Thursday, November 21, 2019

பாஜகவுக்கு தாவிய மேனாள் சட்டமன்ற உறுப்பினர்மீது பொதுமக்கள் செருப்பு வீச்சு!

கருநாடகத்தில் காலியாக இருக்கும் 15 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாராயண கவுடா, கே.ஆர். பேட் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த தொகுதியில் ஓராண்டுக்கு முன்புதான், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் நாராயண கவுடாவெற்றி பெற்றிருந்தார். ஆனால், தனது சொந்தக் கட்சியின் ஆட்சியையே கவிழ்க்கும் விதத்தில், சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து திடீரென விலகினார். அதே கையோடு பாஜகவிலும் அய்க்கியமானார். கவுடாவின் பதவி விலகல் காரணமாகவே கே.ஆர். பேட் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் வந்துள்ளது.
மக்களைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல், மறுபடியும் கவுடாவே வேட்பாளர் ஆகியுள்ளார். இந்நிலையில், நாராயண கவுடா திங்களன்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது, அவர்மீது சரமாரியாக செருப்புகள் வீசப்பட்டுள்ளன. நாராயண கவுடாவின் குடும்பத்தினர் மீதும் செருப்புகள் விழுந்துள்ளன. இதனால் வேட்புமனுத்தாக்கலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண கவுடா மீதான செருப்புவீச்சையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் ‘கட்சித்தாவல்’ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, கர்நாடகத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...