Monday, January 27, 2020

காந்தியின் படுகொலைக்கான ஆதாரங்களை அகற்ற முயல்கிறார்கள்

துஷார் காந்தி குற்றச்சாட்டு!
டில்லியில் உள்ள தீஸ் ஜனவரி மார்க் இல் உள்ள பழைய பிர்லா பவன் காந்தி ஸ்மிருதி என்றழைக் கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட  காந்தியார் இந்த வீட்டில் தான் தன் வாழ்வின் கடைசி சில மாதங்களைக் கழித்தார். அவரது வாழ்க்கையின் அந்த இறுதியான 144 நாட்களின் நினைவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பழைய பிர்லா பவன் 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத் தப்பட்டு தேசத் தந்தையின் நினைவக மாக மாற்றப்பட்டது. இந்திய சுதந்திர நாளான 15 ஆகஸ்ட் 1973 அன்று அது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. அங்கு காந்தியார் வாழ்ந்த காலம் மற்றும் அப்போது நடைபெற்ற அவரது படுகொலை உட்பட பல வரலாற்று நிகழ்வுகள் பற்றிய நிழல் படங்கள் மற்றும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன..
ப்ரெஞ்சு நிழல்படக் கலைஞர் என்றி கார்டியர்-ப்ரெசனால் எடுக்கப்பட்ட  நிழல் படங்கள் இப்போது டிஜிட்டல் மயமாக்கப் பட்டு எல்.ஈ.டி. திரையில் குறிப்புகள் எதுவுமின்றி காட்டப்படு கின்றன எனவும் அதனால் அந்தப் நிழல் படங்கள் குறித்த சிறப்பு எதையும் அவை தெரிவிக்கத் தவறி விட்டன எனவும் காந் தியாரின் பேரன் துஷார் காந்தி கடந்த வாரம் கூறியதையடுத்து சர்ச்சை கிளம் பியது.
காந்தியாரின் வாழ்க்கை குறித்த பெரும்பாலான நிழல் படங்கள் எல் லாம் கண்காட்சியில் இருப்பதைப் போல காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் போது அவரது படுகொலை சம்பவங்கள் அடங்கிய நிழல் படங்கள் மட்டும் அகற்றப்பட்டிருப்பது அவரது சில வரலாற்று ஆதாரங்களை அழிப்பதற்கு ஒப்பானது என்று துஷார் கூறியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...