Friday, July 26, 2019

அரசுப் பணியிலிருந்து விலகியவர் ஓய்வூதியம் பெற முடியாது: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

அரசுப்பணியிலிருந்து விலகிய வருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை பெற முடியாது எனக்கூறியுள்ள உயர்நீதிமன்றக் கிளை, ஆசிரியையின் மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
‘‘சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் கடந்த 1.7.1967இல் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் என் குடும்பச்சூழல் காரணமாக கடந்த 30.9.1978இல் பணியிலிருந்து விலகினேன். 10 ஆண்டுகள் பணியாற்றினால் ஓய்வூதியம் பெறத்தகுதி உண்டு. ஆனால், நான் 11 ஆண்டுகள் பணியாற்றி இருந்ததால் ஓய்வூதியம் கேட்டு பலமுறை விண்ணப்பித்தேன். ஆனால், அதி காரிகள் மறுத்துவிட்டனர். எனவே, எனக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசுத்தரப்பில், ‘‘மனுதாரர் பணியை விட்டு விலகியுள்ளார். எனவே, அவருக்கு  ஓய்வூதியம்  வழங்க முடியாது. மிகவும் காலதாமதமாகவே மனு செய்யப் பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணியிலிருந்து விலகுதல், ஓய்வு பெறுதல் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லுதல் என தனித்தனி வகை உள்ளது.
இதை ஒன்றோடு ஒன்று இணைத்து பார்க்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு பணியில் உள்ளவர் தனக்கு எந்தவித பணப் பலன்களும் தேவையில்லை எனும்போதுதான் பதவி விலகல் செய்கிறார்.  பணி விலகல் செய்யும் ஒருவரால் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், விருப்ப ஓய்வில் செல்பவருக்கு இது சாத்தியம் இல்லை. எனவே,  பதவி விலகல் செய்வோரால் பணப்பலன்களை கேட்க முடியாது.
மனுதாரரின்  பணி விலகல் ஏற்கப்பட்டதால் தான் அவர் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். எப்போது ஒருவரின் பணி விலகல் ஏற்கப்பட்டு, பணியில் இருந்து விடுவிக்கப்படு கிறாரோ, அப்போது அவரால் ஓய்வூதியம் கேட்க முடியாது. மனுதாரருக்கு கருணைப்படி கூட வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...