Saturday, June 30, 2012

தமிழ் ஈழம்: மருத்துவரின் நிலைப்பாடு என்ன?


இன்றைக்குத் தமிழ் ஈழம் விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றியெல்லாம் வான்முட்டப் பேசும் மருத்துவர் ச. இராமதாசு ஒரு கட்டத்தில் கொண்டிருந்த கருத்து என்ன?
பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சி (15.7.1989) தலையங்கம் என்ன கூறியது?
ஈழ விடுதலையை அடகு வைத்துள்ள விடுதலைப் புலிகள் என்று எழுதியதே! உங்கள் தலைமையைத் (மாவீரன் பிரபாகரனே) தகர்த்தெறிந்து புதிய போரட்டப் பாதைக்கு முன் வாருங்கள் என்று தலையங்கமே தீட்டவில்லையா?
பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சியின் (29.6.1989) நாளிட்ட தலையங்கம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி, ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது
இது விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தது ஆகாதா? அதே நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது தி.மு.க. என்பதும் விளங்கவில்லையா?
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த ஒரு கட்சியை, அதன் தலைவர் கலைஞர் அவர்களை விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்த கட்சியின் தலைவர் ஏளனம் செய்யலாமா? ஈழத் தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு ஓரளவு தெளிவு வந்ததே திராவிடர் இயக்கத்தால் தானே!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...