இயங்கும் நாடு அல்ல. எனவே, அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொண்டு செயல்பட வேண் டும். பிரதமர் என்பவர் இந்திய நாட்டிற்காக த்தானே தவிர, பாஜக-விற்கானவர் அல்ல. மாநில முதலமைச்சர், அரசு தலைமை வழக் குரைஞர் சத்யபால் ஜெயின் ஆகியோர் பாஜகவின் பதவியில் இருப்பவர்கள் அல்ல. இது மக்களுக்கான பதவி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என கடுமையாக கண்டித்தனர்.
மத்திய அரசானது பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது போல தெரிகிறது. மத்திய அரசு தனது கடமையை தட்டிக்கழிக்கும் விதமாக நடந்து கொள்ளக் கூடாது. வாக்கு வங்கியை மய்யமாக வைத்து மாநில அரசு செயல்படுவதாகவும் விமர்சித் தனர்.
மாநிலத்தின் முதலமைச்சர்தான் உள் துறை அமைச்சராக இருக்கிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் கடந்த ஒரு வாரத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கவலரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் வெளி ஊர்களில் இருந்து பஞ்சகுலாவிற்கு வந்து தங்கியுள்ளனர்.
அரசியல் தொடர்பான முடிவுகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய வித்தியா சம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் ரீதியிலான முடிவுகளால், அரசு நிர்வாகம் முடக்கப் பட்டுள்ளது என்று கடுமையாக கண்டித்து உள்ளனர்.

இதையடுத்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள் வன்முறை தொடர்பான அறிக்கையையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...