Saturday, July 27, 2019

தகவல் அறியும் சட்டத்திற்கான திருத்தம்

பதவியில் உள்ளவர்கள் தவறுகளுக்குப் பதில் அளிப்பது மற்றும்

கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான இரட்டை தாக்குதல்
அருணா ராய் மற்றும்

நிகில் தேவ்

14 ஆண்டுகளுக்கு முன் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்த போதிலிருந்தே, திருத்தங்கள் அதை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. சமுக ஆர்வலர்களால் இந்த சட்டம் உறுதியாக பாதுகாக்கப் பட்டது போல, வேறு எந்த ஒரு சட்டமும் இது வரை பாதுகாக்கப்பட்டதில்லை. முழுவதும் சரியாகவும் நியாயமாகவும் இருக்கும் ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது இய லாதது ஆகும். முற்போக்கு சீர்திருத் தங்கள் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், இத்தகைய பிற்போக்குத்தன மான மாற்றங்களைக் கொண்டு வருவ தற்கு ஆட்சியில் உள்ளவர்களால் இந்த சட்ட திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளப்பட இயலும் என்ற பொதுவான கருத்தையே  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் உறுதியாகக் கொண் டிருக்கிறார்கள்.
எவ்வாறு இருந்தாலும், தொடர்ந்து வரும் ஆட்சிகளின் கீழ் பிற்போக்குத்தனமான திருத்தங்கள் என்ற கத்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தலை மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.  அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின் ஆறு மாதங்களே கழிந்த பிறகு 2006 ஆம் ஆண்டு முதலிலும், அதற்குப் பிறகு பல முறைகளும்,  அதற்கான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டு வந்திருக்கின்றன. நியாயமான எதிர்ப்புப்  போராட்டங்கள் மூலம்   மக்கள் மேற் கொண்ட பிரச்சாரத்தின் காரணமாக அந்த திருத்தங்கள் எல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன. 2019 ஜூலை 19 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட உத்தேசமான திருத் தங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப் பட்டு விடும் என்பது போன்றே இப்போது சில காலமாகவே  கருதப்பட்டது. மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையர் களின் தகுதியை தேர்தல் ஆணையர்கள்,  மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்கள் மற்றும் மாநில அரசு களின் தலைமைச் செயலாளர் தகுதிக்கு  சமப்படுத்தும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 13, 16, 27 ஆவது பிரிவுகளுக்கான திருத்தங்களை மிகவும் கவனமாக இந்த சட்ட திருத்த மசோதா இணைத்துள்ளது. அவர்கள் சுதந்திர மாகவும் பயன் நிறைந்த வகையிலும் செயல்படுவதற்கு இந்த திருத்தங்கள் உதவும் என்று கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற இந்த கட்டுமானம் திட்டமிட்டு வேண்டு மென்றே உடைக்கப்பட்டிருப்பது, மத்திய மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களின் ஊதியம், இதர படிகள், பதவிக் காலம், மற்றும் அவர்களது பணிநியமன நிபந்தனைகளை முடிவு செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த பணியாளர், பொதுமக்களின் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியத் திற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இது தகவல் அறியும் உரிமை சட் டத்திற்கான ஒரு அடிப்படை திருத்த மல்ல, பெருந் தன்மையுடன் கூடிய ஒரு சிறிய திருத்தமே என்று கூறினார்.
