Tuesday, November 19, 2019

தினமலருக்கு அந்தப் பயம் இருந்தால் சரி!

                            

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் பெயரை இழுக்கா விட்டால் 'தினமலரின்' ஆத்தில் போஜனம் கிடைக்காது போலும்.
ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகம் ஜாதியைப் பற்றிப் பேசாமல், திரிநூல் கூட்டத்தின் அவுட்டுத் திரி இத்தனை அங்குலம் இருக்க வேண்டும் என்றா பேசும்?
தினமலர் வகையறாக்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சர்... புர்.... சர்மா, சாஸ்திரி, அய்யர், அய்யங்கார் என்று வாலை ஒட்டிக் கொள்ள வெட்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதற்கு யார் காரணம்? தினமலர் எழுதியுள்ள அந்த ஈ.வெ.ரா. தானே. பார்ப்பன சங்க மாநாட்டில் ஜாதி மறுப்புத்  திருமணத்தை இனி செய்யக் கூடாது என்று போட்ட தீர்மானத்தை மட்டும் வெட்டி விட்டு, செய்தி  வெளியிடும் 'தினமலரின்' தந்திரம் புரியாதா? யாருக்குப் பயந்து அந்தத் தீர்மானத்தை வெளியிடவில்லை? தி.க.வுக்கும், அதன் தலைவர் வீரமணி அவர்களுக்கும் அஞ்சி தானே!  அந்தப் பயம் இருந்தால் சரி.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...