Sunday, November 17, 2019

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர், நெகிழிக் கழிவுகளை கொட்டக்கூடாது


கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் நெகிழிக் கழிவுகளை பொது மக்கள் கொட்டக்கூடாது என வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடையாறு திரு.வி.க.பாலம் அருகே நடந்துவரும் இந்த பணிகளை தமிழக முதன்மைச்செயலாளரும், வருவாய் நிர் வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாரி களுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
திருநீர்மலை பாலம் முதல் மறைமலைநகர் பாலம் வரையுள்ள அடையாறு ஆற்றை மீட்டெடுக்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் பாலம் முதல் முகத்துவாரம் வரையுள்ள பகுதிகளில் கடலோர பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலுடன் கடந்த அக்டோபர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அடையாறு ஆற்றை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 800 மீட்டர் வரை வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 5 முகத்துவாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடுதலாக 3 முகத்துவாரங்கள் அமைக்கப்பட உள்ளன. அடையாறு கரையோரங்களில் உள்ள 11 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்புகளில் இதுவரை 4 ஆயிரத்து 515 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. கோட்டூர்புரம் பாலம் முதல் திரு.வி.க. பாலம் வரை 440 மீட்டர் நீளத்துக்கான பணிகள் ரூ.14 கோடியில் நடந்து வருகிறது.
அதேபோல் கூவம் ஆற்றினை மீட்டெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.93.57 கோடியில், பொதுப்பணித்துறையின் மூலம் பருத்திப் பட்டு பாலம் முதல் கூவம் முகத்துவாரம் வரை 27 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றினை தூர்வாருதல், அகலப்படுத்துதல், துணை கால்வாய் அமைத்தல், இருபுறமும் கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்புகளாக கண்டறியப் பட்ட 16 ஆயிரத்து 598 ஆக்கிரமிப்புகளில், இதுவரை 11 ஆயிரத்து 890 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுவரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள பணிகளை 2020ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கழிவுநீர் மற்றும் நெகிழிக் கழிவுகளை கொட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...