மாற்றத்திற்கான காரணம்
இந்த சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தில்  ஏன் இந்த அளவுக்கு முன் எப்போதும் இல்லாத அவசரம் காட்டப்படுகிறது? அதிகாரம் மிகுந்த அரசியல் வேட்பாளர்கள் பதிவு செய்யும் வாக்கு மூலங்களில் உள்ள விவரங்களை அரசின் அதிகார பூர்வமான ஆவணங் களுடன் ஒப்பிட்டு சரி பார்ப்பதற்கு இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் உதவு கிறது என்பதே இதன் காரணம் என்று சிலர் உணர்கின்றனர். அத்தகைய விவரங்களை வெளிப்படுத்த வேண்டு மென்று சில தகவல் அறியும் உரிமை ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகளின் பல நிகழ்வுகள்  நடைபெற இயலும் என்பது மட்டுமல்லாமல்,  அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு தொடர்ந்து சவால் அளித்து வர இயன்றதாக இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் இருப் பதும்தான் இதன் காரணம்.  சட்டத்தின் ஆட்சி ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில்,  லஞ்ச லாவண்யமும், எதேச்சதிகாரமாக அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படு வதும் அன்றாட நிகழ்வுகளே ஆகும். அதிகாரம் செலுத்துவது மற்றும் கொள்கை முடிவுகள் எடுப்பது ஆகிய அதிகாரங்கள் குடிமக்களுக்குக் கிடைக் கும் வகையில்,  ஓர் அடிப்படை மாற் றத்தையே இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தும் 40 முதல் 60 லட்சம் வரையிலான சாதாரணமான குடிமக்கள் பலருக்கும் அது உயிர் பிழைத்திருப்பதற்கான ஒரு வழியாகவே உள்ளது. எதேச்சதிகாரம் செலுத்துவது, ஒரு சாராருக்கு மட்டுமே சலுகைகளை அளிப்பது என்ற செயல்பாடுகளில் ஈடு படும் லஞ்ச லாவண்யம் தாண்டவமாடும் ஓர் ஆட்சிக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப் பதுமாகும் அது. 80 க்கும் மேற்பட்டோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தியவர்கள் கொல்லப்பட்டுள் ளனர்.  தகவல் அறியும் சட்டத்தைத் துணிவுடனும், உறுதியுடனும்  அவர்கள்  பயன்படுத்தியதே, பொறுப்பேற்று பதில் கூற இயலாத ஆட்சியாளர்களால்  அதி காரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விடப்படும் சவாலாக அமைந் துள்ளது. கிராமத்து ரேஷன் கடை முதல் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, லாபம் ஈட்டித் தராத - திரும்பி வாரா வங்கிக் கடன்கள்,  ரபேல் விமான பேர ஊழல், தேர்தல் நிதி பத்திரங்கள், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனம்,  தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களின் நிய மனங்கள்  ஆகியவை வரை அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த நடவடிக்கை களைப் பற்றி லட்சக்கணக்கான கேள்வி களைக் கேட்பதற்கு மிகுந்த அறிவாற்ற லுடனும், தொடர்ந்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தப்பட்டு வந் துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களின் சுதந்திரமான செயல் பாடுகள் மற்றும் அவர்களது தகுதி ஆகியவற்றின் காரணமாக,  மிகமிக உயர்ந்த நிலையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளைப் பற்றிய தகவல்களையும் பெரும்பாலான வழக்குகளில் அவர் களால் பெறமுடிந்தது. அதனைத் திருத்து வதற்குதான் அரசு முயல்கிறது.
