Monday, April 1, 2019

பதில் சொல்லுமா பா.ஜ.க. ஆட்சி?


* 2017 பிப்ரவரி முதல் விவசாயிகளின் தற்கொலை விவரங்களை மத்திய அரசு வெளியிடாதது - ஏன்?
* ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்ற மோடியின் உத்தரவாதம் செயல்படுத்தப்படாதது - ஏன்?
* உற்பத்தி செலவுக்கு மேல் 150 விழுக்காடு ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு என்னாயிற்று?
* தேசிய விவசாயச் சந்தை உருவாக்கப்படும் என்ற 2014 - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று?
* ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகங்களில் 43 சதவிகிதம் சரிந்திருக்கிறதா இல்லையா? தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் 32 விழுக்காடு வேலை வாய்ப்பு பறிபோயிருக்கிறதா இல்லையா?
சிறுதொழில்களில் 35 விழுக்காடு, குறுந்தொழில்களில் 24 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா?
* மோடி ஆட்சியில் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன்களை அடைக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்ற 23 பேர்கள் சொகுசாக வாழ்கிறார்களா? இல்லையா?
* மோடி ஆட்சியில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் வங்கிக் கடன் ஊழல்கள் ரூ.61,620 கோடி என்பது எதைக் காட்டுகிறது?
* ரூ.2.38 இலட்சம் கோடி வாராக் கடன் - மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் ரூ.12 இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறதே - ஒருக்கால் இதைத்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி வளர்ச்சி என்கிறாரோ?
* தேசிய மயமாக்கப்பட்ட 21 பொதுத் துறை வங்கிகளில் 19 வங்கிகள் நட்டக் கணக்குக் காட்டியுள்ளனவே - இதுதான் மோடி ஆட்சியின் நிர்வாக இலட்சணமா? (குறிப்பு: இந்த நட்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.2.70 லட்சம் கொடுத்து உதவியுள்ளது).
* பசு பாதுகாப்பு என்ற பெயரால் 118 இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கொல்லப்பட்டது தான் மோடி அரசின் மனித உரிமைப் பாதுகாப்பா?
* குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.2,989 கோடி செலவில் 182 மீட்டர் சிலையை அரசு செலவில் நிறுவியதால், மக்களுக்கு என்ன லாபம்?

Wednesday, March 27, 2019

பி.ஜே.பி. ஆட்சியில் மதக்கலவரங்களே வெடிக்கவில்லையா?

பி.ஜே.பி. ஆட்சியில் மதக்கலவரங்களே கிடையாது என்று நீட்டி முழங்குகின்றனரே அது உண்மையா?
இதோ பி.ஜே.பி. ஆட்சியின் உள்துறை வெளியிட்டுள்ள ஆதாரப்பூர்வ அறிக்கை
2016 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் 751 மத வன்முறைகள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளன. அதில் 97 பேர் மரணமடைந்துள்ளனர். 2,264 பேர் படுகாய மடைந்துள்ளனர் என்கிறது உள்துறை அறிக்கை.
2016 ஆம் ஆண்டின் அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. கோவா மாநிலத்தில் சிறுபான்மையினரின் கல்லறைத் தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் 38 விழுக்காடு அளவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உயர்ந்துள்ளது.
யுனைட்டேட் கிரிஸ்டியன் போரம் என்ற அமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு கொடுத்த தகவலின்படி அரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகவும் பழைமையான 27 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேவாலயங்களில் மத வேறுபாடின்றி அனைத்து சமுகத்தவரும் வந்து வழிபடுவார்கள். மேலும் இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளூர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களை மிரட்டி வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களின் நுழைவாயிலில் காவிக் கொடிகளை வைக்கின்றனர். அரசிடம் இதைப் புகாராக தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்று அந்தத் தகவலில் கூறியுள்ளனர்.
பசு மாட்டு வன்முறை
பசு மாட்டின் பெயரால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன. 2014 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆம் ஆண்டுவரை அரியானா மாநிலத்தில் 12 பேர் பசுப் பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்ற இடத்தில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தி பரவியதை அடுத்து முகமது அக்லக் எனும் 63 வயது முதியவர் படுகொலையைத் தொடர்ந்து மேற்கு வங்கம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராட்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் மிகவும் சாதாரணமாக மாறிவிட்ட ஒன்றாகிவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புக் கொள்கைகளை பா.ஜ.க. அரசு மீறி விட்டது

