Wednesday, June 26, 2019

நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம் ரூ.21.71 லட்சம் கோடி

நாட்டில் 2019ஆம் ஆண்டு மே இறுதி வரை யிலான காலகட்டத் தில் ரூ.21.71 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள் ளன.

2016-இல் மேற்கொள்ளப்பட்ட  பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வரை ரூ.17,74,187 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிலவரப்படி, 21,71,385 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இது 22 சதவீதம் அதிகரிப்பாகும்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 1000, 500 ரூபாய்  நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...