Tuesday, January 28, 2020

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 282 கிராம சபைகளில் தீர்மானம்


நாகை, திருவா ரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங் களின் 282 கிராம சபை கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரிப்படுகையை 2 மண்டலங்களாக பிரித்து மொத்தம் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. பிரிவு 1இ-ல் விழுப்புரம், புதுச்சேரியை சுற்றியுள்ள பகுதி களில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள், பிரிவு 2இ-ல் கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தி யில் எதிர்ப்பு கிளம்பியதால் தற்கா லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 5-ஆவது ஏலத் துக்காக 11 ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற் கான அறிவிப்பு கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்டது. இவற்றில் 4,064 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள ஒரு திட்டம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. புதுச்சேரியில் தொடங்கி  காரைக்கால் வரையிலும், தமிழகத் தில் கடலூர், நாகப்பட்டினம் உள் ளிட்ட மாவட்டங்களிலும் செயல் படுத்துவதால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் நிலை உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிண றுகள் அமைப்பதில் ‘ஏ கிரேடு’, ‘பி கிரேடு’ என பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ கிரேடு’ அமையும் பகுதியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற வேண்டும் என விதி உள்ளது. ‘பி கிரேடு’  மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டியதில்லை. சுற்றுச்சூழல் கமிட்டியில் அனுமதி வாங்க வேண் டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், 71-ஆவது குடி யரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதில், 282 கூட் டங்களில், ஹைட்ரோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் அக் கரைபேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் வாசிக்கப் பட்டு அது நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கீழ்வேளூர் ஒன்றியத்தில் இலுப்பூர், குருக்கத்தி ஊராட்சிகள், செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சி என மாவட்டத்தில் 60 ஊராட்சிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. குறிப்பாக, வேதாரண்யம் ஒன்றியத்தில் 30 ஊராட்சியில் நிறைவேறியது என்பது குறிப்பிடத் தக்கது.
திருவாரூர் மாவட்டம்: திருவா ரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும் புகளூர் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, தீர்மானத்துக்கு ஆதர வாக நூற்றுக்கணக்கான பொது மக்கள் முழக்கம் எழுப்பினர். இதே போல், திருக்காரவாசல், பின்ன வாசல், குன்னியூர் உட்பட  100 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற அலு வலகத்தில் நடந்த கூட்டத்தில், குடிநீர், மின்சாரம், சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. கத்தரி நத்தம், ஊரணிபுரம், அழகிய நாயகி புரம், செருவாவிடுதி, கதிராமங்கலம், கள்ளபுலியூர் உள்ளிட்ட 12 கிராம ஊராட்சிகளில், ‘‘மக்களின் வாழ் வாதாரமான விவசாயத்தை அழிக் கக்கூடிய ஹைட்ரோ கார்பன் உள் ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை அனுமதிக்க முடியாது’’ என மக் களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர், விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் கடலோர பகுதி களான வானூர், மரக்காணம் ஒன்றி யத்தில் 35 கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திடத்தை கொண்டு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
அதேபோல், கடலூர் மாவட் டத்தில் பி.முட்லூர், அரியக்குறிச்சி உள்ளிட்ட 60 கிராம ஊராட்சிகளில் ஹைட்ரோ கார் பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில், நெடு வாசல் வடக்கு, நெடுவாசல் தெற்கு, கற்காகுறிச்சி உள்பட 15 ஊராட் சிகளிலும் தீர்மானம் நிறைவேறியது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...