Tuesday, October 4, 2016

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பதா? ‘வேலியே பயிரை’ மேயலாமா?

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பது மத்திய அரசால், நாடாளுமன்றத்தால் அரசியல் சட்டப்படி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, மத்திய அரசினால் கெசட் செய்யப்பட்ட ஒன்று.

தற்போதைக்கு அது இயலாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியது - அசாதாரணமானது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட அரசியல் சட்ட 292 ஆம் பிரிவின்படி ஏற்பட்ட தொடர் நிகழ்வு (செயல்படுத்த ஆணையிடும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு) என்பதால்தான், இதனை நான்கு நாளில் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மத்திய அரசு இதனை ஏற்க இப்போது மறுப்பதன்மூலம், அரசியல் சட்டத்தின் கடமைகளைச் செய்யத் தவறும் ‘‘முதல் குற்றத்தை’’ அதுவே செய்ததாகாதா?

இது ஜனநாயகத்திற்கும் - கூட்டாட்சித் தத்துவத்திற்கும் விரோதமான போக்கு அல்லவா? தமிழ்நாட்டிற்கு மோடி அரசு இழைக்கும் பச்சை துரோகம் ஆகும்.

மத்திய அரசு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தால் அது வேலியே பயிரை மேயும் படு மோசமான, வன்மையான கண்டனத்திற்குரிய போக்காகும்.
மற்றவை விரிவாகப் பின்னர்.

- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
3.10.2016

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...