Wednesday, June 26, 2019

ரோபோவை இயக்கும் ஸ்மார்ட் போன் செயலி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட் போனின் மூலம், ரோபோவை இயக்கக் கூடிய செயலியை அமெரிக்காவின் புர்டியு பல்கலைக்கழகத்தின் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கார்த்திக் ரமணி கண்டுபிடித் துள்ளார்.

இதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள "விஆர்ஏ' செயலியில் ரோபோ செல்ல வேண்டிய வழித்தடத்தைக் கை விரலால் வரைந்து விட்டு, அந்த ஸ்மார்ட் போனை எடுத்து ரோபோவில் வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான். நாம் போட்ட வழித்தடத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்துகொண்டு ரோபோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

ரோபோவுக்கு கண்களாகவும், மூளை யாகவும் ஸ்மார்ட் போன்தான் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன் ரோபோவில் இருக்கும் வரை ரோபோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இந்த வகையிலான ஸ்மார்ட்போன் மூலம் ரோபோவைப் பயன்படுத்தி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, குப்பை அகற்றுவது, பொருள்களை இடம் மாற்றுவது போன்ற பணிகள் வெற்றிகரமாகச் செய்து பார்க்கப் பட்டன.

தொழிற்சாலைகளில் ரோபோக்களை இயக்க இந்த "விஆர்ஏ' செயலி பயன்படும் என்றும் ரோபோக்களுக்காக பெரும் பொருட் செலவு செய்ய இயலாத சிறு தொழிற் நிறுவனங்களுக்கு இந்த செயலிகள் பயன்படும் என்றும் ஆராய்ச்சியாளர் கார்த்தி ரமணி தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...