Monday, April 1, 2019

பதில் சொல்லுமா பா.ஜ.க. ஆட்சி?


* 2017 பிப்ரவரி முதல் விவசாயிகளின் தற்கொலை விவரங்களை மத்திய அரசு வெளியிடாதது - ஏன்?
* ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்ற மோடியின் உத்தரவாதம் செயல்படுத்தப்படாதது - ஏன்?
* உற்பத்தி செலவுக்கு மேல் 150 விழுக்காடு ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு என்னாயிற்று?
* தேசிய விவசாயச் சந்தை உருவாக்கப்படும் என்ற 2014 - பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் கொடுத்த உறுதிமொழி என்னாயிற்று?
* ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகங்களில் 43 சதவிகிதம் சரிந்திருக்கிறதா இல்லையா? தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் 32 விழுக்காடு வேலை வாய்ப்பு பறிபோயிருக்கிறதா இல்லையா?
சிறுதொழில்களில் 35 விழுக்காடு, குறுந்தொழில்களில் 24 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இழப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா?
* மோடி ஆட்சியில் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக் கடன்களை அடைக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்ற 23 பேர்கள் சொகுசாக வாழ்கிறார்களா? இல்லையா?
* மோடி ஆட்சியில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் வங்கிக் கடன் ஊழல்கள் ரூ.61,620 கோடி என்பது எதைக் காட்டுகிறது?
* ரூ.2.38 இலட்சம் கோடி வாராக் கடன் - மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் ரூ.12 இலட்சம் கோடியாக வளர்ந்திருக்கிறதே - ஒருக்கால் இதைத்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோடி வளர்ச்சி என்கிறாரோ?
* தேசிய மயமாக்கப்பட்ட 21 பொதுத் துறை வங்கிகளில் 19 வங்கிகள் நட்டக் கணக்குக் காட்டியுள்ளனவே - இதுதான் மோடி ஆட்சியின் நிர்வாக இலட்சணமா? (குறிப்பு: இந்த நட்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.2.70 லட்சம் கொடுத்து உதவியுள்ளது).
* பசு பாதுகாப்பு என்ற பெயரால் 118 இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் கொல்லப்பட்டது தான் மோடி அரசின் மனித உரிமைப் பாதுகாப்பா?
* குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.2,989 கோடி செலவில் 182 மீட்டர் சிலையை அரசு செலவில் நிறுவியதால், மக்களுக்கு என்ன லாபம்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...