Wednesday, March 27, 2019

பி.ஜே.பி. ஆட்சியில் மதக்கலவரங்களே வெடிக்கவில்லையா?

பி.ஜே.பி. ஆட்சியில் மதக்கலவரங்களே கிடையாது என்று நீட்டி முழங்குகின்றனரே அது உண்மையா?
இதோ பி.ஜே.பி. ஆட்சியின் உள்துறை வெளியிட்டுள்ள ஆதாரப்பூர்வ அறிக்கை
2016 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் 751 மத வன்முறைகள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளன. அதில் 97 பேர் மரணமடைந்துள்ளனர். 2,264 பேர் படுகாய மடைந்துள்ளனர் என்கிறது உள்துறை அறிக்கை.
2016 ஆம் ஆண்டின் அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. கோவா மாநிலத்தில் சிறுபான்மையினரின் கல்லறைத் தோட்டங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் 38 விழுக்காடு அளவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் உயர்ந்துள்ளது.
யுனைட்டேட் கிரிஸ்டியன் போரம் என்ற அமைப்பு தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு கொடுத்த தகவலின்படி அரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மிகவும் பழைமையான 27 தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தேவாலயங்களில் மத வேறுபாடின்றி அனைத்து சமுகத்தவரும் வந்து வழிபடுவார்கள். மேலும் இங்கு தொடர்ந்து வழிபாடு நடத்தக் கூடாது என்று உள்ளூர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவர்களை மிரட்டி வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களின் நுழைவாயிலில் காவிக் கொடிகளை வைக்கின்றனர். அரசிடம் இதைப் புகாராக தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுக்காமல், மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்று அந்தத் தகவலில் கூறியுள்ளனர்.
பசு மாட்டு வன்முறை
பசு மாட்டின் பெயரால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன. 2014 ஆம் ஆண்டுமுதல் 2017 ஆம் ஆண்டுவரை அரியானா மாநிலத்தில் 12 பேர் பசுப் பாதுகாவலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி என்ற இடத்தில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தி பரவியதை அடுத்து முகமது அக்லக் எனும் 63 வயது முதியவர் படுகொலையைத் தொடர்ந்து மேற்கு வங்கம், சத்தீஷ்கர், ஜார்கண்ட், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராட்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் மீதான தாக்குதல்களும், படுகொலைகளும் மிகவும் சாதாரணமாக மாறிவிட்ட ஒன்றாகிவிட்டது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...