Saturday, November 30, 2019

அமெரிக்காவில் உலக புகழ்பெற்ற மலையேற்ற வீரர் பலி

அமெரிக் காவை சேர்ந்த பிரபல மலை யேற்ற வீரர் பிராட் கோப் ரைட் (வயது 31). இவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவர். இதனால் இவர் உலகம் முழுவதும் பிரபல மான மலையேற்ற வீரராக திகழ்ந்து வந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் உள்ள உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான ‘எல் கேப்டன்’ சிகரத்தில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக குறுகிய நேரத்தில் ஏறி சாதனை படைத்தார்.
இந்த நிலையில் பிராட் கோப்ரைட் மற்றும் அவரது நண்பரும், சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப் சன் ஆகிய இருவரும் மெக் சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட் ரெரோ சிக்கோ’ மலையில் ஏறினர். அப்போது பிராட் கோப்ரைட் மலையின் உச் சியை அடைந்த நிலையில் சற் றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத் திலேயே பலியானார்.
அதே போல் அய்டன் ஜேக்கப்சனும் மலையில் இருந்து தவறி விழுந்தார். ஆனால் அவர் குறைவான உயரத்தில் இருந்து விழுந்த தால் காயங்களுடன் உயிர் தப்பினார். பிராட் கோப் ரைட் இறப்புக்கு உலகம் முழு வதிலும் உள்ள மலையேற்ற வீரர்கள் அதிர்ச்சியும், இரங் கலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...