தகவல் அறிவதற்காகவும், அதன் மூலம் அரசாட்சியிலும், மக்களாட்சி அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்காகவும் தகவல் அறியும் உரிமை சட்ட இயக்கம் கடுமையாகப் போராடியுள்ளது. ஒரு ஜனநாயக குடியாட்சி நடைமுறைக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய, தொடர்ந்த பொது மக்களின் விழிப் புணர்வை ஏற்படுத்த இயன்ற  நடை முறைகளையும் மேடைகளையும் இந் தியாவின் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கியுள்ளது. அரசில் உள்ள சுயநலக்காரர்களிடமிருந்து தக வல் அறிவதற்காக  மேற்கொள்ளப்படு வதற்கான பெரும்பாலும் சமமற்ற போராட்டத்துக்கு, ரகசியம் மற்றும் ஏகபோக கட்டுப்பாடுகளை மீறி சுய மாகவும்,  வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட இயன்றதுமான  அமைப்பு ரீதியிலான, சட்ட பூர்வமான நடைமுறை ஒன்று தேவை. சுதந்திரமாக இயங்க இயன்ற, தவறு செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட  தகவல் அளிப்பதற்கான மிகமிக உயர்ந்த அதிகார அமைப்பாக விளங்கும்  தகவல் அறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள  மிகவும் கொண்டாடப்படும் இந்த தகவல் அறியும் உரிமை சட்டம்தான் இந்தியாவின் ஒரு புகழ் பெற்ற திருப்பு முனையாக விளங்குவதாகும்.தடைகளும், கட்டுப்பாடுகளும், சமன்பாடுகளும்
அதனால் தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்தின் பணி மாறு பட்டதாக இருந்த போதிலும்,  இந்திய தேர்தல் ஆணையத்தை விட எந்த விதத் திலும் குறைந்தது அல்ல. அரசினைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சுதந்திரமாக செயல்பட இயன்ற கட்டமைப்புகள்,  நீதியையும், அரசமைப்பு சட்ட உறுதிமொழிகளையும் வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு ஜனநாயக அரசுக்கு மிகமிக இன்றியமையாதவை ஆகும்.  தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சமன்பாடுகள் ஆகியவை  நமது ஜன நாயக நடைமுறைக்கு மிகமிக இன்றிய மையாதவை ஆகும். இதன் முக்கியத் துவத்தை அதிகாரப் பகிர்வு அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரம் மய்யமாக்கப்பட்டு, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது,  அது எந்த பொருளாகவும், சந்தர்ப்பமாகவும் இருந்தாலும் சரி,  ஜனநாயகம் பேரழிவுக்கு உள்ளாகும் என்பது நிச்சயமான ஒன்றே ஆகும்.  ஒரு பிற்போக்குத் தன்மையிலான அதிகார சமன்பாட்டில்  கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கும் அளவிலான கட்டமைப்பு மாற்றம் வேண்டுமென்றே திட்டமிட்டு  கொண்டு வரப்படுகிறது என்றுதான் இந்த ஒட்டு மொத்த சட்ட திருத்தங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். தகுதி, சுதந்திரம் மற்றும் அதிகாரம் ஆகியவை சட்டப்படி அளிக்கப்பட்ட ஆணையம் இனி மத்திய அரசின் ஓர் இலாகா போல செயல்படும் என்பதுடன், அதே அதிகார வரிசையில் அரசின் தேவைகளுக்கு அடிபணிந்து செயல்பட வேண்டியதாக இருக்கும். ஒரு சுதந்திரமான அமைப்பின் தலைவர்கள் நியமனத்திற்கான நிபந் தனைகள் மற்றும் ஊதியத்தை நிர்ண யிக்கும் அதிகாரத்தை தாங்களே எடுத் துக் கொள்ள மத்திய அரசு மேற் கொண்டுள்ள முடிவு சட்டப்படி அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத் தையும், அதிகாரத்தையும் பலவீனப்படுத் தும் ஓர் முயற்சியே என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையர்களின் நியமனத்துக்கான கால வரையறை, பணி நிபந்தனைகள், ஊதியம் ஆகியவற்றைக் கையாளும் 13 ஆவது பிரிவை மட்டுமன்றி,  16 ஆம் பிரிவை திருத்துவதன் மூலம்,  விதிகளின் படி மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையங்களை நியமிப்பதற்கான  நிபந்தனைகளையும், கால வரையறை யையும் கையாளும் அதிகாரத்தையும் மத்திய அரசு தனது கைகளில் எடுத்துக் கொண்டிருப்பது, கூட்டாட்சித் தத்துவம் என்ற கருத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான  தாக்குதலே ஆகும்.
