Wednesday, November 20, 2019

புதிய அறக்கட்டளை உருவாக்க அரசுக்கு அதிகாரமில்லையாம்!

அயோத்தி சாமியார்கள் அடாவடி! 
 
 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், கூடவே, அப்பணிகளை மேற் கொள்வதற்கு மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில், மத்திய அரசும் அறக்கட்டளை தொடர்பான ஆலோசனை யில் இறங்கியுள்ளது.
ஆனால், சிறீராமஜென்ம பூமி நியாஸ், சிறீராமஜென்ம பூமி கோயில்அறக்கட்டளை மற்றும் சிறீராமாலயா அறக்கட்டளை என அயோத்தியில் ஏற்கெனவே பல்வேறு அறக்கட்டளைகள் செயல்பட்டு வருவதால், கோயில் கட்டும் பணியை தங்களிடம்தான் வழங்கவேண்டும் என்று அந்த அமைப்பினர் போட்டா போட்டியில் இறங்கியுள்ளனர்.
கோயிலைக் கட்டுவது யார்? என்பதில் சாமியார்களுக்கு இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமாலயா அறக்கட்ட ளையின் செயலாளரும் சாமியாருமான அவிமுக் தேஷ்வரானந்த் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ராமர் கோயில் கட்டும் பணியை, ராமாலயா அறக்கட்டளையிடமே ஒப் படைக்க வேண்டும் என்று கூறியுள்ள அவிமுக் தேஷ்வரானந்த்,
“‘ராமர் கோயில் கட்டுவதற்கு புதிதாகஒரு அறக்கட்டளையை உருவாக மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை” என்றும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
மற்றொரு புறத்தில், அறக்கட்டளையின் தலைவர் அல்லது செயலாளர் பதவியைத் தங்களுக்குத்தான் வழங்கவேண்டும் என்று நிர்மோகி அகாரா என்ற சாமியார்கள் கூட்டமும் அரசை வலியுறுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...