Wednesday, November 20, 2019

அய்.அய்.டி. சுதர்சன் பத்மநாபன் - ஆர்.எஸ்.எஸ். கூட்டு!

அம்பலப்படுத்துகிறார் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.,
தி.மு.க.வை குறி வைத்து எழுப்பப்படும் இப்படியான (அவதூறு) கேள்விகளின் பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள (‘ஜூனியர் விகடன்', 24.11.2019) சட்டப்பேரவை தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், அய்.அய்.டி. சுதர்சன் பத்மநாபன் - ஆர்.எஸ்.எஸின் கூட்டை அம்பலப்படுத்தி யுள்ளார்.
பதில்: ‘‘வேறு யார்.... பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும்தான். இதற்காகவே  ‘கதிர் நியூஸ்' என்ற வெப்சைட்டை நடத்தி வருகின்றன. இதற்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கின்றன. சென்னை அய்.அய்.டி.யில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும்  ஃபாத்திமா லத்தீப் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சுதர்சன் பத்மநாபன், இந்த ஆலோசனைக் குழுவிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் மூத்த உறுப்பினராக இருக்கிறார். ‘இந்துத்துவத்தை விதைப்பது, கலவரத்தைப் பரப்புவது, திராவிடத்தைத் தாக்குவது' ஆகிய வியூகங்களை வகுத்துக் கொடுப்பதே அந்தக் குழுவினர்தான்.''

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...