Sunday, November 17, 2019

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறு வனங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:
நாட்டில் நிலவி வரும் பொரு ளாதார மந்த நிலையை சீரமைக்க மத்திய அரசு உரிய நேரத்தில் நட வடிக்கைகள் மேற்கொண்டு வருகி றது.
இந்த ஆண்டில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக நடவடிக்கை களை தொடங்கி இருக்கிறோம். அது பலன் தரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்படி, இழப்பில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய இரு நிறுவனங்களை விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது அதை வாங்க முதலீட்டா ளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி. வரி வசூலில் முன்னேற்றம் காணப் படும். விழாக் காலத்தை முன் னிட்டு வங்கிகள் மூலமாக ரூ.1.8 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டது வாடிக் கையாளர்களின் நம்பிக்கையை அதி கரித்து இருக்கிறது என்று கூறினார்.
ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பி.எஸ்.என்.எல். போன்றவற்றை தனியாரிடம் விடும் பணி வேகமாக நடந்துகொண்டு இருக்கிறது என்று அனைவரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது வெளிப்படையாக விற்பனைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...