Sunday, November 17, 2019

தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவு

தீர்ப்பாயங் களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி உறவையூரி கிராமத்தில் காலணி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவ னத்தில் பணியாற்றிய பலருக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2001-ஆம் ஆண்டு நவம்பர் வரை தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக்கு தொகை செலுத்த வில்லை. இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் தாக்கீது அனுப்பி, பணத்தை செலுத்த உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து மண்டல ஆணையரிடம் அந்நிறுவனம் மேல்முறையீடு செய்தது. ஆனால், அவர் உதவி ஆணை யரின் உத்தரவை சரி என்று கூறி உறுதி செய்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காலணி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னி லையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சம்பந் தப்பட்ட தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள்தான், அவர்கள் ஊழியர்கள் இல்லை என்று வாதிட்டார். இதை யடுத்து, ஊழியர்களுக்கு வருங் கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்த வேண்டும் என்ற மண்டல ஆணையரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் மேல்முறை யீட்டு தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக வழக்குரைஞர்கள் வாதத்தின்போது தெரிவித் துள்ளனர். இதுகுறித்து புகார் செய்தால், தீர்ப்பாயத்தின் நீதிபதி கண்டுகொள்வது இல்லை என் றும், மாறாக கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கை 2020-ஆம் ஆண்டு மே மாதத்துக்கு தள்ளிவைத்து உத் தரவிட்டதாகவும் வழக்குரை ஞர்கள் கூறினர்.
இதுபோன்ற செயல்களி னால் தொழிலாளர்கள் தான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்காகத்தான் இதுபோன்ற தீர்ப்பாயங்களே அமைக்கப் பட்டன. வழக்குகளின் விசா ரணை தாமதம் ஏற்பட்டதால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கால தாமதம் ஆன காலத்துக்கு வட் டியுடன் சேர்த்து வழங்க வேண் டிய நிலை வரும் என்பதால், தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
தங்களது வழக்குகள் முடி வுக்கு வந்தாலும், அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலை சில தொழிலாளர்களுக்கு ஏற்படு கிறது. எனவே, தீர்ப்பாயங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறைக்கு உத்தரவிடு கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள் ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...