தேர்தல் பரப்புரை தொடங்குவதற்கு முன்பாக 'டெக்கான் கிரானிகிள்' ஆங்கில இதழுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அளித்த பேட்டி


திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை தொடங்குவதற்கு முன்னதாக ஆசிரியர் கி. வீரமணி "டெக்கான் கிரானிகிள்" இதழுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் அரசியலமைப்புச் சட்ட முகப் புரையில்  வலியுறுத்தப்படும் கோட்பாடுகளைப் பா.ஜ.க. புறக்கணித்து விட்டது என்று குற்றம் சாட்டினார். பா.ஜ.க.வுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள அஇஅதிமுக வைக் கண்டித்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பெற்ற பா.ஜ.க. 2014இல் மத்திய அரசில் அதிகாரம் பெற்றதிலிருந்து முந்தைய அரசுகளின் பாதையிலிருந்து திட்டமிட்டு விலகிச் செல்கிறது. அரசியலமைப்பிலும் அதன் முகப்புரை யிலும் கண்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளையும் மதிப்பதில்லை என்றார்.

கடந்த பல ஆண்டுகளில் எல்லாத் துறைகளிலும் மத்திய அரசு கண்டது தோல்வியே. மோடியின் அரசு அதிகபட்ச அழிவுக்குக் காரணமாயிருந்திருக்கிறது. நாடு மாற்றத்தையும் நல்லாட்சியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்றார் அவர். நாணய மதிப்புக் குறைப்பு அனைவரையும் பாதித்திருக்கிறது. தொழில் துறை, உற்பத்தித் தொழிற்சாலைகள், மரபு சாராத தொழில்கள் அனைத்தையுமே. பெருமளவு கருப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. அந்தத் திட்டத்தின் நோக்கமே தோல்வியடைந்துவிட்டது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் சாதாரண மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கடந்த பதினாறு நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் இந்தத் தேர்தல் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இது நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது. அரசியல் கட்சிகளின் எதிர் காலத்தை மட்டுமின்றி இனி வர இருக்கும் தலை முறையின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.

இந்தத் தேர்தல் எதிர்காலத்தில் இருக்கப் போவது  இந்தியாவா, ஹிந்து நாடா என்று தீர்மானிக்கப் போகிறது. திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக் குக் கூட்டணி மக்களின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் பாடுபடுவதற்கான கொள்கை அடிப்படைக் கூட்டணி என்றார் அவர். அஇஅதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத மானது.  வாக்குகளை அள்ளி வெற்றி பெறுவதே நோக்கம் என்று அந்தக் கட்சிகளே குறிப்பிட்டுள்ளன. கொள்கை அத்தனையையும் காற்றில் பறக்கவிட்டு விட்டன.

பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாசு தன் நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். திராவிடக் கட்சிகளோடு சேரும்போது கொள்கையை  மாற்றுவது என்பதே அவரது கொள்கை.

மத்திய அரசு அஇஅதிமுகவை அச்சுறுத்தி வைத்திருக்கிறது. அமைச்சர்களை வருமான வரிச் சோதனையையும், சி.பி.அய்.யையும் காட்டிப் பயமுறுத் துகிறது. அவர்கள் அடிமைகள். அமைச்சர் ஒருவர் 'மோடி எங்கள் டாடி' என்று சொல்கிறார்.

அவர்களின் தேர்தல் அறிக்கை கட்சிக் கூட்டத்தில் போட்ட தீர்மானங்கள் போல இருக்கிறது என்றார். வீரமணி. 'நீட்' தேர்விலிருந்து மாணவர்களுக்கு விலக்குக் கேட்கிறது. ஆனால் 'நீட்' உட்பட மாநிலத்தின் பல்வேறு குறைகளைத் தீர்ப்பதற்காக மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுப்பதற்கான எத்தனையோ வாய்ப்புகளை  அஇஅதிமுக அரசு நழுவ விட்டி ருக்கிறது.

