Tuesday, July 23, 2019

ரயில்வே துறையை ஏமாற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்

ரயில்வே துறையிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.46 கோடி பிரீமியம் தொகையை பெற் றுள்ள தனியார் காப்பீடு நிறு வனங்கள், பயணிகளுக்கான இழப்பீடாக வெறும் ரூ. 7 கோடியை மட்டுமே வழங் கியுள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநி லத்தை சேர்ந்த சமூக ஆர்வ லரான சந்திர சேகர் கவுர் என்பவர், “மத்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் அய்.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் இணையவழி பயணச்சிட்டு முன்பதிவு செய்யும் பயணிக ளுக்கு ரயில்வே துறை காப் பீடு வழங்குகிறது. இந்த காப் பீட்டை சிறீராம் ஜெனரல், அய்.சி.அய்.சி.அய். லாம் பார்ட் ஜெனரல், ராயல் சுந் தரம் ஜெனரல் ஆகிய 3 தனி யார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயணிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயணச்சீட்டு முன்பதிவு செய்து ஏ.ஆர்.வி. அல்லது பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவ ருக்கு அவரின் பயணச்சீட்டு கட்டணத்தில் காப்பீடுக்காக 92 காசுகள் கூடுதலாக, பயணி யின் விருப்பத்தின் அடிப் படை யில் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் காப் பீடு செய்து ரயிலில் பயணிக் கும் பயணிகள், ரயில் விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ அவர் களுக்கு இழப்பீடு வழங்கப் படும். அதன்படி, ரயில் விபத் தில் சிக்கி காப்பீடு செய்த பயணி இறக்க நேரிட்டால், அவரின் குடும்பத்துக்கு இழப் பீடாக ரூ.10 லட்சம் காப்பீடு நிறுவனங்களால் வழங்கப் படும். காப்பீடு திட்டத்தில் சேர்ந்த ஒரு பயணி ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தாலோ அல்லது உறுப் புகள் ஏதேனும் இழந்தாலோ, அவருக்கு ரூ. 7.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். விபத்தில் லேசான காயம் அடைந்த பயணிக்கு, ரூ. 2 லட்சம் மருத்துவ செலவாக வழங்கப்படும். அத்தோடு, ரயிலில் நடைபெறும் கொள்ளை, வன்முறை, தீ விபத்துக்கள் போன்றவற்றில் பாதிக்கப்படும் பயணிகளுக் கும், காப்பீடு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படு கிறது.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவு தொகையை பிரீமியமாக மத்திய ரயில்வே துறை, காப் பீடு நிறுவனங்களுக்கு வழங்கி யுள்ளது? கடந்த 2 ஆண்டு களாக காப்பீட்டு நிறுவனங் களால், பயணிகளுக்கு வழங் கப்பட்ட தொகையின் மதிப்பு என்ன ?” என்று கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட் டம் மூலம் எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை, “கடந்த 2 ஆண்டுகளில் தனி யார் காப்பீடு நிறுவனங்க ளுக்கு ரூ. 38.89 கோடியை ரயில்வே துறை பிரீமீயமாக செலுத்தியுள்ளது. அதே நேரம், இழப்பீடாக பயணிக ளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 7.29 கோடி மட்டுமே, தனியார் காப்பீடு நிறுவனங் களால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே துறையில் விபத்துக் குள் கணிசமாக குறைந்துவிட் டன.
கடந்த 2013-14ஆம் ஆண் டில் 118 ரயில் விபத்துக்கள் நடந்த நிலையில், 2016-17ஆம் ஆண்டில் அது 104 விபத்துக் களாகவும், 2017-18ஆம் ஆண் டில் 73 விபத்துக்களாகவும், 2018-19ஆம் ஆண்டில் 59 விபத்துக்களாகவும் படிப்படி யாக குறைந்துவிட்டது. இத னால் இழப்பீடு வழங்கும் அளவும் குறைந்துவிட்டது” என்று விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...