கண்களுக்குப் புலப்படாத நடவடிக்கைகள்
நியமனங்கள் தொடர்பான அனைத்து விதிகளும் மிகுந்த கவனத்துடன் ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுவால்  பரிசீலனை செய்யப்பட்டு, இந்த திருத்த சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டுள்ளது. மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணை யம், முதன்மை தேர்தல் ஆணையம், லோக்பால், குற்றவியல் புலன்விசாரணை ஆணையங்களின் பதவிக் கால வரை யறைக்கான அடிப்படை உத்தரவாதம் அளிக்கப்படுவது இந்த  அமைப்புகளின் மிகமிக முக்கியமான கட்டமைப்பு களில் ஒன்று என்பது ஒப்புக் கொள்ளப்பட் டுள்ளது.  தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களைப் பொருத்தவரை 65 வயது உச்ச வரம்பில்  அய்ந்து ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந் துரைப்படி, தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனங்கள் முறையே தேர்தல் ஆணையம் மற்றும் முதன்மைத் தேர்தல் ஆணையர் நியமனத்துடனும், மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையர்களின் நியமனம் மத்திய தேர்தல் ஆணையர்களின் நியமனத்துட னும் சமன் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்களுடனான எந்த ஒரு கலந்தா லோசனை மேற்கொள்ளாமலும், நிலைக் குழுவின் பரிசீலனையைக் கடந்தும் இந்த திருத்தங்கள் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருப்பது, முறையான நாடாளுமன்ற பரிசீலனையும் இன்றி இந்தத் திருத்தங்களை நிறைவேற்றுவதில் அரசு காட்டிய அவசரத்தையும், மிகுந்த ஆர்வத்தையும்  எடுத்துக் காட்டுகிறது. மேலும் சட்டமன்றங்கள் கலந்தாலோ சிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசு கடைபிடிக்க வேண்டிய சட்டப்படியான தேவையும் பின்பற்றப்படாமல் அலட்சிய படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த அரசுகள், இத்தகைய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன் பாக ஒரளவுக்கேனும் பொது மக்களின் கலந்தாலோசனையை மேற்கொண்டிருந் தனர்.  தகவல் அறியும் உரிமை சட்டத் திற்குக் கொண்டு வர திட்டமிட்டிருந்த திருத்தங்களை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், தேசிய ஜனநயாகக் கூட்டணி அரசும், பொதுமக்களின் விவாதத்திற்கான இணைய தளத்தில் வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த சட்ட திருத்தங்களை எந்தவித கலந்தாலோ சனையும் இன்றி நிறைவேற்றுவது என்று தற்போதைய ஆட்சியாளர்கள் தீர் மானித்து விட்டதாகவே தோன்றுகிறது.
இதற்கான காரணத்தை எங்கு சென்றும் தேட வேண்டிய அவசியம் இல்லை.  இந்த திருத்தங்களைப் பற்றி பொதுமக்கள் முன்னிலையில் குடிமக் களும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களும் விவாதம் செய்தால், தகவல் அறியும் உரிமை சட்ட கட்டமைப் பின் ஒரு முக்கியமான பகுதியை இந்த திருத்தங்கள் அடிப்படையிலேயே பல வீனப்படுத்தும் என்பது அனைவரும் அறியும் ஒன்றாக ஆகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.  அரசமைப்பு சட்டப் படியான கூட்டாட்சி கெள்கையையும் மீறுபவையாகவும், தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் சுதந்திரத்தை மறுத்து அழிப்பவையாகவும் அமைந் திருக்கும்  இத்திருத்தங்கள் இந்திய அரசாட்சியில் வெளிப் படைத் தன்மை நிலவுவதற்காகப் பரவலாகப்  பயன்படுத் தப்பட்ட ஓர் அமைப்பையும், விதிகளை யும் நீர்த்துப் போகச் செய்துள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அனைவரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஆனால் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக் கும் கத்தி இரு பக்கங்களிலும்  கூர்மை யானது. எதேச்சதிகாரத்தில் மறைந்துள்ள பாதுகாப்பின்மையை விளக்குவதற்காக இந்த ஒப்புவமை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் கட்டுப்பாடற்ற அதி காரத்துக்கு எதிராக விடப்படும் சவால் களாகும். தகவல் அறியும் உரிமை சட் டத்தைப் பயன்படுத்திய லட்சக்கணக் கான  சமுக ஆர்வலர்களின் கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்குகளில் இருந்து இந்த சட்டம் விடுவித்திருக்கிறது. இந்த ஜனநாயக உரிமைகளை அவர்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமாகப் பயன் படுத்தி எதேச்சதிகாரத்தை அழிப்பார்கள். தன் மீது மேற்கொள்ளப்படும் தாக்கு தல்களை சந்தித்து கையாள்வதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பயன் படுத்தப்படுவதுடன், இந்திய நாட்டின் அரசு மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் வெளிப்படையாக செயல் படுபவைகளாகவும், தங்களது செயல் களுக்கு பொறுப்பேற்று பதில் அளிப் பவைகளாகவும்  இருக்க வேண்டும் என்று போராடும் இயக்கங்களை பலப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது.  ஒரு சட்டத்தை வேண்டுமானால் தன் னால் திருத்த முடியுமே அன்றி, ஓர் இயக்கத்தைத்  தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நரேந்திர மோடி அரசு இறுதியில் உணரவே செய்யும்!
நன்றி: 'தி இந்து' 22-07-2019

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...