கடந்த ஆண்டு பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். அது போலவே குடியரசுத் தலைவர் தேர்தலிலும் எதிர்த்து வாக்களித்தார்கள். ஆனால், மற்றபடி தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அந்தக் கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. 'நீட்' தேர்வு தொடர்பான இரண்டு சட்ட வரைவுகளை மாநில அரசு நிறைவேற்றியது. இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும் அவற்றின் கதி என்ன என்று தெரியாத நிலை. மத்திய அரசு அவற்றை அங்கீகரிக்கவில்லை. அதன் விளைவாக கார்ப்ப ரேட்டுகள் 'நீட்' தேர்வுகளில் லாபமடைந்து கொண்டி ருக்கிறார்கள். - இவ்வாறு 'டெக்கான் கிரானிக்கிள்' ஆங்கில  இதழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம்: 'டெக்கான் கிரானிக்கிள்' மார்ச் 26, 2019

Monday, March 25, 2019

இவர்களை ஆள விடலாமா?

தீட்டுக் கழிக்கும் பா.ஜ.க.
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மரணமடைந்தார் அல்லவா! அவர் உடல் கலா அகடமி கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பல நிலைகளில் உள்ளவர்கள் எல்லாம் இறுதி மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அவர் உடல் தீட்டாகி விட்டது என்று கூறி தீட்டுக் கழிப்பு சடங்குகள் நடைபெற்றுள்ளன என்பது எவ்வளவு அருவருப்பான செய்தி!
இந்த 2019 ஆம் ஆண்டிலும் இந்த பா.ஜ.க. - சங் பரிவார்க் கூட்டத்தின் புத்தி வேத காலத்தில் சஞ்சரிக்கிறதே.
மறைந்த பாரிக்கர் பார்ப்பனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை ஆள விடலாமா?  வெட்கக்கேடு! வெட்கக்கேடு!!

பிரியாணி பொட்டலத்தைக்கூட தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம்


ஜோதிடம், யாகம் முதலியவைகளுக்கு செய்யப்படும் செலவைக் கணக்கில் சேர்க்காதது ஏன்?

கொடியை அகற்றுவதோடு நில்லாமல், கொடி மரத்தையும் அறுக்கவேண்டுமா?
சிலரிடம் வேட்பு மனுவை எழுந்து நின்று வாங்குவது; வேறு சிலரிடம் உட்கார்ந்தபடியே அதிகாரிகள் வாங்குவது சரியா?


பிரியாணி பொட்டலத்தைக் கூடத் தேர்தல் செலவில் சேர்க்கும் தேர்தல் ஆணையம், தேர்தலுக்காக ஜோதிடம் பார்ப்பது, யாகம் நடத்துவது போன்றவற்றிற்கு ஆகும் செலவை, செலவுக் கணக்கில் கொண்டு வராதது ஏன் என்றும், வேட்பு மனுவை வாங்கும்போது சிலரிடம் எழுந்து நின்று வாங்குவது, வேறு சிலரிடம் உட்கார்ந்தபடியே தேர்தல் அலுவலர்கள் வாங்குவது ஏன்? என்ற சுயமரியாதைக் கேள்வியையும் எழுப்பியுள்ளார் திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது அறிக்கை வருமாறு:

தேர்தல் ஆணையம் இம்முறை புதிதாக பிரியாணி பொட்டலம், குடி தண்ணீர் பாட்டில்'' இவைகளுக்கெல்லாம் கட்டணம் விதித்து மிகவும் கண்டிப்புடன், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு அனுமதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றத்திற்கு 28 லட்சம் ரூபாய் என்ற கணக்குக்கு அதிகமானால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறக்கூடிய ஒரு கத்தியை வேட்பாளர்களின் தலைக்குமேல் தொங்க விட்டிருக்கிறது!

பிரியாணி பொட்டலம் லஞ்சமில்லையா?

பிரியாணி பொட்டலம் லஞ்சம்'' அல்லாமல் வேறு என்ன?
இதைத் தேர்தல் ஆணையம் சட்டப்படி தடுக்க முற்படவேண்டுமே தவிர, இதற்குக் கட்டணம் போட்டு கணக்கிட்டால், அதனை சட்டப்படி ஏற்கிறது; அங்கீ கரிக்கிறது என்பதுதானே! நமது ஜனநாயகத்தை கேலி செய்து, பழிக்குப் பகிரங்கமாகவே ஆளாக்குவது எவ் வகையில் சரியானது - நியாயமானது?

