Monday, October 24, 2016

மத்திய அரசின் துரோகம்!

சென்னையில் சிறப்பாக செயல்பட்டுவரும் ‘சிப்பெட்’ நிறுவனத்தை டில்லிக்கு மாற்றத் துடிக்கும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் - (கருநாடகத்துக்காரர்- காவிரி நீர்ப் பிரச்சினை யில் தமிழ்நாட்டுக்கு விரோதமாக, வெறித்தனமாக செயல் படக்கூடியவர்) அதன் கிளையைக் கன்னியாகுமரியில் திறக்கப்படுவதற்குப் பதிலாக ஆந்திராவிற்குக் கொண்டு சென்றுள்ளார்.
கச்சா ரப்பர் உற்பத்தியில் முதலிடம் இருக்கும் கன்னியா குமரி மாவட்டத்தில் சிப்பெட் நிறுவனம் தொடங்கவேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கையாகும்.
இந்த நிலையில், தமிழகத்தின் இந்தக் கோரிக்கையைப் புறந்தள்ளி, கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 12 ஏக்கர் நிலத்தில், 50.73 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிப்பெட் கிளையைத் திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் அனந்தகுமார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு போன்றோர் கலந்து கொண்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...