Thursday, November 21, 2019

மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக்கவசம் அணிய உத்தரவு

இருசக்கர வாகனங்களில் செல்ப வர் கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமல் படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. கேரளாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தலைக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம்  அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனக்கூறி விட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கேரளாவில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பின் னால் அமர்ந்து பயணிப்போரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வருகிறது.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர் களும் தலைக்கவசம்  அணிய வேண்டும்
இதனை கேரள போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இனி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்ப வர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்பவர்களில் 4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.
இதுபற்றிய உத்தரவுகள் போக்குவரத்து காவல்துறையினருக்கும், போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கேரள போக்குவரத்து அமைச்சர் கூறும்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் வருகிற 1ஆம் தேதி முதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். அதே சமயம் இந்த சட்டத்தை அமல்படுத்த கடுமையான கெடுபிடிகள் எதுவும் காட்டப்படமாட்டாது என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...