வெளிநாட்டவர்கள் இந்தச் செய்தியைப் படித்தால் பிரியாணி பொட்டலத்திற்காக தங்கள் வாக்குகளை விற்கும்'' வாக்காளர்கள் இந்திய வாக்காளர்கள் என்ற கெட்ட பெயர் வராதா?

கையில் மை வைப்பதும் அவமானமே!

அடையாள அட்டையுடன் - அதில் படமும் உள்ளபோது - கையில் மை வைப்பதே தேசிய அவமானம் அல்லவா? இது நிறுத்தப்படல் வேண்டும். நாட்டின் முதல் குடி மகனான குடியரசுத் தலைவருக்கும்கூட - அவர் ஓட்டுப் போட்டால் கையில் மை வைத்தாகவேண்டும்; அதுபோல், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரதமர் உள்பட இச்சட்டத்திற்கு யாரும் விலக்கு அல்லவே! (A Nation of dishonest Voters  ஆக மதிக்கப் படலாம்!)
இதன்மூலம் நமது நாட்டு வாக்காளர்கள் மறுபடியும் இரண்டாம் முறை வாக்களிக்கக்கூடியவர்கள் என்று மற்றவர்கள் எண்ணும் இழுக்கு தேசிய அவமானம் அல்லாமல் வேறு என்ன?

அதில் இப்போது பிரியாணி பொட்டலம் 200 ரூபாய், தண்ணீர் பாட்டில் 50 ரூபாயும் சேருகிறதாம்!

ஜோசியத்துக்குக் கொட்டியழும் பணம் தேர்தல் கணக்கில் வராதது ஏன்?

இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் தேர்தல் ஆணை யம், பெரும்பாலான வேட்பாளர்கள் ஜோசியர்களிடம், வாஸ்து நிபுணர்களிடம் ஜாதகம் பார்த்து - நல்ல நேரம் கணித்து, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களே, அந்த ஜோசியர்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணங்களை செலவுக் கணக்கில் சேர்க்கவேண்டாமா?

பிரியாணி பொட்டலமாவது 200 ரூபாய்; ஜோதிடமோ ஆயிரத்திற்கு, 500 ரூபாய்க்குக் குறையாதது அல்லவா!
அதுமட்டுமா?

யாகங்களுக்கான செலவும் முக்கியம்தானே!

யாகங்கள், அதுவும் சத்ரு சங்கார யாகங்களுக்கு' பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது அந்த வேட் பாளர்களால்!  புரோகித பார்ப்பனர்களுக்கு ஏராளமான பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறார்களே - அது ஏன் கணக்கில் சேர்க்கப்படக்கூடாது? அதற்கு ஆகும் நெய் உள்பட  பல பொருள்களின் விலை கணக்கில் சேர்க்கப்பட வேண்டாமா?
மலத்தில் அரிசி பொறுக்குவதா?

நல்ல நேரம், முகூர்த்த நாள் பார்த்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்; இதற்கு விதி விலக்கு ஏதோ ஆயிரத்தில் ஒன்றாக இருந்தாலே அதிசயம் - மலத்தில் அரிசி பொறுக்கும் அசிங்கத்தினைச் செய்ய விரும்பவில்லை நாம்!

வடநாட்டில் சாமியார்களுக்கும், ஜோசியர்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கியாம்! அப்பாயிண்ட்மெண்ட் அவர் களிடம் கிடைப்பதற்கே கூட வாங்கித் தருபவர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறதாம்.

தேர்தல் அறிவிப்பு இராகுகாலத்தில்தானே வெளியிடப்பட்டது!

தேர்தலில் வெற்றி பெற இத்தியாதி, இத்தியாதி' நாள் நட்சத்திரம், மேஷம், மீனம் பார்க்கப்படுகிறது. ஜோசியரிடம் ஆலோசனை கேட்டு, பூஜை புனஸ்காரம், சமாதி சமர்ப்பியாயமி' எல்லாம் செய்து, வேட்பு மனு தாக்கல் செய்கிறார்களே, அவர்கள் அத்துணை அரசியல் கட்சியினரும் ஒன்றை "வசதியாக'' மறந்துவிட்டனரே, அது ஏன்?

