Thursday, August 31, 2017

பிரதமர், முதல்வர்களுக்கு ஆரம்ப அறிவியல் கல்வி தேவை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனத்தில் 2016-17ஆம் ஆண்டிற்கான  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி கூறியிருப்பது ஒரு நகைச்சுவை விருந்துதான்.
"இராமாயண காலத்திலேயே இலங்கைக்கு சேதுப்பாலம் கட்டியுள்ளார்கள். இதற்கு  திட்டமிட்டவர் ராமன். அவரது தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இன்று உலகம் முழுவதும் பாலங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ராமன் தலைசிறந்த பொறியியலாளர் மட்டுமல்ல, அவர் ஒரு பொதுநல நோக்காளர். ஆகையால் தான் சேது பாலம் கட்டி இலங்கையையும், இந்தியாவையும் இணைத்தார். அவர் பாலம் கட்டுவதற்கு அணில்கள் உதவி செய்துள்ளன. தற்போதும் அந்த பாலம் கடலுக்கு அடியில் இருப்பதை நாம் பார்க்கிறோம். ராம் சேது பாலம் ராமனின் கற்பனையில் தோன்றியது. அதன் பின் தான் தற்காலிக பாலத்தை என்ஜினியர்கள் கட்டியுள்ளனர்" என்றார்.
"போரில் லட்சுமணன் மயங்கி விழுந்தவுடன், வடக்குப் பகுதியில் அதற்கான மூலிகை இருக்கிறது. அதை எடுத்து வரச் சென்ற அனுமன் மூலிகையின் பெயரை மறந்துவிடுவார். அதன் பின் அந்த மலையையே தூக்கிக் கொண்டு வருவார். மலையையே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது எத்தகைய தொழில்நுட்பம்!.உள்கட்டமைப்பு பணிகளுக்கு இந்தத் தொழில்நுட்பம் தான் கைகொடுத்தது.
இன்று நமது ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ஏவுகணைகள் இலங்கையுடன் போர் புரிந்த ராமனின் அம்புகளை மய்யமாக வைத்துத்தான் செய்யப்பட்டுள்ளன. இராமாயணத்தில் ராமன் ஏவிய ஒவ்வொரு அம்பும் ஒரு ஏவுகணையாகும். இதனை முதன்மையாக வைத்துதான் அதே தொழில் நுட்பத்தில் இந்திய ராணுவம் ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது. தற்போதுள்ள கட்டமைப்புகள் அனைத்தும் ராமன் மற்றும் இராமாயணத்துடன் தொடர்புடையதாகும். ஆயுதம் மற்றும் உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக பொறியியலிலும் ராமன் ஈடுபட்டுள்ளார். தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைக்கிறோம்.
ஆனால், அப்போதே அனுமன் குரங்குகள் படையை ஒன்றிணைத்தார். இது தான் சமத்துவம். இதைத் தான் ராமராஜ்ஜியம் என்று மகாத்மா காந்தி பேசினார். இதை நரேந்திரமோடி தற்போது செயல்படுத்தி வருகிறார்" என்றார்.
இதே குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் முதல் வரும், இன்னாள் பிரதமருமான மோடி 2015ஆம் ஆண்டு மும்பையில் அம்பானிக்குச் சொந்தமான மருத்துவமனையில் நவீன தொழில்நுட்ப அறுவைசிகிச்சை மய்யம் ஒன்றை திறந்துவைத்து "இந்தியாவில் தான் முதல் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நடந்தது; அதனைச் செய்தது சிவன்" என்றாரே பார்க்கலாம்.
2016ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த நிலநடுக்கத்தின் போது பேசிய பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான விஜய் வர்கியா "மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு சென்றதால்தான் நேபாளத்தில் பூகம்பம் வந்துவிட்டது" என்று கூறினார்.
உத்தரப் பிரதேச முதல்வரும், சாமியாருமான ஆதித்தியநாத் "சாமியார்கள் மற்றும் விரதமிருந்து பாதயாத்திரை செல்லும் சிவ பக்தர்களின் பார்வையில் வழியில் உள்ள அத்திமரங்கள் பட்டால் அவர்களின் விரதத்தின் பலன் நீர்த்துப்போய்விடும். ஆகையால் பாதயாத்திரை செல்லும் பாதையில் உள்ள அத்தி மரங்களை வெட்டிவிட வேண்டும்" என்று உத்தர விட்டார்.
இதே போல் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே மாநில அரசு அலுவலகங்களில் தினசரி பசுமூத்திரம் (கோமியம்) தெளிக்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் கிருமிநாசினிகளுக்குப் பதில் கோமியம் தெளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு ராஜஸ்தானின் பல்வேறு மருத்துவமனை மருத்துவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஃபகன்சிங் குலுஸ்தே இந்தூரில் உள்ள பசுமூத்திரத்தின் மூலம் நோய்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மய்யம் ஒன்றில் நடந்த விழாவில் பேசும் போது, "பசுமாட்டின் மூத்திரம் விலைமதிப்பில்லாதது, நாம் தங்கத்தை விலைமதிப்புள்ளது என்று கூறுகிறோம், ஆனால் அதை விட அதிக மதிப்புடையது பசுமூத்திரம்" என்று கூறியிருந்தார்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி-லீ) வலியுறுத்துகிறது. முதலில் பிஜேபியைச் சேர்ந்த பிரதமர் மோடி முதல் மாநில முதல் அமைச்சர்கள் வரையில் அறிவியலின் ஆரம்பப் பயிற்சியினைச் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஈரோட்டில் ஓர் உணர்வுப் பூர்வமான விழா வாரீர்!

