Thursday, November 21, 2019

இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின் கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 1,000 பேர் விரட்டியடிப்பு


ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையை ஒட்டியுள்ள மன்னார் வளை குடா, கச்சத்தீவு பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்கள் தாக்கி விரட் டியடிப்பதும், சில நேரங்களில் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த ஓராண்டில் தமிழக மீனவர்கள் 40-க்கும் மேற் பட் டோரை இலங்கைக் கடற் படை கைது செய்துள்ளது.
இதனிடையே ராமேசு வரம், பாம்பன் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட மீனவர்கள் நேற்று 50 விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.
இவர்கள் அதி காலை கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர். மேலும் கடற்படை வீரர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். வலை, மீன்பிடி சாதனங் களையும் சேதப்படுத்தினர்.
இதனால் உயிருக்கு பயந்து அந்தப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் அவசரமாக கரை திரும்பினர்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட் டியடித்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின் 2-ஆவது முறையாக மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...