நாட்டின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு தலைமைத் தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்ட தேதி, நேரம் மறந்துவிட்டதா?

2019 மார்ச் 10 ஞாயிறு மாலை 5 மணிக்கு (கொழுத்த'') ராகுகாலத்தில்தானே!

அந்த இராகுகாலத்தில் அறிவிக்கப்பட்டதால், தேர் தலில் நிற்கமாட்டோம் என்று எந்த  அமாவாசை, கிருத்திகை, பாட்டி முகம் - பார்க்கும், கையில் ஒரு வண்டி அழுக்குக் கயிறுகளைக் கட்டியுள்ள பிரகஸ் பதிகள்'' ஏனோ கூறவில்லை?

ஜோதிடம் பார்த்த அனைவரும் வெற்றி பெற முடியுமா?

போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் தானே வெற்றி பெற முடியும்? பின் என்ன  நல்ல நேரம் - வெங்காயம்?

அதே ஜாதி என்ற இந்த முட்டாள்தனத்திற்கு மெருகு ஏற்றப்பட்ட தங்கப் பூண்!
இவர்கள் வெற்றி பெற்று அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுக்கப் போகிறார்களே -
அதில் 51 ஏ-எச் பிரிவில், அடிப்படைக் கடமைகள் என்ற தலைப்பு என்ன கூறுகிறது?

அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?

அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டல், சீர்திருத்தம் - இவை களை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை'' என்று ஒரு பிரிவு உள்ளதே! குறைந்த பட்சம் அதைப் படித்தாவது பார்க்க வேண்டாமா?

ஆன்மிக அரசியலாம், அட அறிவுக் கொழுந்துகளே!
என்ன விநோதம் பாருங்கள்!
எவ்வளவு ஜோக்கு பாருங்கள்!!''
அய்யய்ய சொல்ல வெட்கமாகுதே!!!
இதில் இன்னும் இரண்டு செய்திகள்:
கட்சிக் கொடிகளை அகற்றவேண்டும் என்கிறார்கள் - அது ஏன் என்றே தெரியவில்லை.
சரி, அதுதான் போகட்டும்; கொடியை இறக்கியதுடன் நில்லாமல், கொடிக் கம்பத்தையும் அகற்றுவது ஏன்? இரும்புக் கம்பம் என்றால் அதனை அறுத்து எடுத்துச் செல்லுவது ஏன்?
இரண்டவதாக, வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வரும்பொழுது, தேர்தல் அதிகாரிகள் நடந்துகொள்ளும் போக்கு கண்டிக்கத்தக்கது.

குறிப்பிட்ட சிலர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, எழுந்து நின்று வரவேற்பது, வேட்பு மனு வாங்குவது; மற்றவர்கள் வரும்போது உட்கார்ந்தபடியே வாங்குவது - இதில் என்ன வருண பேதம்' - வர்க்க பேதம்? உயர்ந்தவர் - மட்டமானவர் என்ற கணிப்பு? அலுவலக நடைமுறைப் பண்புக்கு இது உகந்ததுதானா? சட்டத்தின்முன் அனைவரும் சமமில்லையா?

இதுபற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்புவது நல்லது!

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
25.3.2019

Thursday, March 21, 2019

"தினத்தந்தியும், தினமலரும்"

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா ளராகிய பிரியங்கா காந்தியின் வருகை, காங்கிரஸ் கட்சிக்குப் புதுத்தெம்பை ஊட்டுமா? இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்துமா? என்கிற சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரிய தாக்கத்தை   ஏற்படுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பும் உள்ளது.

மத்தியில் நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையில் அமைந்துள்ள ஆட்சி என்பது முற்றிலுமாக தோல்வியடைந்த ஆட்சி என்பதை விட - நாட்டுக்குக் கேடு செய்யும் ஒரு பாசிச ஆட்சி என்பதுதான் கவலைக்கு உரிய ஒன்றாகும்.

134 கோடி மக்கள் கொண்ட இந்தியா என்பது ஒரு நாடு அல்ல - ஒரு துணைக் கண்டம் - வெள்ளைக்காரனின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்ட ஒன்றே.

பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு துணைக்கண்டமாகும். ஆனால் இதனை எப்பொழுதுமே பிஜேபி ஏற்றுக் கொண்டது கிடையாது.

1956இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது அதனை எதிர்த்த ஒரே கட்சி இந்த பிஜேபியின் முன்னோடியான ஜனசங்கமே!
இதற்குக் காரணம் உண்டு. உலகில் சொந்த நாடு என்று ஒன்று இல்லாத இனம் ஆரிய இனம். தனக்கு மூக்கு இல்லை என்றால் எல்லோருக்குமே இருக்கக்கூடாது - என்று கூறும் ஒரு கதை போல, தனக்கென ஒரு நாடு இல்லாத நிலையில் மற்றவர்களுக்கும் அந்த நாடு இருக்கக்கூடாது என்கிற 'தாராள' புத்திதான் பார்ப்பனர்களுடையது.

தனி மாநிலம், தனி மொழி, தனி இனம், தனிப் பண்பாடு என்ற உணர்ச்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்து விட்டால், தாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் தான் பாரத தேசம் ஒரே நாடு - நாம் அதன் புதல்வர்கள் என்று ஓங்கி ஓங்கிப் பாடுவார்கள்.

இன்றைக்கு மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி - இந்த பல இனங்கள், பல மொழிகள், பலப் பண்பாடுகள் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திலே ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஒன்று உருவாக்கினால் தான் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தோடுதான் பல்வேறு கொல்லைப்புற  யுக்திகளைக் கையாண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் ஒரே வகைத் தேசியக் கல்வி, குருகுலக் கல்வி என்பதெல்லாம் இந்தப் பார்ப்பன சமஸ்கிருத கலாச்சாரத்தின் பதிப்புதான். மாநிலங்களின் ஆளுகையில் உள்ள பல துறைகளையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு செல்லுவதெல்லாம் இந்த சூழ்ச்சி யுக்தியின் அடிப்படையில்தான்.
'இந்து' என்ற ஓர் அடையாளத்தைக் கொடுத்தால் தங்கள் மொழி, இனம் பண்பாடு இவற்றை மறந்துவிட்டு, ஆரியம்  விரிக்கும் வலையில் வீழ்வார்கள் என்பதே அவர்களுக்கே உரித்தான சாணக்கியப் புத்தி.

ராமஜென்மபூமி, கீதை புனித நூல், மனுதர்மமே, அரசமைப்புச் சட்டம் என்பதெல்லாமே இந்த வகையான மூளைச் சலவை ஏற்பாடுகளே!

சமுகநீதியை ஒழித்தால்தான் சமத்துவ நிலை ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதும் அவர்களின் திட்டம்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் பாசிச பார்ப்பன ஆட்சியைக் கொண்டு வருவதுதான் அவர்களின் மறைமுக அஜண்டா.

மற்றபடி மக்கள் நலம், வளர்ச்சி என்பதே எல்லாம் "மயக்க பிஸ்கட்தான்".

மோடி கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயிற்று என்பது எல்லோருக்கும் தெரியும்.

பொருளாதாரப் பாதையில் ரூபாய் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. என்பதெல்லாம், குதிரை குப்புறத் தள்ளியதோடு மட்டுமல்லாமல் குழி பறித்த கதையாகி விட்டது.

இந்த நிலையில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பச்சையான பாசிச பார்ப்பன - பனியா கார்ப்பரேட் கொடுங் கோல் ஆட்சிதான்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய உத்தரவாதங்களான மதச்சார்பின்மை - சமுகநீதி இவற்றைக் காப்பாற்றிட இந்தக் கொள்கையில் அக்கறை உள்ள மக்கள் நலனை விரும்பும் கட்சிகள் எல்லாம் இணைந்து நிற்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதற்காக ஆதரவு எங்கிருந்து கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில் பிரியங்காவின்  வருகை கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என்பதால் அதனை வரவேற்க வேண்டியதுதான் புத்திசாலித்தனமுடையதாகும்.