நம் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சர் ஏ.டி.பன்னீர்செல்வம்  அவர்கள் பெயரில் இயங்கி வரும் பன்னீர் செல்வம் பூங்கா.  அதற்கு முன் இது  ஆங்கிலேயர் காலத்தில் "வேல்ஸ் பார்க்" என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கே இருந்த அய்யா தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா ஆகியோர் திருவுருவச் சிலைகளைப் புதுப்பித்து மக்கள் பயன் பாட்டிற்கு வழங்கப்படு கின்றன (31.8.2017)  உருவ வழிபாட்டை மறுக்கும் பகுத் தறிவாளர்களாகிய அய்யாவிற்கும்,  அண்ணாவிற் கும் எதற்காக சிலைகள்!!  நம் வழிபாட்டிற்கா?  அல்ல .. அல்ல!
பெரியாரே அதற்கு விடை சொல்கிறார்! "பிற் காலத்தில் வரும் தலை முறையினர்க்கு நம் வர லாற்றை சரியாகச் சொல்லவில்லை என்றால் என்னையும் ஒரு கடவுளாக்கி 11ஆவது அவதாரம் இவர் என்று பொட்டு வைத்து பூணூலும் மாட்டி விடுவார்கள்" என்று கூறினார்.  எனவே தான் அய் யாவிற்கு ஊர் தோறும் சிலைகள் அமைக்கப்பட்டு அதனடியில் அவரது அடிப்படைக் கொள்கையான கடவுள் மறுப்பு வாசகத்தைப் பொறித்து வைத்துள் ளோம்!
அந்த வகையில் தமிழகத்தில், இந்தியாவில் கூட எங்கும் காணாத வகையில் போக்கு வரத்திற்கு துளியும் இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ளது.  இவர்களது கருத்துக்களை உலகோர் வியந்து பார்ப்பது போல், படிப்பது போல் இச் சிலைகளையும் நாம் வியந்து தான் பார்க்க வேண்டும்!
காலம் காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த ஒரு இனத்தை பண்பாட்டு ரீதியாக தலைநிமிர வைத்த தலைவர்களை நாம் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டும்!  உயர்ந்த எண்ணங்களை மக்களின் மனங்களில் விதைத்த விந்தையான இருபெரும் தலைவர்களை அறிவுத்தூண்களாக நம் ஈரோட்டுக் கழகத் தோழர்கள் மிக உயர்ந்த இடத்தில் அமைத் துள்ளார்கள்!!

பொதுவாக சிலை என்றால் ஒரு பீடம் இருக்கும், ஆனால் இச்சிலைகள் அப்படி ஒரு பீடத்தில் வைக் கப்படவில்லை!  மாறாக "அறிவுத் திருக்கோயில்"   (இங்கே கோயில் என்பது அரசன் வசிப்பிடம் என்ற பொருளில் கூறப்படுகிறது என்பதறிக..!)   என்று சொல்லப்படுகிற ஒரு நூலகமே சிலைகளைத் தாங்கி நிற்கிறது.
மனுவாதிகளால் கல்வி மறுக்கப்பட்ட ஒரு தலைமுறைக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தவர் அய்யா பெரியார்.  அதுபோல் இல்லந் தோறும்  நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்று அறி வுறுத்தியவர் நம் அண்ணா!  இவர்களுக்கு சிறப்பு சேர்ப்பிக்கின்ற வகையில் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ஒரு நூலகம்.  அரசுப்பணிக்கும், இந்திய ஆட்சிப் பணி,இந்திய காவல் பணிக்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் பயன் பெறுகிற வகையில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் எண்ணற்ற நூல்களைக் கொண்டு  அமைக்கப்பட்டுள்ளது!
இந்த நூலகத்தின் மேல் அய்யா, அண்ணா சிலைகள்  எழிலார்ந்த வகையில், காண்போர் எழுச்சி  பெறத்தக்க அளவில் அமைக்கப்பட்டுள்ளன!
அய்யா தந்தை பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிலை!! இன்று அவரது இளவல் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையேற்க தமிழர்களின் எதிர்காலம்,  நம் அன்புத் தளபதி அவர்கள் திறந்து வைக்கிறார்கள்..!!
இந்த அரும் பெரும் பணியை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் மனிதநேயர் திரு.சு.முத்துசாமி அவர்கள்  நம் இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ கத்தின் புதிய தலைமைச் செயலகத்தை எப்படி  பார்த்து பார்த்து, வடிவமைத்துக் கட்டினாரோ, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்படி ஆசை ஆசையாக வடிவமைத்துச் செய்தாரோ அதே போல் இந்த சிலைகளையும், நூலகத்தையும், அதைச் சுற்றிய பூங்காவையும் தானே முன்னின்று பணி துவங்கிய நாள் முதல் இரவு பகல் பாராமல் தொழிலாளர்களோடு ஒரு தொழிலாளியாக நின்று சிறப்பாக பணியாற்றிய நம் செயல் வீரர் அண்ணன் சு.முத்துசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!
தமிழர்களே! ஈரோடு என்றாலே உலகப் பகுத் தறிவாளர்களுக்கு ஒரு தாய் வீடு போன்றது.  இனி ஈரோட்டிற்கு இப்பகுத்தறிவுச் சின்னம் மேலும் ஒரு   லேண்ட் மார்க் என்று சொல்கிற "தனித்த அடையாளம்" ஆகும்!  இது திண்ணம்..!!
தமிழர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு வரலாற்று நாயகர்களைப் போற்றுவோம்...!! வாரீர்...!! வாரீர்...!!!

அன்புடன்

ஈரோடு மாவட்ட திமுக சார்பாக பி.என்.எம்.நடேசன், பி.என்.எம்.பெரியசாமி

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...