Tuesday, July 23, 2019

அய்ட்ரோகார்பன் திட்டம் நாடாளுமன்றம் முன் விவசாயிகள் 25இல் உண்ணாநிலை போராட்டம்

அய்ட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு 25ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த விவசாயிகள் டில்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் பேரழிவை ஏற்படுத்தும் அய்ட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  வரும் 25ஆம் தேதி டில்லியின் நாடாளுமன்றம் முன்பு உண்ணாநிலை போராட்டமும், 26ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டமும் நடைபெறுமென பிஆர் பாண்டியன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, டில்லியில் போராட்டம் நடத்த பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று காலை மன்னார்குடியில் இருந்து ரயிலில் புறப்பட்டனர். முன்னதாக மன்னார்குடி பெரியார் சிலை அருகில் போராட்டத்திற்கு செல்லும் விவசாயிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவிரி ரெங்கநாதன் விவசாயிகளை வழியனுப்பி வைத்து பேசினார்.  போராட்டம் குறித்து பிஆர் பாண் டியன் கூறுகையில், அய்ட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். மக்கள் அகதிகளாக்கப்படு வார்கள். மக்கள் வசிக்க லாயக்கற்ற பகுதியாக டெல்டா மாவட்டங்கள் மாறுகின்ற பேரவலம் ஏற்படும். எனவே தான் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட டில்லி செல்கிறோம்.
நாடாளுமன்றம் முன்பு 25ஆம் தேதி நடைபெறும் உண்ணா நிலைப் போராட்டத்தை புதுவை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைக்கிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அன்று எங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்க தவறினால் மறுநாள் நாடாளு மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...