இதுகுறித்து நேற்றைய "தினத்தந்தி"யில் (19.3.2019) தலையங்கம் பகுதியில் குறிப்பிட்டிருப்பதாவது:

ஆமதாபாத்தில் பிரியங்கா ஆற்றிய தேர்தல் உரையைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது அந்தத் தலையங்கம். "இந்தக் கூட்டத்தில் பிரியங்கா பேச்சு மிகவும் அரசியல் நாகரிகத்தோடு, அர்த்தமுள்ளதாக இருந்தது. மிகவும் சிந்திக்கத் தக்க வகையில் அவர் பேச்சு இருந்தது, அவருடைய மென்மையான பேச்சு இதயங்களைக் கவர்ந்தது!" இவ்வாறு 'தினத்தந்தி'யின்' தலையங்கம் படம் பிடித்துக் கூறுகிறது.

அதே தேதியில் (19.3.2019) 'தினமலர்' ஏடு "அக்கம் பக்கம்" பகுதியில் இவ்வாறு எழுதுகிறது. "பிரியங்கா காந்தியின் வருகை பெரிய எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் பிரியங்காவிடம் உற்சாகம் இல்லை. முகம் சோர்வடைந்திருந்தது. பேச்சிலும் அவர் பாட்டி இந்திரா போல் ஆவேசம் இல்லை. மென்மையான குரலில் பேசினார். குஜராத்தில் காங்கிரஸ் செயற்குழுவில் நான்காவது வரிசையில் அமர்ந்திருந்தார், இதைப் பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் "நாம் தான் அதிகம் எதிர்பார்த்து, ஏமாந்து விட்டோம் போலிருக்கிறது எனப் புலம்புகிறார்கள்" என்று எழுதுகிறது "தினமலர்".


'தினத்தந்திக்கும்', 'தினமலரு'க்கும் உள்ள இந்த வேறு பாட்டை எண்ணினால் இடையில் இழையும் வெள்ளை நூலை அப்பட்டமாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா!

பாஜகவுக்கு கடும் பின்னடைவு

அருணாச்சலப் பிரதேசத்தில் 25 தலைவர்கள் திடீர் விலகல்

இட்டாநகர், மார்ச் 20 மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்து, கடந்த சில நாட்களில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச பாஜகவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட தலைவர்கள் திடீரென விலகியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் பாஜகவில் இருந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் விலகியுள்ளது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. விலகியவர்கள் அனைவரும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

வரும் ஏப்ரல் மாதம் 11- ஆம் தேதி சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் உள் ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், மக்கள வைத் தேர்தலும் நடைபெற இருக் கிறது. அருணாச்சலப் பிரதேச சட்டப் பேரவையின் 60 இடங்களில் 54 இடங் களுக்கான வேட்பாளர்களை பாஜக தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட் டியிட்ட பலருக்கு  வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் மட்டும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாலர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம் லின், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் விலகியவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனை வரும் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில்(என்பிபி) சேர்ந்துவிட்டனர்.

அருணாச்சலப் பிரதேச பாஜகவைச் சேர்ந்த வெய், ஜர்கர், ஜர்பும் ஆகியோரைத் தவிர்த்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்வாங் வாங்கம், தபுக் தகு, பனி தரம், பாங்கா பாகே, வாங்லிங் லோவன்டாங், கார்டோ யெக்கியோர், முன்னாள் அமைச்சர் செரிங் ஜுர்னே ஆகியோர் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.


அருணாச்சலப் பிரதேச உள்துறை அமைச்சரும், பாஜகவில் இருந்து விலகிய வருமான குமார் வெய் கூறுகையில், வாரிசு அரசியலைப் புகுத்துகிறது பாஜக. பாஜக சரியாக இருந்தால் நான் விலகியிருக்க வேண்டியது இல்லை. நாடுதான் முதலில் முக்கியம். அதன் பின் கட்சி, தனிமனிதர்கள் என்று பாஜக தலைமை சொல்கிறது. ஆனால் நிதர்சனத்தில் பார்த்தால், அதற்கு எதி ராக நடக்கிறது பாஜக. காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது என்று பாஜக விமர்சிக்கிறது. ஆனால், மாநி லத்தில் முதல்வரின் குடும்பத்தில் 3 உறுப்பினர்களுக்கு பாஜக சீட் வழங்கி யுள்ளது'' எனத் தெரிவித்தார்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...